தேவையான சரக்குகள் :
1.வசம்பு - 100 மி.கி.
2. ஓமம் - 100 மி.கி.
3. கிராம்பு - 100 மி.கி.
4. மிளகு - 100 மி.கி
5. திரிகடுகு - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்
தீரும் நோய்கள் :
மூட்டுகளில் உண்டாகும் வலி, சுளுக்கு, தலைவலி மற்றும் எலும்பு முறிவதனால் உண்டாகும் வலி முதலியன குணமாகும்.