தேவையான பொருட்கள்:
1. சந்தனக்கட்டை-20 மி.கி
2. அருகன் புல்-20 மி.கி
3. குங்குமப்பூ-1 கி
4. திருநீற்றுப் பச்சிலை- 10 கி
5. முல்தாணிமட்டி-30 கி
6. ரோஜாப்பூ-15 கி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி, சுத்தம் செய்து இடித்து, பொடி செய்து சலித்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
அளவு :
தேவையான அளவு பொடியை எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரினால் கழுவவும்.
தீரும் வியாதிகள்:
பரு, கரும்புள்ளி, முகப் பொலிவின்மை முதலியவற்றை நீக்கி முகம் பளபளப்புடன் இருக்கச் செய்யும்.