தேவையான பொருட்கள்:
1. வீரம்-3.5 கி
2. பசு வெண்ணெய்-454 கி
செயல்முறை :
வீரத்தைக் கல்வத்திலிட்டு நன்றாகப் பட்டுபோல் அரைத்து அத்துடன் வெண்ணெயை சேர்த்து ஆறு மணி நேரம் வரை நன்கு அரைத்துப் பின்னர் தண்ணீரில் ஏழு முறை பிசைந்து கழுவி எடுத்து வைக்கவும்.
அளவு:
வெளி உபயோகம்.
தீரும் நோய்கள்:
விரணம், பிளவை, மார்பாணி, மூலவேக்காடு, புண் ஆகியன தீரும்.