தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த லிங்கம்-40 கி
2. ஆற்றுத் தும்மட்டிச் சாறு -2லி
செய்முறை:
சுத்தி செய்த லிங்கத்தை சட்டியிலிட்டு ஆற்றுத் தும்மட்டிச் சாறு சிறிது சிறிதாகக் கலந்து சாறு தீரும் வரை சுருக்கிட்டுக் கழுவி எடுத்துத் தூள் செய்து வைக்கவும்.
அளவு தீரும் நோய்களும் :
50 - 100 மி.கி. வரை தேன் சேர்த்து தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்க குளிர்சுரம், வாத, கப நோய்கள் தோல் நோய்கள், மேக நோய்கள் இவை குணமாகும்.