தேவையான பொருட்கள்:
1. கற்பூர சிலாசத்து-300 கி
2. சிறு செருப்படைச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த கற்பூர சிலாசத்தைக் கல்வத்திலிட்டு சிறு செறுப்படைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 50 வரட்டிகளில் புடமிடவும். இவ்வாறு மூன்று புடமிட சிலாசத்து பற்பமாகும்.
அளவு :
0.5 கி-1 கி. வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மூத்திர எரிவு, வெள்ளை, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, பித்த வியாதிகள், உடலெரிச்சல் ஆகியவை குணமாகும்.