தேவையான பொருட்கள்:
1. மான் கொம்பு-300 கி
2. அகத்தி இலைச்சாறு -தேவையான அளவு
செய்முறை :
மான் கொம்புகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியிலிட்டு அகத்தி இலைச்சாற்றை ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊ வைத்து தண்ணீர் விட்டு கழுவி எடுக்கவும், இவ்வாறு ஏழு நாட்கள் செய்ய மான் கொம்பு சுத்தியாகும். சுக்கி செய்த மான் கொம்புகளை அகலில் வைத்து மூடி சிலை செய்து 30 வரட்டிகளில் புடமிடவும். ஆறிய பின் அகலைப் பிரித்து மான் கொம்புகளைக் கல்வத்திட்டு அகத்தி இலைச்சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி பின்னர் 30 வரட்டிகளில் ஒன்று (அல்லது) இரண்டு படங்களிட மான் கொம்பு பற்பமாகும்.
அளவு:
200-400 மி.கி. வீதம் வெண்ணெய் (அல்லது) நெய்யுடன் தினமும் இருவேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இருமல், மார்பு நோய், பித்தத்தால் வந்த நோய்கள். எலும்புருக்கி நோய் போன்ற நோய்கள் நீங்கும். மேலும் இது மார்பு வலிக்கு சிறந்த மருந்து.