தேவையான பொருட்கள்:
1. பலகரை-1.1 கி.கி.
2. எலுமிச்சம் பழம்-50
செய்முறை :
சுத்தி செய்த பலகரையைக் கல்வத்திலிட்டு 50 எலுமிச்சம் பழங்களின் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 150 வரட்டிகளைக் கொண்டு புடமிடவும். இவ்வாறு 2 அல்லது 3 புடங்களிட பலகரை வெண்ணிற பற்பமாகும்.
அளவு :
50 -100 மி.கி. வரை நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
வெட்டை, மேகச்சூடு, நீர்க்கட்டு, சூலை, சதையடைப்பு, விஷம், வயிறு விஷமித்தல் போன்ற நச்சு நிலைகள் நீங்கும்.