தேவையான பொருட்கள் :
1. நற்பவளம்- 35 கி
2. கரும்பு ரசம் -420 கி
செய்முறை:
சுத்தி செய்த நற்பவளத்தினைக் கரும்பு ரசம் விட்டு நன்றாக 7 நாள் அரைத்து வில்லை செய்து, உலர்த்தி ஓட்டிலிட்டு சீலை செய்து 34 வரட்டியில் புடமிட்டு, ஆறவிட்டு எடுக்க பற்பமாகும். 4
அளவு:
50 மி.கி. தேனில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள் :
ஈளை,கபம்,விக்கல், சுரம், சுவாசம் இவை தீரும்.