Contact Us

Tips Category View

நத்தை பற்பம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. நத்தை-புடமிடத் தேவையான அளவு
2. துத்தியிலைச்சாறு-தேவையான அளவு

செய்முறை :
நத்தைகளை அழுக்கு போக சுத்தம் செய்து ஒரு பானையில் பாதி அளவுக்கு அவற்றை நிரப்பி பானையை வாய்க்குப் பொருத்தமான ஒரு அகலைக் கொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் புடமிடவும்.
ஆறிய பின் பானையில் இருக்கும் நத்தையின் சாம்பலை எடுத்துக் கல்வத்திலிட்டுத் துத்தியிலைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகளைத் தட்டி உலர்ந்த பின் புடமிடவும். இதே போல் பற்பம் வெண்மையாகும் வரை இரண்டு அல்லது மூன்று முறை புடமிடவும்.

அளவு : 
200 -400 மி.கி. வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
இரத்த மூலம், சீதபேதி, ஆசனக் கடுப்பு முதலியவை நீங்கும்.