தேவையானவை:
1. கந்தகம் -பற்பம் செய்யத் தேவையான அளவு
2. பால் - சுத்தி செய்யத் தேவையான அளவு
3. குப்பைமேனிச்சாறு -தேவையான அளவு
4. மருதம்பட்டை செயநீர் - தேவையான அளவு
5. மருதம்பட்டை சாம்பல் - தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த கந்தகத்தை ஓர் அகலில் வைத்து மருதம்பட்டை செய்ய நீரால் சுருக்கிடவும். இது ஓரளவுக்கு கட்டாகும். பின் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு குப்பைமேனிச் சாற்றால் அரைத்து வில்லைகள் தட்டிஉலர்ந்த பின் வில்லைகளை ஒரு அகலில் மருதம்பட்டை சாம்பலுக்குள் மறைத்து சிறு தீயால் எரிக்கவும். கந்தக வாசனை வரும்போது எரிப்பை நிறுத்திக் குளிர வைக்கவும். ஆறிய பின் வில்லைகளை எடுத்துத் திருப்பி வைத்து மறுபடியும் சிறு தீயால் எரிக்கவும். பின் குளிர்ந்த வில்லைகளை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து வைக்கவும்.
அளவு :
25 -50 மி.கி. வரை நெய் அல்லது எண்ணெயுடன் தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்கவும்.
தீரும் வியாதிகள் :
சொறி, சிரங்கு, தோல் மரப்பு, தேமல், தேகப்பட்டை, குஷ்டம், பௌத்திரம் ஆகியவை குணமாகும்.