தேவையான பொருட்கள்:
1. சுத்தித்த ஆமை ஓடு-300 கி
2. உத்தாமணிச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த ஆமை ஓட்டை ஒன்றிரண்டாய் உடைத்து ஒரு சட்டியிலிட்டு உத்தாமணிச் சாற்றை நிரப்பி அகலால் மூடி சீலை செய்து 100 விரட்டிகளைக் கொண்டு புடமிடவும். ஆறிய பிறகு ஆமை ஓட்டைப் பொடித்து கல்வத்திலிட்டு உத்தாமணிச் சாற்றால் நன்கு அரைத்துவில்லைகள் தட்டி உலர்ந்த பின் 100 வரட்டிகளைக் கொண்டு புடமிட்டெடுக்க வெண்ணிற பற்பமாகும். தேவையானால் மேலும் ஒன்றிரண்டு புடங்களிடலாம்.'
அளவு :
100 - 200 மி.கி. தேன் (அல்லது) பசும்பால் மற்றும் பொடுதலைக் குடீநீர், பேய்மிரட்டி இலைக் குடிநீர் மற்றும் ஓமக் குடிநீருடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இதனால் மாந்தம், குழந்தைகளின் மாந்த பேதி குணமாகும்.