1. பொதுவாகப் பற்பங்கள் வெண்ணிறமுடையவை. விதி விலக்குகளும் உண்டு. உதாரணமாக தங்க பற்பம் இள மஞ்சள் நிறமுடையது.
2. பற்பங்கள் பெரும்பாலும் மணம், சுவை அற்றன.
3. உலோகப் பளபளப்பு சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. பற்பங்கள் நாட்கள் ஆக ஆக சக்தி வாய்ந்தவைகள் ஆகிவிடுகின்றன. பண்பியல் சோதனைகளை பற்பங்கள் நன்கு முடித்துள்ளனவோ என்று அறிய கீழ்க்காணும் சோதனை முறைகள் சித்த மருத்துவ நூலில் வரையறுக்கப் பட்டுள்ளன.
******************************************************************************
1. பற்பத்தில் உலோகத் தலுக்கு மினுமினுப்பு சிறிது கூட இருத்தல் கூடாது. அதாவது
2. பற்பத்தை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் இட்டு தேய்த்தால் பற்பம் விரல்களின் ரேகை இடுக்குகளில் பதிய வேண்டும். அதாவது அவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும்.
3. சிறிதளவு பற்பத்தை நீரின் மேலிட்டால் உடனே அது நீரில் மூழ்கக் கூடாது. தண்ணீரில் மிதக்கும். மேற்படி பற்பத்தின் மீது நெல் போன்ற தானிய மணியை மெதுவாக வைக்க அதையும் சுமந்து கொண்டு பற்பம் நீரில் மூழ்காமல் மிதந்து வர வேண்டும்.
4. பற்பத்தைத் தீயிலிட்டு ஊதினால் அதனின்றும் பற்பம் தன்னுடைய பழைய மூலப்பொருள் நிலைக்குத் திரும்பக் கூடாது.
5. பற்பத்திற்கு பேதமான (வித்தியாசமான) சுவை இருக்கலாகாது. பாதுகாப்பு முறையும் காலக் கெடுவும்: சுத்தமான ஈரப்பதமற்ற கண்ணாடிக் குடுவையில் காற்றுப்புகா வண்ணம் இவற்றை மூடி வைத்தல் வேண்டும். பற்பங்கள் நூறு ஆண்டுகள் வரை எண்ணம் உடையவை.