Contact Us

Tips Category View

வல்லாரை சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள் :
1. வல்லாரை-70 கி.
2. கிராம்பு-35 கி.
3. ஏலம் -35 கி.
4. ஜாதிக்காய்-35 கி.
5. ஜாதி பத்திரி-35 கி.
6. தாளிச பத்திரி-35 கி.
7. திரிபலாதி-35 கி.
8. மாசிக்காய்-35 கி.
9. சர்க்கரை-35 கி.

தயாரிக்கும் முறை:
வல்லாரையை பாலிலுலர்த்தி இடித்து பொடித்த சூரணம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய், தாளிசபத்திரி, திரிபலாதி போன்றவற்றைப் பொடித்து ஒன்றாய்க் கலந்து சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.

அளவும் தீரும் நோயும் :
2 கிராம் முதல் 5 கிராம் வரை திரிகடி பிரமாணம். நெய்யில் உண்ண மேககாங்கை, மூலச்சூடு, உடம்பெரிவு தீர்ந்து தேகம் குளிரும்.