Contact Us

Tips Category View

திரிபலா சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள் :
1. கடுக்காய்த் தோல்-200 கி
2. விதை நீக்கிய நெல்லி வற்றல்- 200 கி
3. தான்றிக்காய்த் தோல்-200 கி

செய்முறை:
மூன்றையும் தனித்தனியே இடித்து, சலித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.

அளவு : 
1 முதல் 3 கிராம் வரை 2 - 3 வேளைகள் தேன் மற்றும் நெய்யுடன் கலந்து கொடுக்க கண் ஒளி பெறும். சுடு தண்ணீருடன் கொடுக்க மலச்சிக்கல் குணமாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

தீரும் நோய்கள் :
சூரணத்தைக் கஷாயமாக்கி, புண்களையும், இரணங் களையும் கழுவலாம். நீரும் பீளையும் வடியும் கண்ணைக் கழுவலாம். வாய்ப்புண்ணிற்குக் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம்.