தேவையான பொருட்கள் :
1. தோல் நீக்கிய சுக்கு-200 கி
2. மிளகு-200 கி
3. திப்பிலி-200 கி
செய்முறை :
மேற்கண்ட மூன்றையும் எடுத்து சுத்தம் செய்து தனித் தனியே இடித்து சலித்து பிறகு ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.
அளவு :
தினமும் 2-3 வேளைகள் 1 - 2 கிராம் வரை தேன், நெய் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.
குணமாகும் நோய்கள்:
பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.