தேவையானவை :
1. தாளிச பத்திரி-10கி
2. இலவங்கப்பட்டை-10கி
3. ஏலம்-10கி
4. சுக்கு-10கி
5. அதிமதுரம்-10கி
6. பெருங்காயம்-10கி
7. நெல்லி முள்ளி-10கி
8. கோஷ்டம்-10கி
9. திப்பிலி-10கி
10. சீரகம்-10கி
11. சதகுப்பை-10கி
12. கருஞ்சீரகம்-10கி
13. திப்பிலிக்கட்டை-10கி
14. கிராம்பு-10கி
15. ஜாதிபத்திரி-10கி
16. கற்கடக சிருங்கி-10 கி
17. ஜாதிக்காய்-10 கி
18. தான்றிக்காய்-10 கி
19. கடுக்காய்- 10 கி
20. சடாமஞ்சில்-10 கி
21. மிளகு- 10 கி
22. சிறுநாகப்பூ-10 கி
23. செண்பக மொட்டு-10 கி
24. வாய்விடங்கம்- 10 கி
25. இலவங்கப்பத்திரி-10 கி
26. ஓமம்-10 கி
27. தனியா-60 கி
28. சர்க்கரை-120 கி
செய்முறை :
எல்லா சரக்குகளையும் இளவறுப்பாக வறுத்து பொடித்து சலித்து வைக்கவும், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து முன்பு சூரணித்த சரக்குகளுடன் நன்கு கலந்து வைக்கவும்.
அளவு :
1 - 2 கிராம் தேனுடன் தினமும் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் வியாதிகள்:
வாத, பித்த, கப நோய்கள், சொறி சிரங்கு, வயிற்றெரிவு, குன்மம், வயிற்று வலி, நீர்ச்சுருக்கு, காமாலை, சுரம், வாயில் நீர் சுரத்தல், வெள்ளை, தாகம், பொருமல், காதிரைச்சல், இருமல், கைகால் குடைச்சல், வெப்பம், தொண்டைக்கட்டு, நீர்க்கட்டு, மயக்கம், நீர்க்கடுப்பு, நெஞ்செரிப்பு, கைகால் கடுப்பு, நீர் எரிச்சல், அஜீரணம் முதலியன குணமாகும்.