தேவையான பொருட்கள்:
1. நிலாவரை-10 கி
2. சுக்கு-10 கி
3. மிளகு-10 கி
4. ஓமம்-10 கி
5. வாய்விடங்கம்-10கி
6. சர்க்கரை-10 கி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொடித்து சலிக்கவும். பின் அவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
அளவு :
ஒன்று முதல் இரண்டு கிராம் வரை வெந்நீருடன் இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
வாயு, பொருமல், விம்மல், விக்கல், வெப்பநோய், உடல், எரிச்சல், வாந்தி, மலக்கட்டு, பித்தம் முதலியன குணமாகும்.