தேவையான பொருட்கள்:
1. பெருங்காயம் -100 கி
2. கடுகு -100 கி
3. மிளகு -100 கி
4. சுக்கு -100கி
5. திப்பிலி -100 கி
6. ஓமம் -100கி
7. சீரகம் -100கி
8. அதிமதுரம் -100 கி
9. கோஷ்டம் -100 கி
10. நெய் -300கி
11. வெல்லம் -300கி
12. தேன் -300 கி
13. பால் -1.4லி
செய்முறை:
பெருங்காயத்தினை பொடித்து நீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாக வற்ற வைத்து வடித்து சர்க்கரையை கரைத்து பால் சேர்த்து பாகு செய்து அதில் மேற்கண்ட கரைச் சரக்குகளைப் பொடித்து தூவி நெய்விட்டுக் கிண்டி பின் தேன்விட்டு மெழுகு பதத்திலிலெடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
3-5 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
கிராணி, கடுப்பு, வாயுத் தொல்லை, வயிறு உப்பல் தீரும்.