Contact Us

Tips Category View

கூஷ்மாண்டா லேகியம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. பெருங்காயம்               -100 கி
2. கடுகு                                -100 கி
3. மிளகு                               -100 கி
4. சுக்கு                                -100கி
5. திப்பிலி                           -100 கி
6. ஓமம்                             -100கி
7. சீரகம்                              -100கி
8. அதிமதுரம்                     -100 கி
9. கோஷ்டம்                     -100 கி
10. நெய்                               -300கி
11. வெல்லம்                       -300கி
12. தேன்                              -300 கி
13. பால்                                -1.4லி

செய்முறை:
பெருங்காயத்தினை பொடித்து நீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாக வற்ற வைத்து வடித்து சர்க்கரையை கரைத்து பால் சேர்த்து பாகு செய்து அதில் மேற்கண்ட கரைச் சரக்குகளைப் பொடித்து தூவி நெய்விட்டுக் கிண்டி பின் தேன்விட்டு மெழுகு பதத்திலிலெடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.

அளவு: 
3-5 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.

தீரும் நோய்கள் :
கிராணி, கடுப்பு, வாயுத் தொல்லை, வயிறு உப்பல் தீரும்.