தேவையான பொருட்கள்:
1. இம்பூறல் வேர்ப்பட்டை -350கி.
2. பசும்பால் -1.4லி.
3. பனங்கற்கண்டு -700கி.
4. ஜாதிபத்திரி -35 கி.
5. வால்மிளகு -3530 கி.
6. ஜாதிக்காய் -35 கி.
7. நெய் -350கி
செய்முறை :
இம்பூறல் வேர்ப்பட்டையைத் தட்டியெடுத்துப் பாலில் கரைத்து வடிகட்டி, அதில் பனங்கற்கண்டு அதனளவிற்குச் சேர்த்து கரைத்து, வடிகட்டி, அடுப்பிலேற்றிப் பாகுபதம் வரும் சமயத்தில் சாதிப்பத்திரி, சாதிக்காய், வால்மிளகுச் சூரணஞ் சேர்த்துக் கிண்டி, பிறகு பசுவின் நெய் விடவும். தேன் சேர்த்தல் கூடாது.
அளவு:
சுண்டைக்காயளவு 2 வேளைகள்.
தீரும் நோய்கள் :
இரத்த காசம், இரத்த வாந்தி, இரத்த பேதி இவைகளுக்கு கொடுக்கத் தீரும்.