தேவையான பொருட்கள்:
1. இஞ்சிச்சாறு -1.6 மி.லி
2. கண்டங்கத்திரி -1.6 மி.லி
3. நெருஞ்சில் -1.6 மி.லி
4. முள்ளங்கிச்சாறு -1.6 மி.லி
5. எலுமிச்சைச் சாறு -1.6 மி.லி
6. பசும்பால் -1.6 மி.லி
7. பனை வெல்லம் -280 கி
8. சுக்கு -35 கி.
9. மிளகு -35கி.
10. திப்பிலி -35கி
11. சீரகம் -35 கி.
12. ஏலம் -35 கி.
13. வாய்விடங்கம் -35 கி
14. கிராம்பு -35 கி
15. தாளிசபத்திரி -35 கி.
செய்முறை:
பனை வெல்லத்தினை பால் மற்றும் மேலே குறிப்பிட்ட சாறுகளுடன் கலந்து பாகுபதத்தில் காய்ச்சி எஞ்சியிருக்கும் கடைச் சரக்குகளை பொடித்து அத்துடன் கலந்து வைக்கவும்.
அளவு:
5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்தத்தை அகற்றும், வாயுக் கோளாறு மற்றும் எல்லா விதமான வயிற்றுக் கோளாறினையும் நீக்க வல்லது.