தேவையான பொருட்கள்:
1. தேன் -200 கி
2. சுக்கு -35 கி
3. மிளகு -35 கி
4. திப்பிலி -35 கி
5. சீரகம் -17.5கி
6. கிராம்பு -17.5கி
7. ஏலம் -17.5கி
8. பனை வெல்லம் -17.5கி
9.நெய் -400கி
செய்முறை :
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கிராம்பு, ஏலம் ஆகிய வற்றை சுத்தி செய்து சூரணம் செய்து பனை வெல்லத்தை பாகு போல் காய்ச்சி சூரணத்தைக் கொட்டி, கிண்டி நெய் மற்றும் தேன்விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.
அளவும், தீரும் வியாதிகள் :
கொட்டைப் பாக்களவு காலை, மாலை இரு வேளை உண்ண வாயுத் தொல்லை, உஷ்ணம், பித்தவாயு, அக்கினிமாந்தம், வாந்தி, அஸ்திவெட்டை, கிராணி, அஜீரணம் ஆகிய நோய்கள் தீரும்.