தேவையான பொருட்கள் :
1. 1 சீந்தில் சர்க்கரை -100 கி
2. முந்திரிப்பழம் -100 கி
3. கோஷ்டம் -100 கி
4. அதிமதுரம் -100 கி
5. திரிகடுகு -100 கி
6. நெல்லி வற்றல் -100 கி
7. பூச்சாந்துபட்டை -100 கி
8. அமுக்கிராக்கிழங்கு -100 கி
9. ஏலம் -100 கி
10. பூனைக்காலி வித்து -100 கி
11. குங்குமப்பூ -100 கி
12. ஜாதிக்காய் -100 கி
13. அரேனுகம் -100 கி
14. சிறுநாகப்பூ -100 கி
15. தாளீசபத்திரி -100 கி
16. நீர்முள்ளிக் கிழங்கு -100 கி
17. நிலப்பனைக்கிழங்கு -100 கி
18. விலாமிச்சம் வேர் -100 கி
19. நெருஞ்சில் வித்து -100 கி
20. வெட்டிவேர் -100 கி
21. தாமரைக்கிழங்கு -100 கி
22. அல்லிக்கிழங்கு -100 கி
23. வெல்லம் -2 கி.கி
24. தேன் -350 கி
25. நெய் -250 கி
செய்முறை :
மேற்கண்ட கடைச் சரக்குகளை தனித்தனியே பொடித்து பனை வெல்லத்தினை பாகு செய்து மேற்சொன்னபடி சூரணத்தை சிறுக சிறுகப் போட்டு மருந்துக்குத் தகுந்த நெய்யைச் சிறுக சிறுக விட்டு கிண்டி மெழுகு பதத்திலிறக்கி, ஆறவிட்டு தேன்விட்டுப் பிசைந்து டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவும்; தீரும் நோயும் :
2 முதல் 5 கிராம் வரை தினம் இருவேளை. சாப்பிட்டு வர சர்க்கரை நோய், அஸ்திசுரம், காங்கை, சீதம், இரத்தம் விழுதல், வாயு பாண்டு சோகை காமாலை முதலிய நோய்கள் தீரும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.