தேவையான பொருட்கள் :
1. திரிகடுகு -35 கி
2. ஏலம் -35 கி
3. சீரகம் -35 கி
4. பசும்பால் -2.8 லி
5. பனைவெல்லம் -280 கி
6. நெய் -350 கி
7. தேன் -100 கி
தயாரிக்கும் விதம் :
திரிகடுகு, ஏலம், சீரகம் இவைகளை முறைப்படி சுத்தி செய்து இளவறுப்பாக வறுத்து சூரணித்து 2.8 லி பசுவின் பாலில் 280 கிராம் பனை வெல்லம் சேர்த்து கரைத்து படிகட்டி அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்து பாகுபதம் வந்தபின் சிறிது சிறிதாக சூரணத்தைத் தூவி கிண்டிக் கொண்டே நெய் 350 கி சேர்த்துக் கிண்டி இறக்கி சற்று சூடு ஆறிய பின் 100 மி.லி. தேன் ஊற்றி, கிண்டி மெழுகு பதமாக செய்து கொள்ளவும்.
அளவு :
3-6 கிராம் வீதம் இரு வேளை 40 நாட்கள் உட்கொள்ளலாம்.
தீரும் நோய்கள் :
வாயுத் தொல்லை, வாதம், உஷ்ணம், பித்தவாயு, உடல் உளைச்சல், வலி, கடுப்பு, எரிச்சல், பேதி, பொருமல், வாதக்கிராணி, அஸ்திசுரம், அஸ்திவெட்டை, வாந்தி முதலியவைகள் தீரும்.