தேவையான பொருட்கள் :
1. வெண்பூசணிக்காய்ச் சாறு -5.6 மி.லி
2. தாழை விழுதுச் சாறு -1.6 மி.லி
3. தென்னம்பூ சாறு -1.6 மி.லி
4. எலுமிச்சம்பழம் சாறு -1.6 மி.லி
5. பசுவின் பால் -2.8 மி.லி
6. சர்க்கரை -3.5 கி.கி.
7. சீரகம் -35 கி
8. கொத்தமல்லி -35 கி
9. கோஷ்டம் -35 கி
10. மிளகு -35 கி
11. மாசிக்காய் -35 கி
12. ஏலம் -35 கி
13. ஜாதிக்காய் -35 கி
14. சாதிபத்திரி -35 கி
15. அதிமதுரம் -35 கி
16. தாளீசபத்திரி -35 கி
17. நெய் -700 மி.லி
18. தேன் -350 மி.லி
செய்முறை :
மேற்படி சாறுகளையும், சர்க்கரையும் கலந்து அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும் போது, சீரகம், கொத்தமல்லி, கோஷ்டம், மிளகு, மாசிக்காய், ஏலம், ஜாதிக்காய், சாதிபத்திரி, அதிமதுரம், தாளீசபத்திரி இவைகளை இடித்து, பொடித்து, சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய்யும், தேனும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
அளவு :
3-6 கிராம் வரை வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
காமாலை, சோகை, வெள்ளை ஆகிய நோய்கள் தீரும். மேலும் உடல் வலுக்கும். விந்து ஊறும். சூட்டினால் உண்டாகும் நோய்கள் மற்றும் நீர்ச்சுருக்கு தீரும்.