தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப்பூண்டு -3500 கி
2. கல்கண்டு -350 கி
3. பெருங்காயம் -35 கி
4. சுக்கு -35 கி
5. வால்மிளகு -35 கி
6. கடுகு -35 கி
7. இந்துப்பு -35 கி
8. ஏலம் -35 கி
9. ஓமம் -35 கி
10. திப்பிலி -35 கி
11. மிளகு -35 கி
12. சீரகம் -35 கி
13. திரிபலா -35 கி
14. வெட்பாலை அரிசி -35 கி
15. அதிவிடாயம் -35 கி
16. வாய்விடங்கம் -35 கி
17. ஆவின் பால் -400 மி.லி
செய்முறை:
வெள்ளைப்பூண்டை 1 லிட்டர் தூய்மையான நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து பெருங்காயம், சுக்கு, வால்மிளகு, கடுகு, இந்துப்பு, ஏலம், ஓமம், திப்பிலி, மிளகு, சீரகம், திரிபலா, வெட்பாலையரிசி, அதிவிடாயம், வாய்விடங்கம் முதலியவற்றை பொடித்துத் தூவி ஆவின் நெய்யை விட்டுக் கிண்டி மெழுகு பதத்திலெடுத்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.
அளவு :
5 முதல் 10 கிராம் இரண்டு முதல் மூன்று வேளைகள் உணவிற்கு முன் நன்கு சுவைத்து உண்டு வெந்நீர் அருந்தவும்.
தீரும் நோய்கள்:
எல்லாவிதமான வாயுக் கோளாறுகள், வாத வலிகள், அஜீரணம் முதலியவற்றைப் போக்கி பசியைத் தூண்டும்.