Contact Us

Tips Category View

திப்பிலி லேகியம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. திப்பிலி                           -3500 கி
2. கற்கண்டு                       -350 கி
3..சுக்கு                              -35 கி
3. அக்கரகாரம்                   -35 கி
4. கடுக்காய்                        -35 கி
5. ஓமம்                                 -35 கி
6. சீரகம்                                -35 கி
7. கொத்தமல்லி                 -35 கி
8. வெட்பாலை                    -35 கி
9. செண்பகப்பூ                  -35 கி
10. கோஷ்டம்                        -35 கி
11. நெய்                                 -800 கி
12. தேன்                                 -200 மி.லி.
13. அரத்தை                          -35 கி

செய்முறை :
திப்பிலியை நீரில் சிதைத்துப் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து சுக்கு, அரத்தை, அக்கரகாரம், கடுக்காய், ஓமம், சீரகம், கொத்தமல்லி வெட்பாலையரிசி, செண்பகப்பூ இவற்றைப் பொடித்து தூவி நெய் விட்டு கிண்டி, தேன் விட்டு கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:
வேளைக்கு 5 முதல் 10 கிராம் வீதம் தினமும் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:
கப சம்மந்தமான வியாதிகளும், வாதம், வாயு மற்றும் குன்மம் ஆகியவையும் நீங்கும்.