தேவையான பொருட்கள்:
1. வறுத்த தேத்தான் கொட்டை - 150 கி
2. சுக்கு -15 கி
3. மிளகு -15 கி
4. திப்பிலி -15 கி
5. கடுக்காய் -15 கி
6. நெல்லிக்காய் -15 கி
7. தான்றிக்காய் -15 கி
8. சிற்றரத்தை -15 கி
9. சீரகம் -15 கி
10. சர்க்கரை -120 கி
11. பசுவின் பால் -1.6 கி.கி.
12. 12.நெய் -1.6 கி.கி.
13. தேன் -800 கி
செய்முறை:
1 - 9 வரையுள்ள சரக்குகளை பொடித்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரை, பசுவின் பால் சேர்த்துக் காய்ச்சி இலேகிய பாகம் செய்து இறக்கி சூரணத்தை சிறிது சிறிதாக கலந்து பின்னர் நெய்யையும் தேனையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
அளவு :
தினம் 3- 6 கிராம் வீதம் 2-3 வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
மூலம், பவுத்திரம், வெள்ளை, வெட்டை, வாயுத் தொல்லை, பசி மந்தம் தீரும்.