தேவையான பொருட்கள்:
1. முருங்கைப் பூ -35 கி
2. தூதுவளை -35 கி
3. ஆவின்பால் -800 மி.லி
4. சர்க்கரை -420 கி
5. நெய் -400 மி.லி
6. தேன் -400 மி.லி
செய்முறை :
முருங்கைப் பூ மற்றும் தூதுவளைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி குறுகி வரும் போது சர்க்கரையை சேர்த்து நெய் மற்றும் தேன்விட்டு கிண்டி பாத்திரங்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
5-10 கிராம் தினம் இருவேளை உணவிற்குப் பின்பு உட்கொண்டு வெந்நீர் அருந்தவும்.
தீரும் நோய்கள்:
பிரமிய மேகம், இருமல், சளி, சுவாசம், காசம், நுரையீரல் கோளாறுகள் ஆகியவை தீரும்.