தேவையான பொருட்கள் :
1. பறங்கிப்பட்டை -350 கி
2. நெல்லி வற்றல் -350 கி
3. தான்றிக்காய் -250 கி
4. சுக்கு -260 கி
5. சிற்றரத்தை -270 கி
6. வெட்பாலை அரிசி -70 கி
7. சிவனார் வேம்பு -70 கி
8. நிலப்பனை -70 கி
9. ஜாதிக்காய் -35 கி
10. லவங்கம் -35 கி
11. லவங்கப்பத்திரி -35 கி
12. மிளகு -35 கி
13. ஏலம் -35 கி
14. 14.ஓமம் -35 கி
15. திப்பிலி -35 கி
16. கார்போக அரிசி -35 கி
17. கொத்து மல்லி -35 கி
18. வாய்விடங்கம் -35 கி
19. கருஞ்சீரகம் -35 கி
20. சித்திரமூலம் -35 கி
21. வாலளுவை அரிசி -35 கி
22. அமுக்கரா -35 கி
23. குங்குமப்பூ - 8 கி
24. கோரோஜனை -8 கி
25. சுத்தி செய்த சேராங்கொட்டை -700 கி
26. நெய் -3 கி.கி.
27. கிரான் -3 கி.கி.
28. சர்க்கரை - 10.5 கி. கி
29. பால் -3 கி.கி
செய்முறை :
பாலுடன் சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பதத்தில் இறக்கி மற்ற சரக்குகளின் சூரணத்தைக் கலந்து பின்னர் சேராங்கொட்டை நெய்யையும், பசுவின் நெய்யையும் தேனையும் கலந்து பின் குங்குமப்பூவையும் கோரோசனை யும் தூள் செய்து தூவி நன்கு கலந்து வைக்கவும்.
அளவு:
3 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்குப் பின் சாப்பிடவும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள் :
பக்கவாதம், குஷ்டம், ஆரம்பபுற்று, வெள்ளை தோல் நோய்கள், மூல வாயு, பௌத்திரம், மேக நோய்,சகல விஷங்கள்.