தேவையான பொருட்கள்:
1. எள் -61.9 கி
2. ஆவாரம்பட்டை -61.9 கி
3. வால்மிளகு -84.8 கி
4. இலவங்கம் -12.4 கி
5. மாசிக்காய் -63.1 கி
6. சிறுநாகப்பூ -6.2 கி
7. பரங்கிப்பட்டை -12.4 கி
8. பால் -247.7 கி
9. பனைவெல்லம் -495.4 கி
10. நல்லெண்ணெய் -247.7 கி
செய்முறை :
எள், ஆவாரம்பட்டை, வால்மிளகு, லவங்கம், மாசிக்காய், சிறுநாகப்பூ, பரங்கிப்பட்டை இவற்றைப் பொடித்து சூரணித்து வைக்கவும். பால் மற்றும் பனை வெல்லத்தினைக் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி மேற்படி சூரணத்தை அதில் கொட்டி, கிளறி, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.
அளவு:
2-5 கிராம் வீதம் இரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சர்க்கரை வியாதி, அதிமூத்திரம், வெள்ளை, வெட்டை முதலியவற்றைப் போக்கி உடல் வலிமையை உண்டாக்குகிறது.