தேவையான பொருட்கள் :
1. கண்டங்கத்திரி சமூலம் -1750 கி
2. ஆவின் நெய் -200 கி
3. பனை வெல்லம் -350 கி
4. திரிகடுகு -105 கி
5. வாய்விடங்கம் -35 கி
6. திரிபலாதி -105 கி
7. தாளிசபத்திரி -35 கி
8. இலவங்கப்பட்டை -35 கி
9. அக்கரகாரம் -35 கி
10. திப்பிலி மூலம் - 35 கி
11. சீரகம் -35 கி
12. குரோசோனி ஓமம் -35 கி
13. ஓமம் -35 கி
14. ஆனைத்திப்பிலி -35 கி
15. கோஷ்டம் -35 கி
செய்முறை :
4-5 வரையுள்ள சரக்குகளைப் பொடித்து, சூரணித்து வைக்கவும். அதனுடன் கண்டங்கத்திரி சமூலம், பனைவெல்லம் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி,மேற்படி சூரணத்தை அதில் போட்டு நன்கு கிளறி, பின் நெய்விட்டு கலந்து வைக்கவும்.
அளவு:
வேளைக்கு 5-10 கிராம் வீதம் தினமும் ஓரிரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சளி, இருமல், இளைப்பு மற்றும் பனிக் காலங்களில் வரும் இருமல், ஜலதோஷம் முதலியவற்றிற்கு சிறந்தது.