தேவையான பொருட்கள்:
1. காரக் கருணை -3 கி.கி.
2. கடுக்காய் -500 கி
3. நெல்லிக்காய் -500 கி
4. தான்றிக்காய் -500 கி
5. சுத்தித்த பூநீறு -750 கிராம்
6. நல்லெண்ணெய் -2 கி.கி.
செய்முறை :
கருணைக் கிழங்கை உப்புநீரில் வேக வைத்து எடுத்து அத்துடன் திரிபலா சூரணத்தையும் பூ நீற்றையும் சேர்த்துப் பிசைந்து அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் விட்டு மெழுகு பதம் வரும் வரை கிண்டி இறக்கவும்.
அளவு:
3 - 6 கிராம் காலை, மாலை இருவேளையில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
எல்லா வகையான மூல நோய்களும் தீரும்.