தேவையான பொருட்கள்:
1. பொன்னாங்கண்ணி சாறு -3 கி.கி.
2. பால் -3 கி.கி.
3. இளநீர் -3 கி.கி.
4. இஞ்சிச்சாறு -3 கி.கி.
5. ஏலம் -1.79 கி.கி.
6. லவங்கம் -1.20 கி.கி.
7. சர்க்கரை -7.19 கி.கி.
8. சிவகரந்தை -1.79 கி.கி.
9. தேன் -3.00 கி.கி.
10. நெய் -3.00 கி.கி.
செய்முறை :
சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இளநீர், பொன்னாங்கண்ணிச்சாறு, பால், இஞ்சிச்சாறு இவைகளை சேர்த்து சூடேற்றி பாகுபதமாக எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை நன்கு கலந்து பின்னர் தேன், நெய் போன்றவற்றை சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
அளவு:
5 கிராம் வீதம் தினமும் 2-3 வேளைகள் உணவிற்கு பின் பாலுடன் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, தாது இழப்பு, சோகை, மேகவெட்டை முதலியன.