தேவையான பொருட்கள் :
1. கண்டங்கத்திரி -13.1 கி
2. பால் -1.870லி.
3. வெல்லம் -374.2 கி
4. அமுக்கரா -13.1 கி
5. பொன் முசுட்டை -13.1 கி
6. நன்னாரி வேர் -13.1 கி
7. நிலப்பனை வேர் -13.1 கி
8. சுக்கு -65.5 கி
9. சிறு செருப்படை -65.5 கி
10. கரிசாலை -65.5 கி
11. தக்கோலம் -6.5 கி
12. கூகை நீர் -6.5 கி
13. கரியபோளம் -6.5 கி
14. தான்றிக்காய் -6.5 கி
15. நெல்லி வற்றல் -6.5 கி
16. திப்பிலி -6.5 கி
17. திராட்சை -6.5 கி
18. வாய்விடங்கம் -6.5 கி
19. செம்முள்ளி -6.5 கி
செய்முறை :
பாலுடன் வெல்லம் சேர்த்து காய்ச்சி பாகுபதம் செய்து அதில் அமுக்கரா, பொன்முசுட்டை, நன்னாரி வேர், நிலப்பனை வேர், சுக்கு, சிறுசெறுபடை, கரிசாலை. தக்கோலம், கூகை நீர், கரியபோளம், தான்றிக்காய், நெல்லி வற்றல், திப்பிலி, திராக்க்ஷாதி வாய்விடங்கம் இவைகளை இடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி நெய் சேர்த்துக் கிண்டவும்.
அளவு:
10-15 கிராம் இரண்டு அல்லது 3 வேளைகள் உண்ணவும்.
தீரும் நோய்கள்:
தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் அசதி, பசியின்மை, சோர்வு முதலியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்து அதிக பால் சுரக்கச் செய்கிறது.