தேவையான பொருட்கள்:
1. பிரண்டைச்சாறு -50 மி.லி
2. குமரி வேர்ச்சாறு -50 மி.லி
3. தேத்தான் கொட்டை -50 மி.லி
4. காட்டுக்குருணை -126 கி
5. நாக பற்பம் -25 கி
6. நத்தை பற்பம் -25 கி
7. மாம்பருப்பு -50 கி
8. சித்திர மூல வேர்ப்பட்டை -25 கி
9. திரிபலா -151 கி
10. முத்து சிற்பி பற்பம் -50 கி
11. சர்க்கரை -2.5 கி.கி
12. பால் -5 லி
13. திரிகடுகு -50 கி
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை ஒன்றாய் சேர்த்துக் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் 500 மி.லி நெய் சேர்த்து கிண்டி இறக்கி வைக்கவும். பின் தேன் சேர்த்து மெழுகு பதத்தில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
5 - 10 கிராம் தினம் 2 அல்லது 3 வேளைகள் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
எல்லா விதமான மூலநோய்களைப் போக்கி உடல் உஷ்ணத்தைக் குறைத்து ஆரோக்கியமளிக்கிறது.