தேவையான சரக்குகள் :
1. அஸ்வகந்தா -102.6 கி
2. சந்தனம் -25.6 கி
3. கோரைக்கிழங்கு -25.6 கி
4. கடுக்காய் பூ -25.6 கி
5. விலாமிச்சம் வேர் -25.6 கி
6. தேசாவரம் -25.6 கி
7. சித்திரமூலம் -25.6 கி
8. சர்க்கரை -256.1 கி
9. கிஸ்மிஸ்பழம் -25.6 கி
10. ஜாதிக்காய் -25.6 கி
11. கூகைநீர் -25.6 கி
12. திரிகடுகு -25.6 கி
13. சாம் -256.1 கி
14. லவங்கம் - 25 கி
15. லவங்கப்பட்டை -25.6 கி
16. ஏலம் -25.6 கி
17. நெய் -500 கி
செய்முறை :
அஸ்வகந்தா, சந்தனம், கோரைக்கிழங்கு, கடுக்காய் பூ, விலாமிச்சம் வேர், தேசாவரம், சித்திர மூலம் இவற்றுடன் பால், சர்க்கரை சேர்த்து பாகுபதம் செய்து அதில் கிஸ்மிஸ், பேரீச்சம்பழம், ஜாதிக்காய், கூகை நீர், திரிகடுகு, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், இவைகளை அரைத்து நெய்விட்டு கிண்டி மெழுகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
5 - 10 கிராம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் பாலில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
பிரமேகம் மற்றும் வெட்டையைப் போக்கி தாது விருத்தி உண்டாக்கி உடல் பலத்தைப் பெருக்கும் கல்ப மருந்து.