தேவையான சரக்குகள் :
1. மாதுளம் பழரசம் -100 கி.
2. சர்க்கரை -200 கி.
செய்முறை :
மாதுளையின் மேல் தோலை நீக்கி சாறு பிழிந்து அத்துடன் சீனியைக் கலந்து பாகுபதத்திற்கு காய்ச்சி சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
20 மி.லி. சர்பத்தை 40 மி.லி. நீரில் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள்:
பித்தத்தையும், பித்த சூட்டையும் இரும்புச் சத்து குறைவையும் நீக்கும்.