தேவையான சரக்குகள் :
1. சந்தனம்தூளை -200 கி.
2. சர்க்கரை -250 கி.
செய்முறை :
சந்தனத்தூளை தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து மறுநாள் காய்ச்சி, தண்ணீர் நாலில் ஒன்றாய் வற்றிய பின் வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகு பதத்தில் சீசாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீரில் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள் :
மூலச்சூடு, பிரமேகம் தீரும்.