தேவையான சரக்குகள் :
1. வல்லாரை -200கி
2. எலுமிச்சை சாறு -50 கி
3. தேன் -100 கி
4. சர்க்கரை - 1 கி.கி.
செய்முறை :
வல்லாரை இலைகளைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு :
20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
ஞாபக மறதி, உடல் பலஹீனம் போன்றவைகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யும்.