தேவையான சரக்குகள் :
1. தூதுவளை -200 கி
2. எலுமிச்சை சாறு -50 கி.
3. தேன் -100 கி.
4. சர்க்கரை -1 கி.கி.
செய்முறை :
தூதுவளை இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
20-30 மி.லி சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.
தீரும் நோய்கள் :
சளி, இருமல்.