தேவையான சரக்குகள் :
1. வில்வம் இலை - 200 கி
2. எலுமிச்சை சாறு - 50 கி
3. தேன் - 100 கி
4. சர்க்கரை - 1 கி.கி.
செய்முறை :
வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
20-30 மி.லி. சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.
பயன்கள்:
வாயுத் தொல்லை, வயிற்றுக்கோளாறு, உடல்சூடு முதலியன நீங்கும்.