தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி மற்றும் அவுலை ஒன்றாக ஊறவைக்கவும். துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். 2 மணிநேரம் கழித்து அரிசி மற்றும் அவுலை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி, பருப்பை ஒன்றாக நன்கு கலக்கவும். உப்பு வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்க்கவும். நன்கு கலக்கிக் கொள்ளவும். மாவு தயார். புளிக்கவைக்கத் தேவையில்லை. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒருகரண்டி மாவு சேர்த்து கொஞ்சம்கனமான அடைகளாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வேகும் போது இரண்டு பக்கமும்எண்ணெய் சேர்க்கவும்.
பலன்கள்:
இரத்த சோகையை குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை கீரையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்கும். தலைவலியைப் போக்கும். கை,கால்,மூட்டுவலிகளைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்தும் சிறந்த உணவு இது.