தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி அரிசியை ½ கப் தண்ணீர் சேர்த்துகுக்கரில் 3 விசில் விட்டு வேகவிட்டுக் கொள்ளவும். வெந்த சாதத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் துருவிய காரட், குடைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்பொடி,கடலைமாவு,கரம் மசாலா,உப்புசேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும், பொன்நிறம் ஆனவுடன் எடுக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பலன்கள்:
காரட்,கரம் மசாலா மிளகாய்சேர்த்த இந்த பக்கோடா நுரையீரல், வயிறு தொடர்பான கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் நோயை கட்டுப்படுத்தவும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டி.