Contact Us

Nivashini

Gynaecologist
  • Qualification: Diploma in Oto-Rhino-Laryngology, Bachelor of Surgery(M.B.B.S)
  • Languages: Tamil, English, Hindi
  • Speciality:
    • Gynaecologist
    • Orthopedic Surgery
    • Homeopathy
    • Dermatologist
    • Diabetologist
    • Psychiatrist
    • Anaesthetist
    • Cardiologist
    • Gastroenterologist
    • General Surgery

About Dr. Nivashini

  • gggg

Appointment Fees

S.no Specialities Video Audio Direct
1 Gynaecologist 1 2 3
2 Orthopedic Surgery 4 5 6
3 Homeopathy 7 8 9
4 Dermatologist 10 11 12
5 Diabetologist 13 14 15
6 Psychiatrist 16 17 18
7 Anaesthetist 19 20 21
8 Cardiologist 22 23 24
9 Gastroenterologist 25 26 27
10 General Surgery 28 29 30

Study Material

Awards

Tips

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும் சீதபேதி சரியாக மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam vel erat in metus vehicula ultrices. Sed non libero vel sapien congue interdum. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas. Proin auctor euismod justo, a ultrices justo vehicula nec. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam vel erat in metus vehicula ultrices. Sed non libero vel sapien congue interdum.<br><br>Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam vel erat in metus vehicula ultrices. Sed non libero vel sapien congue interdum. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam vel erat in metus vehicula ultrices. Sed non libero vel sapien congue interdum.

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Lorem Ipsum passages, and more recently with desktop publishing software like Aldus PageMaker including versions of Lorem Ipsum.

Quantum healing is a pseudoscientific mixture of ideas which purportedly draws from quantum mechanics, psychology, philosophy, and neurophysiology. Advocates of quantum healing assert that quantum phenomena govern health and wellbeing.

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்

இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளை நெய்யில் கலந்து சாப்பிட இருமல் தீரும்.

<p><strong>கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று</strong> மாதங்கள் மிக முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் ஏற்படும் வாந்தியினால் திடமான உணவைச் சாப்பிடவே பிடிக்காது. சாப்பிட ஆசை இருந்தாலும் வாய் ஒத்துழைக்காது. ஆனால், அதற்காகச் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது.&nbsp;<br><br><strong>வாந்தி வரும்போது சாப்பிடாமல்</strong>, சிறிது நேரம் கழித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சுலபமாக, செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறுகிய இடைவெளியில் பழம், காய்கறி சாலட், சத்து மாவுக் கஞ்சி என்று அடிக்கடி சாப்பிடுகையில் கொஞ்சம் வாந்தி எடுத்தாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மிஞ்சி இருக்கும். முதல் மூன்று மாதங்களில் நோய்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வரவிடாமல் தவிர்ப்பது மிக முக்கியம்.</p>

<p><strong>வாழைத்தண்டு ஜூஸ்:</strong><br><br><strong>தேவையான பொருட்கள்:</strong><br>* வாழைத்தண்டு -100 கிராம்<br>* தண்ணீர் இரண்டு டம்ளர்<br><br><strong>செய்முறை:</strong><br>வாழைத்தண்டினை தோல் சீவி பொடியாக நறுக்கவும். அதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடி கட்டினால் வாழைத்தண்டு ஜூஸ் ரெடி.<br><br><strong>பலன்கள்:</strong><br>இது சிறுநீரக பித்தப்பை கற்கள் போக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும். வைட்டமின் ஏ, பி16, சி, ஃபோலேட்ஸ் நியாசின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இரத்த சோகை கரோனரி இதய நோய் நரம்பு மண்டல பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் அளவை குறைக்கும் எலும்புகளை வலிமையாக்குகிறது . பைட்டோ கெமிக்கல் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அல்சரை தடுக்கும் ஆற்றல் கொண்டது .</p>

<p><strong>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கற்றாழை&nbsp;ஜூஸ்</strong></p><p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>கற்றாழைச்சோறு- 100 கிராம்</li><li>பழையசாத தண்ணீர்- 2 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; கற்றாழையை எடுத்து அதன்தோலை நீக்கிய பின் உள்ளிருக்கும் சோற்றினைநன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து விடவும். இதனை இரண்டு டம்ளர்பழைய சாத தண்ணீரில் கலந்துகுடிக்கலாம்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுஉடலை குளிர்வித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். பாக்டீரியாவைஎதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. அலர்ஜி,அல்சர் போன்ற உபாதைகளை விரைவில் போக்குகிறது.</p><p>&nbsp;</p>

<p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;<strong>கறிவேப்பிலை</strong> ஜூஸ்&nbsp;</p><p>&nbsp;தேவையான பொருள்கள் :</p><ul><li>கருவேப்பிலை -50 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்இரண்டு டம்ளர்&nbsp;</li></ul><p>&nbsp;செய்முறை:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கருவேப்பிலை இலையை அரை டம்ளர் தண்ணீர்விட்டு அழைக்கவும். அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டினால் கருவேப்பிலை ஜூஸ் ரெடி.</p><p>&nbsp;பலன்கள்:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது சர்க்கரை வியாதிக்குமருந்தாகும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படும், முடி வளர்ச்சியை தூண்டிகருகருவென முடியை வளரச் செய்யும்.</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்துஇருப்பதால் ரத்த சோகையை நீக்கும். கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற சிறந்த பானம் இது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அவுரி இலை -150 &nbsp; மி . கி<br>2. கீழாநெல்லி - 150 &nbsp; மி . கி<br>3. நிலவேம்பு - 100 &nbsp; மி . கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br>4. அதிமதுரம் - 100 &nbsp; மி . கி<br>5. அன்னபேதி செந்தூரம் - 200 &nbsp; மி . கி<br>6. மண்டூரச் செந்தூரம் - 200 &nbsp; மி . கி<br>7. வெள்ளி பற்பம் - 200 &nbsp; மி . கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-4 வரையுள்ள மூலிகைகளைத் தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் &nbsp;5-7 வரையுள்ளவற்றை கலந்து இடைவிடாது அரைத்து 500 மில்லி கிராம் வீதம் கேப்சூல்களில் நிரப்பி வைக்கவும். இவற்றைத் தூய்மையான காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல் வீதம் தினமும் 3 வேளை மற்றும் எல்லா வியாதிக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>மஞ்சள் காமாலை, பாண்டு,சோகை, அஜீரணக் கோளாறு, வாய்வு,கல்லீரல் நோய்கள் முதலியவற்றைப் போக்கும்.</p>

<p><strong>தேவையானபொருட்கள்:</strong></p><ul><li>வேருடன்கூடிய சிறுபீளை<strong>&nbsp;&nbsp;</strong> செடி- 100 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்- 3 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சிறுபீளை செடியை வேருடன் பிடுங்கி மண் போக அலசவேண்டும். முந்தைய நாள் இரவே வேருடன்கூடிய செடியில்&nbsp; 3 டம்ளர்தண்ணீர் விட்டு 2 டம்ளராக மாறும் வரை நன்கு கொதிக்கவிடவும் .காலையில் எழுந்து இந்த நீரை மட்டும்வடிகட்டி குடிக்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது சிறுநீர் மற்றும் பித்தப்பை கற்களை போக்கி உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்&nbsp; நிறைந்தது&nbsp;என்பதால் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும். வயிற்றுப்புண், சிறுநீர் பாதை புண், எரிச்சல் ஆகியன குணமாகும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1.கடுக்காய் தோல் &nbsp;- 60 மி. கி<br>2. இந்துப்பு - 40 மி. கி<br>3. ஓமம் - 40 மி. கி<br>4. பூநீறு - 40 மி. கி<br>5. இஞ்சி - 40 மி. கி<br>6. எலுமிச்சை - 30 மி. கி<br>7. கண்ணாடிஉப்பு - 30 மி. கி<br>8. சோற்றுப்பு - 30 மி. கி<br>9. பொறரித்தவெண்காரம் - 30 மி. கி<br>10. திரிகடுகு - 30 மி. கி<br>11.கோஷ்டம் - 30 மி. கி<br>12. பெருங்காயம் - 30 மி. கி<br>13. பூண்டு - 30 மி. கி<br>14. கரி உப்பு - 30 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-4 வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து நன்கு அரைத்து கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல் வீதம் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>அஜீரணம், புளித்த ஏப்பம், பசியின்மை, அமிலத்தன்மை, ருசியின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றைப் போக்குகிறது<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1.அசோக பட்டை - 200 மி. கி<br>2. மூசாம்பரம் - 400 மி. கி<br>3.பப்பாளிப்பால் - 100 மி. கி<br>4.பெருங்காயம் - 100 மி. கி<br>5.பருத்தி வேர் - 100மி. கி<br>6.பிரம்மதண்டி - 100மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை உலர்த்திப் பொடித்து அவற்றினை வஸ்திர காயம் செய்து நன்றாக அரைத்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>2 கேப்சூல்கள் வீதம் 3 வேளைகள் 3 முதல் 5 நாட்களுக்கு மட்டும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>தாமதித்த மாதவிடாய், சூலைக்கட்டு, கர்ப்பப்பை அலர்ஜி மற்றும் வலி முதலியவற்றைப் போக்கி மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது.</p><p><strong>பத்தியம்:</strong><br>கடுகு, புளி, நல்லெண்ணெய் நீக்கவும் மாதவிடாய் உண்டாகும் வரை அரை வயிறு மட்டும் உண்ண வேண்டும். கர்பப ஸ்திரிகள் இக்கேப்சூலை உபயோகிக்கக் கூடாது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. காட்டுக் கருணை - 60 மி. கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br>2. பிரண்டை - 40 மி. கி<br>3. மருள் கிழங்கு - 60 மி. கி<br>4. குமரி வேர் - 60 மி. கி<br>5. மாம்பருப்பு - 40 மி. கி<br>6. கடுக்காய்த் தோல் - 40 மி. கி<br>7. சித்திர மூல வேர்ப்பட்டை - 60 மி. கி<br>8. கோரைக்கிழங்கு - 60 மி. கி<br>9. சரக்கொன்றை புலி - 60 மி. கி<br>10. தேத்தான் கொட்டை - 60 மி. கி<br>11. திரி கடுகு - 60 மி. கி<br>12. திரிபலா - 60 மி. கி<br>13. சீரகம் - 20 மி. கி<br>14. நத்தைச் சூரி - 40 மி. கி<br>15. முத்துச்சி சிப்பி பற்பம் - 40 மி. கி<br>16. சிலாசத்து பற்பம் - 40 மி. கி<br>17. வெள்ளி பற்பம் - 20 மி. கி<br>18. துத்தி - 180 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-18 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து சலித்து வைக்கவும். இத்துடன் நத்தை பற்பம், முத்துச்சிப்பி பற்பம், சிலாசத்து பற்பம், வெள்ளி பற்பம் இவற்றினைக் கலந்து நன்றாக அரைத்து 50மி. கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.</p><p><strong>பயன்கள்:</strong><br>மூலம், பவுத்திரம், ரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல், அரிப்பு, மலச்சிக்கல் முதலிய நோய்களுக்கு ஏற்றது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சுத்தி செய்த கந்தகம் - 100 மி. கி<br>2. பரங்கிப்பட்டை - 100 மி. கி<br>3. அமுக்கிரா - 100 மி. கி<br>4. தண்ணீர்விட்டான் கிழங்கு - 100 மி. கி<br>5. நன்னாரி - 100 மி. கி<br>6. வல்லாரை - 100 மி. கி<br>7. ஓமம் - 100 மி. கி<br>8. சித்திரமூலப்பட்டை - 100 மி. கி<br>9. திரிபலா சூரணம் - 100 மி. கி<br>10. திரிகடுகு சூரணம் - 100 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-8 எண் வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து அத்துடன் திரிகடுகு மற்றும் திரிபலா சூரணம் கலந்து நன்றாக அரைத்து 500 மி.கி கேப்சூல்களில் நிரப்பி, காற்றுப்புகாதகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்.</p><p><strong>பயன்கள்:</strong><br>வெடிசூலை, மேகசூலை, இடிசூலை, தொழுநோய், விஷ நீர், சிரங்கு,புழுவெட்டு, தடிப்பு மூலம், பவுத்திரம், மேகம் ஆகியவற்றைப் போக்கி ரத்த சுத்திகரிப்புக்கு சிறந்தது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அருகன்புல் -500 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>அருகம்புல்லை சேகரித்து தூய்மை செய்து உலர்த்தி அரைத்து, பொடித்து, சலித்து &nbsp;500 மி.கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும். &nbsp;<br><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள்</p><p><strong>பயன்கள்:</strong><br>எல்லா விதமான தோல் நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து உடம்பை பலப்படுத்துகிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்</strong><br>1. சிவப்பு துத்தி - 81.6 மி. கி<br>2. வில்வ பழம் - 102 மி. கி<br>3. வாய்விடங்கம் - 61.2 மி. கி<br>4. நாவல் கொட்டை - 102 மி. கி<br>5. சிறுகுறிஞ்சான் - 122.4 மி. கி<br>6. கடுக்காய் - 81.6 மி. கி<br>7. கோவை இலை - 122.4 மி. கி<br>8. பாகற்காய் - 122.4 மி. கி<br>9. சீந்தில்கொடி - 122.4 மி. கி<br>10. மஞ்சள் - 81.6 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:&nbsp; </strong>&nbsp;&nbsp;<br>வில்வப் பழத்தின் ஓடு நீக்கி உள்ளிருக்கும் சதையை உலர்த்தி பயன்படுத்தவும். மேற்கண்ட மற்ற மூலிகைகளை உலர்த்தி பக்குவப்படுத்தி பொடி செய்து சலித்து இடைவிடாது கம்பத்தில் நன்றாக அரைத்து 500 மி . கி கேப்சூல்களில் நிரப்பி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>காலை வெறும் வயிற்றில் 2 கேப்சூல் மாலை 2 கேப்சூல் தண்ணீர் அதிகமாக அருந்தவும். நடைப்பயணம் செய்வது நல்லது.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மதுமேகம், நீரழிவு, அதிக பசி, சோர்வு, அசதி, தாக வறட்சி, கைகால் எரிச்சல், அதி மூத்திரம், போன்ற மேக ரோகங்களுக்கு சிறந்த மூலிகை மருந்து. மேலும் சர்க்கரை நோய்க்கான சிறந்த நிவாரணி.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சந்தனத்தூள் - 200 மி. கி<br>2. அதிமதுரம் - 100 மி. கி<br>3. கோந்து - 100 மி. கி<br>4. வால் மிளகு - 100 மி. கி<br>5. பூனைக்கண் குங்கிலியம் - 60 மி. கி<br>6. வெடியுப்பு - 60 மி. கி<br>7. வெள்ளை குங்கிலியம் - 60 மி. கி<br>8. சிலாசத்து பற்பம் - 200 மி. கி<br>9. ரோஜாப்பூ - 100 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-4 வரையுள்ள மற்றும் 6,9 சரக்குகளை உலர்த்தி பொடித்து சலித்து அத்துடன் பூனைக்கண் குங்கிலியம், வெள்ளை குங்கிலியம், சிலாசத்து பற்பம் போன்றவற்றைக் கலந்து இடைவிடாது அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத இடங்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் மற்றும் எல்லா வியாதிகளுக்கும் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மேகவெட்டை, நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கற்கள், வயிற்று எரிச்சல், பயணச்சூடு, வாய் துர்நாற்றம், அஜீரணம்,அதிக உஷ்ணம் ஆகியவற்றைப் போக்கச் சிறந்தது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சுண்டவற்றல் - 80 மி. கி<br>2. கருவேப்பிலை - 80 மி. கி<br>3. ஓமம் - 80 மி. கி<br>4. மாம்பருப்பு - 80 மி. கி<br>5. நெல்லிவற்றல் - 80 மி. கி<br>6. மாதுளம் பிஞ்சு தோல் - 80 மி. கி<br>7. வெந்தயம் - 80 மி. கி<br>8. வெட்டப்பாலயரிசி - 80 மி. கி<br>9. வில்வ பழம் - 80 மி. கி<br>10. கடுக்காய் - 80 மி. கி<br>11. ஆலம்பட்டை - 80 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட மூலிகைகளை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து சுமார் 500 மி.கி. வீதம் ஒவ்வொரு கேப்சூல்களில் நிரப்பவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு, ரத்த சீதபேதி, கடுப்புக் கழிச்சல் (சீதபேதி), முதலியவை.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. லிங்க செந்தூரம் - 62.5 மி. கி<br>2. அன்னபேதி செந்தூரம் - 75.0 மி. கி<br>3. படிகார பற்பம் - 75.0 மி. கி<br>4. நிலவேம்பு - 100.0 மி. கி<br>5. பற்படாகம் - 100.0 மி. கி<br>6. கோரைக்கிழங்கு - 50.0 மி. கி<br>7. அமுக்கரா - 750.0 மி. கி<br>8. அகில் - 50.0 மி. கி<br>9. சுக்கு - 12.0 மி. கி<br>10. மிளகு - 12.0 மி. கி<br>11. திப்பிலி - 37.5 மி. கி<br>12. கடுக்காய் - 50.0 மி. கி<br>13. நெல்லிக்காய் - 100.0 மி. கி<br>14. தான்றிக்காய் - 100.0 மி. கி<br>15. கஸ்தூரி மஞ்சள் - 125.0 மி. கி</p><p><strong>தயாரிக்கும் விதம்:</strong><br>மேற்கண்ட மூலிகைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து மேற்படி பற்பம் மற்றும் செந்தூரங்களைக் கலந்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. &nbsp;கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத குப்பிகளில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோகிக்கும் அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் &nbsp;தினம் இருவேளை வெந்நீரில் சாப்பிடவும். மற்றும் சிறு குழந்தைகளுக்கு கேப்சூல் உள்ளிருக்கும் பவுடரை இருவேளை வெந்நீரில் கரைத்துக் கொடுக்கவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>காய்ச்சல்,உடம்பு வலி, மற்றும் வாத, பித்த, கபசுரங்களுக்கு ஏற்றது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. கண்டங்கத்திரி - 150 மி. கி<br>2. துளசி - 150 மி. கி<br>3. எருக்கன் செடி - 150 மி. கி<br>4. திப்பிலி - 60 மி. கி<br>5. ஆடாதோடை - 220 மி. கி<br>6. அவுரி இலை - 70 மி. கி<br>7. தும்பை - 100 மி. கி<br>8. துளசி - 60 மி. கி<br>9. அதிமதுரம் - 140 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட மூலிகைகளை தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அரைத்து அனைவரும் விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்று போகாத டப்பாக்கலில் பத்திரப்படுத்தவும்</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>தும்மல் , இருமல்,. ஈளை , நுரையீரல், அலர்ஜி, பிராங்கைய்டீஸ், இளைப்பு, ஆஸ்துமா.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அசோகப்பட்டை - 100 மி. கி<br>2. துளசி - 100 மி. கி<br>3. சந்தனம் - 100 மி. கி<br>4. அரசம்பட்டை - 100 மி. கி<br>5. அதிமதுரம் - 100 மி. கி<br>6. மருதோன்றி இலை - 100 மி. கி<br>7. மிளகு - 100 மி. கி<br>8. பிரம்மதண்டி - 100 மி. கி<br>9. வெண் மருது - 50 மி. கி<br>10. அமுக்கரா - 50 மி. கி<br>11. குங்கிலிய பற்பம் - 50 மி. கி<br>12. சிலாசத்து பற்பம் - 50 மி. கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-10 வரையுள்ள சரக்குகளை சுத்தம் செய்து உலர்த்தி, பொடித்து, சலித்து இத்துடன் குங்கிலிய பற்பம் மற்றும் சிலாசத்து பற்பம் கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை, மாதவிடாய் கோளாறு, கர்ப்பாயச கோளாறு, இடுப்பு வலி, பலகீனம், சோகை மற்றும் வலியுள்ள மாதவிடாய் குணமாகும். பெண்களுக்கு சிறந்த டானிக்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சர்பகந்தா -100 மி. கி.<br>2. நிலவேம்பு -100 மி. கி.<br>3. வெட்டிவேர் -100 மி. கி.<br>4. எலுமிச்சம் வேர் -100 மி. கி.<br>5. சந்தனத்தூள் -100 மி. கி.<br>6. பேய்ப்புடல் -100 மி. கி.<br>7. கோரைக்கிழங்கு - 100 மி. கி.<br>8. சுக்கு - 100 மி. கி.<br>9. மிளகு - 100 மி. கி.<br>10. அமுக்கரா - 100 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட மூலிகைகளை சேகரித்து சுத்தம் செய்து உலர்த்தி பொடித்து, சலித்து நன்றாக அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் விதம் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>நரம்பு, படபடப்பு, அதிக வியர்வை மற்றும் ரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்</strong><br>1. &nbsp;அன்னபேதி செந்தூரம் - 100 மி. கி.<br>2. ஆறுமுக செந்தூரம் - 100 மி. கி.<br>3. அயகாந்த செந்தூரம் - 100 மி. கி.<br>4. அயபிருங்கராஜ கற்பம் - 100 மி. கி.<br>5. சுயமாக்கினிச் செந்தூரம் - 100 மி. கி.<br>6. அவுரி - 100 மி. கி.<br>7.துளசி - 100 மி. கி.<br>8. வெடியுப்புச் சுண்ணம் - 100 மி. கி.<br>9. நெருஞ்சில் - 100 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>அவுரி, வெள்ளரி, துளசி, நெருஞ்சில் இவற்றை உலர்த்திப் பொடித்து இத்துடன் மேற்கண்ட செந்தூரம், கற்பம் மற்றும் சுண்ணம் வகையுடன் கலந்து நன்றாக அரைத்து ஒரு கேப்சூலில் 500 மி. கி. வீதம் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் நிரப்பிப் பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>உடல் பருமனைக் குறைத்து தேவையற்ற சதையையும் கொழுப்பையும் கரைத்து, சீரான எடையும் சுறுசுறுப்பும் அளிக்க வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சிற்றாமுட்டி - 100 மி. கி.<br>2. அமுக்கரா - 200 மி. கி.<br>3. கொடிவேலி - 150 மி. கி.<br>4. திரிகடுகு - 100 மி. கி.<br>5. நொச்சி - 400 மி. கி.<br>6. காந்த செந்தூரம் - 50 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>1-5 வரையுள்ள மூலிகைகளை நிழலில் உலர்த்தி பொடித்து, சலித்து இத்துடன் காந்த செந்தூரம் சேர்த்து இடைவிடாது நன்றாக கல்வத்தில் அரைத்து 500 மி. கி. வீதம் ஒவ்வொரு கேப்சூல்களிலும் நிரப்பி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:&nbsp;</strong><br>எல்லா வகையான வாத ரோகங்கள், மூட்டு வலி, வீக்கம், இடுப்பு வலி, நரம்பு வலி, தசை வலி எல்லா வகையான நீர்க்கட்டுகள்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சுக்கு -10 மி.கி.&nbsp;<br>2. ஓமம் -10 மி.கி.<br>3. மஞ்சள் -10 மி.கி.<br>4. வாய்விடங்கம் -10 மி.கி.<br>5. வசம்பு -10 மி.கி.<br>6. இலவங்கம் -10 மி.கி.<br>7. பரங்கிப்பட்டை -10 மி.கி.<br>8. கடுக்காய் &nbsp;தோல் -10 மி.கி.<br>9. கருஞ்சீரகம் -10 மி.கி.<br>10. காட்டு சீரகம் -10 மி.கி.<br>11. சிறுதேக்கு - 10 மி.கி.<br>12. தாளிசபத்திரி - 10 மி.கி.<br>13. திராட்சை - 10 மி.கி.<br>14. திப்பிலி - 10 மி.கி.<br>15. அரத்தை - 10 மி.கி.<br>16. கோஷ்டம் - 10 மி.கி.<br>17. வாலுளுவை அரிசி - 10 மி.கி.<br>18. சோம்பு - 10 மி.கி.<br>19. ஏலம் - 10 மி.கி.<br>20. ஜாதிக்காய் - 10 மி.கி.<br>21. மிளகு - 10 மி.கி.<br>22. சீரகம் - 10 மி.கி.<br>23. கார்போக அரிசி - 10 மி.கி.&nbsp;<br>24. திப்பிலிக் கட்டை - 10 மி.கி.<br>25. மாசிக்காய் - 10 மி.கி.<br>26. தேற்றான் விதை - 10 மி.கி.<br>27. நீர் முள்ளி விதை - 10 மி.கி.<br>28. எள்ளு - 10 மி.கி.<br>29. சங்கன் வேர் - 10 மி.கி.<br>30. அமுக்கரா வேர் - 10 மி.கி.<br>31. ஆகாயகருடன் கிழங்கு - 10 மி.கி.<br>32. சித்திர மூல வேர்பட்டை - 10 மி.கி.<br>33. இரசம் (சுத்தி செய்தது) - 10 மி.கி. &nbsp;&nbsp;<br>34. சுத்தி செய்த கந்தகம் - 10 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>இரசத்தையும், கந்தகத்தையும் கருப்பு நிறம் வரும் வரை நன்றாக அரைக்கவும். மற்ற சரக்குகளை இடித்துச் சலித்து வைக்கவும். சூரணத்தையும் பொடித்த சரக்குகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு இடித்து உலர்த்தி பின் 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>எல்லாவிதமான தோல் வியாதிகள், ஆரம்ப குஷ்டம், ஆரம்ப புற்றுநோய்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் தினமும் 2 முதல் மூன்று வேலைகள் பால் அல்லது மோருடன் பருகவும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>தண்டுநீக்கி சுத்தம் செய்த அகத்தி இலை- 200 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்- 4 டம்ளர்</li><li>&nbsp;உப்பு தேவையான அளவு</li><li>&nbsp;பூண்டு -2 பல்&nbsp;</li><li>&nbsp;தக்காளி -1</li><li>&nbsp;சீரகம் -1/4 டீஸ்பூன்</li><li>&nbsp;சின்ன வெங்காயம்- 4</li></ul><p>&nbsp;<strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும் .தட்டிய சின்ன வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி அகத்தி இலை சீரகம் இவை அனைத்தும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் எழுந்து இந்த தண்ணீரை வடித்துதேவையான அளவு உப்பு கலந்துபருகவும்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இந்த ஜூஸ் வயிற்றில் உள்ள புண்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருகிறது.வைட்டமின் ஏ. சி, கால்சியம்,தயமின்,ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன.உடலில் உள்ள அதிக பித்தத்தைதணிக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. வல்லாரை - 207.5 மி.கி.<br>2. அதிமதுரம் - 207.5 மி.கி.<br>3. அன்னபேதி &nbsp;செந்தூரம் - 207.5 மி.கி.<br>4. இலவங்கம் - 20.7 மி.கி.<br>5. சிறு நாகப்பூ - 20.7 மி.கி.<br>6. ஏலம் - 20.7 மி.கி.<br>7. மிளகு - 20.7 மி.கி.<br>8. திப்பிலி - 20.7 மி.கி.<br>9. சுக்கு - 20.7 மி.கி.<br>10. அமுக்கரா - 207.5 மி.கி.<br>11. ஓரிதழ் தாமரை - 20.7 மி.கி.<br>12. ஜாதிக்காய் - 20.7 மி.கி.<br>13. தங்க பற்பம் - 2 மி.கி.<br>14. பூரண சந்திரோதயம் - 2 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>அன்னபேதி செந்தூரம், தங்க பற்பம், பூர்ண சந்திரோதயம் தவிர மற்ற சரக்குகளை உலர்த்தி பொடித்து, சலித்து முதலில் குறிப்பிட்ட வகைகளுடன் கலந்து அரைத்து 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல் காலை,இரவு பாலில் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>தாது நஷ்டம், நரம்புத் தளர்ச்சி, விரைந்து விந்து வெளியேறுதல், ஆண் தன்மை குறைவு, நரம்புக்கு வலுவூட்டி &nbsp;இழந்த சக்தியை மீண்டும் இளமை உணர்வுடன் திகழவும் செய்யும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>வல்லாரை - 500 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>வல்லாரை இலையை சேகரித்து உலர்த்தி, பதப்படுத்தி, 500 மி.கி. விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>ஞாபக மறதி, இரத்த சுத்தமின்மை, மலச்சிக்கல், சோர்வு ஆகியவற்றைப் போக்கி உற்சாகம் தரும் இனிய மருந்து.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அதிமதுரம் - 100 மி.கி.<br>2. அருகம்புல் - 100 மி.கி.<br>3. சந்தனம் - 100 மி.கி.<br>4. கீழாநெல்லி - 100 மி.கி.<br>5. குப்பைமேனி - 50 மி.கி.<br>6. மிளகு - 50மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட மூலிகைகளை நன்கு நிழலில் காய வைத்து பொடியாக்கி அவற்றை காலி கேப்சூல்களில் 500 மி.கி. வீதம் நிரப்பி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சூல்கள் பால் அல்லது நீருடன்.</p><p><strong>பயன்கள்:</strong><br>முகப்பரு, கரும்புள்ளிகள் இவற்றைப் போக்கி முகத்திற்கு பளபளப்பு உண்டாக்கும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. கடுக்காய் - 150 மி.கி.<br>2. நிலவாகை - 200 மி.கி.<br>3. நெல்லி - 150 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சூல்கள் விதம் இரவு வெந்நீரில் உட்கொள்ளவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>மலமிளக்கியாக செயல்படும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. கரிசலாங்கண்ணி - 150 மி.கி.<br>2. அவுரி - 50 மி.கி.<br>3. நிலவேம்பு - 50 மி.கி.<br>4. கீழாநெல்லி - 150 மி.கி.<br>5. ஆவாரை - 100 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சூல்கள் தினமும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>குடிப்பழக்கத்தினால் உண்டாகும் நச்சுத் தன்மையைக் குறைக்கும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட பயனுடையதாக இருக்கும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>வேப்பிலை - 500 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>வேப்பிலைய கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>புழுக்கொல்லியாகவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் பயன்படும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிப்பயறு- 50 கிராம்&nbsp;</li><li>தண்ணீர் -2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்தைய நாள் காலையிலேயே பாசிப்பயிரினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊறவைக்கவும். ஊறியவுடன் மாலையில் தண்ணீரை வடித்து சுத்தமான காட்டன் துணியில் கட்டி வைக்க,அடுத்த நாள் காலையில் சிறுசிறு முளைவிட்டிருக்கும்.இதனை காலை டிபன் ஆகஇயற்கை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல ஊட்டம் தரும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இரும்பு சத்து நிறைந்தது என்பதால் ரத்த சோகை வருவதைதடுக்கும். அர்கினைன், மெத்தியேனைன்,வேரின் முதலான பல்வேறு கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி தரும் உணவாக இதை அமைத்துக் கொள்ளலாம்.</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வெண்பூசணி- 200 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்-2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வெண்பூசனையின் விதை மற்றும் தோல்பகுதியை நீக்கிவிட்டு அரை டம்ளர் தண்ணீர்விட்டு மை போல் அரைக்கவும். பின்னர் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடி கட்டினால் இரண்டுடம்ளர் வெண் பூசணி ஜூஸ்ரெடி.</p><p><strong>&nbsp;பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வரும்.வயிற்றுப்புண் ஆறும்.அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி தரும். நீர்ச்சத்து மிகுந்துள்ளதால் சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றஉதவும். குடல் புழுக்களை வெளியேற்றவும் நரம்பு மண்டலத்தை சரி செய்யவும் உதவும். உடலில் பி. எச் நிலையைசமநிலைப்படுத்த உதவும்.</p>

<p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>அருகம்புல்- 50 கிராம்</li><li>&nbsp;தண்ணீர் -2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை :</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அருகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நன்கு அரைத்து 2 டம்ளர் தண்ணீர்கலந்து வடிகட்டவும் .பின் அதனை வாயில்ஊற்றி உமிழ்நீர் கலந்து சுவைத்து பருகவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;சர்க்கரைநோயாளிகளுக்கு ஏற்ற அருமருந்தாகவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. சருமத்துக்குபொலிவும் உடலுக்கு ஆற்றலையும் புத்துணர்வையும் தருகிறது. இரும்பு ,தாமிரம் மற்றும் சோடியம் ஆகியன இதில் நிறைந்துள்ளன .இது தேவையற்ற கொழுப்புகளைகரைக்கும்.</p>

<p><strong>&nbsp; தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>வெண்டைக்காய் -4</li><li><p>&nbsp;தண்ணீர் -2 டம்ளர்&nbsp;</p><p><strong>செய்முறை</strong>:</p></li></ul><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு டம்ளர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அந்ததண்ணீரை வடித்து குடிக்கலாம். வெண்டக்காயையும் சாப்பிடலாம்.</p><p><i><strong>&nbsp; &nbsp; &nbsp; இது சர்க்கரைக்கு மிகசிறந்த மருந்தாக பயன்படுகிறது.</strong></i></p><p>&nbsp;<strong>பலன்கள் </strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;ஃபோலிக்&nbsp; அமிலம்நிறைவாக இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடலாம் .மூளை செயல் திறனுக்குஉதவும். வைட்டமின் பி9 உள்ளது.&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; இரத்த சோகையை தடுக்கும். ஆஸ்துமாவின் வீரியத்தை குறிக்கும். நினைவாற்றல் மேம்படும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாகற்காய் -50 கிராம்&nbsp;</li><li>தண்ணீர் -2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாகற்காயை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும் .அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸ் ஆக அருந்தலாம்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong> :</p><p>&nbsp; &nbsp; &nbsp; இது சர்க்கரைநோய்க்கும், வயிற்றுப் புண்ணுக்கும், பூச்சிகளை அழிக்கவும் ஏற்ற அருமருந்தாகும். மாரடைப்பைதடுக்கும். பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வை திறன் அதிகரிக்கும். உடலில் தேங்கும் யூரிக்அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் எனும் எழும்பு சம்பந்தமான நோயை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையானபொருட்கள்:</strong></p><ul><li>முருங்கைக்கீரை சிறிய தண்டுடன்- 200 கிராம்</li><li>&nbsp;தண்ணீர் -4 டம்ளர்</li><li>&nbsp;உப்பு- தேவையான அளவு&nbsp;</li><li>&nbsp;பூண்டு -2 பல்</li><li>&nbsp;சின்ன வெங்காயம்- தேவையான அளவு&nbsp;</li><li>&nbsp;தக்காளி- 1</li><li>&nbsp;சீரகம்- 1/4 டீஸ்பூன்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை :</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முருங்கைக் கீரையுடன் சின்னவெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக தட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும். இவற்றுடன் சீரகம் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து முந்தைய நாள் இரவே தண்ணீர் 2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். காலை எழுந்து தண்ணீரை வடித்து தேவையான உப்பு கலந்து குடிக்கவும்.&nbsp;</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது கர்ப்பிணிகளுக்கு ஏற்றசிறந்த டானிக்காக பயன்படுகிறது .அனைவருக்கும் ஏற்ற உடலை தேற்றும்இரும்புச்சத்து மிக்க ஜூஸாக இது அமைகிறது. எலும்புபற்கள் வலுபெறும். இரத்த சோகையை கட்டுப்படுத்தும். செரிமான கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைப் போக்கும்.</p>

<p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>மணத்தக்காளி- 500 கிராம்( காய் இலை சேர்த்து )</li><li>தண்ணீர்-2 டம்ளர்&nbsp;</li></ul><p>&nbsp;<strong>செய்முறை </strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; மணத்தக்காளி காய் மற்றும் இலையை தண்ணீரில் அலசி நன்கு அரைக்கவும் .அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது மணத்தக்காளி ஜூஸ் ரெடி.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. வாதம் ,பித்தம், கபம் சமநிலையாக்கும். வயிற்றுவலியை போக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த டீடாக்ஸ் பானம் இது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>&nbsp;துளசிஇலை- 50 கிராம்</li><li>&nbsp;தண்ணீர்- 2 டம்ளர்&nbsp;</li></ul><p>&nbsp;<strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;துளசிஇலையை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டிப் பருகவும்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp;&nbsp; &nbsp; &nbsp; இது சளி இருமல் கபக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைகிறது. வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின்,பொட்டாசியம்,இரும்பு,தாமிரம்,மாங்கனீஸ்,மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.தலைவலியைப் போக்கி உற்சாகத்தை அதிகரிக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள் :</strong></p><ul><li>&nbsp;வெற்றிலை -5&nbsp;</li><li>&nbsp;மிளகு -7</li><li>&nbsp;தண்ணீர் -3 டம்ளர்</li></ul><p>&nbsp;<strong>செய்முறை :</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வெற்றிலையுடன் மிளகு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அது 2 டம்ளராகமாறியவுடன் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இதன் மூலம் நம்&nbsp; உடலில்உள்ள அனைத்து விதமான கிருமிகளும் அழிகிறது .சளி கபத்தை போக்கும் அருமருந்தாகவும் செயல்பட்டு ஆரோக்கியத்தை தருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. சரும பிரச்சனைகளை குணமாக்கும்.வயிற்றுவலி செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்.</p><p>&nbsp;</p>

<p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>ஓரிதழ்தாமரை செடியில் வேர் தவிர்த்து மற்றபாகங்கள் அனைத்தும் சேர்த்து- 100 கிராம்</li><li>&nbsp;தண்ணீர் -2 டம்ளர்</li></ul><p><strong>&nbsp;செய்முறை :</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ஓரிதழ் தாமரையின் வேர் தவிர்த்து மற்ற பாகங்களை கழுவிசுத்தம் செய்யவும் இதனை நன்கு மையஅரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டி வாயில் ஊற்றி உமிழ் நீருடன் கலந்து குடிக்கவும்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுபெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஏற்ற தீர்வாக அமைகிறது.ஆண்களுக்கு ஆண்மை சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. அமினோ அமிலம் பாலிஃபினால் கிளைக்கோஸைட்ஸ் ஆகியன அடங்கி இருக்கின்றன. ரத்த அழுத்தம் சீராகஇருக்க செய்கிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:&nbsp;</strong></p><ul><li>வேப்பிலை -10 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்- 3 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சுத்தம் செய்த வேப்பிலையை முந்தைய நாள் இரவே பாத்திரத்தில்போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அது இரண்டு டம்ளராகமாறும் வரை கொதிக்க விடவும்.இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் இந்த ஜூசை மட்டும்வடித்து குடிக்கவும்.</p><p>&nbsp;<strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது உடலில் உள்ளநச்சுக்களை நீக்குகிறது. குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சிகளை அளிக்கும் எளிய மருந்தாகவும் இதுசெயல்படுகிறது.அம்மை நோயாளிகள் தொடர்ந்து அருந்தலாம். இதன் நுண்ணூட்டச் சத்துக்கள்நரம்புகளை வலுப்படுத்தும் .வாத பிரச்சனைகள் தீரும்.உட்புற வெளிப்புற புண்களை விரைவில் ஆற்றும்.</p>

<p><strong>தேவையானபொருட்கள்:&nbsp;</strong></p><ul><li>வாழைப்பூ- 50 கிராம்&nbsp;</li><li>தண்ணீர் -2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை :</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வாழைப்பூவினை நரம்பு நீக்கி சுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டினால் வாழைப்பூ ஜூஸ் ரெடி.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;சற்றே துவர்ப்பான இந்த வாழைப்பூ ஜூஸ்ஆனது சிறுநீரக கற்களை நீக்கி ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை நல்ல தீர்வு தரும்.வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பின் அளவைகட்டுப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>வெந்தயக்கீரை -200 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்- 2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வெந்தயக் கீரையை நன்குசுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்னர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸாக அருந்தலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இந்த ஜூஸ் உடலைகுளிர்வித்து வெப்பம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்தும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுக்குள் வைக்கும். தாய்ப்பால் அதிகரிக்கவும் உதவும். லேனோவைக்&nbsp; கொழுப்புஅமிலங்கள் நிறைந்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>&nbsp;வில்வஇலை- 25</li><li>&nbsp;தண்ணீர் - 2 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை </strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;நன்கு கழுவி சுத்தம் செய்த வில்வ இலையை மைய அரைத்துக்&nbsp;கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து வடிகட்டி பருகவும்.&nbsp;</p><p><strong>&nbsp;பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது ஆண்மை சக்தியைஅதிகரிக்கும் அருமருந்தாக செயல்படுகிறது .வைட்டமின்கள் தாது உப்புக்கள், அமினோஅமிலங்கள் நிறைந்தது என்பதால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்கிறது, இதயத்துடிப்பை சீராக்குவதற்கும், காய்ச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தவும் வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1.ஓரிதழ் தாமரை - 50 மி. கி.<br>2.கருவேப்பிலை - 200 மி. கி.<br>3. மஞ்சள் கரிசாலை - 250 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>2-3 கேப்சூல்கள் வீதம் 2 முதல் 3 வேளைகள்.</p><p><strong>பயன்கள்:</strong><br>இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைவு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் இரும்புச் சத்துக் குறைவினை குணப்படுத்த வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. பிரம்மத்தண்டி - 150 மி. கி.<br>2. மருதோன்றி - 150 மி. கி.<br>3. சந்தனம் - 150 மி. கி.<br>4. எருக்கு - 150 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் &nbsp; பொடித்து &nbsp;அப்பொடியினை 500 மி.கி.விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி &nbsp;பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சூல்கள் தினமும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>சருமங்களில் உண்டாகும் பருக்கள் மற்றும் பாலுண்ணிகளை நீக்க வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. நெல்லிக்காய் - 120மி. கி.<br>2. கடுக்காய் - 130மி. கி.<br>3. அதிமதுரம் - 130மி. கி.<br>4. வெற்றிலை - 120மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கேப்சல்கள் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>டான்சில், காய்ச்சல் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்த வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையானபொருட்கள்:</strong></p><ul><li>நெருஞ்சிமுள் செடி வேருடன் -100 கிராம்</li><li>&nbsp;சீரகம் -1/2 டீஸ்பூன்</li><li>&nbsp;தண்ணீர் 3 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>&nbsp;செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; நெருஞ்சி முள் செடியை வேருடன்தண்ணீரில் சுத்தம் செய்யவும். அச்செடியையும் சீரகத்தினையும் 3 டம்ளர் தண்ணீர் விட்டு முந்தைய நாள் இரவே கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு டம்ளராக சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மறுநாள் காலை அந்த தண்ணீரைவடித்துக் குடிக்கவும்.</p><p><i><strong>&nbsp; &nbsp; &nbsp;இது பித்தப்பை மற்றும்சிறுநீரக கற்களை போக்கும்.</strong></i></p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;இரத்தப்போக்கை நிறுத்தும். கண் எரிச்சல், கண்ணில்நீர் வடிதல், சிறுநீர் தாரை எரிச்சல் ஆகியவைகுணமாகும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. கருவேப்பிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி. கி.<br>2. அமுக்கரா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி. கி.<br>3. முருங்கை இலை &nbsp; &nbsp;-100 மி. கி.<br>4. அருகம்புல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 மி. கி.<br>5. அகத்திக்கீரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 மி. கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருள்களை கல்,மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>2 முதல் 3 கேப்சூல்கள் பாலுடன் உபயோகிக்கவும்.</p><p><strong>பயன்கள் :</strong><br>உடலில் ஏற்படும் கால்சியம் குறைவை சமன் செய்கிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. சதாவரி - 150 மி.கி.<br>2. திரிகடுகு - 50 மி.கி.<br>3. சதகுப்பை - 50 மி.கி.<br>4. கொத்தமல்லி - 50 மி.கி.<br>5. வாய்விடங்கம் - 50 மி.கி.<br>6. சீரகம் - 50 மி.கி.<br>7. ஏலம் - 50 மி.கி.<br>8. சிறுநாகப்பூ - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>2 முதல் 3 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கச் செய்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அவுரிவேர் - 100 மி.கி<br>2. மிளகு - 100 மி.கி.<br>3. வேப்பிலை - 100 மி.கி.&nbsp;<br>4. அகத்தி - 100 மி.கி.<br>5. சிறுகீரை - 50 மி.கி.<br>6. சிறியாநங்கை - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;&nbsp;</strong>&nbsp;&nbsp;<br>1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பூச்சிக்கடியால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்க வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. கற்பூரவல்லி - 100 மி.கி.<br>2. துளசி - 100 மி.கி.<br>3. முசுமுசுக்கை - 100 மி.கி.<br>4. அரத்தை - 100 மி.கி.<br>5. அதிமதுரம் - 100 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 -2 கேப்சூல்கள்</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பீனிச நோய்கள், இளைப்பு, தும்மல் மற்றும் விக்கல்களை குணப்படுத்த வல்லது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வேர்கடலை- 50 கிராம்</li><li>&nbsp;தண்ணீர்-2 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்தையநாள் காலையிலேயே வேர்க்கடலையை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற விடவும். மாலையில்தண்ணீரை வடித்து சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்கவும். 16 மணி நேரம் கழித்துசிறுசிறு முளைக்கள் விட்டிருக்கும். இதனை காலை இயற்கைஉணவுடன் சேர்த்து உண்ணலாம்.</p><p>&nbsp;<strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வேர்கடலையில் பொட்டாசியம், நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன.நல்ல கொழுப்பு என்னும் HDL நிறைவாக உள்ளதால் உடல் ஊட்டம் பெரும். புரத சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>&nbsp;கம்பு -50 கிராம்</li><li>&nbsp;தண்ணீர் -2 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்தையநாள் காலையிலேயே கம்பினை கல் நீக்கி சுத்தம்செய்து ஊற வைக்கவும்.மாலையில் ஊறியவுடன் தண்ணீரைசுத்தமாக வடித்து விட்டு சுத்தமான பருத்தி துணியில் கட்டிவைத்தால்.அடுத்த நாள் முளைவிட்டிருக்கும்.இதனை உண்பதால் உடல்இரும்பு போல் வலுவுடன் இருக்கும்.குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.</p><p>&nbsp;<strong>பயன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்புஉடலைக் குழுமையாக்கும். அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் கம்பு கஞ்சி குடித்து வரலாம். கம்பு பசியை தூண்டும். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகையைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>&nbsp;எள்ளு- 50 கிராம்</li><li>&nbsp;தண்ணீர் ஊற வைக்க தேவையானஅளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;எள்ளினைசுத்தம் செய்து கழுவி காலையிலேயே ஊற வைக்கவும். நன்குசுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்க அடுத்த நாள் காலையில் முளைவிட்டிருக்கும்.இதனை காலை இயற்கை உணவாகஉண்ணலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுபெண்களின் கருப்பையில் தங்கும் அழுக்குகளை நீக்கி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.பைட்டோஸ்டீரால்&nbsp; &nbsp;எனும் அறிய சத்து இதில் இருக்கிறது.இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.உடல் எடையை கூட்ட விரும்புவோருக்கு ஏற்ற உணவு.மெக்னீசியம்&nbsp; அதிகஅளவில் இருப்பதால் சர்க்கரை,இரத்த அழுத்தம் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கருப்புஉளுந்து-50 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கருப்பு உளுந்தினை சுத்தம் செய்து காலையிலேயே தண்ணீரில் ஊற விடவும்.நன்கு ஊறியதும்மாலையில் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பருத்தி காட்டன்துணியில் கட்டி வைத்தால் அடுத்த நாள் காலையில் சிறுசிறு முளைகள் விட்டிருக்கும். இதனை காலை உணவாகஉட்கொள்ளலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது எலும்புகளுக்கு பலம்தரும். கால்சியம் சத்து நிறைந்தது. உடல் எடையை கூட்டவிரும்புவோருக்கு ஏற்ற உணவு.உடனடி ஆற்றல்மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை தடுக்கிறது. மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்றவை சரி செய்யவும்&nbsp;இது உதவுகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொள்ளு-50 கிராம்</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;கொள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து முதல் நாள் காலையிலேயே தண்ணீரில் ஊற வைக்கவும். மாலையில் தண்ணீரை வடித்து பருத்தி துணியில் கட்டி வைத்தால் அடுத்த நாள் காலையில் முளைத்திருக்கும்.இதனை காலை இயற்கை உணவோடுஉட்கொள்ளலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுஉடலில் தேங்கியிருக்கும் தேவை இல்லா கொழுப்புகளைகரைத்து சரியான தோற்றத்தை தருகிறது.குறைந்த அளவு மாவுச்சத்தும் அதிகஅளவு புரத சத்தும் கொண்டது.நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கலை நீக்கும்.இருமல்,சளி ஆகியவை விரைவில் குணமாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொண்டைக்கடலை- 50 கிராம்</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கொண்டைக்கடலையை நீரில் ஊற வைக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு தூய பருத்தி துணியில் 20 மணி நேரம் கட்டி வைக்க வேண்டும்.20 மணி நேரம் கழித்துஎடுத்துப் பார்த்தால் கொண்டைக்கடலை முளைவிட்டிருக்கும்.இதனை உண்ணுவதால் உடலுக்கு நல்ல வலு ஏற்படும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;புரதச்சத்து,மாவுச்சத்து,நார்ச்சத்து,ஃபோலிக்அமிலம்,கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது.வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உடையது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சோளம் - &nbsp;50 g</li><li>தண்ணீர்தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;சோளத்தை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் சேர்த்து முதல் நாள் காலையிலேயே ஊறவைக்கவும். மாலையில் தண்ணீரை வடித்து விட்டு சுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்க வேண்டும். அடுத்த நாள் அதை எடுத்துப்பார்த்தால் சிறு சிறு முளைவிட்டிருக்கும். இதனை உண்பதால் உடலுக்குவலு சேரும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;உடல்பருமன் உடையவர்கள் எடையை குறைக்க இதை சாப்பிடலாம். இரும்பு,கால்சியம்,பாஸ்பரஸ்,மாவுச்சத்து,தயமின்மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.வயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கேல்வரகு -50 கிராம்</li><li>தண்ணீர்தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கேழ்வரகு கல் நீக்கி சுத்தம் செய்து தேவையான தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.காலையில் ஊற வைத்தால்மாலையில் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விட்டு சுத்தமான காட்டன் துணியில் கட்டி வைக்கவும்.அடுத்த நாள் காலையில் அதில்சிறு சிறு முளைவிட்டிருக்கும். இதனை உணவாகஎடுத்துக் கொள்ளலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுஉடலை தேற்றும் தன்மை கொண்டது.கால்சியம் அதிக அளவு உள்ளதால்வளரும் குழந்தைகள்,விளையாட்டு வீரர்கள்,பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஏற்ற உணவு. உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது.குடல் புண்களை ஆற்றி நோய் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்கிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அஸ்வகந்தா பொடி - 500 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>1 -2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>உடல் பலவீனம் மற்றும் நரம்புகள் பலவீனத்தை குணப்படுத்த வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. செம்பருத்தி - 150 மி.கி.<br>2. அவுரி - 50 மி.கி.<br>3. பொன்னாங்கண்ணி - 50 மி.கி.<br>4. கரிசாலை - 70 மி.கி.<br>5. கருவேப்பிலை - 70 மி.கி.<br>6. சீரகம் - &nbsp;50 மி.கி.<br>7. சித்தகத்திப்பூ - 60 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>நீண்ட கருமையான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அமுக்கரா -100 - மி.கி.<br>2. திரிபலா - 100 மி.கி.<br>3. ஓரிதழ் தாமரை - 100 மி.கி.<br>4. கட்டுக்கொடி - 100 மி.கி.<br>5. சதாவரி - 100 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத. டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>1-2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மன அழுத்தம், மன உடல் உளைச்சலை குணப்படுத்த வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அதிமதுரம் - 80 மி.கி.<br>2. பரங்கிப்பட்டை - 80 மி.கி.<br>3. ஆடுதீண்டாபாளை - 80 மி.கி.<br>4. வெள்ளருகு - 80 மி.கி.<br>5. வேப்பிலை - 80 மி.கி.<br>6. திரிகடுகு - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>2 முதல் 3 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இரத்த சுத்திக்கு ஏற்றது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1.வசம்பு - 100 மி.கி.<br>2. ஓமம் - 100 மி.கி.<br>3. கிராம்பு - 100 மி.கி.<br>4. மிளகு - 100 மி.கி<br>5. திரிகடுகு - 100 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 -2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மூட்டுகளில் உண்டாகும் வலி, சுளுக்கு, தலைவலி மற்றும் எலும்பு முறிவதனால் உண்டாகும் வலி முதலியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அருகம்புல் - 150 மி.கி<br>2. சதாவரி - 130 மி.கி<br>3. அதிமதுரம் - 120 மி.கி<br>4. கொடிவேலிவேர் - 100 மி.கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பாலுண்ணி மற்றும் பருக்களை குணப்படுத்த வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. நெருஞ்சில் - 150 மி.கி.<br>2. அருகம்புல் - 150 மி.கி<br>3. அதிமதுரம் - 100 மி.கி.<br>4. அமுக்கரா - 100 மி.கி.<br><br><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடி செய்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>தைராய்டு சுரப்பியை நன்கு இயங்கச் செய்து தைராய்டு குறைபாடினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. சிவகரந்தை - 100 மி.கி<br>2. நித்யகல்யாணி - 100 மி.கி<br>3. அருகம்புல் - 100 மி.கி<br>4. வல்லாரை - 100 மி.கி<br>5. துளசி - 50 மி.கி.<br>6. அமுக்கரா - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>ஆரம்பப் புற்று, கட்டிகள், வயிற்றுப்புண்.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. சுண்டை - 100 மி.கி<br>2. சோயாபீன்ஸ் - 100 மி.கி<br>3. அகத்தி - 100 மி.கி<br>4. அமுக்கரா - 100 மி.கி<br>5. அருகம்புல - 100 மி.கி.<br><br><strong>தயாரிக்கும் முறை</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப் பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அஸ்வகந்தா - 250 மி.கி<br>2. மருதாணிப்பூ - 250 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுதவும்.</p><p><strong>அளவு:</strong><br>2 கேப்சூல்கள் தினம் இரவு வேளையில் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சுகமான நிம்மதியான உறக்கத்தை எந்தவித பக்க விளைவுகளும் இன்றி தர வல்லது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அருகம்புல் - 50 மி.கி&nbsp;<br>2. வேப்பிலை - 50 மி.கி&nbsp;<br>3. ஓரிதழ் தாமரை - 50 மி.கி&nbsp;<br>4. மருதம்பட்டை - 50 மி.கி.<br>5. அதிமதுரம் - 50 மி.கி.<br>6. நெல்லியிலை - 50 மி.கி.<br>7. துளசி - 50 மி.கி&nbsp;<br>8. ஆவாரம் பூ - 50 மி.கி.<br>9. கீழாநெல்லி - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத ப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எந்தவித நோயானாலும் மருந்து உட்கொள்வதற்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அவுரி - 100 மி.கி.<br>2. ஆடாதோடை - 100 மி.கி&nbsp;<br>3. துளசி - 100 மி.கி&nbsp;<br>4. வேப்பிலை - 100 மி.கி<br>5. அகத்தி - 100 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள்</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>புகையிலையை உபயோகிப்பதாலும், புகைப்பிடிப்ப தாலும் உண்டாகும் நச்சுத் தன்மையை நீக்குகிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. நிலவேம்பு - 100 மி.கி.<br>2. வேப்பிலை - 100 மி.கி.<br>3. அமுக்கரா - 20 மி.கி.<br>4. திரிகடுகு - 100 மி.கி<br>5. திரிபலாதி - 100 மி.கி.<br>6. அவுரி - 20 மி.கி.<br>7. அகத்தி - 10 மி.கி.<br>8. வெட்சி - 10 மி.கி.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<br>9. வெற்றிலை - 10 மி.கி.<br>10. ஓமம் - 10 மி.கி.<br>11. லவங்கம் - 20 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் ' உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>இது உடலில் கிருமியினால் உண்டாகும் விஷத்தன்மையை நீக்குகிறது. கிருமிகளை அழித்து உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது ஒரு ஆன்டிசெப்டிக் கேப்சூலாகும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. கருவேப்பிலை - 150 மி.கி.<br>2. அமுக்கரா - 100 மி.கி.<br>3. அதிமதுரம் - 100 மி.கி.<br>4. அரைக்கீரை - 150 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>முறிந்த எலும்புகள் இணைவதற்கும், எலும்புகளுக்கு சக்தியளிப்பதற்கும் ஏற்றது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அமுக்கரா - 100 மி.கி.<br>2. ஓரிதழ்தாமரை - 100 மி.கி.<br>3. கட்டுக்கொடி - 100 மி.கி.<br>4. நீர்முள்ளி - 50 மி.கி.<br>5. சதாவரி - 50 மி.கி.<br>6. திரிகடுகு - 50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்குப் பின் பாலுடன் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>விந்தணு குறைபாடு, உடல் பலஹீனம், உடலுறவில் நாட்டமின்மை, விந்து விரைந்து வெளியேறுதல் முதலியன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1.துளசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.கி.<br>2. அருகம்புல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 100 மி.கி.<br>3. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.கி.<br>4. கீழாநெல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 மி.கி.<br>5. வெள்ளருகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.கி.<br>6. திரிபலா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 மி.கி.</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத பயன்படுத்தவும். டப்பாக்களில் பத்திரப்படுத்தி</p><p><strong>அளவு :</strong><br>2-3 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சளி மற்றும் ஜலதோஷத்தால் உண்டாகும் அசதியையும் குணப்படுத்தும்.<br>&nbsp;</p>

<p><strong>சித்த மருத்துவத்தில்</strong> மணப்பாகு தயாரிக்கும் முறைப்படியே டானிக் எனப்படும். சுவையான மணப்பாகு மருந்தும் தயார் செய்யப்படுகிறது. டானிக்குகள் தேவையான மூலிகைகளைப் பச்சையாகவோ, காய வைத்தோ தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கும் பொழுது மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை தண்ணீர் கிரகித்துக் கொண்டு மூலிகை கஷாயமாகிறது. இந்த மூலிகை கஷாயத்தினை நோயாளிக்குக் கொடுக்கும்பொழுது கஷாயத்தின் மருத்துவ குணம் உடலில் ஊக்குவிக்கப்படுவதற்கு ஒரு துணை சக்தியாக சர்க்கரைப் பாகு செயல்பட்டு செய்வதுடன் நோயாளியின் உடலை ஆரோக்கியமாக இயக்குவதற்கு தேவையான சக்தினையும் சாப்பிடுவதற்கு இலவயையும் கொடுக்கின்றன. ஏனெனில் உடலை நோயின்றி காப்பதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு ஒவ்வொருவரின் உடம்பிலும் காணப்படும். இந்த அளவு குறையும் பட்சத்திலேயே நோய்கள் உண்டாகின்றன. அதே போல் நோய்க்குண்டான மருந்தினை செயல்படுத்த உடம்பிற்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி சர்க்கரை (அ) மாவுப் பொருட்களில் இருந்தே பெரும்பாலும் கிடைக்கிறது. எனவே மருந்தின் ஆற்றலை செயல்படுத்தும் பொருட்டு சர்க்கரை போன்ற சக்தியைத் தரக்கூடிய பொருட்கள் மருந்தில் சேர்க்கப்படுகின்றன. மேலும் சர்க்கரை கஷாயங்களை நீண்ட நாள் கெடாமல் அதற்குரிய மருத்துவ குணம் மாறாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருளாகவும் செயல்படுகிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அவுரி இலைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி<br>2. கீழாநெல்லிச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி<br>3. அதி மதுரச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 மி.லி<br>4. நிலவேம்புச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1000 மி.லி<br>5. அன்னபேதி சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1500 மி.லி</p><p><strong>செய்முறை :</strong><br>தேவையான மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன்களில் கஷாயம் தயாரித்து சர்க்கரையைக் கலந்து காய்ச்சல் பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>5-10 மி.லி. 3-4 வேளைகள் இத்துடன் ஏரோலில் மற்றும் சந்தனாதி கேப்சூல்கள் உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மஞ்சட்காமாலை, கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள். பித்தாதிக்கம், பசியின்மை, ருசியின்மை, வாயுத் தொல்லைகள் முதலியன தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>கறிவேப்பிலை- 40 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை-தேவையான அளவு</li><li>ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; அனைத்து பொருட்களையும் மிக்ஸியில்போட்டு அரை டம்ளர் தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் 4 ½ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். இப்போது கருவேப்பிலை கீர் ரெடி.</p><p><strong>பலன்கள்</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;இந்த கீர் இரத்தத்தை சுத்திகரித்து.புத்துணர்ச்சி அளிக்கிறது.முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி உதிர்வை தடுக்கிறது.இரும்பு,கால்சியம் வைட்டமின் ஏ,பி,பி12, சி ஆகிய சத்துக்கள்நிறைந்துள்ளன. இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. நகங்கள் அழகும்,வலிமையுடனும் இருக்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>கேரட்- 50 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப</li><li>ஏலக்காய்தூள்- 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர்- 5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;&nbsp;அனைத்து பொருட்களையும் ½&nbsp;&nbsp;டம்ளர்தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். கேரட் கீர் தயார்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இது இரத்தத்தை சுத்தம்செய்து உடலுக்கு பளபளப்பை தருகிறது.கேரட்டில் வைட்டமின் பி8,எ,சி, கரோட்டிநாயுடுஉள்ளன. இது பார்வை திறனை அதிகரிக்கும். கொழுப்பை கரைத்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உமிழ்நீரை சீராக சுரக்க செய்து பற்சொத்தை வராமல் தடுக்கிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொத்தமல்லி- 40 கிராம்&nbsp;</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப&nbsp;</li><li>ஏலக்காய்தூள் ¼ டீஸ்பூன்</li><li>தண்ணீர் 5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கொத்தமல்லிதலை, தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை,ஏலக்காய் தூள் ஆகியவற்றை அரை டம்ளர் தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.இதனுடன் 4 ½&nbsp;&nbsp;டம்ளர்தண்ணீர் சேர்த்து வழிகாட்டவும். இது மிகவும் சத்தானகொத்தமல்லி கீர் ஆகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இரத்தசோகை குணப்படுத்தும் தன்மை உடையது.மகனீசியம், இரும்பு, வைட்டமின் சி, கே ஆகியனநிறைந்திருக்கிறது. ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும்.கண் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. பித்தவாத நோயை குணப்படுத்தும். ஊளைச்சதையை குறைக்கும்.</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>மணத்தக்காளி கீரை மற்றும் பழங்கள்-30 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பின் தேவைக்கு ஏற்ப</li><li>ஏலக்காய்தூள்- 1/4 டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இத்துடன் 4 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதுவயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை போக்கும் அருமருந்தாகும். வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது. பொட்டாசியம்,மக்னிசியம், நார்ச்சத்து ஆகியன நிறைவாக உள்ளது. ஜீரணத்தை எளிமையாக்குகிறது. தொண்டைக்கட்டை போக்கும் ஆற்றல் உள்ளது.</p><p><strong>முக்கிய</strong> <strong>குறிப்பு</strong>:</p><p><strong>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</strong><i><strong> இரவுநேரத்திலும்,அசைவ உணவுடனும்&nbsp;சேர்த்து உண்ணக்கூடாது</strong></i></p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>துளசி -30 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப</li><li>ஏலக்காய்தூள்- ¼&nbsp;&nbsp;டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;துளசி,தேங்காய் துருவல்,நாட்டு சர்க்கரை, ஏலக்கத்தூள், ½&nbsp;&nbsp;டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.இந்த துளசி கீரினை அருந்துவதனால் சளி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்கிறது.&nbsp;</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;துளசியில் வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின், பொட்டாசியம்,இரும்பு, தாமிரம்,மெக்னீசியம்,மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தலைவலியை போக்க வல்லது. குளிர்ச்சியும் உற்சாகமும் தரும் பானம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். மூளையை புத்துணர்வு பெறவும் செய்கிறது. இருமலை போக்கும் அருமருந்தாக துளசி கீர் உள்ளது.</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>தூதுவளைஇலை -20 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப</li><li>ஏலக்காய்தூள்- 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர்-5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அனைத்து பொருட்களையும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால் தூதுவளைக் கீர் ரெடி.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் மிகச்சிறந்த பானமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்டதாது உப்புக்கள் உள்ளன. தூதுவளை சூடு தன்மை உள்ளதால் இதை கஷாயமாக செய்தும் பயன்படுத்தலாம். தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்,நோய்த்தொற்று ஆகியவற்றை குணப்படுத்தும். சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.பக்கவாதம்வராமல் பாதுகாக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>தேங்காய்துருவல்- 100 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப</li><li>ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர்- 5 டம்பளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;அனைத்தையும்அரை டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.இத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.தேங்காய்பால் கீர் ரெடி.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதுஉடலுக்கு தேவையான வைட்டமின் சி,பி,இரும்பு,கால்சியம் ஆகிய உடலுக்கு தேவையானசத்துக்களை கொடுக்கிறது. உடலுக்கு புத்துணர்வை அளிக்கிறது. நல்ல கொழுப்பு நிறைவாகஇருப்பதால் தேவையற்ற கொழுப்பை அகற்றுகிறது. நாட்டு சர்க்கரையில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. புரதமும் நார் சத்தும் தேங்காயில் இருந்தால் செரிமானத்தை மேம்படுத்தி உடலை வலுவாக்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பீட்ரூட்- 40 கிராம் அளவு</li><li>தேங்காய்துருவல்-50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை- இனிப்பின் தேவைக்கேற்ப</li><li>ஏலக்காய்-1/4 டீஸ்பூன்</li><li>தண்ணீர்- தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி பருகவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதயநோய்கள் வராமல் தடுக்கும்.இந்த கீரினை தொடர்ந்து பருகுவதானல்.உடலில் புது இரத்தம் உற்பத்தியாகிறது.இதனால் உடலுக்கு புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.நார்ச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் சி ஆகியன நிறைந்தது.மூளை சுறுசுறுப்பாக்குகிறது.பீட்டா சயனின் உள்ளதால் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>புதினாஇலை- 40 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப</li><li>ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அனைத்தையும்1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் தயார்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;இந்த கீர் வயிற்றுப் புண்களை ஆற்றி பசியை தூண்டுகிறது. மெண்தால் நிறைந்திருப்பதால் சுவாசம் மண்டல பிரச்சனைகளை சரி செய்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். கால்சியம் நிறைந்து இருப்பதால் பற்களை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பானம் இது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>முள்ளங்கிதுருவல் -50 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>நாட்டுசர்க்கரை தேவையான&nbsp;</li><li>ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை&nbsp;தேவையான:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பொருட்கள்அனைத்தையும் ½ டம்லர் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். இந்த விழுதுடன் 4 ¼ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடி கட்டினால் முள்ளங்கி கீர்&nbsp; தயார்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதனைபருகுவதனால் உடலில் உள்ள ஊளைச்சதை குறைகிறது.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிதோலுக்கு பளபளப்பை தருகிறது.இரத்தத்தில் உள்ள பில்ரூபினை சீர்செய்வதால் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலி வீக்கம் குறையும்.</p>

<p><strong>தேவையான</strong> <strong>பொருட்கள்</strong>:</p><ul><li>வல்லாரைக்கீரை- 30 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை தேவையான அளவு&nbsp;</li><li>ஏலக்காய்தூள்- 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர்- 5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அனைத்துபொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். வல்லாரைக் கீர் தயார்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. அனைவருக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.அருமருந்தாக செயல்படுகிறது. சளி,இருமல் போக்கவும். உடனே வலும் பெறச்செய்ததுடன் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் இந்த கீர் உதவுகிறது.நுரையீரலை வலுவாக்குவதுடன் ஆஸ்துமாவை விரைவில் குணப்படுத்துகிறது. ஆண்மை சக்தியை பெருக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வாழைத்தண்டு- 30 கிராம்</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப&nbsp;</li><li>ஏலக்காய்தூள்-¼ டீ ஸ்பூன்</li><li>தண்ணீர்ஐந்து டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாழைத்தண்டைபொடியாக நறுக்கி அத்துடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து. அத்துடன் 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி குடிக்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இந்த கீர்ரானது சிறுநீரகக்கற்களை கரைக்கிறது.சர்க்கரைக்கு ஏற்ற மருந்தாக அமைகிறது.தேவையற்ற நீரை வெளியேற்றவும், சிறுநீரகத்தைபலப்படுத்தவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து அருந்துதல் கூடாது 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதுசிறந்தது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வாழைப்பூ -30 கிராம்&nbsp;</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப&nbsp;</li><li>ஏலக்காய்தூள் ¼&nbsp;&nbsp;டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;வாழைப்பூவின்நரம்பை நீக்கிவிட்டு அத்துடன் தேங்காய் துருவல். நாட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் முதலியவற்றை ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இத்துடன் 4 ½ &nbsp;டம்ளர்தண்ணீர் சேர்த்து வடி கட்டவும். இந்தகீரை குடிப்பதனால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றன.&nbsp;</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;கர்ப்பிணிகள்வாரம் இரு முறை சாப்பிட்டுவர குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அல்சர் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால். இரத்த சோகையை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>&nbsp;வில்வஇலை- 30 கிராம்&nbsp;</li><li>&nbsp;தேங்காய்துருவல்- 50 கிராம்</li><li>&nbsp;நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப</li><li>&nbsp;ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன்</li><li>&nbsp;தண்ணீர் ஐந்து டம்ளர்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வில்வஇலை,, தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால். வில்வ இலை கீர் தயார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;மர்மிலோசின்,ஏஜிலைன் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வலியை போக்கும் நிவாரணமாகவும். ஊட்டச்சத்து பானமாகவும் திகழ்கிறது. வயிற்றுப்போக்கு ஆகியவற்றை சரி செய்யும். உடலில்தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. துத்தி இலைச்சாறு - 857 மி.லி<br>2. வெட்பாலை - 857 மி.லி<br>3. ஆமணக்கு வேர்சாறு - 857 மி.லி<br>4. சந்தனக் கட்டை சாறு - 857 மி.லி<br>5. ஆடு தீண்டாப்பாளை சாறு - 857 மி.லி<br>6. சர்க்கரை - தேவையான அளவு</p><p><strong>தயாரிப்பு முறை :</strong><br>1-5 வரையுள்ள சாறு மற்றும் சர்க்கரையைப் பாகு பதமாகக் காய்ச்சி சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.</p><p><strong>அளவு :</strong><br>5-10 மி.லி. தினமும் இரண்டு மூன்று வேளைகள் இத்துடன் ஏபைலோ ஹெர்ப் கேப்சூல், சந்தனாதி கேப்சூல்ஸ் உபயோகித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மூலம், பௌத்திரம், ரத்தமூலம், ஆசனவாய் கடுப்பு. மலச்சிக்கல் முதலியன.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. அசோகபட்டைச்சாறு - 80 மி.லி<br>2. துளசிச்சாறு - 40 மி.லி<br>3. சந்தனம் - 40 மி.லி<br>4. அரசம்பட்டைச் சாறு - 40 மி.லி<br>5. அதிமதுரம் சாறு - 40 மி.லி<br>6. மருதோன்றி இலைச்சாறு - 40 மி.லி<br>7. மிளகு - 40 மி.லி<br>8. பிரம்ம தண்டுச்சாறு - 40 மி.லி<br>9. வெண்மருதைச் சாறு - 20 மி.லி<br>10. சிரப் (சர்க்கரை பாகு) - 600 மி.லி<br>11. அமுக்கரா சாறு - 20 மி.லி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>மேலே கூறப்பட்ட மூலிகைகளை சிதைத்து, ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் துளைகள் உள்ள தட்டினை இட்டு அதன் மேல் மூலிகைகளைப் போட்டு கொதிக்க வைத்து, மூலிகைச் சாற்றினை மட்டும் இறுத்து எடுத்து விட்டு, எஞ்சியவற்றை அகற்றிவிடவும். இச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து பதத்தில் காய்ச்சி பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தவும்.</p><p><strong>பயன்கள் :</strong><br>வெள்ளைப்போக்கு, மாதவிடாய் கோளாறு, கருப்பாசய கோளாறு, இடுப்பு வலி, பலஹீனம், சோர்வு,சோகை, வலியுள்ள மாதவிடாய் முதலியன. இது பெண்களுக்கான ஆரோக்ய டானிக்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. கண்டங்கத்திரி - 69.9 மி.லி<br>2. துளசிச்சாறு - 69.9 மி.லி<br>3. வெள்ளை எருக்கு - 2.8 மி.லி<br>4. திப்பிலி - 2.8 மி.லி.<br>5. ஆடாதோடை - 3.73 மி.லி<br>6. அவுரி இலை - 1.82 மி.லி<br>7. தும்பை - 3.26 மி.லி<br>8. மிளகு - 4.66 மி.லி<br>9. அதிமதுரம் - 2.8 மி.லி<br>10. பச்சைக் கற்பூரம் - 2.8 மி.லி.<br>11. சர்க்கரைப் பாகு - 559.2 மி. கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>மேலே கூறப்பட்ட மூலிகைகளை கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் அல்லது மூடிய கலனிலகஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பு பொருத்தி, கஷாயத்தைத் தனியே பிரித்தெடுக்கவும். மூலிகைச் சாற்றினை சர்க்கரையுடன் கலந்து பாகுபதத்தில் சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>சளி, இருமல், பீனிசம், ஜலதோஷம் மற்றும் கபத்தினால் உண்டாகும் நோய்கள் தீரும்.</p><p><strong>அளவு: &nbsp; &nbsp; &nbsp;</strong><br>5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வெண்பூசணி- 50 கிராம்&nbsp;</li><li>தேங்காய்துருவல்- 50 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை தேவைக்கேற்ப&nbsp;</li><li>ஏலக்காய்தூள்- ¼ டீஸ்பூன்</li><li>தண்ணீர்- 5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;கீருக்குதேவையான பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 4 ¼ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது உடல் எடையை குறைக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்திகரிக்கிறது.நரம்பு மண்டலத்தை சரி செய்யும்.புரதம்,வைட்டமின் சி, பாஸ்பரஸ்,கால்சியம் ஆகிய சத்துக்கள்இதில் உள்ளன.பித்தப்பை கற்களை அகற்றவும், குடல் புழுக்களை வெளியேற்றவும் ஊக்கியாக செயல் புரிகிறது.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. வல்லாரைச் சாறு - 28.2 கி.<br>2. அன்னபேதி சாறு - 22.6 மி<br>3. அதிமதுரம் சாறு - 28.2 கி.<br>4. லவங்கம் சாறு - 28.2 கி.<br>5. சிறுநாகப் பூ சாறு - 37.6 கி.<br>6. ஏலம் - 28.2 கி.<br>7. மிளகு - 28.2 கி.<br>8. திப்பிலி - 28.2 கி.<br>9. சுக்கு - 28.2 கி.<br>10. அமுக்கரா - 188 கி.</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>மேலே கூறப்பட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம்செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமான பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>நரம்புத் தளர்ச்சி, உடல் வளர்ச்சியின்மை, மூளைச் சோர்வு, தூக்கமின்மை, அசதி, பலஹீனம், இரத்தக்குறைவு, ஜீவசக்தி குறைவு போன்றவை குணமாகும்.</p><p><strong>அளவு :</strong><br>5 முதல் 10 மில்லி தினம் 3 வேளைகள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. திரிகடுகு -16 கி.<br>2. வேலிப்பருத்தி - 1 கி.<br>3. வாத நாராயணன் - 50 மி.கி.<br>4. குப்பைமேனி - 50 மி.கி.<br>5. ஓமம் - 1 கி.<br>6. சர்க்கரை - 6 கி.</p><p><strong>செய்முறை:</strong><br>மேலே குறிப்பிட்ட மூலிகைகளைக் கழுவி சுத்தம் செய்து நீராவி கொள்கலன் (அ) மூடிய கலனில் கஷாயம் இறங்க பாத்திரத்தின் கீழே துளைகள் உள்ள தடுப்பினைப் பொருத்தி கஷாயத்தைத் தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பாகுபதத்தில் காய்ச்சி அத்துடன் தயாரித்து வைத்த கஷாயத்தைக் கலந்து சுத்தமாக பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>5 &nbsp;10 மி.லி. வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் அல்லது பின் உட்கொள்ளலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>மூட்டுவலி, மூட்டு வீக்கம், இடுப்புவலி, முதுகு வலி, உடல் வலி மற்றும் வாத நோய்கள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. தாமரைப்பூ - 1935 மி.கி.<br>2. ஆவாரம் பூ - 2690 மி.கி.<br>3. ரோஜாப்பூ - 2000 மி.கி.<br>4. முருங்கைப்பூ - 250 மி.கி.<br>5. மதனகாமப்பூ - 250 மி.கி.<br>6. குங்குமப்பூ - 5 மி.கி.<br>7. வல்லாரை - 250 மி.கி.<br>8. அருகன்புல் - 250 மி.கி.<br>9. மஞ்சள் கரிசாலை -250 மி.கி.<br>10. வெள்ளை கரிசாலை - 250 மி.கி.<br>11. அவுரி - 250 மி.கி.<br>12. சிவகரந்தை - 100 மி.கி.<br>13. இஞ்சி - 200 மி.கி.<br>14. ஏலம் - 25 மி.கி.<br>15. கொத்தமல்லி - 250 மி.கி.<br>16. கிராம்பு - 200 மி.கி.<br>17. ஜாதிக்காய் - 100 மி.கி.<br>18. துளசி - 250 மி.கி.</p><p><strong>செய்முறை:</strong><br>மேலே குறிப்பிட்ட மூலிகைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து நன்கு கலந்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>காலை முதல் அரை டீஸ்பூன் 250 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து தினம் 2 வேளை அருந்தவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>காபி, டீ இவற்றிற்கு மாற்றாக உபயோகிக்கச் சிறந்தது. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியூட்டி &nbsp;ஜீரணசக்தியைப் &nbsp;பெருக்கி இதயம், கல்லீரல், சிறுநீரகம், சீராக இயங்க வைக்கும். மற்றும் நோய்கள் வராமல் பாதுகாத்து உடலுக்கு வலிமையுண்டாக்கும்.&nbsp;<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. செம்பருத்தி பூ இதழ் - 100 கி<br>2. எலுமிச்சை சாறு - 50 கி<br>3. தேன் - 100 கி<br>4. சர்க்கரை - 750 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>செம்பருத்தி பூ இதழ்களை தண்ணீரில் காய்ச்சி, கசாயமாக்கி அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து, தேனுடன் கலந்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>20-30 மி.லி. சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இருதய நோய்கள், உடல் பலஹீனம், உடல் சூடு முதலியன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. தூதுவளை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி<br>2. எலுமிச்சை சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 கி.<br>3. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி.<br>4. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>தூதுவளை இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>20-30 மி.லி சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சளி, இருமல்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. வில்வம் இலை - 200 கி<br>2. எலுமிச்சை சாறு - 50 கி<br>3. தேன் - 100 கி<br>4. சர்க்கரை - 1 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து, காய்ச்சி, பதத்தில் எடுத்து தேனுடன் கலந்து வடிகட்டி, பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>20-30 மி.லி. சர்பத்துடன் 150 மி.லி. நீர் கலந்து பருகவும்.</p><p><strong>பயன்கள்:</strong><br>வாயுத் தொல்லை, வயிற்றுக்கோளாறு, உடல்சூடு முதலியன நீங்கும்.</p>

<p><strong>(ஆத்மரட்சாமிருதம்)</strong><br><br><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. நன்னாரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>நன்னாரி வேரைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து சீனி கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மேக காங்கை, பிரமேகம், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, கைகால் காந்தல், கண்ணெரிவு, நாவறட்சி &nbsp;தீரும், தேகம் குளிரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>தேங்காய்பால் மற்றும் தயிர் - 50 கிராம்</li><li>பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம்- 25 கிராம்</li><li>பொடியாகநறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் - 10 கிராம்</li><li>உப்பு – தேவைகேற்ப</li><li>பொடியாகநறுக்கியகொத்தமல்லி, கருவேப்பிலை,கேரட் துருவல்- 10 கிராம்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p><i>&nbsp;<strong>தேங்காய்&nbsp;பால்&nbsp;தயிர்</strong>&nbsp;தேவைப்படுவதற்குமுந்தையநாள்இரவேஒருமுழுத்தேங்காயின்கெட்டிப்பாலைஎடுத்துஅதில்ஒருஎலுமிச்சையின்சாறைஊற்றிவைத்தால்அடுத்தநாள்காலைஅதுதேங்காய்பால்தயிராகதயாராகிஇருக்கும்.</i></p><p><strong>அவுல்&nbsp;தயிர்சாதம்செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். அவுல் 10 நிமிடம் நன்கு ஊறியவுடன் தேங்காய் பால் தயிரை ஊற்றிகலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், இஞ்சி. பச்சைமிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றையும் சேர்த்துகலந்து கொள்ளலாம். இறுதியாக கேரட் துருவலை தூவி பரிமாறலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; தயிர், உணவுக்கு கூடுதல்சுவையை அள்ளித்தருகிறது. இதில் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து சரிவிகிதத்தில் கலந்துள்ளன. எலும்பு, பல் தசைமண்டல வளர்ச்சியைஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்கள் நிறைந்த இந்த உணவு சளி, இருமல், மற்றும் நோய் தொற்றுகளில் இருந்துகாக்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>தேங்காய்துருவல் - 50கிராம்</li><li>மிளகாய்வற்றல் – 2</li><li>கடுகு,உளுத்தம்பருப்பு -தாளிக்க</li><li>எண்ணெய் -தாளிக்க</li><li>உப்பு -தேவையான அளவு</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியசின்ன வெங்காயம் -25 கிராம்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அவல் நன்கு ஊரியஉடன் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும் பொரித்தவுடன் மிளகாய் வற்றல் வெங்காயம் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்துகிளறவும்.இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கடுகு,உளுந்து ஆகியன செரிமான மண்டலத்தை சீராக்குகின்றன.எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் மற்றும் சத்துக்கள் அடங்கியுள்ளது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுள்- 100 கிராம்&nbsp;</li><li>வெள்ளம்-150 கிராம்</li><li>ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்</li><li>தேங்காய்பால் -1 கப்&nbsp;</li><li>முந்திரி,திராட்சை- 25 கிராம்&nbsp;</li><li>நெய்- 25 மில்லி லிட்டர்&nbsp;</li><li>தண்ணீர் -5 டம்ளர்&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;அவுளை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக உடைக்கவும்.உடைத்த அவுளை 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். அவுள் பாதி வெந்தவுடன் வெல்லம் தேங்காய்பால் ஏலக்காய் தூள்சேர்த்து இறக்கவும்.முந்திரியையும்,திராட்சையும் நெய்யில் வறுத்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அடிப்படைச் சத்துக்கள் அடங்கி உள்ளன.உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கும்.மூளை வளர்ச்சிக்கு உதவும்.புரதம்,முந்திரியில் உள்ளது. இதில் உள்ள மாங்கனீஸ் செரிமானகோளாறுகளை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் -100 கிராம்</li><li>தேங்காய்பால் -100 மில்லி லிட்டர்&nbsp;</li><li>பட்டைகிராம்-அரை டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகுத்தூள் -1 டீஸ்பூன்&nbsp;</li><li>இஞ்சி,பூண்டு-2 டீஸ்பூன்&nbsp;</li><li>தக்காளி, வெங்காய விழுது-2 டீஸ்பூன்&nbsp;</li><li>கேரட்,பீன்ஸ்,சோயாபீன்ஸ் மூன்று சேர்த்து -50 கிராம்&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li><li>தேங்காய்துருவல்-25 கிராம்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய புதினா இலை சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கரட் பீன்ஸ், சோயாமூன்றையும் பொடியாக நறுக்கி ஆவியில் வேகவிடவும். அவுலை நன்கு தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்துவிட்டுதேங்காய் பால் ஊற்றி ஊறவிடவும்.அவுல்ஊறியவுடன் ஆவியில் வெந்த காய்கறிகளையும், பட்டைகிராம்பு பொடி, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி, வெங்காய விழுது தேவையான அளவு உப்பு இவையனைத்தும்சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து புதினா இலை தூவி பரிமாறலாம். செயற்கை மசாலா கலக்காத ஆரோக்கியமான அவுல் பிரியாணி உடலுக்கு மிகவும் நல்லது.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வைட்டமின் ஏ.பி. காம்பள்க்ஸ்சி. இரும்புசத்து, பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. இரத்த உற்பத்திக்கு உதவும் பொருட்கள் இதில் உள்ளன. கண்களை காக்கும் சுரோட்டினாய்டு சத்துக்களும் நிறைந்துள்ளது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் -100 கிராம்</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li><li>உப்பு-1/4 டீஸ்பூனில் பாதியளவு</li><li>நாட்டுச்சர்க்கரை-50 கிராம்</li><li>தேங்காய்துருவல்-50கிராம்</li></ul><p><strong>செய்முறை:&nbsp;</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அவுலை கல், உமிநீக்கி நன்கு சுத்தம் செய்யவும். இதனை மிக்ஸியில் போட்டுதண்ணீர் விடாமல் மாவுபோல் உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் சிறிதுதண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாமல் பிசறிக் கொள்ளவும். இதனை 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் இதனுடன் நாட்டுச்சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; தேங்காயில் நல்ல கொழுப்பு தேவையானஅளவு உள்ளதால் உடலில் உள்ள கொழுப்புகளையும், இரத்தஓட்டத்தையும் மேம்படுத்தும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்&nbsp;</li><li>பச்சைமிளகாய் - சிறிதளவு&nbsp;</li><li>இஞ்சிசாறு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>கொத்தமல்லி, கருவேப்பிலை தேவைக்கேற்ப&nbsp;</li><li>எலுமிச்சம்பழசாறு - அரை மூடி</li><li>உப்பு - 1/2டீஸ்பூன்&nbsp;</li><li>வறுத்தவேர்க்கடலை -10கிராம்&nbsp;</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 20 கிராம்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவிடவும். | ஊறியபின் எலுமிச்சைசாறு, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிசாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல் வறுத்த வேர்க்கடலை இவையனைத்தும் சேர்த்து கலக்கவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இரும்புசத்தும், கால்சியமும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். எலுமிச்சையில் உள்ள பிளேவனாய்ட்ஸ் தேவையற்றகொழுப்பை கரைக்கும். அல்சைமர் எனும் ஞாப மறதியை போக்கும். ஆற்றல் உள்ளது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 50கிராம்&nbsp;</li><li>உப்பு - தேவைக்கேற்ப&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு&nbsp;</li><li>தண்ணீர் - தேவைக்கேற்ப</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். அவுல் நன்கு ஊறியவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் கலந்து, கொத்தமல்லி,கருவேப்பிலையும் கலந்து பரிமாறவும்.</p><p><span style="color:#0D0D0D;"><strong>பலன்கள்:</strong></span></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத்தன்மையை போக்கி நன்கு பசி எடுக்கச் செய்யும். மிளகு, சீரகம் ஆகியன நுண் கிருமிகளை சிறிதளவுஅழிக்கும். இதில் உள்ள இயற்கையான சத்துக்களால் நுரையீரல் வலுவாக்குகின்றன.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>கொத்தமல்லி - 30 கிராம்</li><li>இஞ்சி - 10 கிராம்</li><li>உப்பு -தேவைக்கேற்ப</li><li>சீரகத்தூள் -1/4 டீஸ்பூன்</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>தேங்காய்துருவல் - 25 கிராம்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முதலில் கொத்தமல்லி தழையையும்,இஞ்சியையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய அவுலில் கொத்தமல்லி, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் இவற்றுடன் கலந்து பரிமாறலாம். இது இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தஆரோக்கிய உணவாகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு. பசியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக கலக்க உதவி புரிகிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>பீட்ரூட்துருவல் - 20 கிராம்</li><li>உப்பு - 1/2 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்</li><li>மிளகுதூள் 1 டீஸ்பூன்</li><li>தேங்காய்துருவல் - 25 கிராம்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; அவுலை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறியவுடன் இதனுடன் பீட்ரூட் துருவலை அரைத்தும், மற்ற பொருட்களை அப்படியே சேர்த்து கலந்து பரிமாறவும். இது ஒரு ஆரோக்கியமானகாலை உணவாகும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் பீட்ரூட் அவலில் நிறைந்துள்ளன. இரத்த உற்பத்தி, தோல் பாதுகாப்பு ஆகியவற்றில்பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் -100 கிராம்</li><li>இஞ்சி -10 கிராம்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்</li><li>மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>தேங்காய்துருவல் -25 கிராம்</li><li>தண்ணீர் – தேவைக்கேற்ப</li><li>புதினாஇலை</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; முதலில் புதினா இலையையும், இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். ஊறியபின்அவுலுடன் புதினா, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து இறுதியாக தேங்காய் துருவலையும் கலந்து பரிமாறலாம். இது ஜீரணத்தை அதிகரித்துபசியைத் தூண்டக்கூடிய நார்ச்சத்து மிக்க உணவாகும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; புதினாவில் மென்தால் நிறைந்துள்ளதால் சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.வாய் துர்நாற்றம் நீங்கும். புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல்- 100 கிராம்</li><li>கேரட்துருவல்- 50கிராம்</li><li>தேங்காய்துருவல்-25கிராம்</li><li>மிளகுத்தூள் - 1 ½டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>உப்பு -தேவைகேற்ப பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,கருவேப்பிலை</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கேரட் துருவலையும்,தேங்காய்துருவலையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.அவுலைஉமி நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் மாவுபோல் அரைக்கவும். அரைத்த மாவில் கேரட். தேங்காய் பால் சேர்த்து, பிசிரிவிடவும்சிறிது நேரம் (10நிமிடம்) ஊறிய பின் 10 மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;உடலில் ஏற்படும் நீர்வறட்சியைக் குறைக்கும். பால் சாப்பிடாதவர்களுக்கு இதிலிருந்து கிடைக்கும்கால்சியம் அதை ஈடு செய்யும்.புரதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல்-100 கிராம்&nbsp;</li><li>கேரட்-20 கிராம்&nbsp;</li><li>கேரட்துருவல்-20 கிராம்&nbsp;</li><li>உப்பு - 1/2 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 25 கிராம்&nbsp;</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முதலில் கேரட்டை சிறிதுதண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறியவுடன் அவுலுடன் கேரட் விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல் அனைத்தும் சேர்த்து கலந்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கேரட்டில் வைட்டமின், கரோட்டினாய்டு உள்ளன. சீரகம், மிளகுத்தூள் ஆகியவை வயிற்றைச் சுத்தம் செய்கின்றன. சிறுநீரகத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அவுல் - 100 கிராம்</li><li>நா.சர்க்கரை -இனிப்பிற்கேற்ப</li><li>தேங்காய்துருவல் - 25 கிராம்</li><li>பேரிச்சம்பழம் -1&nbsp;</li><li>உலர்திராட்சை-10&nbsp;</li><li>முந்திரி -5</li><li>ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;அவுலை தண்ணீர் ஊற்றி 2 முறை கழுவிவிடவும். அவுலை விடவும் சற்று குறைவான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்துநன்கு கலக்கி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; இரும்புச்சத்து, கால்சியம் ஆகியன அடங்கியிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. முந்திரியில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின்முளை வளர்ச்சிக்கு தவுகின்றன.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>அரைக்கீரை -100கிராம்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம் – 5</li><li>எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>வே.கடலைத்தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>பொ.கடலைத்தூள் - 2 டீஸபூன்&nbsp;</li><li>உப்பு - தேவைக்கேற்ப&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 20 கிராம்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;முதலில் அரைக்கீரையை உப்பு தண்ணீரில் அலசி பின்னர் சாதாரணநீரில் கழுவிக் கொள்ளவும். பின் கீரையை பொடியாகநறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும்சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இது வேகவைக்காததால் சத்துக்கள்நிறைந்த நார்ச்சத்து மிக்க பொரியலாகும். நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் வெப்பத்தை குறைக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பொன்னாங்கண்ணிகீரை - 100 கிராம்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 5</li><li>எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்</li><li>மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>வே.கடலைத் தூள் - 1 டீஸ்பூன்</li><li>பொ.கடலைத்தூள் - 2 டீஸ்பூன்</li><li>உப்பு – தேவைக்கேற்ப</li><li>தேங்காய்த்துருவல் - 20 கிராம்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கீரையை உப்புத்தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். நீரில் சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் (தேங்காய்துருவல் தவிர்த்து) கலந்து கொள்ளவும். தேங்காய் துருவலை இறுதியாக கலந்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே வைத்து பின்னர் சாப்பிடவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; இது கண்களுக்குநல்ல குளிர்ச்சியையும், வெளிச்சத்தையும் கொடுக்கும். பித்தமயக்கம், கைகால் எரிச்சலை போக்கும். வைட்டமின் ஏ.பி.சி. நார்ச்சத்து, பீட்டாகரோட்டின்,கால்சியம், இரும்புச்சத்து, நிறைந்தது. காசநோய், கண் நோய்களை, குணப்படுத்தும். கல்லீரல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>மணத்தக்காளி - 100 கிராம்&nbsp;</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் -5&nbsp;</li><li>எலுமிச்சைசாறு -2 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1/4டீஸ்பூன்&nbsp;</li><li>வே.கடலைத் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>பொ.கடலைத்தூள் - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு -தேவைக்கேற்ப&nbsp;</li><li>தேங்காய்த்துருவல் - 20 கிராம்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; கீரையை உப்புத்தண்ணீரில் அலசி பின் சாதாரண நீரில் கழுவிக் கொள்ளவும். சுத்தம் செய்த கீரையை நன்கு பொடியாக அரிந்து அதனுடன் தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற பொருட்களை முதலில்கலந்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;வைட்டமின் பி காம்பளக்ஸ், பாஸ்பரஸ்உள்ளிட்ட தாது உப்புகள் மிகுந்தஅளவில் உள்ளன. குடல் புண், வாய்ப்புண், ஆகியவற்றை ஆற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்பக்கவாதம் மூட்டுவலிகளுக்கு சிறந்த பலன் தரும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>நரம்பு நீக்கிய வாழைப்பூ - 50 கிராம்</li><li>மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - &nbsp;1/4 டீஸ்பூன்</li><li>வே.கடலைத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>பொ.கடலைத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – 5</li><li>உப்பு -தேவைக்கு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிதழை – சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக அறிந்து கொள்ளவும். இதனுடன் அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; இதை உண்பதனால்இதிலுள்ள துவர்ப்புச்சுவை உடலை தூய்மைப்படுத்தி, ஆரோக்கியம் தருகிறது.வயிற்றுப்புண்களை ஆற்றும், கர்பப்பை பலப்பட உதவும். சீரகம் புண்களை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>நார் நீக்கிய வாழைத்தண்டு - 50 கிராம்&nbsp;</li><li>மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்&nbsp;</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>வே.கடலை தூள் - 1 டீஸ்பூன்</li><li>பொ.கடலை தூள் - 1 டீஸ்பூன்</li><li>நறுக்கிய சி.வெங்காயம் - 5&nbsp;</li><li>உப்பு-தேவையான அளவு&nbsp;</li><li>பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 2 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாகநறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து தேங்காய் துருவலை மட்டும் இறுதியாக சேர்த்து பரிமாறலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இது சிறுநீரகக் கற்களைகரைத்து உடலுக்கு வலிமையை தருகிறது. வைட்டமின் <strong>A </strong>இருப்பதால் கண்களுக்கு நல்லது. உடலில் உள்ள தொற்றுகள், கழிவுகள், ஆகியவற்றை வெளியேற்றும். நார்ச்சத்தும் இருப்பதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>முள்ளங்கி -50 கிராம்</li><li>மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/4டீஸ்பூன்</li><li>வேர்க்கடலைதூள்-2 டீஸ்பூன்</li><li>பொட்டுக்கடலைத்தூள்-2 டீஸ்பூன்</li><li>நறுக்கிய சி.வெங்காயம் – 5</li><li>உப்பு -தேவைக்கேற்ப</li><li>பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இழை – தேவைக்கேற்ப</li><li>தேங்காய்துருவல் - 5 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாகதுருவிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து சிறிது நேரத்திற்குப் பின் பரிமாறவும். இதுஇருதயத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தினைத் தருகிறது.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; புற்றுநோய் செல்களை வளரவிடாமல்தடுக்கும். மூல நோய் இருப்பவர்கள் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா, தொண்டை எரிச்சல், சுவாசக் கோளாறுகள் சரியாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>காளிபிளவர் - 50 கிராம்</li><li>மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்</li><li>மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்</li><li>வேர்.கடலைத்தூள் - 1 ஸ்பூன்</li><li>பொ.கடலைத்தூள் - 1 ஸ்பூன்</li><li>நறுக்கிய சி. வெங்காயம் – 5</li><li>உப்பு - தே.அளவு</li><li>பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லிஇழை – சிறிதளவு</li><li>தேங்காய்துருவல் - 2 ஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;முதலில் காளிபிளவரை சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள், உப்பு கலந்து சுத்தம் செய்து காளிபிளவரை அதில் போட்டு வைக்கவும்.10 நிமிடத்திற்குப் பிறகு, நீரை நன்கு வடித்துவிட்டுகாளிபிளவரை காய் துருவியில் பொடியாகதுருவிக்கொள்ளவும். இதனுடன் மற்ற அனைத்து பொருட்களையும்கலந்து 5 நிமிடத்திற்குப் பிறகு பரிமாறலாம். இது சுவைமிக்க ஒருசாலட் ஆகும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கொலைன் சத்து இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் சி நிறைவாக இதில்உள்ளது. பைடோ நியூட்ரின்ஸ். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நாள்பட்ட வியாதிகளின் தீவிரம் குறையும். எலும்பு தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பொடியாகநறுக்கிய முட்டைக்கோஸ் - 10 கிராம்</li><li>கேரட்துருவல் -50 கிராம்</li><li>பொடியாகநறுக்கிய வெள்ளரி - 20 கிராம்</li><li>மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்</li><li>தேங்காய்துருவல் -2 டீஸ்பூன்</li><li>எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்</li><li>முளைகட்டியபாசிபயறு - 2 டீஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாசிபயறை முந்தைய நாள் காலையே ஊறவைத்துமுளைகட்டிக் கொள்ளவேண்டும். இதனுடன் கேரட் துருவல், முட்டைக்கோஸ், பொடியாக நறுக்கிய வெள்ளரி, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சைசாறு, தேவைக்கேற்ப உப்பு கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இது நமது உடலைசுத்தம் செய்து நமது தோலை பளபளப்பாகவைத்திருக்க உதவுகிறது. கல்லீரலை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைஅதிகரிக்கிறது. வயிற்றுப்புண் குணமாகும். கண்களுக்கு நல்லது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொள்ளு - 50கிராம்</li><li>குருணைஅரிசி -150 கிராம்</li><li>பூண்டு - 5 பல்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>உ.பருப்பு பொடி 1 ஸ்பூன்</li><li>கொத்தமல்லி சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கொள்ளுப் பருப்பை நன்கு வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் கொள்ளு பவுடரையும்,அரிசியையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். பூண்டையும் உப்பையும் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் உளுந்தம் பருப்பு பொடியை சிறிது தண்ணீரில் கலந்தும் கொத்தமல்லி இலை விழுதையும் சேர்த்துஇறக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கொள்ளு கஞ்சி, நீரைப் பெருக்கும் ஆற்றல் உடையது.கெட்ட கொழுப்பைக் கரைக்கும். என்பதால் உடல் எடை குறைப்பில்ஈடுபடுவோர்களுக்கு ஏற்றது. புரதச்சத்து நிறைந்த கஞ்சி.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபயறு-50 கிராம்&nbsp;</li><li>அரிசிகுருணை - 150கிராம்&nbsp;</li><li>கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து-25 கிராம்&nbsp;</li><li>மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை&nbsp;</li><li>சீரகம்- 4டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகு-10&nbsp;</li><li>பச்சைமிளகாய்-2</li><li>இஞ்சிபொடியாக நறுக்கியது -1/4 ஸ்பூன்&nbsp;</li><li>உப்பு-தேவையானஅளவு&nbsp;</li><li>தண்ணீர்-தேவையானஅளவு&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய மல்லி தழை</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;5 டம்ளர் தண்ணீர் விட்டு பாசிபயிரை நன்கு குழைய வேகவைத்து அதில் அரிசியையும் கலந்து வேகவிடவும்.பாதி வெந்ததும் கேரட், பீன்ஸ். மஞ்சள் தூள், சீரகம், மிளகு, பச்சைமிளகாய், இஞ்சி. உப்பு சோத்து நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இரவு வேளைகளில் இந்தகஞ்சிகளை குடிப்பதனால் ஜீரணம் எளிதாகி மலச்சிக்கல் தீரும். கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்தது என்பதால் உடல் எடை அதிகரிக்கஇதைப் பருகலாம். வைட்டமின் பி1. பி2, பி6. நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கோதுமைகுருணை - 50 கிராம்</li><li>குருணைஅரிசி - 150கிராம்</li><li>சீரகம் - 1/4டீஸ்பூன்</li><li>மிளகு - 10 மிளகு</li><li>பச்சைமிளகாய் - 2நறுக்கியது&nbsp;</li><li>இஞ்சி - 1/4 ஸ்பூன்</li><li>உப்பு – தேவைக்கேற்ப</li><li>தண்ணீர் தேவைக்கேற்ப</li><li>மல்லிதழை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;5 டம்ளர் தண்ணீர்விட்டு கோதுமை குருணையை வேகவிடவும்.பாதி வெந்ததும் அதில் அரிசி குருணையும் சேர்த்து வேகவைத்து.வெந்ததும் சீரகம், மிளகு,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து வேகவிடவும் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும். இது உடலுக்கு சத்தினை கொடுக்கக் கூடிய எளிய உணவாகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்சனைஉள்ளவர்கள் இதனை அருந்தலாம். பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது. கொழுப்பு இல்லை என்பதால் உடல் எடை குறைப்பதற்குஇதை எடுத்துக் கொள்ளலாம். குடல் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்புகுருணை - 50 கிராம்</li><li>அரிசிகுருணை - 150 கிராம்</li><li>சீரகம் - 1/4 டீஸ்பூன்</li><li>மிளகு – 10</li><li>பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 2</li><li>பொடியாகநறுக்கியஇஞ்சி - 1/4டீஸ்பூன்</li><li>&nbsp;உப்பு – தேவைக்கேற்ப</li><li>தண்ணீர் – தேவைக்கேற்ப</li><li>பொடியாகநறுக்கியமல்லிதழை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்பு குருணையை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதி வெந்தவுடன் அரிசிகுருணையையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும் இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; அனிமியா எனப்படும் இரத்த சோகை நோயைப் போக்கும்ஆற்றல் கொண்டது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்த கஞ்சியைக் குடித்துவரநன்றாக ஜீரணம் நடைபெறும் குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். அதிக அளவு இரும்புச்சத்துஉள்ளதால் ஹிமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்</strong></p><ul><li>சாமைஅரிசி - 50 கிராம்</li><li>அரிசிகுருணை - 150 கிராம்&nbsp;</li><li>சீரகம் - 1/4 டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகு -10 பொடியாக&nbsp;</li><li>நறுக்கியபச்சைமிளகாய் -2&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய இஞ்சி - 1/4டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு -தேவையான அளவு&nbsp;</li><li>தண்ணீர் - தேவைக்கேற்ப&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய மல்லிதழை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;சாமை அரிசியை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து குருணையும் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும். இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இரும்புச்சத்து அதிகம் &nbsp;உள்ளதால் இரத்தசோகையைத்தடுக்கும். <i><strong>கலோரிகள் அதிகம் உள்ளது என்பதால் உடல் எடை உள்ளவர்கள்அளவாக பயன்படுத்த&nbsp; வேண்டும்.</strong></i>கொழுப்பு அதிகம் உள்ளதாள் அனைவருக்கும் ஏற்றது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபருப்பு - 50 கிராம்</li><li>பொடியாகநறுக்கிய காளிபிளவர் - 25 கிராம்</li><li>மிளகுத்தூள் - 1 ஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>உப்புதேவைக்கேற்ப</li><li>எண்ணெய்தாளிக்க</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>இஞ்சி, பூண்டு விழுது&nbsp;</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லி</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; முதலில் பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். காளிபிளவரை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், வேகவைத்த காளிபிளவர் இவற்றை சேர்த்து வதக்கி பாசிபயிறு வேகவைத்ததை எடுத்து ஊற்றவும். இதனுடன் மக்காச்சோளமாவு 1 ஸ்பூன் கலந்து கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள். தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவிக்கொள்ளவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தசூப் உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது மேம்படுகிறது. ஆஸ்துமா, புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபயறு - 50 கிராம்</li><li>அகத்திக்கீரை - 25 கிராம்</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிஇலை – சிறிதளவு</li><li>எண்ணெய் - தே.அளவு - 25 கிராம்</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிஇலை – சிறிதளவு</li><li><p>எண்ணெய் - தே.அளவு</p><p><strong>செய்முறை:</strong></p></li></ul><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய சின்னவெங்காயம், சேர்த்து வதக்கவும். வதங்கிய உடன் அகத்திக்கீரை, வேகவைத்த பாசிபயிறு இவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வைட்டமின் ஏ,சி, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும்,வயிற்றுப்புண், அல்சர் பிரச்சனையை குணமாக்கும். கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளது. வாய்ப்புண் குணமாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபருப்பு - 50 கிராம்</li><li>சிறுதுண்டுகளாகநறுக்கியகாளான் - 25கிராம்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்</li><li>மிளகுத்தூள் 1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; பாசிபயிறை நன்கு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காளான் இவையனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் வேகவைத்த பாசிபயறையும், மக்காசோள மாவு 1 ஸ்பூனையும் சேர்த்து வேகவிடவும். நன்கு கொதித்தவுடன், மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சோத்து இறக்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;மிகுதியாக உள்ள கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்கும். மார்பகம், புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற சூப். நோய்எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபருப்பு - 50 கிராம்</li><li>கேரட்,பீன்ஸ் - 25 கிராம்</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>உப்புதேவைக்கேற்ப</li><li>எண்ணெய்தாளிக்க</li><li>நறுக்கியசி.வெங்காயம் – 8</li><li>தண்ணீர்தேவைக்கேற்ப</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்</li><li>பொடியாகநறுக்கியகொத்தமல்லி,கருவேப்பிலை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;முதலில் பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைவாக வேகவைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட், பீன்ஸ் இவற்றை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணீரையும்அதில் ஊற்றி, சோளமாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு வேகவிடவும்.நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி. கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; உடலுக்கு தேவையான புரோட்டீனைபாசிப்பயிறு கொடுக்கும் கேரட்டில் உள்ள சத்துக்கள்&nbsp;(லூக்மியா) எனும் இரத்தப் புற்றுநோயை தடுக்கும். ஞாபகச்சக்தி அதிகரிக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபருப்பு - 50 கிராம்</li><li>தக்காளி – 2</li><li>மிளகுத்தூள்-1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>பட்டை, கிராம்புபொடி - 1/2 டீஸ்பூன்</li><li>மக்காச்சோளம் - 1 டீஸ்பூன்</li><li>உப்பு – தேவைக்கேற்ப</li><li>எண்ணெய்தாளிக்க</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் - 8</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முதலில் பாசிபருப்மை 2 டம்ளர்தண்ணீர் விட்டு வேகவைத்து&nbsp; தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டைகிராம்பு தூள், இஞ்சி,பூண்டுவிழுது சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை முறையே&nbsp; வதக்கவும்நன்கு வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணிரையும்அதில் ஊற்றவும்.அதனுடன் சோளமாவு 1 டீஸ்பூன் சேர்த்து கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள்சீரகத்தூள் சேர்த்து&nbsp;&nbsp;இறக்கவும் .புதினா இலை தூவி பரிமாறலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; வயிற்றில் ஏற்படும் பித்தம்குறையும். இரும்புச்சத்து, புரதம், கால்சியம் ஆகியவை இதில் நிறைவாக உள்ளது. தக்காளியில் லைக்கோஃபீன் எனும் கரோட்டினாய்டு சத்து இருப்பதால் நுரையீரல், மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபயறு - 50 கிராம்</li><li>தண்டுக்கீரை - 25 கிராம்</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1ஸ்பூன்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 8</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்</li><li>சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிஇலை – சிறிதளவு</li><li>எண்ணெய் - தே.அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாசிபயறை நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், நறுக்கிய தண்டுக்கீரை இவற்றை சேர்த்து வதக்கி வேகவைத்த பாசிபயறை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். சோளமாவையும் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் சரி செய்யும். உடலின்பித்த அளவைக் குறைக்கும். இதயம் வலுப்பெற உதவுகிறது. எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத்தடுக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபருப்பு- 50 கிராம்&nbsp;</li><li>முருங்கைகீரை -25 கிராம்&nbsp;</li><li>மிளகுத்தூள்-1 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>மக்காச்சோளமாவு-1 ஸ்பூன்&nbsp;</li><li>இஞ்சி, பூண்டு விழுதுகள்-1 ஸ்பூன்&nbsp;</li><li>எண்ணெய்தாளிக்க&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம் -8&nbsp;</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது. சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் முருங்கைக் கீரையைசேர்த்து வேகவைத்த பாசிபயிரையும் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் 1 ஸ்பூன் மக்காச்சோள மாவினையும் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; நார்சத்து, இரும்புசத்து, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகையைப் போக்கும். ஜீரணச்சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிபயறு -50கிராம்</li><li>பொடியாகநறுக்கிய முளைக்கீரை - 25 கிராம்&nbsp;</li><li>இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்&nbsp;</li><li>நறுக்கியசிவெங்காயம் -8&nbsp;</li><li>மக்காச்சோளமாவு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>சீரகத்தூள் - 1/2டீஸ்பூன்</li><li>தண்ணீர் - தேவையான அளவு</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை, கொத்தமல்லிஇலை – சிறிதளவு</li><li>எண்ணெய்தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கியசி.வெங்காயம். முளைக்கீரை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிபயறு மற்றும் 1 டீஸ்பூன் மக்காச் சோளமாவு இவற்றை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கடலைபருப்பு - 25கிராம்</li><li>புளி – சிறிதளவு</li><li>இஞ்சி - சிறிய துண்டு</li><li>பூண்டு - 2 பல்</li><li>தேங்காய் - துருவல் 1 மூடி</li><li>காய்ந்த - மிளகாய் 2</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>சீரகம் - 1/4 டீஸ்பூன்</li><li>கறிவேப்பிலை – சிறிதளவு</li><li>எண்ணெய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும். கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய்,கடலைபருப்பு,இஞ்சி,பூண்டு,புளி இவற்றை சேர்த்துநன்கு வறுக்கவும். வறுத்தவுடன் தேங்காய் பூவையும் இறுதியாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஆறியவுடன் அரைக்கவும்.</p><p><strong>பலன்கள்:&nbsp;</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; நார்ச்சத்து,புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்தது.எலும்புகளின் வளர்ச்சிக்கும்,உறுதிக்கும் பக்கபலமாக இருக்கிறது.இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகையை தடுக்கும்.குழந்தைகள்,பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதுவையல்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கத்திரிக்காய் - 100 கிராம்&nbsp;</li><li>வரமிளகாய் – 2</li><li>பூண்டு - 2 பல்&nbsp;</li><li>புளி - சிறிதளவு&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>தக்காளி - 50கிராம்&nbsp;</li><li>எண்ணெய் - தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முதலில் கத்திரிக்காயை தீயில்வாட்டி அதன்மேல் தோலை உரித்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய்,பூண்டு,தக்காளி, புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் வாட்டி தோல் நீக்கிய கத்திரிக்காயையும்உப்பும் சேர்த்து அரைக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;வளரும்&nbsp;குழந்தைகளின்&nbsp;எலும்பு&nbsp;வளர்ச்சிக்கு&nbsp;மிகவும்&nbsp;ஏற்றது.&nbsp;கால்சியம்,&nbsp;வைட்டமின்&nbsp;பி6&nbsp;அதிகம்&nbsp;உள்ளது.பைட்டோ&nbsp;நியூட்ரியன்ஸ்&nbsp;இருப்பதால்&nbsp;நினைவுத்திறன்&nbsp;அதிகரிக்கும்.&nbsp;நார்ச்சத்து&nbsp;நிறைந்திருப்பதால்&nbsp;ஜீரண&nbsp;சக்தியை&nbsp;மேம்படுத்தவும்&nbsp;மலச்சிக்கலைப்&nbsp;போக்கவும்&nbsp;உதவுகிறது</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கறிவேப்பிலை -100கிராம்</li><li>பூண்டு - 5 பல்</li><li>இஞ்சிஒரு சிறிய துண்டு</li><li>வரமிளகாய் – 3</li><li>கடலைப்பருப்பு,உளுந்து பருப்பு - 1 டீஸ்பூன்</li><li>புளிசிறியதளவு</li><li>தக்காளி- 1</li><li>சின்னவெங்காயம் – 5</li><li>உப்பு -தேவைக்கேற்ப</li><li>எண்ணெய் – தாளிக்க</li></ul><p><strong>செய்முறை</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு. வரமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, புளி இவற்றை முறையேவதக்கி கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புசத்தும், கால்சியமும்நிறைந்தது முடிவளர்ச்சியைத் தூண்டக்கூடிய துவையலாகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கூந்தலின் வலுவை அதிகரிக்க உதவுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது என்பதால் ஆரோக்கியம் சிறக்கும். வைட்டமின் சி, மக்னீசியம் ஆகியனநிறைவாக உள்ளது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கேரட்துருவல்-50 கிராம்&nbsp;</li><li>கடலைபருப்பு,உளுத்தப்பருப்பு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>பூண்டு-5 பல்&nbsp;</li><li>இஞ்சிஒரு சிறிய துண்டு&nbsp;</li><li>வரமிளகாய்-3</li><li>புளி - சிறிதளவு&nbsp;</li><li>சின்னவெங்காயம்-5&nbsp;</li><li>எண்ணெய்தாளிக்க&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு இவற்றை சேர்த்து வறுக்கவும்.இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம்,புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சோத்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வைட்டமின் ஏ அதிக அளவில்உள்ளது. இது பார்வைத்திறனை அதிகரிக்கும். கடலைப்பருப்பு மற்றும் உளுந்துப் பருப்பில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு வலுசேர்க்கும். வயிற்றுப்புண் குணமாகும் எலும்பு பற்களுக்கு நன்மை செய்யும்.</p><p>&nbsp;</p><p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கேரட்துருவல்-50 கிராம்&nbsp;</li><li>கடலைபருப்பு,உளுத்தப்பருப்பு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>பூண்டு-5 பல்&nbsp;</li><li>இஞ்சிஒரு சிறிய துண்டு&nbsp;</li><li>வரமிளகாய்-3</li><li>புளி - சிறிதளவு&nbsp;</li><li>சின்னவெங்காயம்-5&nbsp;</li><li>எண்ணெய்தாளிக்க&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு இவற்றை சேர்த்து வறுக்கவும்.இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம்,புளி இவற்றை நன்குவதக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சோத்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வைட்டமின் ஏ அதிக அளவில்உள்ளது. இது பார்வைத்திறனை அதிகரிக்கும். கடலைப்பருப்பு மற்றும் உளுந்துப் பருப்பில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு வலுசேர்க்கும். வயிற்றுப்புண் குணமாகும் எலும்பு பற்களுக்கு நன்மை செய்யும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொத்தமல்லிதழை -100கிராம்&nbsp;</li><li>பூண்டு - 5 பல்&nbsp;</li><li>இஞ்சிஒரு சிறிய துண்டு&nbsp;</li><li>வரமிளகாய் - 3&nbsp;</li><li>கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு தலா - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>புளி - சிறிதளவு&nbsp;</li><li>உப்பு -தேவைக்கேற்ப&nbsp;</li><li>சின்னவெங்காயம் 5&nbsp;</li><li>தக்காளி-1</li><li>எண்ணெய் - தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வாணலியில் எண்ணெய் கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் தக்காளி இவற்றை முறையே வதக்கி கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியில் புளி, உப்பு சேர்த்து கிளறி அரைத்துக் கொள்ளவும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. ஜீரணத்தை எளிதாக்கும்.உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்ஆற்றல் கொண்டது. தோல் நோயைக் குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கொள்ளு - 50கிராம்</li><li>பூண்டு - 3 பல்</li><li>தேங்காய்பூ - 25கிராம்</li><li>காய்ந்தமிளகாய் -2</li><li>உப்பு - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; கொள்ளை நன்கு வறுத்துகாய்ந்த மிளகாய், பூண்டு,தேங்காய் பூ, உப்பு சேர்த்துஅரைக்கவும். இந்த கொள்ளு துவையல்இட்லி, தோசை, கஞ்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;அதிக ஆற்றல் தரக்கூடியது.கெட்ட கொழுப்பைக் கரைக்கும். புரதச்சத்தும், நார்ச்சத்தும் கூடுதலாக இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும் உடல் எடையைக் குறைக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>தேங்காய்துருவல் -1 மூடி</li><li>பூண்டு-3 பல்</li><li>வரமிளகாய்-4</li><li>உப்புதேவைக்கேற்ப</li><li>பொட்டுக்கடலை-2 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அனைத்தையும் சேர்த்து அரைத்தால்துவையல் ரெடி. இந்த துவையலை கஞ்சிகளுக்கும்தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;புரதமும், நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளன. மக்னீசியம்,பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.நல்ல கொழுப்பு நிறைந்தது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சுத்தம்செய்தபிரண்டை - 50 கிராம்</li><li>இஞ்சி - ஒரு சிறியதுண்டு</li><li>பூண்டு - 5 பல்</li><li>புளி – சிறிதளவு</li><li>வரமிளகாய் – 2</li><li>சின்னவெங்காயம் – 5</li><li>கடலைபருப்பு, உளுந்துபருப்பு,தலா 1 டீஸ்பூன்</li><li>உப்பு - தே.அளவு</li><li>எண்ணெய் - தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு. உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சின்னவெங்காயம், புளி சுத்தம் செய்தபிரண்டை இவை அனைத்தையும் நன்குவதக்கவும். வதங்கியவுடன் உப்பு சேர்த்து ஆறியபின் அரைக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இது பசியைத் தூண்டி ஜீரணத்தை எளிதாக்குகிறது. நாக்கின் சுவையற்ற தன்மைக்கு நல்ல மருந்தாகிறது. வைட்டமின்சி. மற்றும் சிட்டோசிரால் எனும் அமினோ அமிலம் அடங்கியது. அஜீரண கோளாறு, ஒழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பீட்ரூட்துருவல் - 50கிராம்&nbsp;</li><li>இஞ்சி-ஒரு சிறியதுண்டு&nbsp;</li><li>பூண்டு - 3 பல்&nbsp;</li><li>புளி - சிறிதளவு&nbsp;</li><li>வரமிளகாய்-2</li><li>சின்னவெங்காயம் - 5&nbsp;</li><li>கடலைபருப்பு, உளுந்துபருப்புதலா-1 டீஸ்பூன்&nbsp;</li><li>எண்ணெய்தாளிக்க&nbsp;</li><li>உப்புதேவைக்கேற்ப</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில்எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து பொனநிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் புளி,கேரட் துருவல் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும் அறிய பின் உப்புசோத்து அரைக்கவும் இது இட்லி,தோசை, சாப்பாடு இவற்றிற்கு பயன்படும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வைட்டமின் ஏ, சி,பி காம்ப்ளக்ஸ் இரும்புச்சத்து நிரைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்துகிறது. இரத்த உற்பத்திக்கு உதவி செய்கிறது. இஞ்சியில்உள்ள ஜிஞ்சரால் இரத்தத்தை 'சுத்திகரிக்கும் செரிமானத்தை' எளிதாக்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>புதினாஇலை - 100கிராம்</li><li>பூண்டு - 5 பல்</li><li>இஞ்சிஒரு சிறியதுண்டு</li><li>வரமிளகாய் – 3</li><li>கடலைப்பருப்பு,உளுந்துபருப்பு தலா - 1ஸ்பூன்</li><li>புளி – சிறிதளவு</li><li>உப்பு – தேவைக்கேற்ப</li><li>சி.வெங்காயம் – 5</li><li>தக்காளி -1</li><li>எண்ணெய்தாளிக்க-தே அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு,வரமிளகாய் சின்னவெங்காயம்,தக்காளி இவற்றையும் புதினா இலையையும் சேர்த்து வதக்கவும். புளியையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறியவுடன் உப்பு சேர்த்து அரைக்கவும் சுவையான புதினா துவையல் ரெடி.இது ஜீரணத்தை முறைபடுத்தி. பசியைத் தூண்டுகிறது.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புசத்து, ஆகியன இதில் அதிகம் உள்ளன. வயிறு மந்தம். வாயுப்பிடிப்பு ஆகியன போக்கும். வைட்டமின் பி 6, சி, பொட்டாசியம் நிறைந்தது மலச்சிக்கலை நீக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பொடியாகநறுக்கியமுட்டைக்கோஸ் - 50கிராம்</li><li>பூண்டு - 3 பல்</li><li>இஞ்சிஒரு சிறிய துண்டு&nbsp;</li><li>வரமிளகாய்புளி - சிறிதளவு&nbsp;</li><li>கடலைப்பருப்பு, உளுந்துபருப்பு-1 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, வரமிளகாயையும் சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸையும் புளியையும்சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;மார்பகபுற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் வருவதைக் தடுக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளது. உடல் வலி வீக்கம் ஆகியவற்றைக்குறைக்கும்.இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.நரம்புத்தளர்ச்சி சரியாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சுத்தம்செய்த முருங்கை இலை - 50 கிராம்</li><li>இஞ்சி - ஒரு சிறியதுண்டு</li><li>பூண்டு - 5 பல்</li><li>புளி – சிறிதளவு</li><li>தக்காளி -1</li><li>வரமிளகாய் – 2</li><li>சின்னவெங்காயம் – 5</li><li>கடலைபருப்பு,உளுந்துபருப்பு,தலா-1 டீஸ்பூன்</li><li>உப்பு - தே.அளவு</li><li>எண்ணெய் - தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்தவுடன்.கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பைபொன் நிறமாக வறுக்கவும். பின்பு வரமிளகாய் பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம், தக்காளி, புளி, முருங்கை இலை இவையனைத்தையும் சேர்த்துவதக்கி ஆறியபின் உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புச்சத்து நிறைந்தசத்தான துவையலாகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கால்சியம்,இரும்பச்சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. உளுந்து, கடலைப்பருப்பில் உள்ள புரதம் உடல்வளர்ச்சிக்குஉதவுகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>வேர்க்கடலை -50கிராம்</li><li>வரமிளகாய் - 2</li><li>உப்பு - தேவைக்கேற்ப</li><li>பூண்டு -4 பல்</li><li>தேங்காய் துருவல் -2 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்துருவல்,பூண்டு,வரமிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற துவையலாகும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதயத்தை காக்கும் அரணாகி செயல்புரிகிறது. பூண்டு செரிமானத்தை மேம்படுத்தும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். மூஃயா எனும் ஒற்றை நிறைவழர் கொழுப்பு அமிலம் இருப்பதால் நல்ல கொழுப்பை சேர்த்துகெட்ட கொழுப்பை நீக்குகிறது. உடலை வலுப்படுத்தும் துவையல்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்புஅரிசி -1கப்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய வெங்காயம்-1 கப்&nbsp;</li><li>பச்சைமிளகாய் -5&nbsp;</li><li>மிளகாய்வற்றல்-3 பொடியாக நறுக்கிய&nbsp;</li><li>கருவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு&nbsp;</li><li>தேங்காய்துருவல் - 1/4கப்&nbsp;</li><li>உப்பு -தேவைக்கேற்ப&nbsp;</li><li>எண்ணெய்தாளிக்க கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு தாளிக்க</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்பரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து. வெங்காயம், மிளகாய் &nbsp;கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும். அரைத்த மாவையும் சேர்த்து லேசான தீயில் வனக்கவும். மாவுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும். ஆறியதும்கெட்டியான உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும். எள்ளுஇட்லிப்பொடி, காரசட்னியுடன் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; புரதம், கார்போ ஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன. கடலை,உளுந்து பருப்புகளில் புரதம் அதிக அளவில் உள்ளன. கறிவேப்பிலை,கொத்தமல்லி இலைகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்பு-1 கப்</li><li>பார்லி-2 கப்</li><li>வெங்காயம்பொடியாகநறுக்கியது</li><li>பொடியாகநறுக்கியகேரட் -1</li><li>நறுக்கியஉருளை -1</li><li>நறுக்கியமு.கோஸ்&nbsp;</li><li>சிறிதளவுமிளகுத்தூள்-1 டீஸ்பூன்</li><li>தக்காளி - 1&nbsp;</li><li>பிரிஞ்சிஇலை -2</li><li>ஓமம் - 1 சிட்டிகை</li><li>துளசி -4 சிட்டிகை</li><li>உப்புதேவையான அளவு</li><li>எண்ணெய் -தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்பையும், பார்லியையும் அலசி ஊற வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்சேர்த்து சூடானவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒன்றாக வதக்கவும்.இதனுடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். உப்பு, மிளகுத்தூள்,ஓமம், துளசி சேர்த்து பாத்திரத்தை மூடிவிடவும். பார்லி நன்றாக வெந்தவுடன் இறக்கி அருந்தலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்பில் உள்ள இரும்புச்சத்து, ரத்தசோகையைத்தடுக்கும். குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் தன்மை கொண்டது. பார்லியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். பசியைத் தூண்டும் ஆற்றல் பார்லி சூப்பிற்கு உண்டு.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்புமாவு- 2கப்&nbsp;</li><li>முருங்கைஇலை-1 கப்&nbsp;</li><li>பொடியாகஉடைத்த முந்திரி-2 டீஸ்பூன்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய பெரிய வெங்காயம்-2&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய பச்சைமிளகாய்-2&nbsp;</li><li>சோம்பு-1 டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகு-1 டீஸ்பூன்&nbsp;</li><li>கொத்தமல்லிபொடியாக நறுக்கியது&nbsp;</li><li>சிறிதளவுஉப்பு &amp; எண்ணெய்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கம்பு மாவுடன் சோம்பு, மிளகு, உப்பு, கொத்தமல்லி, முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,முருங்கை கீரையையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாகஉருட்டி இலையிலோ அல்லது தட்டிலோ எண்ணெயைத் தடவி அடைபோல் தட்டவும். தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; உடல் வெப்பத்தைதணிக்கும் ஆற்றல் கொண்டது. கை,கால் மூட்டு வரிகளைகுணமாக்கும். பார்வைத்திறன் அதிகரிக்கும் கால்சியம் பாஸ்பரஸ். இரும்புச்சத்து ஆகியன நிறைந்திருப்பதால் உடல் வலிமையை உண்டாக்கும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்புமாவு-2 கப்&nbsp;</li><li>கோதுமைமாவு-1/2கப்&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li><li>வெந்நீர்மாவு பிசைவதற்கு தேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய்/வெண்ணெய் தேவைக்கு ஏற்ப</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கம்பு மாவு மற்றும் கோதுமைமாவை உப்பு சேர்த்து வெந்நீர் தெளித்து மிருதுவாக பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. சமமான உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும் தேவைப்பட்டால் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அனீமியா எனும் இரத்தசோகையைக் தடுக்கும். அஜீரணக் கோளாறு சரியாகும். பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியனகோதுமையில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற உணவு.</p>

<p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>கம்பு மாவு - 1 கப்&nbsp;</li><li>பச்சைபயிறு மாவு -1/4கப்&nbsp;</li><li>பொடியாக பேரிச்சம்பழம் -6</li><li>பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>பொடித்த கருப்பட்டி-1/2கப்&nbsp;</li><li>வறுத்து பொடித்த எள் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு, நெய், பால் தேவைக்கேற்ப</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;வாணலியில்கம்பு மாவையும்,பச்சைபயிறு மாவையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும். இந்த மாவுகளை மிக்ஸியில்போட்டு அத்துடன் கருப்பட்டியையும் சேர்த்து அரைக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரிச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு சேர்த்துபிசறி வைக்கவும்.காய்ச்சிய பாலை கைபொறுக்கும் அளவு சூடாக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும். ஒருவாரம் வரை வைத்திருக்கலாம். பால்சேர்க்காமல் நெய் மட்டும் சேர்த்துஉருண்டை பிடித்தால் 15 நாட்கள் வைத்திருக்கலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;உடலுக்குத் தேவையான புரோட்டீன் பாசிப்பயிறு மாவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து, கால்சியம் ஆகியன அதிக அளவில் உள்ளன. பித்தத்தின் அளவை குறைக்கிறது. முந்திரிகருப்பட்டியில் இரும்பச்சத்து உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்புமாவு - 200கிராம்&nbsp;</li><li>கடலைமாவு - 100கிராம்&nbsp;</li><li>எள், ஓமம் - தலா 1 டீஸ்பூன்&nbsp;</li><li>எண்ணெய் -தே.அளவு&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>மிளகாய்த்தூள் - தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கடலை மாவையும்,கம்புமாவையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.பின்பு அதனுடன் உப்பு, ஒமம் மிளகாய்த்தூள், எள்ளைச்சோத்துக் கொள்ளவும். சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும் பின்பு சிறு உருண்டையாக உருட்டித்தேய்த்து ஒரு வாணலியில் எண்ணெய்ஊற்றிக் காய்நததும் பூரியைப் பொரித்து எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கம்பில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எள்ளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது எலும்பு, பற்களைவலுவாக்கும். ஓமத்தில் உள்ள வாலட்டேல் எண்ணெய்செரிமானத்தை மேம்படுத்தும்,வயிறு கோளாறுகள் நீங்கும்</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. வல்லாரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200கி<br>2. எலுமிச்சை சாறு &nbsp; &nbsp; -50 கி<br>3. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>4. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- 1 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>வல்லாரை இலைகளைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>ஞாபக மறதி, உடல் பலஹீனம் போன்றவைகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. சந்தனம்தூளை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி.<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-250 கி.</p><p><strong>செய்முறை :</strong><br>சந்தனத்தூளை தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து மறுநாள் காய்ச்சி, தண்ணீர் நாலில் ஒன்றாய் வற்றிய பின் வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சி பாகு பதத்தில் சீசாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீரில் கலந்து பருகவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :&nbsp;</strong><br>மூலச்சூடு, பிரமேகம் தீரும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. தாமரைப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி.<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி.</p><p><strong>செய்முறை :</strong><br>உலர்ந்த தாமரைப் பூவை வெந்நீரில் 12 மணி நேரம் வரை ஊற வைத்து வடிகட்டி கால் பங்காய் வற்ற வைத்து அத்துடன் சர்க்கரை கலந்து பாகு பதத்தில் இறக்கி பாட்டில்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<br>இருதய நோய்கள் மற்றும் இருதயத்திற்கு ஓர் ஆரோக்கிய பானம்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. எலுமிச்சை சாறு &nbsp; &nbsp; &nbsp; -100 கி.<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 கி.</p><p><strong>செய்முறை :</strong><br>எலுமிச்சை பழ ரசத்தில் சீனி (அ) சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப் படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>20 மி.லி. 40 மி.லி. தண்ணீருடன் பருகவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>பித்தம் தீரும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. மாதுளம் பழரசம் &nbsp; &nbsp; &nbsp; -100 கி.&nbsp;<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி.</p><p><strong>செய்முறை :</strong><br>மாதுளையின் மேல் தோலை நீக்கி சாறு பிழிந்து அத்துடன் சீனியைக் கலந்து பாகுபதத்திற்கு காய்ச்சி சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>20 மி.லி. சர்பத்தை 40 மி.லி. நீரில் கலந்து பருகவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பித்தத்தையும், பித்த சூட்டையும் இரும்புச் சத்து குறைவையும் நீக்கும்.</p>

<p>தற்காலத்தில் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு மற்றும் ஷாம்பூகளை உபயோகப்படுத்துவதினால் தோலின் மேலுள்ள அழுக்குகள் நீங்குவது மட்டுமில்லாமல் இயற்கையாக சருமத்தைப் பாதுகாக்கும் செபாசியஸ் சுரப்பிகளினால் சுரக்கப்படும் எண்ணெய்ப் பசையும் சேர்த்து நீக்கப்படுத்தினால் தோல் வறட்சி, தோல் நோய்கள் மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரைக்கு இந்த இரசாயனங்கள் காரணமாகி விடுகின்றன. அரவிந்த் மூலிகை குளிக்கும் தூளிலுள்ள மூலப் பொருட்கள் இயற்கையான சருமத்தினைக் கொடுப்பதுடன் தோலிற்குப் பாதுகாப்பு மற்றும் முடி உதிர்தல், பொடுகு, இளநரை இவற்றைப் போக்கி ஆரோக்கியமளிக்கிறது.<br><br><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. உசிலை இலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 125 கி.<br>2. பூந்திக் கொட்டை &nbsp; &nbsp; &nbsp;-125 கி.<br>3. சிகைக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-250 கி.<br>4. பாசிப்பயறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -250 கி.<br>5. கஸ்தூரி மஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-62.5 மி.கி<br>6. பூலாங்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -62.5 மி.கி<br>7. வேப்பிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-62.5 மி.கி<br>8. ரோஜாப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -62.5 மி.கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாக உலர்த்தி பொடித்து பத்திரப்படுத்தி அவற்றைக் கலந்து பின் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>பயன்கள் :</strong><br>சருமத்தைப் பளபளக்கச் செய்து நோய்க் கிருமிகளி லிருந்து பாதுகாக்கிறது. இயற்கை நறுமணம் கொண்டது. உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளிக்கலாம்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கேழ்வரகு- 100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;முந்தையநாள் இரவே கேழ்வரகு (ராகி)எடுத்து நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில்ஊறி இருக்கும் கேழ்வரகை தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.சுவைக்குஏற்ப நாட்டு சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இப்பொழுது சுவையான கேழ்வரகு பால் தயார்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;வயிற்றுப்புண்களை ஆற்றும் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும். கால்சியம் சத்து இதில் உள்ளது.சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கோதுமை- 100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரைஇனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;முந்தையநாள் இரவில் கோதுமையை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் தண்ணீரை வடித்து கோதுமை தனியாக எடுத்துக் கொள்ளவும்.பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.சுவைக்குஏற்ப நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கார்போஹைட்ரேட்,புரதம்,கால்சியம்ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் பருவத்தினருக்கு ஏற்றது.செரிமான கோளாறு சரி செய்யும். நார்ச்சத்துமிகுதியாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. கற்பூர வல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4.9.கி<br>2. துளசி எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4.9.கி<br>3. மென்தால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -49.3.கி<br>4. கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -49.3.கி<br>5. யூகலிப்டஸ் எண்ணெய் &nbsp; &nbsp;-4.9.கி<br>6. தேன் மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -886 மி.கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>தேன் மெழுகு பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகிளை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>சளி, ஜலதோஷம், தலைவலி, உடம்பு வலி, தசைப்பிடிப்பு முதலியன.<br>&nbsp;</p>

<p><strong>&nbsp;தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>சோளம் -100 கிராம்</li><li>நாட்டு சர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர் தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முந்தைய&nbsp;நாள்&nbsp;இரவில்&nbsp;சோளத்தை&nbsp;எடுத்து&nbsp;ஊற&nbsp;வைத்துவிட&nbsp;வேண்டும்.&nbsp;காலையில்&nbsp;ஊறிய&nbsp;சோளத்தை&nbsp;தண்ணீரை&nbsp;வடித்து&nbsp;எடுத்து&nbsp;கொள்ளவும்.&nbsp;பின்னர்&nbsp;சோளத்தை&nbsp;மிக்ஸியில்&nbsp;இட்டு&nbsp;அரைத்துப்&nbsp;பாலை&nbsp;பிழிந்து&nbsp;எடுத்துக்&nbsp;கொள்ளவும்.&nbsp;இந்தப்&nbsp;பாலில்&nbsp;தேவையான&nbsp;அளவு&nbsp;நாட்டுச்சர்க்கரை&nbsp;கலந்து&nbsp;பருகலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;வைட்டமின்&nbsp;மற்றும்&nbsp;புரதச்சத்து&nbsp;நிறைந்த&nbsp;பானம்.&nbsp;உடலுக்குத்&nbsp;தேவையான&nbsp;ஆற்றலை&nbsp;வழங்குகிறது.&nbsp;வளரும்&nbsp;பருவத்தினர்&nbsp;தினசரி&nbsp;அருந்தி&nbsp;வர&nbsp;பலன்கிட்டும்.</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள:</strong></p><ul><li>கொண்டைக்கடலை -100 கிராம்&nbsp;</li><li>நாட்டுச்சர்க்கரை – இனிப்பிற்கேற்ப</li><li>தண்ணீர்- தே. அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கொண்டைக்கடலையை எடுத்து ஊற வைக்கவும்.ஊறிய பின்னர்அதில் உள்ள தண்ணீரை வடித்துக்கொள்ளவும். அதற்கு பின்னர் கொண்டைக்கடலையை மிக்ஸியில் இட்டு அரைத்து அதிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்கவும். சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரையை கலந்து பருகலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp;&nbsp;வைட்டமின் ஏ.சி. பி காம்ப்ளக்ஸ், ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்</strong></p><ul><li>கொள்ளு- 100 கிராம்</li><li>நா.சர்க்கரை இனிப்பிற்கேற்ப&nbsp;</li><li>தண்ணீர்தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்தைய நாள் இரவில்கொள்ளை எடுத்து ஊற வைக்கவும். கொள்ளுநன்கு ஊறிய பின்னர் தண்ணீரைவடித்து எடுத்து கொண்டு. மிக்ஸியில் அரைக்கவும்.பின்னர் அதிலிருந்து பாலை பிழிந்து எடுத்துக்கொண்டு தேளையான அளவு நாட்டுச்சாக்கரையை சோக்கவும். இப்போதுகொள்ளுபால் தயார்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் உள்ளது. அதிக ஆற்றல் தரக்கூடியதுஎன்பதனால் இதை குதிரைக்கு உணவாகஅளிக்கின்றனர். தொடர்ந்து கொள்ளு சோக்கப்பட்ட உணவினை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். சளி, இருமல் ஆகியவற்றைகுணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.</p>

<p><strong>தேவையானபொருட்கள்:</strong></p><ul><li>கருப்புஉளுந்து-100 கிராம்</li><li>நாட்டுச்ர்க்கரை - இனிப்பிற்கேற்ப&nbsp;</li><li>தண்ணீர்தே. அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; முந்தைய நாள் இரவே கருப்புஉளுந்தை எடுத்துஊற வைக்கவும். ஊறிய உளுந்தினை எடுத்துதண்ணீரை வடித்து கொள்ளவும். மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.சுவைக்கு ஏற்ப நாட்டுச் சர்க்கரையைசேர்த்துக் கொள்ளலாம். இப்போது கருப்பு உளுந்து பால் தயார்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கால்சியம், புரதம் நிறைவாக உள்ளது. இது எலும்புகளையும், பற்களையும்வலுவாக்கும். இரும்புச்சத்து கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள்அடங்கியுள்ளன. இரத்த ஒட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை அளிக்க வல்லது. உடல் எடை கூட்டவேண்டுவோர் இதை சாப்பிட பலன்கிடைக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருள்:</strong></p><ul><li>பிஸ்தா -100 கிராம்&nbsp;</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;பிஸ்தாபருப்பை முந்தைய நாள் இரவே கழுவிதண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.மறுநாள் நன்கு ஊறியவுடன்தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் அரைத்து பாலை வடித்து இனிப்புகலந்து குடிக்கலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;நார்ச்சத்துநிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு ஏற்றது.வைட்டமின் பி6 இதய ரத்தகுழாய் பிரச்சனைகளை சீராக்கும். ரிபோ ஃபிளேவிங் மற்றும்எல்கார்டினை நிறைந்தது ஏற்பதால் மூளை செல்களை தூண்டிசிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆல்கலைன் எனப்படும் உடலின் அமிலத்தன்மையை குறைத்து சீராக பராமரிக்கும் நல்ல கொழுப்பை உடையது .உயிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆண்மை சக்தியை பெருக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:&nbsp;</strong></p><ul><li>வேர்க்கடலை -100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்தையநாள் இரவே வேர்க்கடலையை கழுவிஊற வைக்கவும்.மறுநாள் நன்கு ஊறிய வேர்க்கடலையை தண்ணீரைவடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் கடலையை அரைத்து பால் பிழிந்து எடுத்துக்கொண்டு.தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரைகலந்து கொள்ளலாம். இப்போது வேர்க்கடலை பால் தயார்.&nbsp;</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வேர்க்கடலையில்பொட்டாசியம்,நார்ச்சத்துஆகியன உள்ளன. செரிமான கோளாறு சரி செய்யும். நல்லகொழுப்பு இருப்பதால் இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள்சாப்பிட ஏற்றது.குழந்தைகளுக்கு உடல் வலிமை மற்றும்ஆரோக்கியம் தரும்.</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாசிப்பயறு- 100 கிராம்</li><li>நாட்டுச்சர்க்கரைஇனிப்பிற்கு ஏற்ப</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;முதல்நாள் இரவே பாசிபயரை சுத்தம்செய்து தண்ணீரில் ஊற வைக்கவும்.அடுத்த நாள்காலையில் தண்ணீரை வடித்து விட்டு நன்கு அரைக்கவும்.அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுத்து தேவையானஅளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.&nbsp;</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;படிக்கும்குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலை வளர்கிறது.புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மாவுசத்துஆகிய உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.உடலுக்குகுளிர்ச்சியை தந்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது. முதியவர்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.வாயு பிரச்சனையை ஏற்படுத்தாத சிறந்த பால்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பாதாம்- 100 கிராம்</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே கழுவிதண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.மறுநாள்காலை தண்ணீரை வடித்து விட்டு பாதாமின் மேல் தோல் நீக்கிமிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பின் வடித்து பால்எடுத்து தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்துகுடிக்கலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதுநல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவாகும். உடலுக்கு நல்ல மினுமினுப்பையும் வலுவையும்தருகிறது. இரத்த செல்களில் உருவாக்கத்திற்கு உதவுகிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதுடன் உள் உறுப்புகளின் சீரானஇயக்கத்திற்கு துணை செய்கிறது. இதில்உள்ள ஃபிளேவனாய்ட்ஸ்,நுரையீரல்,ப்ரோட்ஸ்டேட்,மார்பகப்புற்றுநோய்&nbsp; கட்டுப்படுத்தும்ஆற்றல் உடையது.கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள் இதில் உள்ளன.எடை குறைய விரும்புவோருக்கு சிறந்த பானம்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பருத்திக்கொட்டை- 100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முதல்நாள் இரவே பருத்திக் கொட்டையைதண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள்காலை தண்ணீரை வடித்து விட்டு பருத்திக்கொட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டினால் பருத்தி பால் கிடைக்கும்.இதனுடன்தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துபருகலாம். இது உடலை தேற்றும்அருமருந்தாகும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;இதில்தரம் மிகுந்த புரதம்,கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் அடங்கியுள்ளன..எனவேமிகச் சிறந்த வகையில் உடலுக்கு புத்துணர்வும் ஆற்றலும் கிடைக்கிறது.பாஸ்பரஸ், இரும்புச்சத்து,சோடியம் ஆகியன இருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்குவிக்கும் சத்துக்களை வழங்குகிறது. உடலினை வலுவாக்கும்</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>எள்ளு- 100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;முதல்நாள் இரவே எள்ளை தண்ணீர்விட்டு ஊற வைக்கவும். காலையில்தண்ணீரை வடித்து விட்டு எள்ளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வடிகட்டி பால் எடுத்து தேவையானஇனிப்பு சேர்த்து பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதுகால்சியம் சத்து நிறைந்ததாகும்.எலும்புகளுக்குவளர்ச்சி தருக்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை தருகிறது.மேலும் இரும்புச்சத்து,தாமிரம்,மக்னிசியம்,வைட்டமின் பி6 ஆகியன இருப்பதால்உடலை உறுதியாககிறது.அதிக அளவு இருப்பதால் ஆழ்ந்தஉறக்கம் வர வழி வகுக்கிறது.மலச்சிக்கலைதடுக்கும் ஆற்றல் பெற்றது,</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கம்பு- 100 கிராம்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை இனிப்பிற்கு ஏற்ப&nbsp;</li><li>தண்ணீர்ஊற வைக்க தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;முதல்நாள் இரவே கம்பை தண்ணீரில்ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு கம்பை மிக்சியில் அரைத்து பாலை வடிகட்டிக் கொள்ளவும்.இதனுடன் இனிப்பிற்கு தேவையானஅளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;இந்தபாலை அருந்துவதனால் உடல் குளிர்ச்சி அடைந்துவெப்பம் தணியும். புரதச்சத்து இருப்பதால் உடல் நல்ல வலுவுடன்இருக்கும். கால்சியம் நிறைந்த பால் என்பதால் எலும்புகள்ஆரோக்கியமடைகின்றன. இரும்புச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் சேர்ந்திருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலைபெருக்கும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. வங்க செந்தூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி.<br>2. மிருதார் சிருங்கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி.<br>3. மயில் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி.<br>4. கார்போக அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 கி.<br>5. சேங்கோட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 கி.<br>6. மஞ்சள் மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 கி.</p><p><strong>செய்முறை :</strong><br>தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>அடிபட்ட புண், புரையோடிய புண்கள், காயங்கள், கட்டிகள், பருக்கள் முதலிவற்றிற்கு சிறந்தது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. லிங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.கி.<br>2. பால் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.கி.<br>3. மயில் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.கி.<br>4. மிருதார் சிங்கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 மி.கி.<br>5. நீரடி முத்து &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.கி.<br>6. கார்போக அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.கி.<br>7. கசகசா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 மி.கி.<br>8. அகத்தி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.கி.<br>9. கிரந்தி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 மி.கி.<br>10. மஞ்சள் மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 மி.கி.<br>11. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; -100 மி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எல்லாவிதமான சரும நோய்கள், கிரந்தி, நோய், புண் முதலியவைகளுக்கு சிறந்தது.</p>

<p><strong>தேவையான சரக்குகள்:</strong><br>1. மருதாணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>2. பேய்க் கரிப்பான் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>3. அரிவாள்மனை பூண்டு &nbsp; &nbsp; -70 கி<br>4. அவுரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>5. விளக்கெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 70 கி<br>6. வெள்ளை மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 70 கி</p><p><strong>தயாரிக்கும் முறை :</strong><br>மெழுகை உருக்கி விளக்கெண்ணெயில் மேற்படி சாறுகளை காய்ச்சி பதத்தில் எடுத்து மெழுகை சேர்த்து தயாரிக்கவும்.</p><p><strong>உபயோகம் :</strong><br>பித்த வெடிப்பு.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அரசம்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20 கி.<br>2. மருதாணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 கி.<br>3. வேப்பிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -40 கி.<br>4. அருகன்புல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 கி.<br>5. வேப்பெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 கி.<br>6. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -40 கி.<br>7. வெள்ளை மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -20 கி.</p><p><strong>செய்முறை:</strong><br>1 முதல் 4 வரையுள்ள சரக்குகளைப் பொடி செய்து வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைல பதத்தில் எடுத்துக் கொண்டு வெள்ளை மெழுகை சூடு செய்து உருக்கி தைலத்தில் கலந்து கொள்ளவும்.</p><p><strong>அளவு :</strong><br>வெளி உபயோகம் வழுக்கையான பகுதியில் எண்ணெய்க்கு பதிலாக உபயோகிக்கலாம்.</p><p><strong>வியாதிகள்:</strong><br>ஆரம்ப கால வழுக்கை, புழுவெட்டு, முடி உதிர்தல் முதலியன.<br>&nbsp;</p>

<p>குடிநீர் கஷாயம் அல்லது சாறு வகைகளுடன் சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சிப் பதமும் மணமும் வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள சூரணங்களைச் சேர்த்து நன்றாகக் கிளறி மிதமான சூட்டில் நெய்யையும் ஆறிய பின்னர் தேனையும் விட்டுக் கிண்டி எடுத்து வைத்துக் கொள்வதாகும். இலேகியத்தில் சேர்க்கப்படும் தேன், சர்க்கரை, பனைவெல்லம் போன்ற இனிப்புப் பொருட்கள் இலேகியத்திற்கு சுவையூட்டுவதுடன் இலேகியத்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் மருத்துவ சக்தியை ஊக்குவிக்கும் உபகாரமாகவும் செயல்படுகிறது.<br>இலேகியத்திற்கான பாகு தயாரிக்க மிதமான தீயையே பயன்படுத்த வேண்டும்.</p><p><strong>பாகுபதம் அறிய:</strong><br>1. பாகை துடுப்பால் தொட்டு எடுக்க அதிலிருந்து தொடர்ச்சியாக மெல்லிய நூலால் இணைக்கப் பெற்றது போன்ற தோற்றத்துடன் கீழே விழும்.</p><p>2. மேற்படி பாகை விரல்களுக்கிடையில் வைத்து அழுத்தி பின் விரல்களால் பிரிக்க அக்கலவை நூல் போன்று இரு விரல்களையும் பிணைத்து நிற்கும்.</p><p>3. சரியான பாகுபதத்தை நிச்சயித்த பிறகு சரக்குகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அந்தச் சமயத்தில் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து விட வேண்டும்.</p><p>4. மேலும் கலவையை நீண்ட நேரம் சூடு செய்வதால் பாகுபதம் மாறிவிடுவதுடன் லேகியமும் கல்போல் இறுகிவிடும். சர்க்கரைப் பாகிலுள்ள நீர் முழுவதும் சுண்டிவிடுவதால் சர்க்கரை மணல் போன்ற படிவமாக மாறிவிடுகிறது.</p><p>5. இளஞ்சூட்டில் நெய்யையும் அதன் பிறகு தேனையும் சேர்க்க வேண்டும்.</p><p>6. இலேகியம் மிகவும் கடினமாகவோ தடித்த திரவமாகவோ இருத்தல் கூடாது. இரு விரல்களுக்கிடையில் உருட்டிப் பார்க்கும் பொழுது விரல்களில் ஒட்டக் கூடாது. விரல் ரேகை பதியுமளவிற்கு மென்மையாக இருக்க வேண்டும்.</p><p>7. உலோகங்களைப் பற்பமாக்கியும் சேராங்கொட்டை போன்ற சரக்குகளை சுத்தி செய்து லேகியத்தில் சேர்க்க வேண்டும்.</p><p>8. லேகியத்தின் நிறம், மணம், சுவை ஆகியன அதில் சேரும் மருந்துப் பொருட்களையே பெரிதும் பொருத்ததாகும். இலேகியங்கள் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தால் ஓர் ஆண்டு வரை கெடாமல் இருக்கும். காளான் பூத்தல், நொதித்தல், விபரீதமான மணம் வீசுதல் ஆகியன லேகியம் சீர்கேட்டின் அறிகுறிகளாகும்.</p>

<p><strong>தேவையான சரக்குகள் :</strong><br>1. அஸ்வகந்தா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -102.6 கி<br>2. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>3. கோரைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>4. கடுக்காய் பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25.6 கி<br>5. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25.6 கி<br>6. தேசாவரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>7. சித்திரமூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>8. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -256.1 கி<br>9. கிஸ்மிஸ்பழம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25.6 கி<br>10. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>11. கூகைநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25.6 கி<br>12. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>13. சாம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-256.1 கி<br>14. லவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 25 கி<br>15. லவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25.6 கி<br>16. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25.6 கி<br>17. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 கி</p><p><strong>செய்முறை :</strong><br>அஸ்வகந்தா, சந்தனம், கோரைக்கிழங்கு, கடுக்காய் பூ, விலாமிச்சம் வேர், தேசாவரம், சித்திர மூலம் இவற்றுடன் பால், சர்க்கரை சேர்த்து பாகுபதம் செய்து அதில் கிஸ்மிஸ், பேரீச்சம்பழம், ஜாதிக்காய், கூகை நீர், திரிகடுகு, லவங்கம், லவங்கப்பட்டை, ஏலம், இவைகளை அரைத்து நெய்விட்டு கிண்டி மெழுகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>5 - 10 கிராம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் பாலில் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பிரமேகம் மற்றும் வெட்டையைப் போக்கி தாது விருத்தி உண்டாக்கி உடல் பலத்தைப் பெருக்கும் கல்ப மருந்து.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. பிரண்டைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 மி.லி<br>2. குமரி வேர்ச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.லி<br>3. தேத்தான் கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -50 மி.லி<br>4. காட்டுக்குருணை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-126 கி<br>5. நாக பற்பம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-25 கி<br>6. நத்தை பற்பம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25 கி<br>7. மாம்பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 கி<br>8. சித்திர மூல வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -25 கி<br>9. திரிபலா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-151 கி<br>10. முத்து சிற்பி பற்பம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 கி<br>11. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.5 கி.கி<br>12. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5 லி<br>13. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-50 கி</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை ஒன்றாய் சேர்த்துக் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் 500 மி.லி நெய் சேர்த்து கிண்டி இறக்கி வைக்கவும். பின் தேன் சேர்த்து மெழுகு பதத்தில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>5 - 10 கிராம் தினம் 2 அல்லது &nbsp;3 வேளைகள் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>எல்லா விதமான மூலநோய்களைப் போக்கி உடல் உஷ்ணத்தைக் குறைத்து ஆரோக்கியமளிக்கிறது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கண்டங்கத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-13.1 கி<br>2. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.870லி.<br>3. வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-374.2 கி<br>4. அமுக்கரா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-13.1 கி<br>5. பொன் முசுட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -13.1 கி<br>6. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-13.1 கி<br>7. நிலப்பனை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -13.1 கி<br>8. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-65.5 கி<br>9. சிறு செருப்படை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-65.5 கி<br>10. கரிசாலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-65.5 கி<br>11. தக்கோலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.5 கி<br>12. கூகை நீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.5 கி<br>13. கரியபோளம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.5 கி<br>14. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.5 கி<br>15. நெல்லி வற்றல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.5 கி<br>16. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.5 கி<br>17. திராட்சை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.5 கி<br>18. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.5 கி<br>19. செம்முள்ளி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.5 கி</p><p><strong>செய்முறை :</strong><br>பாலுடன் வெல்லம் சேர்த்து காய்ச்சி பாகுபதம் செய்து அதில் அமுக்கரா, பொன்முசுட்டை, நன்னாரி வேர், நிலப்பனை வேர், சுக்கு, சிறுசெறுபடை, கரிசாலை. தக்கோலம், கூகை நீர், கரியபோளம், தான்றிக்காய், நெல்லி வற்றல், திப்பிலி, திராக்க்ஷாதி வாய்விடங்கம் இவைகளை இடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி நெய் சேர்த்துக் கிண்டவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>10-15 கிராம் இரண்டு அல்லது 3 வேளைகள் உண்ணவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் அசதி, பசியின்மை, சோர்வு முதலியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்து அதிக பால் சுரக்கச் செய்கிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்</strong><br>1. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>2. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>4. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>5. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>6. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>7. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>8. தாளிச பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>9. மேல்தோல் நீக்கிய இஞ்சிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 லி.<br>10. கண்டங்கத்திரி சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 லி.<br>11. நெரிஞ்சில் சமூலம் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.4 லி.<br>12. வெள்ளை முள்ளங்கிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 லி.<br>13. எலுமிச்சம் பழச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 லி.<br>14. பசுவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.8 லி.<br>15. பனைவெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.8 லி.<br>16. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி<br>17. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-700 மி.லி.</p><p><strong>செய்முறை :</strong><br>1-8 வரையுள்ள சரக்குகளை சேர்த்து கலந்து பின்னர் எல்லா (இஞ்சி, கண்டங்கத்திரி, நெருஞ்சில், முள்ளங்கி மற்றும் எலுமிச்சம் பழச்சாறு) சாறுகளையும் பாலையும் ஒன்றாகக் கலந்து அதில் பனை வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வாயு, பித்தம், சூலை, வலிப்பு, பொருமல், வாந்தி, அஜீரணம், பசியின்மை, ருசியின்மை ஆகியன நீங்கும்.</p><p><strong>அளவு:</strong><br>6- 12 கிராம் வீதம் இரண்டு வேளைக்கு சாப்பிடலாம்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. பொன்னாங்கண்ணி சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3 கி.கி.<br>2. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3 கி.கி.<br>3. இளநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3 கி.கி.<br>4. இஞ்சிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3 கி.கி.<br>5. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.79 கி.கி.<br>6. லவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.20 கி.கி.<br>7. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-7.19 கி.கி.<br>8. சிவகரந்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.79 கி.கி.<br>9. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3.00 கி.கி.<br>10. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3.00 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இளநீர், பொன்னாங்கண்ணிச்சாறு, பால், இஞ்சிச்சாறு இவைகளை சேர்த்து சூடேற்றி பாகுபதமாக எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை நன்கு கலந்து பின்னர் தேன், நெய் போன்றவற்றை சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு:</strong><br>5 கிராம் வீதம் தினமும் 2-3 வேளைகள் உணவிற்கு பின் பாலுடன் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, தாது இழப்பு, சோகை, மேகவெட்டை முதலியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள்</strong><br>1. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3.5 கி.கி.<br>2. சிவதை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>3. இஞ்சி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>4. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>5. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>6. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>7. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>8. ஆவின் நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 லி<br>9. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1லி</p><p><strong>செய்முறை :</strong><br>கடுக்காயை இடித்து எட்டு பங்கு நீர் கலந்து பின்னர் அதை ஒரு பங்காக வற்ற வைத்து சர்க்கரையுடன் சேர்த்து பாகுபதம் செய்து அதில் சிவதை, இஞ்சி, மிளகு, ஓமம், வாய்விடங்கம், திப்பிலி அரைத்துப் போட்டு நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன்விட்டு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:</strong><br>2 - 6 கிராம் வரை தினம் ஒரு வேளை சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியம்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. காரக் கருணை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3 கி.கி.<br>2. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 கி<br>3. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 கி<br>4. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 கி<br>5. சுத்தித்த பூநீறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -750 கிராம்<br>6. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>கருணைக் கிழங்கை உப்புநீரில் வேக வைத்து எடுத்து அத்துடன் திரிபலா சூரணத்தையும் பூ நீற்றையும் சேர்த்துப் பிசைந்து அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் விட்டு மெழுகு பதம் வரும் வரை கிண்டி இறக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>3 - 6 கிராம் காலை, மாலை இருவேளையில் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>எல்லா வகையான மூல நோய்களும் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கண்டங்கத்திரி சமூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1750 கி<br>2. ஆவின் நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>3. பனை வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>4. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -105 கி<br>5. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>6. திரிபலாதி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -105 கி<br>7. தாளிசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>8. இலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>9. அக்கரகாரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>10. திப்பிலி மூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 35 கி<br>11. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>12. குரோசோனி ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>13. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>14. ஆனைத்திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>15. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி</p><p><strong>செய்முறை :</strong><br>4-5 வரையுள்ள சரக்குகளைப் பொடித்து, சூரணித்து வைக்கவும். அதனுடன் கண்டங்கத்திரி சமூலம், பனைவெல்லம் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி,மேற்படி சூரணத்தை அதில் போட்டு நன்கு கிளறி, பின் நெய்விட்டு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>வேளைக்கு 5-10 கிராம் வீதம் தினமும் ஓரிரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சளி, இருமல், இளைப்பு மற்றும் பனிக் காலங்களில் வரும் இருமல், ஜலதோஷம் முதலியவற்றிற்கு சிறந்தது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. எள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -61.9 கி<br>2. ஆவாரம்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -61.9 கி<br>3. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-84.8 கி<br>4. இலவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-12.4 கி<br>5. மாசிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-63.1 கி<br>6. சிறுநாகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.2 கி<br>7. பரங்கிப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-12.4 கி<br>8. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -247.7 கி<br>9. பனைவெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-495.4 கி<br>10. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -247.7 கி</p><p><strong>செய்முறை :</strong><br>எள், ஆவாரம்பட்டை, வால்மிளகு, லவங்கம், மாசிக்காய், சிறுநாகப்பூ, பரங்கிப்பட்டை இவற்றைப் பொடித்து சூரணித்து வைக்கவும். பால் மற்றும் பனை வெல்லத்தினைக் கலந்து பாகுபதமாகக் காய்ச்சி மேற்படி சூரணத்தை அதில் கொட்டி, கிளறி, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:</strong><br>2-5 கிராம் வீதம் இரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சர்க்கரை வியாதி, அதிமூத்திரம், வெள்ளை, வெட்டை முதலியவற்றைப் போக்கி உடல் வலிமையை உண்டாக்குகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. பறங்கிப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>2. நெல்லி வற்றல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>3. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-250 கி<br>4. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-260 கி<br>5. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-270 கி<br>6. வெட்பாலை அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>7. சிவனார் வேம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>8. நிலப்பனை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>9. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>10. லவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>11. லவங்கப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>12. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>13. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>14. 14.ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>15. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>16. கார்போக அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>17. கொத்து மல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>18. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>19. கருஞ்சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>20. சித்திரமூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>21. வாலளுவை அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>22. அமுக்கரா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>23. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 8 கி<br>24. கோரோஜனை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8 கி<br>25. சுத்தி செய்த சேராங்கொட்டை -700 கி<br>26. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3 கி.கி.<br>27. கிரான் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3 கி.கி.<br>28. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- 10.5 கி. கி<br>29. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3 கி.கி</p><p><strong>செய்முறை :</strong><br>பாலுடன் சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பதத்தில் இறக்கி மற்ற சரக்குகளின் சூரணத்தைக் கலந்து பின்னர் சேராங்கொட்டை நெய்யையும், பசுவின் நெய்யையும் தேனையும் கலந்து பின் குங்குமப்பூவையும் கோரோசனை யும் தூள் செய்து தூவி நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>3 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்குப் பின் சாப்பிடவும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>பக்கவாதம், குஷ்டம், ஆரம்பபுற்று, வெள்ளை தோல் நோய்கள், மூல வாயு, பௌத்திரம், மேக நோய்,சகல விஷங்கள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. நெல்லி வற்றல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2100 கி<br>2. தண்ணீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1600 மி.லி<br>3. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -875 கி<br>4. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>5. கூகைநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>6. முந்திரிப்பழம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>7. பேரிச்சம்பழம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>8. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -105 கி<br>9. காகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி<br>10. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி</p><p><strong>செய்முறை:</strong><br>நெல்லி வற்றலை தண்ணீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்த கியாழத்தில் சர்க்கரையை சேர்த்து பாகு செய்து அதில் அதிமதுரம், கூகை நீர், முந்திரிப் பழம், பேரீச்சம்பழம், திப்பிலி இவைகளை அரைத்து நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் தேன் விட்டு பிசைந்து இறக்கி வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>வேளை ஒன்றுக்கு 5-10 கிராம் உண்ணவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>வாந்தி, பித்தம், காமாலை, பித்தபாண்டு, வறட்சி, திமிர்வாயு, சோகை, நீர்ச்சுருக்கு, குன்மம், உடல் எரிவு நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வில்வ வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>2. குறுந்தொட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>3. முட்காவேளை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>4. சங்கன் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>5. சிற்றாமல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>6. சிற்றாமுட்டி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>7. பேராமல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>8. ஒளவையார் கூந்தல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>9. முள்ளி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>10. சாரணை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>11. கண்டங்கத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>12. சீந்தில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>13. கொடி வேலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>14. வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>15. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>16. பொன் முசுட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>17. சிறு தேக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>18. தண்ணீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.5 லி<br>19. வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.68 கி<br>20. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.8 லி<br>21. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>22. திரிபலாதி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>23. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>24. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>25. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>26. கருஞ்சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>27. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>28. தாளிசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>29. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>30. குரோசானி ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>31. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>32. பேரரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>33. கொத்துமல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>34. லவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>35. அக்ரகாரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>36. திப்பிலிக்கட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>37. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>38. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>39. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>40. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி</p><p><strong>செய்முறை:</strong><br>1- 16 வரை உள்ள சரக்குகளை இடித்து தண்ணீரில் கலந்து 8-க்கு ஒன்றாக காய்ச்சி, சுருக்கி, வடித்து அதில் வெல்லம், பால் சேர்த்து கரைத்து வடிகட்டி, பின்னர் சூடேற்றி பாகுபதம் வந்தவுடன் மற்ற சரக்குகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து பாகில் சிறிது சிறிதாக தூவி நெய்விட்டு கிளறி, இறுதியில் தேன் சேர்த்து பக்குவப்படுத்திக் கொள்ளவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>3-6 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் அல்லது பின் நீருடன் சுவைத்து சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>வயிற்றுப்புண், அதிக சூடு, தோல் நோய்கள், கை கால் எரிச்சல், மாந்தம், வாய்க் கசப்பு, வாய் நீர் ஊறல், எல்லாவிதமான பித்த நோய்கள், பத்தியம், புளிப்பு, கசப்பு, புகைபிடித்தல், பெண் இதை தவிர்க்க வேண்டும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. முருங்கைப் பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>2. தூதுவளை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. ஆவின்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 மி.லி<br>4. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-420 கி<br>5. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 மி.லி<br>6. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-400 மி.லி</p><p><strong>செய்முறை :</strong><br>முருங்கைப் பூ மற்றும் தூதுவளைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி குறுகி வரும் போது சர்க்கரையை சேர்த்து நெய் மற்றும் தேன்விட்டு கிண்டி பாத்திரங்களில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>5-10 கிராம் தினம் இருவேளை உணவிற்குப் பின்பு உட்கொண்டு வெந்நீர் அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பிரமிய மேகம், இருமல், சளி, சுவாசம், காசம், நுரையீரல் கோளாறுகள் ஆகியவை தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வறுத்த தேத்தான் கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- 150 கி<br>2. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -15 கி<br>3. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -15 கி<br>4. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-15 கி<br>5. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-15 கி<br>6. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -15 கி<br>7. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -15 கி<br>8. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-15 கி<br>9. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-15 கி<br>10. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-120 கி<br>11. பசுவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 கி.கி.<br>12. 12.நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 கி.கி.<br>13. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி</p><p><strong>செய்முறை:</strong><br>1 - 9 வரையுள்ள சரக்குகளை பொடித்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரை, பசுவின் பால் சேர்த்துக் காய்ச்சி இலேகிய பாகம் செய்து இறக்கி சூரணத்தை சிறிது சிறிதாக கலந்து பின்னர் நெய்யையும் தேனையும் சேர்த்து கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>தினம் 3- 6 கிராம் வீதம் 2-3 வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மூலம், பவுத்திரம், வெள்ளை, வெட்டை, வாயுத் தொல்லை, பசி மந்தம் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3500 கி<br>2. கற்கண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>3..சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>3. அக்கரகாரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>4. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>5. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>6. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>7. கொத்தமல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>8. வெட்பாலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>9. செண்பகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>10. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>11. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி<br>12. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 மி.லி.<br>13. அரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி</p><p><strong>செய்முறை :</strong><br>திப்பிலியை நீரில் சிதைத்துப் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து வடித்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து சுக்கு, அரத்தை, அக்கரகாரம், கடுக்காய், ஓமம், சீரகம், கொத்தமல்லி வெட்பாலையரிசி, செண்பகப்பூ இவற்றைப் பொடித்து தூவி நெய் விட்டு கிண்டி, தேன் விட்டு கலந்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:</strong><br>வேளைக்கு 5 முதல் 10 கிராம் வீதம் தினமும் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>கப சம்மந்தமான வியாதிகளும், வாதம், வாயு மற்றும் குன்மம் ஆகியவையும் நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வெள்ளைப்பூண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3500 கி<br>2. கல்கண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி<br>3. பெருங்காயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>4. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>5. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>6. கடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>7. இந்துப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>8. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>9. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>10. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>11. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>12. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>13. திரிபலா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>14. வெட்பாலை அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>15. அதிவிடாயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>16. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>17. ஆவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 மி.லி</p><p><strong>செய்முறை:</strong><br>வெள்ளைப்பூண்டை 1 லிட்டர் தூய்மையான நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் வற்ற வைத்து அதில் கற்கண்டைப் போட்டு பாகு செய்து பெருங்காயம், சுக்கு, வால்மிளகு, கடுகு, இந்துப்பு, ஏலம், ஓமம், திப்பிலி, மிளகு, சீரகம், திரிபலா, வெட்பாலையரிசி, அதிவிடாயம், வாய்விடங்கம் முதலியவற்றை பொடித்துத் தூவி ஆவின் நெய்யை விட்டுக் கிண்டி மெழுகு பதத்திலெடுத்து டப்பாக்களில் அடைத்து பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>5 முதல் 10 கிராம் இரண்டு முதல் மூன்று வேளைகள் உணவிற்கு முன் நன்கு சுவைத்து உண்டு வெந்நீர் அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>எல்லாவிதமான வாயுக் கோளாறுகள், வாத வலிகள், அஜீரணம் முதலியவற்றைப் போக்கி பசியைத் தூண்டும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சோளம் - 1 கப்&nbsp;</li><li>உளுந்து - 2 மேஜைக்கரண்டி&nbsp;</li><li>வெந்தயம் - 1/4டீஸ்பூன்&nbsp;</li><li>மிளகு - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய சின்னவெங்காயம் - 100 கிராம்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு&nbsp;</li><li>உப்பு -தேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய் -தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; சோளம், உளுந்து, வெந்தயம்&nbsp; மூன்றையும்சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரைவிட்டே மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அத்துடன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலக்கி ஆப்பச்சட்டியில் ஊற்றவும். அதனுடன் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் ,மிளகு,தூவி,மூடி போட்டுமிதமான சூட்டில் வேகவைத்து எடுத்து சாப்பிடவும். சட்னி சாம்பார், இட்லி பொடியுடன் கலந்து சாப்பிடலாம்.ஊத்தாப்பம் மாவில் தண்ணீர் கலந்து சோள தோசையாகவும் சுடலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;&nbsp; &nbsp; &nbsp; தயமின் மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் நீங்கும். உளுந்தில் உள்ள புரதச்சத்து உடலுக்குத்தேவையான ஆற்றலை வழங்குகிறது.வெந்தயம் பித்த நீர் சுரப்பை மேம்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. மிளகு தொண்டை கரகரப்பை போக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சோளம்- 1 கப்&nbsp;</li><li>உளுந்து -1/4கப்&nbsp;</li><li>இட்லிஅரிசி -1/2கப்&nbsp;</li><li>பொடியாகநறுக்கிய பெரிய வெங்காயம் -2&nbsp;</li><li>மிளகாய்வற்றல் - 8&nbsp;</li><li>சீரகம் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>கருவேப்பிலை - சிறிது&nbsp;</li><li>கடுகு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>தண்ணீர், உப்பு, எண்ணெய் - தே.அளவு&nbsp;</li><li>கடலைபருப்பு - 1 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; சோளம்,உளுந்து,இட்லி,அரிசி ஆகியவற்றை 3 மணிநேரம் ஊறவைத்து கரகரவென்று அரைக்கவும். ஒருநாள் புளிக்க வைத்து,வாணலியில் ஒரு பெரிய கரண்டிஎண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் வற்றல் போட்டு நன்கு வதக்கி புளித்த மாவில் கொட்டி 10 நிமிடம் கலந்து வைக்கவும். பிறகு பனியார சட்டியில் ஊற்றி எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;சோள மாவும்,இட்லிமாவும் சேர்த்து உள்ளதால் எளிமையாக ஜீரணிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. சீரகம் புண்களை குணப்படுத்தும். கறிவேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சோளமாவு-1கப்&nbsp;</li><li>நா.சர்க்கரை - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>எண்ணெய் - தே. அளவு&nbsp;</li><li>வெந்நீர் - தேவையான அளவு&nbsp;</li><li>உப்பு, வெந்நீர் - தே. அளவு&nbsp;</li><li>நெய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சோள மாவை, உப்பு, நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து வெந்நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாகச் செய்துஎண்ணெய் தடவி சப்பாத்தியாக தேய்த்து. சூடான கல்லில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுட்டபின் சிறிது நெய் தடவி பரிமாறலாம்.<span style="color:black;"><i>சோள&nbsp;ரொட்டி&nbsp;சூடாக&nbsp;இருக்கும்&nbsp;போது&nbsp;மிருதுவாகவும்,&nbsp;ஆறியதும்&nbsp;சிறிது&nbsp;மொறுமொறுப்பாகவும்&nbsp;இருக்கும்</i></span>.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;சோளம் உடலை உறுதியாக்கும். புரதம்,இரும்புச்சத்து,கால்சியம் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யப்படுவதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சோளம் -1கப்&nbsp;</li><li>பச்சைப்பயிறு- 1/2கப்&nbsp;</li><li>கடலைப்பருப்பு -3 தேக்கரண்டி&nbsp;</li><li>அரிசிமாவு - 3 தேக்கரண்டி&nbsp;</li><li>உப்பு -தேவைக்கேற்ப&nbsp;</li><li>பெ.வெங்காயம் நறுக்கியது -2&nbsp;</li><li>பூண்டு - 5 பல்&nbsp;</li><li>சீரகம் - 1 தேக்கரண்டி&nbsp;</li><li>நறுக்கியகொத்தமல்லி,கருவேப்பிலை - சிறிதளவு&nbsp;</li><li>துருவியதேங்காய் -2 டீஸ்பூன்&nbsp;</li><li>எண்ணெய் -தேவைக்கேற்ப&nbsp;</li><li>பச்சைமிளகாய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;சோளம்,பச்சைபயிறு, கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும் ஒருமணிநேரம் ஊறவைக்கவும், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து குருணை போல் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்னர் தேவையானஉப்பு தேங்காய் சேர்த்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் வடைகள் தட்டி பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; சோளத்தில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை வலுவாக்குகிறது. பச்சைப்பயிறில் நார்ச்சத்தும் ஓரளவு கொழுப்புச் சத்தும் உள்ளதால் ஜீரணம் எளிதாகிறது. வைட்டமின் A, E, C, K மற்றும் பி காம்பளக்ஸ் ஆகியனஇதில் அடங்கியுள்ளன. சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.</p>

<p><strong>தேவையானபொருட்கள்</strong>:</p><ul><li>திணைஅரிசி- 1/2கப்</li><li>நறுக்கியபெரியவெங்காயம் – 1</li><li>தண்ணீர் - 3 கப்</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - 1 டீஸ்பூன்</li><li>கடுகு - 1 டேபிள் டீஸ்பூன்</li><li>உளுந்து -3/4 டேபிள் ஸ்பூன்</li><li>கறிவேப்பிலைசிறிதுநறுக்கிய பச்சைமிளகாய் - 1</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; திணை அரிசியை நிறம்&nbsp; மாறாமல்மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும். ஒரு பாத்திரத்தினை அடுப்பில்ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன்திணை அரிசியைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு அந்தப் பாத்திரத்தை மூடி நன்றாக வேகவிடவும், கறிவேப்பிலைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும். கொத்தமல்லிச் சட்னி அல்லது குடமிளகாய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு, உளுந்து , கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்உடல் சூட்டைத் தணிக்கின்றன. சளி காய்ச்சலில் இருந்துவிரைவில் விடுபடச் செய்து ஆரோக்கியம் தரும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணைஅரிசி -3கப்</li><li>வெந்தயம் - 2 டீஸ்பூன்</li><li>உளுத்தம்பருப்பு -1 கப்&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய் - தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; உளுத்தம்பருப்பு வெந்தயத்தை நன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். திணை அரிசியை 3 முறைநன்றாக அலசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும், பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்து, உப்பைச் சேர்த்து 6 முதல் 8 மணிநேரம் மூடிவைக்கவும்.மாவு நன்றாக புளித்தவுடன்நன்றாக கலக்கி உப்பு சேர்த்து தோசைகளாக வார்க்கவும், இதை வெங்காயச் சட்னியுடன்பரிமாற சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;புரதச்சத்தும், மாவுச்சத்தும் நிறைந்து உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வெந்தயம் உடலை வலுவாக்கவும், செரிமானத்திறனைஅதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல்மேம்படும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணை - 1/4கிலோ</li><li>பாசிபயிறு - 50கிராம்</li><li>ஏலக்காய் – 10</li><li>நெய் - 100மிலி</li><li>வெல்லம் - 200கிராம்</li><li>முந்திரி, திராட்சை - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;திணை அரிசி பாசிபயிறுஇரண்டையும். தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும், ஏலக்காயை வறுத்து பொடித்து மாவுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். (நீர் சேர்க்காமல்) பிறகுநெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி, திராட்சை பொரித்து அரைத்த மாவை நெய்யில் விட்டுஉருண்டை பிடிக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இதில் நிறைந்துள்ள புரதச்சத்தும், இரும்பு சத்தும் குழந்தைகளின் தசை மற்றும் எலும்புவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. நார்ச்சத்துமிகுந்திருப்பதால் மலச்சிக்கலை அகற்றுகிறது. முந்திரியில் உள்ள நல்ல கொழுப்புஉடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சிநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணை - 2கப்</li><li>கடலைப்பருப்பு - 1 கப்</li><li>உளுத்தம்பருப்பு - 1 கப்</li><li>வெந்தயம் – சிறிதளவு</li><li>சோம்பு - 1டீஸ்பூன்</li><li>தேங்காய் -1/4 மூடி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)</li><li>பொடியாகநறுக்கிய பெரிய வெங்காயம் - 1&nbsp;</li><li>நறுக்கியபச்சைமிளகாய் - 2&nbsp;</li><li>நறுக்கியகருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு&nbsp;</li><li>எண்ணெய், உப்பு,தண்ணீர் - தேவையான அளவு</li><li>அரிசி -1/4கிலோ&nbsp;</li><li>வெல்லம் - 200 கிராம்&nbsp;</li><li>பாசிபருப்பு -100 கிராம்&nbsp;</li><li>ஏலக்காய், முந்திரி, திராட்சை -தே. அளவு&nbsp;</li><li>நெய் - தேவையான அளவு&nbsp;</li><li>பால் - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;உளுந்து மற்றும் கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் கழுவி ஊறவைக்க வேண்டும். திணையைச் சுத்தம் செய்து சிறிதளவு வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்,ஊற வைத்த அனைத்தையும், ஒன்றாகச் சேர்த்துக் குருணையாக அரைத்துக் கொள்ளவும், தேவையான சோம்பு உப்பை சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவைக்கவும், மறுநாள் தோசை மாவு பதத்துக்குத்தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவேண்டும்,நறுக்கி வைத்த காய்கறிகளை கலந்து பின்பு தோசைக் கல்லில் அடையாகத் தட்டி சுட்டு எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; திணையில் இரும்பு சத்து இருப்பதனால் இரத்த சோகை வராமல் காக்கும். கடலைப்பருப்பில் உள்ள புரதச்சத்து தசைவளர்ச்சிக்கு உதவும். உளுந்தம் பருப்பு, தேங்காயில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியமானஉடல் எடை பெற உதவும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>திணை அரிசி -1/4கிலோ&nbsp;</li><li>வெல்லம் - 200 கிராம்&nbsp;</li><li>பாசி பருப்பு -100 கிராம்&nbsp;</li><li>ஏலக்காய், முந்திரி, திராட்சை -தே. அளவு&nbsp;</li><li>நெய் - தேவையான அளவு&nbsp;</li><li>பால் - தேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; திணை அரிசி,பாசிபருப்பு இரண்டையும் தனித்தனியாகபொன்னிறமாக வறுத்து ரவை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் மூன்று மடங்கு நீர் (அல்லது) காய்ச்சிய பாலில் வெல்லத்தை கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நெய்யில் முந்திரி திராட்சை ஏலக்காய் வறுத்து பாயாசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; மாவுச்சத்து நிறைந்த திணையில் செய்யப்படும் திண்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வெல்லம், பாசிப்பயிறு முந்திரி, திராட்சை ஆகியவற்றின் கூட்டுக்கலவையில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. இந்த பாயசம் உடல்வலு குறைந்திருப்பவர்களுக்கும்,இரும்புச்சத்து பீட்டா கரோட்டின், கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணைஅரிசி -1/2கப்</li><li>சிவப்புமிளகாய் -1</li><li>உப்பு -தேவைக்கேற்ப</li><li>பெருங்காயம் - ஒரு சிட்டிகை</li><li>வெங்காயம்நறுக்கியது -1</li><li>எண்ணெய் -1தேக்கரண்டி&nbsp;</li><li>கடுகு - 1/4டீஸ்பூன்</li><li>கொத்தமல்லி, கறிவேப்பிலைதேவைக்கு ஏற்ப</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; திணை அரிசியை 1 மணிநேரம்தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் மிளகாய், உப்பு, பெருங்காயம், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஆவியில் 15 நிமிடம் வேகவிடவும். நன்கு கெட்டியாக இருக்கும் இட்லிகளை ஆறவைத்து மிக்ஸியில் ஒரு திருப்பு, திருப்பிஉதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு மற்றும் வெங்காயம் சேர்த்து,வதக்கி உதிர்ந்த திணை கலவையை சேர்க்கவும், சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான புட்டு தயார். சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; பித்தம், கபநோய்கள் சரியாகும். பெருங்காயம்,வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸின்ட்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கடுகு தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணைமாவு -1/2கப்&nbsp;</li><li>நெய் - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>நாட்டுசர்க்கரை - 3 டீஸ்பூன்&nbsp;</li><li>ஏலக்காய்பொடி -1 சிட்டிகை&nbsp;</li><li>முந்திரிபருப்பு - 5</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; முந்திரி பருப்பை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான தட்டில்திணை மாவு மற்றும் பொடிசெய்த நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்குகலக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் சூடான நெய் கலவையை தட்டில்சேர்க்கவும், ஸ்பூனால் கலந்து விட்டு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; திணை மற்றும் நெய்யில்புரதம், நல்ல கொழுப்பு அதிகம்உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. முந்திரி, ஏலக்காயில் உள்ள வைட்டமின் சத்துக்களும், தாதுஉப்புகளும் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றன. நினைவாற்றலை அதிகரிக்கும். ஏலக்காய் உடலின் உட்புற புண்களை குணப்படுத்தும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கடலைமாவு -1/4கிலோ</li><li>திணைஅரிசிமாவு - 1/2கிலோ</li><li>சீரகம் -1டீஸ்பூன்</li><li>மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்</li><li>எள் -1 டீஸ்பூன்</li><li>உப்பு -தேவையான அளவு</li><li>எண்ணெய் -1/2லிட்டர்பைகள்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; இரண்டு மாவையும் சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும், அத்துடன் சீரகம்,எள்,மிளகாயத்தூள், உப்பைச்சேர்க்கவும் பின் தேவைக்கு சிறிதளவுஎண்ணெய் ஊற்றி பிசையலாம். வெந்நீரை மாவில் ஊற்றிப் பிசையவும். மாவு சரியான பதத்தில்இருக்கவேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது. அதே போல் வடைமாவுபோல நீர் சேர்த்து இருக்கக்கூடாது. பின் அச்சில் மாவைப்போட்டு முறுக்கைச் சூடான எண்ணெயில் பிழிந்து சுட்டு எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; பித்தம் மற்றும் செரிமானக் கோளாறை சரி செய்யும். சீரகம் ,எள்ளில் உள்ள இரும்புச்சத்து இரத்தம் சீரமைப்பிற்கும், ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவி செய்கின்றன.மாவுச்சத்துகள் புரதச்சத்து நிறைந்தது. உள்ளதால் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணைஅரிசி -1கப்</li><li>உளுத்தம்பருப்பு -1/2கப்</li><li>வெள்ளைரவை - 1/2கப்(வறுத்தது)</li><li>தேங்காய் - 1துண்டு</li><li>இஞ்சி - 1/2துண்டு</li><li>பச்சைமிளகாய் – 1</li><li>எண்ணெய்பொரிப்பதற்கு</li><li>கொத்தமல்லி, கருவேப்பிலை,உப்பு - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;திணை அரிசி, உளுந்தை 3/4மணிநேரம் ஊறவைக்கவும், பின் நைசாக அரைக்காமல்ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும், இதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை உப்பு, 1கப் ரவையைக் கலக்கவும், இந்தக் கலவையை வடைபோல் தட்டி எண்ணெயில் வறுக்கவும்.இதை சட்னியுடன் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;தேங்காயில் வைட்டமின் சி.பி. காம்ப்ளக்ஸ்இரும்பு சத்து, செலீனியம் ஆகியன நிறைவாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்குஉதவுகிறது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணை - 1கப்</li><li>அரிசி - 1/2கிலோ</li><li>துவரம்பருப்பு - 300கிராம்</li><li>கடுகு - 1&nbsp;தேக்கரண்டி</li><li>நறுக்கிய&nbsp;சின்னவெங்காயம் – 5</li><li>வத்த&nbsp;மிளகாய்-1</li><li>உப்பு,&nbsp;மஞ்சள்&nbsp;தூள்தேவைக்கேற்ப</li><li>தண்ணீர்-1&nbsp;பங்குக்கு 3&nbsp;பங்குஎண்ணெய்</li><li>தக்காளி -&nbsp;சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp;துவரம்&nbsp;பருப்பை&nbsp;பாதி&nbsp;அளவு&nbsp;வேக&nbsp;வைக்கவும்&nbsp;பிறகு&nbsp;அரிசியையும்&nbsp;வேகவைத்த&nbsp;பருப்பையும்&nbsp;ஒன்றாக&nbsp;தண்ணீர்&nbsp;விட்டு&nbsp;வேகவைக்கவும்.வாணலியில்&nbsp;எண்ணெய்&nbsp;ஊற்றி&nbsp;தும்&nbsp;கடுகு.காயம்,&nbsp;வரமிளகாய்.தக்காளி&nbsp;இவற்றையும்&nbsp;மஞ்சள்&nbsp;தூளையும்&nbsp;சேர்த்து&nbsp;பொன்னிறமாக&nbsp;வதக்கி&nbsp;தேவையான&nbsp;உப்பு&nbsp;சேர்த்து&nbsp;பருப்பு&nbsp;சாதத்துடன்&nbsp;கலந்து&nbsp;எடுக்கவும்</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;திணையில்&nbsp;இரும்புச்சத்து&nbsp;கரோட்டின்&nbsp;ஆகியவை&nbsp;அதிகம்&nbsp;உள்ளது.&nbsp;கால்சியம்,&nbsp;பாஸ்பரஸ்&nbsp;சத்துக்கள்&nbsp;நிறைந்துள்ளதால்&nbsp;எலும்பு&nbsp;மற்றும்&nbsp;மூளை&nbsp;செயல்&nbsp;திறனுக்கு&nbsp;உதவுகிறது&nbsp;துவரம்&nbsp;பருப்பில்&nbsp;உள்ள&nbsp;புரதச்சத்து&nbsp;உடல்&nbsp;வளர்ச்சிக்கும்.&nbsp;ஆரோக்கியத்திற்கும்&nbsp;உறுதுணையாக&nbsp;இருக்கிறது</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>திணைமாவு - 1/2கப்</li><li>தண்ணீர் - 1/4கப்</li><li>பால் - 1/4கப்</li><li>தேங்காய்பால் - 1/4கப்</li><li>(மீண்டும்) தனியாகதேங்காய்பால் - 1/2கப்</li><li>நெய் - 1/2 தேக்கரண்டி</li><li>நாட்டுச்சர்க்கரை - 4 டீஸ்பூன்</li><li>ஏலக்காய்பொடி - 1 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து திணைமாவைசேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். நெய் சேர்த்து மெல்லியதீயில் வைத்து நன்கு கிளறவும். கெட்டியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை மூடி வைக்கவும். ஒருகடாயில் 1/2கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்து லேசாககொதி வந்தவுடன் உருண்டைகளை சேர்க்கவும்.5நிமிடம் மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும். நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கி உடனடியாக அடுப்பை அணைக்கவும். ஆறியவுடன் கெட்டியாகிவிடும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்தஉணவு, தேங்காய் பால் உடல் வளர்ச்சிக்குபோதிய சத்துக்களை அளிக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பார்வைத்திறன், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமைமாவு -1 கப்&nbsp;</li><li>துவரம்பருப்பு -14கப்&nbsp;</li><li>சிவப்புமிளகாய்-1&nbsp;</li><li>எண்ணெய் -1மேஜைக்கரண்டி&nbsp;</li><li>கடுகு -1/4 தேக்கரண்டி&nbsp;</li><li>பெருங்காயம்ஒரு சிட்டிகை&nbsp;</li><li>கறிவேப்பிலைசிறியது&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய்தே. அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; துவரம் பருப்பை அரைமணிநேரம் ஊற 'வைத்து, தண்ணீரைவடித்து மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பூரணத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைகொதிக்க வைக்கவும். அதில் 2 சொட்டு எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அதை சாமை மாவில்சேர்க்கவும், நன்கு கட்டி இல்லாமல் கிளறவும். கையில் எண்ணெய் தடவி மாவை சிறுசிறுஉருண்டைகளாக உருட்டவும். இட்லி பானையில் 10 நிமிடம் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்த துவரம் பருப்பு பூரணத்தை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும், வெந்த உருண்டைகளை அதனுடன் சேர்க்கவும், மெதுவாக கிளறவும் தேங்காய் எண்ணெயை விடவும். மிகவும் வாசனையாக இருக்கும். சுவையான அம்மணிபூர்ண கொழுக்கட்டை தயார்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; சாமையுடன் புரதம் நிறைந்த துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் உடல் வலிமையை கொடுக்கிறது. கறிவேப்பிலை,தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் வைட்டமின் ஏ.பி.சிகாம்ப்ளக்ஸ் கிடைக்கிறது. காலை. இரவு உணவாக செய்துசாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமைஅரிசி -1/2கப்</li><li>இட்லிஅரிசி - 11/2கப்</li><li>உளுந்து -1கப்</li><li>மிளகு - 1/2தேக்கரண்டி</li><li>சீரகம் - 1/2தேக்கரண்டி</li><li>நல்லெண்ணெய் - தே.அளவு</li><li>நெய் - தேவையான அளவு</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>இஞ்சி - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; அரிசி சாமை அரிசி மற்றும்உளுந்தை சேர்த்து 5-6 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில்சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவில் துருவிய இஞ்சி, பொடிய செய்த சீரகம்,மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும்.நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும் (2 டீஸ்பூன்தலா) மாவை நன்கு கலக்கிகுழியான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை அதில்விட்டு 15 நிமிடம் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 5 நிமிடம் கழித்து ஈர ஸ்பூனால் கிண்ணத்தில்இருந்து இட்லியை எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; சீரகம் நெய் சேர்த்து சமைப்பதால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இஞ்சி உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். இதய நோய்,புற்றுநோய்வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த உணவிற்கு உண்டு.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமைஅரிசி -1/2கப்&nbsp;</li><li>சின்னவெங்காயம்பொடியாகநறுக்கியது -8</li><li>பச்சைமிளகாய் -1</li><li>பச்சைபட்டாணி -2 கரண்டி</li><li>கடுகு - 1/4 தேக்கரண்டி</li><li>உளுத்தம்பருப்பு -1/4கரண்டி</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; சாமை அரிசியை 15 நிமிடங்கள்ஊற வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து கடுகு.உளுத்தம் பருப்பு மற்றும் பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 1/2கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் சாமை அரிசி ஊறவைத்துள்ள நீரை வடித்து விட்டுசேர்க்கவும். தீயை மிதமாக வைத்துகடாயை மூடி வைத்து வேகவிடவும். 7-6 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். சூடான சாமை உப்புமா தயார்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;அரிசிக்குமாற்றான உணவில் சாமையும் சிறந்த பலன் தருகிறது. இதில்உப்புமா பட்டாணி, உளுந்து பருப்பு உள்ளதால் வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் சி. பி.கேமற்றும் புரதம்,நார்ச்சத்து,கால்சியம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன. அயோடின் சத்து இருப்பதால் கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமைஅரிசி - 1 கப்</li><li>கீரை - 2 கப்</li><li>பொடியாகநறுக்கியபெரிய வெங்காயம் – 1</li><li>இஞ்சி - 1/2துண்டு (அரைக்க)பச்சைமிளகாய் - 2 (அரைக்க)</li><li>கரம்மசாலா பொடி - 1/2ஸ்பூன்</li><li>மஞ்சள்தூள் - 1 சிட்டிகை</li><li>வெண்ணெய் - 2 டீஸ்பூன்</li><li>எண்ணெய், கடுகு,க.பருப்புஉப்பு - தேவையானஅளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஒரு பாத்திரத்தில் இரண்டுகப் தண்ணீரையும் ஒரு டீஸ்பூன் எண்ணெயையும்ஊற்றி அதில் சாமை அரிசியை சேர்த்துவேக வைக்கவும். அரிசி உதிரியாக இருக்க வேண்டும்.குழைய கூடாது. பின் நன்கு ஆறவைக்கவும். கடாயில் வெண்ணெயை ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சிவிழுது. மிளகாய்விழுது, நறுக்கிய வெங்காயம் இவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா பொடியுடன்ஏதேனும் கீரையை சேர்த்து தண்ணீர் சுண்ட வதக்கவும். பின் ஆறவைத்த சாதத்தைச்சேர்த்துக் கலக்கவும். 5-7 நிமிடம் அடுப்பிலேயே இருக்க விடவும். சூடாக உண்ண சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;ஏதேனும் ஒரு கீரையைப்பயன்படுத்தி சமைப்பது குழந்தைகள் முதல்,பெரியவர்கள் வரை ஆரோக்கியம் தரும். இரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை இது சரி செய்யும். மஞ்சள், இஞ்சி போன்றவை கிருமி நாசினியாகவும் சத்துப் பொருளாகவும் இருக்கின்றது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கல்நீக்கிய சாமை அரிசி - 1/2கிலோ</li><li>தக்காளி -150 கிராம்&nbsp;</li><li>இஞ்சி, பூண்டு விழுது -10 கி&nbsp;</li><li>நறுக்கியபச்சைமிளகாய் - 5&nbsp;</li><li>எண்ணெய் -100 கிராம்&nbsp;</li><li>மஞ்சள்தூள்,உப்பு -தேவைக்கேற்ப&nbsp;</li><li>தண்ணீர் - தேவைக்கேற்ப&nbsp;</li><li>பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்புஅனைத்தும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்யவும்.</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; அரிசியை தண்ணீரில் கொட்டி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அரிசியை தவிர மேற்கண்ட அனைத்துப்பொருட்களையும் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொன்னிறமாக வதக்கிய பேஸ்டில் அரிசியை விட்டு கிளறவும். 1 1/2பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டிப் பதம் வந்தவுடன் அடுப்பைசிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; உடலுக்குத் தேவையான அடிப்படைச் சத்துக்கள் உள்ளன. இஞ்சி, பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்துடன் செரிமானத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக்க உதவுகிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமை -1/4கப்</li><li>உளுத்தம்பருப்பு -1/4கப்</li><li>தயிர் -3/4கப்</li><li>பச்சைமிளகாய் 1</li><li>இஞ்சி -ஒரு சிறியதுண்டு</li><li>எண்ணெய்பொரிப்பதற்கு</li><li>புதினாசட்னி -2 தேக்கரண்டி</li><li>ஸ்வீட்சட்னி -2தேக்கரண்டி</li><li>மிளகாய்த்தூள் -1/4தேக்கரண்டி</li><li>சீரகத்தூள் – சிறிதளவு</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>கொத்தமல்லிஇலை</li><li>காரபூந்தி,மாதுளை மூன்று சிறிது அலங்கரிக்க</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;சாமை மற்றும் உளுத்தம்பருப்பைநன்றாக அலம்பி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மாவாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அடுப்பில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு சிறுவடைகளாக உருட்டிப் போடவும். பொன்னிறமானவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து சூடான வெந்நீரில் 1 மணிநேரம் போட்டு ஊற வைக்கவும். தயிரைநன்கு கடைந்து அதில் சீரகத்தூள் மிளகாய்த் தூள் மற்றும் உப்புசேர்க்கவும். இந்த கலவையை சிறிதுநேரம் வைத்திருக்கவும். தண்ணீரில் போட்ட வடைகளை மெதுவாக பிழிந்து தயிர் கலவையில் போடவும், அதன்மேல் புதினா சட்னி, ஸ்வீட் சட்னி சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலையை சேர்க்கவும். பூந்தி சேர்த்து பரிமாறவும்.மாதுளை சேர்க்கலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;சாமையில் இரும்பு மற்றும் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. வயிற்றுப்புண்கள் விரைவில் ஆறும் மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. உளுந்து,புதினா,சீரகம்,கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் உடலுக்குமேலும் ஆரோக்கியம் தருகின்றன.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong></p><ul><li>சாமை அரிசி - 1/4கிலோ&nbsp;</li><li>பாசிபயறு - 50 கிராம்&nbsp;</li><li>ஏலக்காய்-10 எண்ணிக்கை&nbsp;</li><li>நெய் -100மிலி&nbsp;</li><li>வெல்லம் -200 கிராம்</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; சாமை அரிசி,பாசிபயறு இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கி கொள்ளவும் மாவுடன் பொடி செய்த ஏலக்காய். வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும.(நீர் விடாமல்) பிறகு நெய்யை மிதமாக சூடு செய்து முந்திரி திராட்சையை பொரித்து அரைத்த மாவுடன் சேர்த்து நெய்விட்டு உருண்டை பிடிக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் நிறைந்திருப்பதால் உடலை வலுவாக்குகிறது. வளரும் குழந்தைகள் எடை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் மேம்படும்</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>சாமைஅரிசி - 1/4கிலோ</li><li>பாசிபருப்பு-100 கிராம்&nbsp;</li><li>நெய் -தேவைக்கேற்ப&nbsp;</li><li>முந்திரிதிராட்சை - சிறிதளவு&nbsp;</li><li>பனங்கற்கண்டு - 14 கிலோ</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;பாசிப்பருப்பை சிறிது வறுத்து சாமை அரிசியுடன் சேர்த்து 3 மடங்கு நீர் பனங்கற்கண்டு சோத்துக்கிளறவும். நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து, வறுத்து அதையும் சாமைப் பொங்கலில் இட்டுக் கிளறி இறக்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;முந்திரி பாசிப்பருப்பில்.கொழுப்பும். புரதமும் நிறைந்து உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பனங்கற்கண்டு உடனடி ஆற்றலையும், இரும்புச்சத்தையும் உடலுக்கு அளிக்கிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வரகுஅரிசி- 1கப்</li><li>தண்ணீர் - 1 கப்</li><li>வெ. கொ.கடலை -1/4கப் (இரவிலே ஊறவைக்கவும்)&nbsp;</li><li>காய்கறிக்கலவை- 1கப்&nbsp;</li><li>பிரியாணிமசாலா - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li><li>எண்ணெய் - 2 டீஸ்பூன்&nbsp;</li><li>பெ.வெங்காயம் நறுக்கியது - 1&nbsp;</li><li>நறுக்கியபூண்டு - 5 பல்&nbsp;</li><li>கொத்தமல்லி - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த கொண்டைகடலை மற்றும் ஊறவைத்த வரகு சேர்த்து 1 கப்தண்ணீர் சேர்த்து விசில் போடாமல் வேகவைக்கவும்.வரகுஅரிசி வெந்ததும் கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதை கொண்டைக்கடலை தடுக்கும் ஆற்றல் கொண்டது. புரதம், மாவுச்சத்து, போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயநோளிகள் சாப்பிட ஏற்றது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உணவிற்கு உள்ளது.</p><p>&nbsp;</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வரகுஅரிசி- 4 கப்&nbsp;</li><li>முழுஉளுந்து -1 கப்&nbsp;</li><li>அவல்ரெண்டு மேஜை கரண்டி&nbsp;</li><li>உப்புதேவையான அளவு&nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; வரகு அரிசி, உளுந்துமற்றும் அவுலை நன்கு அலம்பி 4 மணிநேரம் ஊற வைக்கவும். 4 மணிநேரம்கழித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும் உப்பு கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். மாவு பொங்கியுடன் இட்லிதட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும். மிருதுவான இட்லி தார். சாம்பார் மற்றும் சட்னிய பரிமாரவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் வரகு உதவுகிறது. மக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் குரோமியம் ஆகிய தாது உப்புகள் இதில்நிறைந்துள்ளன. வரகு&nbsp; உளுந்துசேர்த்து இட்லியை செய்து சாப்பிடுவது ஜீரணசக்தியை எளிதாக்குகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்</strong></p><ul><li>வரகு அரிசி- 2 கரண்டி&nbsp;</li><li>மிக்ஸட்காய்கறிகள் பிராக்கொலி, காரட், பட்டாணி, பேபிகார்ன், காலிப்பிளவர்&nbsp;</li><li>பூண்டு - 3&nbsp;</li><li>பல்வெண்ணெய் - 1 தேக்கரண்டி</li><li>உப்பு தேவையான அளவு&nbsp;</li><li>மிளகு பொடி - தே.அளவு&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;கடாயில் வெண்ணெய் சேர்த்துபூண்டை வதக்கி, காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். வரகு அரிசி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடம் கொதிக்க விடவும். வரகு அரிசி வெந்தவுடன்ஆற வைத்து எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும். உப்பு மிளகுபொடி சேர்த்துக் கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp;புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த வரகு அரிசியுடன் கால்சியம், வைட்டமின் கே, சல்ஃபோராபேன் ஆகியசத்துக்கள் நிறைந்த காலிபிளவர். பட்டாணி காரம் ஆகியன உடலை வலுவாக்குகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சூப் என்பதால் நாள்பட்டநோய்களை விரைவில் குணம் ஆ<strong>கும்</strong> .</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வரகுஅரிசி - ¼ கப்</li><li>பால், தயிர் - ½ கப்</li><li>எண்ணெய் - தே. அளவு</li><li>கடுகு - ¼ டீஸ்பூன்</li><li>பெருங்காயம் - ½ டீஸ்பூன்&nbsp;</li><li>பச்சைமிளகாய்நறுக்கியது -1&nbsp;</li><li>கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>துருவியஇஞ்சி - ¼ கரண்டி</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;வரகு அரிசியை நன்குஅலம்பி 1கப் தண்ணீர் விட்டுவேகவிடவும். குக்கரில் 3 விசில் விடலாம். நன்கு ஆறியவுடன் கரண்டியால் குழைத்து பால் சேர்க்கவும். உப்புமற்றும் தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் கைகளால் நன்கு பிசையவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளிக்கவும். இதை சாதத்தில் சேர்த்துநன்கு கிளறி பச்சை மிளகாயை எடுத்துவிடவும். ஜில்லென்று தயிர் சாதம் தயார்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பசியின்மை உள்ளவர்கள் இஞ்சி, பெருங்காயம் சேர்ந்த வரகு தயிர்ச்சாதம் உண்பதால்ஜீரண மண்டலம் தூண்டப்படுகிறது. கறிவேப்பிலை. கொத்தமல்லி ஆகியன சேர்க்கப்படுவதால் இரத்த சோகையை தடுக்கிறது.இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்த வரகு உணவுகள் எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.</p>

<p><strong>தேவையானபொருட்கள்</strong>:</p><ul><li>வரகுஅரிசி - 1/2 கப்</li><li>இட்லிஅரிசி -1/2 கப்&nbsp;</li><li>துவரம்பருப்பு-1 கரண்டி&nbsp;</li><li>கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>வெந்தயம் - 1/2 டீஸ்பூன்&nbsp;</li><li>உப்பு - தே. அளவு&nbsp;</li><li>எண்ணெய் - தே. அளவு&nbsp;</li></ul><p style="margin-left:18.0pt;"><i><strong>உருளை&nbsp;மசாலாகிழங்கு:</strong></i></p><ul><li>உருளை<i>&nbsp;</i>கிழங்கு<i>,</i> வெங்காயம் ,பச்சைமிளகாய் தலா -1</li><li>எண்ணெய் - தே. அளவு</li><li>கடுகு-1/4 மஸ்பூன்</li><li>கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;மாவுக்குத் தேவையான பொருட்களை (அரிசி, வெந்தயம் மற்றும் பருப்பு வகைகள்) இவற்றை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நன்கு மையாக கிரைண்டரில் அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்சேர்த்து கடுகு, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும். உருளைக்கிழங்கை மசித்து போடவும். உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவுஊற்றி வட்டமாக மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெய் சேர்க்கவும். ஒருபுறம் வெந்து மொறுமொறுப்பானவுடன் மசாலாவை உள்ளே வைத்து அப்படியே மூடிவிடவும். சிறிது எண்ணெய் சோக்கவும். திருப்பிப் போட்டு, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலை அகற்றுகிறது. சிறுகுடல் உறிஞ்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனுடன் இரும்புச்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் இரத்தக் கழிச்சல் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும்ஆற்றல் கொண்டது.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி.பி காம்ப்ளக்ஸ்நிறைந்துள்ளது. இவை உடல் சருமத்திற்குஏற்றது,கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் செரட்டோன். டோபமைன் ஹார்மோன்களை சீராக தூண்டி ஆரோக்கியமடைய செய்கிறது. அரிசி, பருப்பு,வெந்தயம் சேர்த்து சமைக்கப்படுவதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வரகுஅரிசி - ¼ கப்&nbsp;</li><li>துவரம்பருப்பு -1/4 கப்&nbsp;</li><li>கடலைபருப்பு -1/4 கப்&nbsp;</li><li>சோம்பு -1டீஸ்பூன்</li><li>காய்ந்தமிளகாய் -2&nbsp;</li><li>கறிவேப்பிலை - சிறிதளவு&nbsp;</li><li>வெங்காயம் - சிறிதளவு&nbsp;</li><li>புதினாஇலை - 2&nbsp;</li><li>உப்பு – தேவைக்கேற்ப&nbsp;</li><li>எண்ணெய் - பொரிப்பதற்கு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரைவடித்து மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் உப்பு, புதினா மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடுபடுத்தவும். மாவை சிறிது சிறிதாகஎடுத்து வடைகளாக தட்டி மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடான வரகு வடை தயார்.</p><p><strong>பலன்கள்</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;நரம்பு மண்டலக் கோளாறுகளை வரகு உணவுகள் நிவர்த்திசெய்கின்றன.சிறுநீரைப் பெருக்கி,உடல் நச்சுக்களை நீக்கும்ஆற்றல் சோம்பிற்கு உண்டு. புதினாவில் வைட்டமின் ஏ,டி, தயமின், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. வரகு மசாலா வடை சிற்றுண்டியாக தயாரித்துஉண்ணலாம். மருத்துவ குணம் நிறைந்தது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>வரகுதோசை மாவு- 1கப்</li><li>காரட்துருவல்- ¼ கப்&nbsp;</li><li>மிளகாய்த்தூள்- 1/4&nbsp; டீஸ்பூன்</li><li>கறிவேப்பிலைசிறியது&nbsp;</li><li>நல்லெண்ணெய்தே அளவு&nbsp;</li><li>கடுகு, கடலைப்பருப்பு,உ பருப்பு தலா- 1 டீஸ்பூன்&nbsp;</li><li>கொத்தமல்லிசிறிதளவு</li><li>உப்புதேவைக்கேற்ப</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; எண்ணெயில் கடுகு,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு சோத்து பொன்னிறமானதும் மாவில் சோக்கவும். காரட் துருவல் மற்றும் மிளகாய் பொடியையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்பு சிறிது சேர்த்து நல்லெண்ணெய் சிறிது சோக்கவும். மாவை நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிய ஊத்தாப்பங்களாக வார்க்கவும்.இரண்டு பக்கம் வேகவிட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>காரட்டில்வைட்டமின் ஏ.சி. கே. பி8. ஃபோலேட், இரும்பு, தாமிரம், பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. கடலைப்பருப்பில் புரதம், இரும்புச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலு தருகிறது. வாதநோய் உள்ளவர்கள் வரகு மாவை தொடர்ந்துஎடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணம் பெறலாம்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகிமாவு-200கிராம்&nbsp;</li><li>வெல்லம் - 100கிராம்&nbsp;</li><li>பாதாம் - 15&nbsp;</li><li>உப்பு,&nbsp;தண்ணீர் -&nbsp;தே.&nbsp;அளவு&nbsp;</li><li>நெய்,பசும்பால் -&nbsp;தே.அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p><strong>&nbsp;</strong>ராகி&nbsp;மாவைச்&nbsp;சிறிதளவு&nbsp;நெய்யில்&nbsp;வறுத்துக்&nbsp;கொள்ளவும்.&nbsp;பாதாமை&nbsp;நன்றாக&nbsp;ஊறவைத்து&nbsp;வேக&nbsp;வைத்துத்&nbsp;தோல்&nbsp;நீக்கி&nbsp;மிக்ஸியில்&nbsp;சிறிது&nbsp;தண்ணீர்&nbsp;விட்டு&nbsp;அடித்து&nbsp;பால்&nbsp;எடுத்துக்&nbsp;கொள்லவும்.&nbsp;தன்னீரை&nbsp;கொய்வைத்து&nbsp;அதில்&nbsp;வெல்லத்தைப்&nbsp;பொடித்துப்&nbsp;போட்டு&nbsp;கெட்டியாகாமல்&nbsp;இறக்கி&nbsp;வைக்கவும்.&nbsp;இரண்டு&nbsp;கப்&nbsp;தண்ணீரை&nbsp;கொதிக்க&nbsp;வைத்து&nbsp;அதில்&nbsp;ராகி&nbsp;மாவை&nbsp;சிறிது&nbsp;சிறிதாகச்&nbsp;சேர்க்கவும்.நன்றாக&nbsp;கலக்கி&nbsp;வடிகட்டிய&nbsp;பாதாம்&nbsp;மாவை&nbsp;அதில்&nbsp;சேர்த்துக்&nbsp;கிளறவும். 2&nbsp;அல்லது 3&nbsp;நிமிடம்&nbsp;கழித்து&nbsp;வெல்லப்&nbsp;பாகைச்&nbsp;சேர்த்து&nbsp;நன்றாக&nbsp;கிளறவும்.&nbsp;கூழ்&nbsp;பதம்&nbsp;வரும்&nbsp;வரை&nbsp;கொதிக்க&nbsp;வைத்து&nbsp;இறக்கவும்,&nbsp;மிதமான&nbsp;சூட்டில்&nbsp;அருந்தவும்.&nbsp;தேவைப்பட்டால்&nbsp;பசும்பால்&nbsp;சேர்க்கலாம்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;&nbsp;ராகியில்&nbsp;புரதச்சத்து&nbsp;நிறைந்துள்ளது.&nbsp;இதில்&nbsp;உள்ள&nbsp;வைட்டமின்&nbsp;சி&nbsp;உடலை&nbsp;ஆரோக்கியப்படுத்துகிறது.&nbsp;பாதாமில்&nbsp;உள்ள&nbsp;ஃபிளேவனாய்ட்ஸ்&nbsp;மார்பகம்.&nbsp;நுரையீரல்,&nbsp;புரோஸ்டேட்&nbsp;புற்றுநோயைத்&nbsp;தடுக்கும்.&nbsp;இரத்தத்&nbsp;குழாய்களில்&nbsp;ஏற்படும்&nbsp;பாதிப்பை&nbsp;நீக்குகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகி -1 1/2கப்</li><li>உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா-1/2கப்</li><li>வெந்தயம் - 1 டீஸ்பூன்</li><li>கேரட் &amp; வெங்காயம் – 1</li><li>தக்காளி-1</li><li>குடமிளகாய் – 1</li><li>பச்சைமிளகாய் – 2</li><li>கொத்தமல்லிதழை,உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - தே. அளவு</li><li>மிளகு,சீரகத்தூள்தலா - 1 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவைக் கலக்கிதோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள்,மிளகு, சீரகத்தூள் தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; ராகியில் இரும்புச்சத்து, புரதமும் அரிசி மாவில் ஹார்போஹைட்ரேட்டும் உள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வெங்காயத்தில் ஆன்டி மைக்ரோபயல் தன்மை இருப்பதால் நோய் தொற்றுகள் வராமல்தடுக்கும். இதில் உள்ள குரோமியம் இரத்தத்தைசுத்திகரிக்கவும், தசைகளுக்கு புத்துணர்வு ஊட்டவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் வளர்க்கும்உணவு இது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகி - 1 1/2 கப்</li><li>உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1/2கப்&nbsp;</li><li>வெந்தயம் - 1 டீஸ்பூன்&nbsp;</li><li>கேரட், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் தலா பச்சைமிளகாய்-1</li><li>கொத்தமல்லி -சிறிதளவு&nbsp;</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>மிளகுதூள்,சீரகத்தூள் – ஸ்பூன்</li><li>எண்ணெய் - சிறிதளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;ராகி,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் அலசி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தேவையான அளவுதண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். அடுத்த நாள் மாவை கலக்கிதோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி நறுக்கியகாய்கறிகள், மிளகுதூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூவி திருப்பிப் போட்டுமுறுகலாக எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp;உளுந்தில்&nbsp;புரதச்சத்து&nbsp;நிறைந்திருப்பதால்&nbsp;பெண்களின்&nbsp;மாதவிலக்கு&nbsp;பிரச்சனைகளை&nbsp;சரி&nbsp;செய்யும்.&nbsp;வெந்தயத்தில்&nbsp;உள்ள&nbsp;சத்துக்கள்&nbsp;வயிற்றுப்புண்&nbsp;குடலிறக்கம்,வாய்ப்புண்&nbsp;ஆகியவை&nbsp;நீங்க&nbsp;உதவுகிறது,&nbsp;செரிமானத்தை&nbsp;எளிதாக்குகிறது</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகிமாவு - 200 கிராம்</li><li>வறுத்தவேர்க்கடலை - 50கி</li><li>வெல்லம் - 100 கிராம்</li><li>வறுத்தத்தேங்காய் துருவல் - 50 கிராம்</li><li>பால் - 5 டீஸ்பூன்</li><li>நசுக்கியஏலக்காய் – 5</li><li>முந்திரிப்பருப்பு -15 கிராம்</li><li>நெய் - 5 டீஸ்பூன்</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; வாணலியில் நெய்யைச் சேர்த்து மிதமான சூட்டில் ராகிமாவை வதக்கவும். அதனுடன் பொடித்த வேர்க்கடலையை சேர்த்துப்பின் வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். ஈரப்பதம் தேவைப்பட்டால் பாலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். பின் தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, ஏலக்காயைச் சேர்த்து இளம் சூட்டிலேயே சிறுசிறுஉருண்டைகளாகப் பிடிக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; வேர்க்கடலையில் பொட்டாசியம். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. நல்ல கொழுப்பு நிறைந்தது என்பதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முந்திரியில் தாமிரம் உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்திருப்பதால்இரத்த நாளங்கள் எலும்பு மூட்டுகளுக்கு நல்லது. ஏலக்காய் செரிமானத்தை தூண்டுகிறது.</p><p>தே</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகி -1கப்</li><li>கடலைப்பருப்பு -1/2கப்</li><li>பொடியாகநறுக்கியசின்னவெங்காயம் – 10</li><li>சோம்பு - 1 டீஸ்பூன்</li><li>பொடியாகநறுக்கியபச்சைமிளகாய் – 2</li><li>பொடியாகநறுக்கியஇஞ்சி – சிறிதளவு</li><li>பொடியாகநறுக்கிய பூண்டு – 3</li><li>பொடியாகநறுக்கியகருவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - பொரிப்பதற்கு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ரகியையும்,கடலைபருப்பையும் தனித்தனியாக அலசித் தனிதனித்தனியாக தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும் பின் இரண்டையும் தனித்தனியாககுருணைகளாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாகக் கலந்து நறுக்கி வைத்தவற்றை இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். உப்பு. சோம்பை சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் முறுகலாகப் பொரிக்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ராகி மற்றும் கடலைபருப்பின் கலவை உடலின் புரதத்தைசமன் செய்ய உதவுகிறது. இஞ்சி, பூண்டு இருப்பதால் செரிமான மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. சோம்பில் உள்ள வைட்டமின் மற்றும்தாதுஉப்புகள் வயிற்றுவலி, மூட்டுவலியைப் போக்கும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>குதிரைவாலிஅரிசி - 40 கிராம்</li><li>துவரம்பருப்பு - 10 கிராம்</li><li>பாசிபருப்பு - 10 கிராம்</li><li>புழுங்கல்அரிசி - 10 கிராம்</li><li>மிளகாய்பொடி -5 கிராம்</li><li>சீரகம் - 5 கிராம்</li><li>பெருங்காயதூள் - 3கிராம்</li><li>கருவேப்பிலை – தேவைக்கேற்ப</li><li>உப்பு – தேவைக்கேற்ப</li><li>எண்ணெய் -15 மிலி</li></ul><p><strong>செய்முறை:&nbsp;</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;குதிரைவாலி அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, புழுங்கல்அரிசி ஆகியவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நன்றாகஅரைத்து மாவு செய்து கொள்ளவும். இத்துடன் மிளகாய்த்தூள் சீரகம், கருவேப்பிலை, உப்பு,பெருங்காயத் தூள்ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் தோசைக் கல்லில்எண்ணெய் தடவி அடைமாவை மெல்லியதாகஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைக்கவும். பின் சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், சோடியம், பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம் ஆகியன துவரம் பருப்பு மற்றும் பாசிபருப்பில் அடங்கியுள்ளன. புழுங்கல் அரிசி செரிமானத்தை எளிதாக்குகிறது. கறிவேப்பிலை சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.</p>

<p><strong>&nbsp;தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>உளுந்து - ½ கப்</li><li>குதிரைவாலிஅரிசி – 1 கப்&nbsp;</li><li>பனைவெல்லம் - ½ கப்</li><li>ஏலக்காய்பொடி - ¼ கரண்டி</li><li>துருவியதேங்காய் -2 கரண்டி</li><li>உளுந்து - 1 கரண்டி</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;குதிரைவாலி, உளுந்து இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், தேங்காய், ஏலக்காய் பொடியுடன் உப்பு சேர்த்து 8 மணிநேரம் மாவை புளிக்க வைக்கவும். பிறகு குழிப்பணியாரம் சட்டியில் எண்ணெய் தடவி ஊற்றி திருப்பிப்போட்டுஇருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;உளுந்து, பனைவெல்லம், சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும். இடுப்பு எலும்பு வலிமை பெறவும் உதவுகிறது. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்நிறைந்திருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் குணமுடையத.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>குதிரைவாலிஅரிசி - 1/2கப்</li><li>உளுத்தம்பருப்பு -4 கரண்டி</li><li>அவுல் - 1மேஜைக்கரண்டி</li><li>தக்காளி – 2</li><li>சிவப்புமிளகாய் -3-4</li><li>துவரம்பருப்பு -1 கரண்டி</li><li>வெங்காயம் -1</li><li>எண்ணெய்தோசை செய்வதற்கு</li><li>உப்பு - தேவையான அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp;&nbsp; &nbsp; &nbsp; குதிரைவாலிஅரிசி, துவரம் பருப்பு, அவுல் மற்றும் உளுத்தம்பருப்பை ஒன்றாக 34 மணிநேரம் வரை ஊறவைக்கவும். மிளகாய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு கலக்கி லேசான தோசைகளாக வார்க்கவும். இரண்டு புறமும் வேகவைத்து எண்ணெய் சேர்த்து கல்லில் இருந்து எடுக்கவும். தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றுடன் நார்ச்சத்து நிறைந்த உணவாக இது இருக்கிறது. வைட்டமின்ஏ, சி, கே. இரும்பு, பொட்டசியம் ஆகியன தக்காளியில் நிறைவாக உள்ளன. இது ரத்தத்தை சுத்திரிக்கும். பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் உணவு.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>குதிரைவாலிஅரிசி - 1/4கப்</li><li>கடலைமாவு - 2 கரண்டி</li><li>காரட்துருவல் -¼கப்</li><li>நறுக்கியகுடைமிளகாய் - 2&nbsp;</li><li>வெங்காயம் -1</li><li>மிளகாய்பொடி - 1/2கரண்டி</li><li>கரம்மசாலா - ஒரு சிட்டிகை</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - பொரிப்பதற்கு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;குதிரைவாலி அரிசியை ½ கப் தண்ணீர் சேர்த்துகுக்கரில் 3 விசில் விட்டு வேகவிட்டுக் கொள்ளவும். வெந்த சாதத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் துருவிய காரட், குடைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்பொடி,கடலைமாவு,கரம் மசாலா,உப்புசேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும், பொன்நிறம் ஆனவுடன் எடுக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; காரட்,கரம் மசாலா மிளகாய்சேர்த்த இந்த பக்கோடா நுரையீரல், வயிறு தொடர்பான கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் நோயை கட்டுப்படுத்தவும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டி.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>குதிரைவாலிஅரிசி - ½ கப்</li><li>துவரம்பருப்பு -1/4 கப்</li><li>கடலைப்பருப்பு -1/4 கப்</li><li>அவுல் - 1 மேஜைக்கரண்டி</li><li>பெருங்காயம் – 1</li><li>காய்ந்தமிளகாய் -2-3</li><li>முருங்கைக்கீரை சுத்தம் செய்தது – ஒருகைப்பிடி</li><li>சின்னவெங்காயம் – 8</li><li>உப்பு - தேவையான அளவு</li><li>எண்ணெய் - தே. அளவு</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; குதிரைவாலி மற்றும் அவுலை ஒன்றாக ஊறவைக்கவும். துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். 2 மணிநேரம் கழித்து அரிசி மற்றும் அவுலை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி, பருப்பை ஒன்றாக நன்கு கலக்கவும். உப்பு வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரை சேர்க்கவும். நன்கு கலக்கிக் கொள்ளவும். மாவு தயார். புளிக்கவைக்கத் தேவையில்லை. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து ஒருகரண்டி மாவு சேர்த்து கொஞ்சம்கனமான அடைகளாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வேகும் போது இரண்டு பக்கமும்எண்ணெய் சேர்க்கவும்.</p><p><strong>பலன்கள்:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இரத்த சோகையை குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை கீரையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்கும். தலைவலியைப் போக்கும். கை,கால்,மூட்டுவலிகளைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்தும் சிறந்த உணவு இது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>பச்சைப்பட்டாணி- ½ கப்&nbsp;&nbsp;ஊறவைத்தது</li><li>உருளைக்கிழங்கு – 2</li><li>வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்- 1</li><li>சோம்பு- 1/2 டேபிள் ஸ்பூன்</li><li>தேங்காய் -1/2 டேபிள் ஸ்பூன்</li><li>மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்</li><li>தனியாபொடி - 1/2 ஸ்பூன்</li><li>மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்</li><li>உப்பு - தேவையான அளவு&nbsp;</li><li>கடுகு, கறிவேப்பிலை,எண்ணெய், பட்டை, கிராம்பு, கொத்தமல்லி நாளிக்க</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; பட்டாணியை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு, தேங்காய், பச்சைமிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்புப் பொருட்களை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், உருளைக் கிழங்கினையும் சேர்த்து இளம் சூட்டில் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா பொடி, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின் அரைத்து வைத்ததேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து குருமா இறுகியவுடன் கொத்தமல்லியைத் தூவிப் பரிமாறவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. பட்டாணியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கேமற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உதடுவெடிப்பு, இரத்தக்கசிவு உள்ள ஈறுகள் நோய்கள்குணமாகும்.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>கேழ்வரகு- 1 கிலோ</li><li>அரிசி - சிறிதளவு&nbsp;</li><li>உளுந்து -200கிராம்&nbsp;</li><li>பொட்டுக்கடலை - 100 கிராம்&nbsp;</li><li>வெண்ணெய் - 100 கிராம்&nbsp;</li><li>எள் -1/2 டீஸ்பூன்&nbsp;</li><li>பெருங்காயம் - 1/4 சிட்டிகை&nbsp;</li><li>சீரகம், ஒமம் - சிறிது&nbsp;</li><li>எண்ணெய், உப்பு -தே.அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;உளுத்தம்பருப்பை சிறிது வறுத்து அரிசி, பொட்டுக் கடலை ஒன்று சேர்த்துநைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தமாவுடன் கேழ்வரகு மாவு, எள், வெண்ணெய், பெருங்காயம், சீரகம், ஓமம் சேர்த்து முறுக்குமாவுபதத்திற்கு பிசைந்து எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; ராகியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்மற்றும் அமினோ அமிலங்கள். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். சீரகம், ஓமம் எள் ஆகியனசேர்க்கப்படுவதால் மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் ஆகியவற்றை சரிசெய்யும். வெண்ணெய் உடல் எடை கூட்டஉதவுகிறது.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ஆவாரம்பூ-10&nbsp;</li><li>ரோஜாபூ-7கிலோ&nbsp;</li><li>தாமரைபூ-3 கிலோ&nbsp;</li><li>செம்பருத்திபூ-2 கிலோ</li><li>துளசி-1கிலோ</li><li>கொத்தமல்லி-10 கிலோ</li><li>சுக்கு-1கிலோ</li><li>மிளகு-அரைகிலோ</li><li>சீரகம்-1கிலோ&nbsp;</li><li>கருஞ்சீரகம்-அரைகிலோ</li><li>திப்பிலி-3/4 கிலோ</li><li>சதகுப்பை-அரைகிலோ</li><li>அரத்தை--¼ கிலோ</li></ul><p><strong>செய்முறை:</strong></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப்பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியதே. இப்பொழுது கூறப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்தால் பத்து முதல் பதினைந்து கிலோ மூலிகை டீதயார் செய்வதற்கான அளவுகளாகும். உங்களுக்கு குறைவாகத் தேவைப்படும் எனில் இந்த அளவுகளில் பாதிஅல்லது கால்பாகம் என்ற அளவில் வாங்கிக்கொள்ளலாம்.</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து வெயிலில் ஈரம்படாமல் இரண்டு நாட்கள் காயவைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதில் ஏற்கனவே சில பொருட்கள் பொடியாககிடைக்கலாம். சில பொருட்கள் கெட்டியாகஇருக்கும் கெட்டியாக உள்ள பொருட்கள் நன்றாகஇடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்தோ.தனித்தனியாகவோ மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அரைப்பதற்கு முன்னால் இவற்றில் உள்ள குப்பைகள் கற்கள்இருந்தால் நீக்கிவிடலாம். மிக்சியில் அரைக்கும் பொழுது முடிந்தவரை வேகத்தை குறைவாக வைத்து அரைப்பது நல்லது.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;செரட்டோன் சுரப்பியை சீராகஇயங்கச் செய்வதால் ஒரு மனிதனுக்கு ஆழ்ந்ததூக்கத்திற்கு உதவுகிறது. பார்க்கின்சன், பக்கவாதம், ஞாபக மறதி உள்ளவர்களுக்குசிறந்த மருந்தாக வேலை செய்கிறது. சர்க்கரை, பிபி க்கு மாத்திரை எடுத்துக்கொள்வோர் இதை சாப்பிடுவதால் உடனடிஆரோக்கியம் பெறலாம். உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.</p>

<p><strong>தேவையான&nbsp;பொருட்கள்:</strong></p><ul><li>ராகிமாவு -200கிராம்</li><li>வெல்லம் - 100கிராம்</li><li>பாதாம் – 15</li><li>உப்பு, தண்ணீர் - தே. அளவு</li><li>நெய்,பசும்பால் - தே.அளவு</li></ul><p><strong>செய்முறை</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ராகி மாவைச் சிறிதளவுநெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாதாமை நன்றாக ஊறவைத்து வேக வைத்துத் தோல்நீக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அடித்து பால் எடுத்துக் கொள்ளவும். அரைக்க தண்ணிரை கொதிக்கவைத்து அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கெட்டியாகாமல் இறக்கி வைக்கவும் இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ராகி மாவை சிறிதுசிறிதாகச் சேர்க்கவும். நன்றாக கலக்கி வடிகட்டிய பாதாம் மாவை அதில் சேர்த்துக்கிளறவும். 2 அல்லது&nbsp;3நிமிடம் கழித்து வெல்லப் பாகைச் சேர்ந்து நன்றாக கிளறவும். கூழ் பதம் வரும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். மிதமான சூட்டில் அருந்தவும். தேவைப்பட்டால் பசும்பால் சேர்க்கலாம்.</p><p><strong>பலன்கள்</strong>:</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ராகியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் Cஉடலை ஆரோக்கியப்படுத்துகிறது. பாதாமில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். இரத்தத் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை நீக்குகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. வெண்பூசணிக்காய்ச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -5.6 மி.லி<br>2. தாழை விழுதுச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>3. தென்னம்பூ சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>4. எலுமிச்சம்பழம் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 மி.லி<br>5. பசுவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.8 மி.லி<br>6. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3.5 கி.கி.<br>7. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>8. கொத்தமல்லி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>9. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>10. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>11. மாசிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>12. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>13. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>14. சாதிபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>15. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>16. தாளீசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>17. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -700 மி.லி<br>18. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 மி.லி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்படி சாறுகளையும், சர்க்கரையும் கலந்து அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும் போது, சீரகம், கொத்தமல்லி, கோஷ்டம், மிளகு, மாசிக்காய், ஏலம், ஜாதிக்காய், சாதிபத்திரி, அதிமதுரம், தாளீசபத்திரி இவைகளை இடித்து, பொடித்து, சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய்யும், தேனும் சேர்த்து பிசைந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>3-6 கிராம் வரை வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>காமாலை, சோகை, வெள்ளை ஆகிய நோய்கள் தீரும். மேலும் உடல் வலுக்கும். விந்து ஊறும். சூட்டினால் உண்டாகும் நோய்கள் மற்றும் நீர்ச்சுருக்கு தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. குமரிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-300 மி.லி<br>2. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-300 கி<br>3. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -15 கி<br>4. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20 கி<br>5. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -5 கி<br>6. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -40 கி<br>7. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>8. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -140 கி<br>9. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>குமரிச்சாறு, சர்க்கரை இவற்றினை ஒன்றாய் சேர்த்து கரைத்து வடிகட்டி அடுப்பிலிட்டு காய்ச்சி பாகுபதம் வரும்போது, கிராம்பு, ஜாதிக்காய், ஏலம், சீரகம், மிளகு இவைகளை இடித்துப் பொடித்து சூரணித்து மேற்படி பாகில் தூவி கிண்டி, நெய் சேர்த்து இறக்கி வைக்கவும். லேகியம் சூடு ஆறிய பின் தேன் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :</strong><br>2 - 5 கிராம் இரு வேளைகள் உண்ணவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>வெள்ளை, வெட்டை, கிரந்தி, இருமல், சளி, பசியின்மை, மலச்சிக்கலைப் போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த தேக பலத்தை உண்டாக்குகிறது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. வல்லாரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-58.4 கி<br>2. ஆடாதோடை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-29.2 கி&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<br>3. துளசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-58.4 கி<br>4. கண்டங்கத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -58.4 கி<br>5. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -5.8 கி<br>6. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -5.8 கி<br>7. சித்தரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.8 கி<br>8. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.8 கி<br>9. அக்கரகாரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -5.8 கி<br>10. தாளீசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.8 கி<br>11. ஜாதிபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.8 கி<br>12. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.8 கி<br>13. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.17 கி<br>14. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-11.6 கி<br>15. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -583.9 கி<br>16. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -116.8 கி</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>5- 10 கிராம் வீதம் தினமும் இருவேளைகள் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கு வலுவூட்டி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. 1 சீந்தில் சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>2. முந்திரிப்பழம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>3. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>4. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>5. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>6. நெல்லி வற்றல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>7. பூச்சாந்துபட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>8. அமுக்கிராக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>9. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>10. பூனைக்காலி வித்து &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>11. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>12. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>13. அரேனுகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>14. சிறுநாகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>15. தாளீசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>16. நீர்முள்ளிக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>17. நிலப்பனைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>18. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>19. நெருஞ்சில் வித்து &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>20. வெட்டிவேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>21. தாமரைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>22. அல்லிக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>23. வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2 கி.கி<br>24. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>25. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -250 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட கடைச் சரக்குகளை தனித்தனியே பொடித்து பனை வெல்லத்தினை பாகு செய்து மேற்சொன்னபடி சூரணத்தை சிறுக சிறுகப் போட்டு மருந்துக்குத் தகுந்த நெய்யைச் சிறுக சிறுக விட்டு கிண்டி மெழுகு பதத்திலிறக்கி, ஆறவிட்டு தேன்விட்டுப் பிசைந்து டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவும்; தீரும் நோயும் :</strong><br>2 முதல் 5 கிராம் வரை தினம் இருவேளை. சாப்பிட்டு வர சர்க்கரை நோய், அஸ்திசுரம், காங்கை, சீதம், இரத்தம் விழுதல், வாயு பாண்டு சோகை காமாலை முதலிய நோய்கள் தீரும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>2. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>4. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.8 லி<br>5. பனைவெல்லம் &nbsp; &nbsp; &nbsp;-280 கி<br>6. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி<br>7. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>திரிகடுகு, ஏலம், சீரகம் இவைகளை முறைப்படி சுத்தி செய்து இளவறுப்பாக வறுத்து சூரணித்து 2.8 லி பசுவின் பாலில் 280 கிராம் பனை வெல்லம் சேர்த்து கரைத்து படிகட்டி அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்து பாகுபதம் வந்தபின் சிறிது சிறிதாக சூரணத்தைத் தூவி கிண்டிக் கொண்டே நெய் 350 கி சேர்த்துக் கிண்டி இறக்கி சற்று சூடு ஆறிய பின் 100 மி.லி. தேன் ஊற்றி, கிண்டி மெழுகு பதமாக செய்து கொள்ளவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>3-6 கிராம் வீதம் இரு வேளை 40 நாட்கள் உட்கொள்ளலாம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>வாயுத் தொல்லை, வாதம், உஷ்ணம், பித்தவாயு, உடல் உளைச்சல், வலி, கடுப்பு, எரிச்சல், பேதி, பொருமல், வாதக்கிராணி, அஸ்திசுரம், அஸ்திவெட்டை, வாந்தி முதலியவைகள் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வில்வ வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -11.2 கி. கி<br>2. தண்ணீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -16 லி<br>3. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-22.4லி<br>4. பனைவெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.44 கி<br>5. இலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-600 கி<br>6. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600 கி<br>7. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-600 கி<br>8. சிறுநாகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600 கி<br>9. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-600 கி<br>10. தாளிசப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-600 கி<br>11. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600 கி<br>12. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-600 கி<br>13. ஏலக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600 கி<br>14. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-280 கி</p><p><strong>செய்முறை :</strong><br>வில்வ வேரை இடித்து நீரிலிட்டு நாலில் ஒன்றாய் வற்றவைத்து வடித்து சர்க்கரையைக் கரைத்து பாகு செய்து மேற்கண்ட கடைச்சரக்கினை பொடித்து பொடித்த தூளை தூவி நெய்யில் விட்டு கிண்டி இறக்கி சிறிது ஆறிய பின் தேன் விட்டு பிசைந்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வயிற்று வலி, குன்மம், இருமல், ஈளைகாசம், நெஞ்செரிவு, வாயு கிராணி, அதிசாரம், பித்தகாசம், தேக காந்தல், நீரேற்றம், விக்கல், விஷபாண்டு, சுரம், உப்பிசம், வயிற்றுளைச்சல், வாந்தி, பித்தம், மலக்கட்டு தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. திரிகடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>2. சாரப்பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>3. கசகசா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>4. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>5. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>6. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி.<br>7. ஜாதி பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி.<br>8. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி.<br>9. கூகை நீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>10. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>11. சடாமஞ்சில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- 100 கி<br>12. சன்னலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>13. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி.<br>14. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி.<br>15. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3 லி<br>16. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>17. முட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4கி</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட பொருட்களை தனித்தனியே பொடித்து வைக்கவும். சர்க்கரையை பாகு பதமாக காய்ச்சி அதில் மேற்கண்ட சூரணித்த பொடியினை சேர்த்து நெய்யை சிறுக சிறுக சேர்த்து கிண்டி மெழுகு பதத்திலிறக்கி ஆறவிட்டு பின் தேன்விட்டு பிசைந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய் :</strong><br>காமவர்த்தினி மற்றும் வெள்ளை, வெட்டை, பெரும்பாடு இவைகள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>2. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>4. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>5. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5கி<br>6. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5கி<br>7. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5கி<br>8. பனை வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5கி<br>9.நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-400கி</p><p><strong>செய்முறை :</strong><br>சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கிராம்பு, ஏலம் ஆகிய வற்றை சுத்தி செய்து சூரணம் செய்து பனை வெல்லத்தை பாகு போல் காய்ச்சி சூரணத்தைக் கொட்டி, கிண்டி நெய் மற்றும் தேன்விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.</p><p><strong>அளவும், தீரும் வியாதிகள் :</strong><br>கொட்டைப் பாக்களவு காலை, மாலை இரு வேளை உண்ண வாயுத் தொல்லை, உஷ்ணம், பித்தவாயு, அக்கினிமாந்தம், வாந்தி, அஸ்திவெட்டை, கிராணி, அஜீரணம் ஆகிய நோய்கள் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இஞ்சிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>2. கண்டங்கத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>3. நெருஞ்சில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 மி.லி<br>4. முள்ளங்கிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 மி.லி<br>5. எலுமிச்சைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>6. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 மி.லி<br>7. பனை வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -280 கி<br>8. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி.<br>9. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35கி.<br>10. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35கி<br>11. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி.<br>12. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி.<br>13. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>14. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>15. தாளிசபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி.</p><p><strong>செய்முறை:</strong><br>பனை வெல்லத்தினை பால் மற்றும் மேலே குறிப்பிட்ட சாறுகளுடன் கலந்து பாகுபதத்தில் காய்ச்சி எஞ்சியிருக்கும் கடைச் சரக்குகளை பொடித்து அத்துடன் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பித்தத்தை அகற்றும், வாயுக் கோளாறு மற்றும் எல்லா விதமான வயிற்றுக் கோளாறினையும் நீக்க வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இம்பூறல் வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350கி.<br>2. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.4லி.<br>3. பனங்கற்கண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -700கி.<br>4. ஜாதிபத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி.<br>5. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3530 கி.<br>6. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி.<br>7. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350கி</p><p><strong>செய்முறை :</strong><br>இம்பூறல் வேர்ப்பட்டையைத் தட்டியெடுத்துப் பாலில் கரைத்து வடிகட்டி, அதில் பனங்கற்கண்டு அதனளவிற்குச் சேர்த்து கரைத்து, வடிகட்டி, அடுப்பிலேற்றிப் பாகுபதம் வரும் சமயத்தில் சாதிப்பத்திரி, சாதிக்காய், வால்மிளகுச் சூரணஞ் சேர்த்துக் கிண்டி, பிறகு பசுவின் நெய் விடவும். தேன் சேர்த்தல் கூடாது.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>சுண்டைக்காயளவு 2 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இரத்த காசம், இரத்த வாந்தி, இரத்த பேதி இவைகளுக்கு கொடுக்கத் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. பெருங்காயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>2. கடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>3. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>4. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100கி<br>5. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>6. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100கி<br>7. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100கி<br>8. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>9. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>10. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -300கி<br>11. வெல்லம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -300கி<br>12. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-300 கி<br>13. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4லி</p><p>செய்முறை:<br>பெருங்காயத்தினை பொடித்து நீரில் போட்டு எட்டுக்கு ஒன்றாக வற்ற வைத்து வடித்து சர்க்கரையை கரைத்து பால் சேர்த்து பாகு செய்து அதில் மேற்கண்ட கரைச் சரக்குகளைப் பொடித்து தூவி நெய்விட்டுக் கிண்டி பின் தேன்விட்டு மெழுகு பதத்திலிலெடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>3-5 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>கிராணி, கடுப்பு, வாயுத் தொல்லை, வயிறு உப்பல் தீரும்.<br>&nbsp;</p>

<p>நன்கு உலர்ந்த மருந்துச் சரக்குகள் நன்கு பொடி யாக்கப்பட்ட நிலையில் சூரணங்கள் என அழைக்கப்படும். சூரணங்கள் உட்கொள்ளவும் மேற்பூச்சாகவும் நசியமிடவும். பயன்படுத்தப்படுகின்றன.</p><p>உலர்ந்த சரக்குகளை மீண்டும் உலர்த்தாமலும் ஈரச் சரக்குகளானால் உலர்த்தியும் வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் உலக்கையால் நன்கு தூளாக்கிக் கொள்ள வேண்டும்.</p><p>சில சரக்குகளை இலேசாக வறுத்துக் கொள்வதால் அவற்றின் நொறுங்கும் தன்மை மிகுவதோடு அவற்றின் நறுமணமும் மிகைப்படுகின்றன.</p><p>சூரணங்களில் சேர்க்கப்படும் மருந்துச் சரக்குகளை தனித்தனியே இடித்துச் சலித்து பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கலந்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும்.</p><p>சூரணம் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மிகப் பழமையானவையாகவோ, இயற்கையான நிறம் மங்கியவையாகவோ மணம் சுவையில் இயற்கைக்குப் புறம்பாகவோ, பூச்சி அரித்ததாகவோ, காளான் பூத்ததாகவோ இருத்தல் கூடாது.</p><p>சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், மூசாம்பரம், திராட்சை, பேரிச்சங்காய், பெருங்காயம், வெங்காயம், படிகாரம் உப்பு வகைகள் போன்றவற்றை எல்லா சரக்குகளுடன் பொடித்தல் கூடாது. அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்து சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.</p><p>சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) சீந்தில் கொடி போன்றவைகளைப் பசை போலரைத்து உலர்த்திச் சேர்க்க வேண்டும். திப்பிலியை சற்றே வறுத்து சேர்க்க வேண்டும்.</p><p>பின்னர் எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து தூய்மையான ஈரப்பதமற்ற காற்றுப்புகாத பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் மூடி வைத்தல் வேண்டும். சூரணங்கள் கட்டிகளாகவோ ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டோ ஈரம் படிந்தோ இருத்தல் கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு நுண்துகளாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மருந்தின் பயனும் அதிகமாக இருக்கும்.</p><p><strong>பாதுகாப்பும் காலக்கெடுவும் :</strong><br>சூரணங்களை நன்கு பரப்பி சூடு ஆற வைத்து கலந்து கொண்ட பின்னரே சிறு சிறு பொட்டலங்களில் அடைத்தல் வேண்டும்.இவற்றை நல்ல மூடியுடன் கூடிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலீதின் பைகள் போன்றவற்றில் அடைத்து சீல் செய்துவிட வேண்டும்.<br>சூரணங்கள் மூன்று மாதம் வரை வன்மை உடையன.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த கந்தகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -300 கி<br>2. நாட்டு அமுக்கராக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -300 கி<br>3. பறங்கி சக்கை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-60 கி<br>4. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>5. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>6. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>7. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>8. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>9. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>10. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>11. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>12. இலவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>13. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>14. கடலைப்பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>15. சுத்தி செய்த சேராங்கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>16. 16.சித்திர மூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>17. 17 நாட்டுச் சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 கி<br>18. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>19. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>கந்தகத்தைத் தனியே பொடித்து வைக்கவும். நெ.2 முதல் 16 வரையுள்ள சரக்குகளைப் பொடித்துச் சலித்து வைக்கவும்.சேராங் கொட்டையை நெய்யிலிட்டு கொதிக்க வைக்க அதிலிருந்து எண்ணெய் பிரிவதோடு கொட்டையும் நீக்கி விடவும். நாட்டு சர்க்கரையைக் கரைத்து பாகு வைத்து பதம் வந்ததும் கந்தகத்தையும் மற்ற சூரணங்களையும் அதில் சேர்த்து நன்கு கிளறி பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>5-10 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் 40 நாட்கள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மேக நோய்கள், மேக நீர், வெள்ளை, தோல் நோய்கள், குஷ்டம், வெண்குஷ்டம் முதலியவற்றிற்கும் பூச்சிக் கடிக்கும் கொடுக்கலாம்.<br><br><strong>பத்தியம்:</strong><br>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; புளி நீக்கவும், சிறு பயிறு, துவரை, தூதுவளை, மணத்தக்காளி, கத்திரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கொத்த மல்லிக் கீரை, நெய், மோர், தயிர் இவைகளை உண்ணவும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-300 கி<br>2. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -150 கி<br>3. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -150 கி<br>4. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>5. கருஞ்சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>6. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>7. குரோசானி ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>8. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>9. பேரரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>10. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>11. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>12. சதகுப்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>13. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>14. இலவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>15. இலவங்கப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>16. தாளீச பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>17. கொடி வேலி வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>18. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>19. இலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>20. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1050 கி<br>21. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>நெ.1 முதல் 18 வரை உள்ள சரக்குகளை இளம் வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். சர்க்கரையைப் பாகு செய்து எல்லாச் சூரணங்களையும் அதில் கொட்டி கிளறி தேனும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு : &nbsp;&nbsp;</strong><br>3-6 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் 100 மி.கி. தாமிரச் செந்தூரத்துடன் 45 நாட்களுக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>காசம் (இருமல்) மந்தாரகாசம், சயம், நாட்பட்ட இருமல், இரைப்பிருமல், கக்கல், இளைப்பு, கப நோய்கள் - 96.</p>

<p><strong>தேவையான மருந்துகள் :</strong><br>1. பறங்கி சக்கை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -300 கி<br>2. நிலப்பனை கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -150 கி<br>3. அமுக்கரா கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-300 கி<br>4. தண்ணீர்விட்டான் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -60 கி<br>5. நன்னாரி வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>6. முட்சங்கன் வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>7. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>8. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>9. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>10. இலவங்கப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>11. சிறுநாகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>12. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>13. கொத்தமல்லி விதை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>14. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>15. கருஞ்சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>16. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>17. குரோசினி ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>18. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>19. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>20. சிறுதேக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>21. கண்டங்கத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>22. சித்திர மூல வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>23. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>24. தக்கோலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>25. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>26. திராட்சை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>27. பேரீச்சை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>28. வெட்பாலையரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>29. தாமரைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>30. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>31. இலவங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>32. ஜாதிப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>33. கருவேப்பிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>34. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -30 கி<br>35. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>36. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>37. இலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>38. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>39. சர்க்கரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>40. தேன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி<br>41. நெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600கி<br>42. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>43. கோரோசனை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>44. பச்சைக் கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி</p><p><strong>செய்முறை :</strong><br>நெ. 1 முதல் 37 வரை உள்ள சரக்குகளை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் இறக்க, சூரணத்தைச் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து பின்னர் நெய், தேன் சேர்த்து இத்துடன் கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றையும் பொடித்துக் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>3 -6 கிராம் வீதம் தினமும் இரு வேளைகள் வீதம் நாற்பது நாட்களுக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மார்பு நோய், மேகப்புண், பறங்கிப்புண், கிரந்தி, சூலை, கண்ட மாலை, லிங்கப்புற்று, யோனிப்புற்று, சர்மரோகம், வெள்ளை, வாயு, வளி நோய், கபநோய் - 96, பிரமியம் என்கிற பிரமேகம் வெட்டை முதலியன.<br>&nbsp;</p>

<p>மருந்துச் சத்துக்களைக் கொண்டு செறிவூட்டிய எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்.<br>தைலம் என்பது உண்மையில் எள்ளின் நெய்யைக் குறித்தாலும் இங்கு ஆகு பெயரால் எள்ளின் நெய்யால் கிரகித்துக் கொள்ளப்பட்ட மருந்துச் சத்துக்கள் செரிந்த மருந்துக்கு தைலம் எனப்படும்.<br><br>இம்முறையில் நோய் தீர்க்கும் மருந்துகளின் சாறுகள் கியாழங்கள், சூரணங்கள், கற்கங்கள், பால் ஆகியன எண்ணெயுடன் குறிப்பிட்ட செய்முறைப்படி சேர்க்கப்பட்டு அடுப்பிலேற்றி எரித்துக் காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த செய்முறையின் போது மருந்து சரக்குகளின் பிணி நீக்கும் சத்துப் பொருட்கள் எண்ணைய்ப் பொருள்களால் கலந்து கொள்ளப்படுகின்றன.<br>தைலங்களைத் தயாரிக்க கற்கம், திரவம், நெய்ப் பொருள் என்ற மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன.</p><p><strong>கற்கம்:</strong><br>நோய் நீக்கும் மருந்துச் சரக்குகள் நன்கு பொடியாக்கப் பட்டோ அல்லது விழுது போன்று அரைக்கப்பட்டோ இருக்கும் நிலையில் கற்கம் என்று அழைக்கப்படுகின்றன.</p><p><strong>திரவம் :</strong><br>கற்கம் நன்கு கரைந்து மருந்தாகவும், நெய்ப் பொருட்களின் மருந்துச் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் தன்மை மேம்படவும் சேர்க்கப்படும் சாறு வகைகள், கஷாயங்கள், மாமிச ரசங்கள், நீர், பால், தயிர், மோர் போன்ற நீர்ம ஊடகங்களுக்கு திரவம் என்று பெயர்.</p><p><strong>நெய்ப் பொருட்கள் :</strong><br>தைலம் காய்ச்சும் போது மருந்து சரக்குகளில் இருந்து நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை கிரகித்து வைத்துக் கொள்வதற்காகச் சேர்க்கப்படும் பலவிதமான தாவர எண்ணெய்கள், நெய், விலங்கின் கொழுப்புகள் ஆகியவற்றுக்கு நெய்ப்பொருள் என்று பெயர்.<br>மேற்கூறிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து அடுப்பிலேற்றி முறைப்படி காய்ச்சும் போது அவற்றிலுள்ள நீர்ச்சத்து முழுவதும் சுண்டி விடுவதுடன் மருந்துச் சரக்குகளின் பிணி நீக்கும் சத்துக்களும் எண்ணெய்களால் கிரகித்துக் கொள்ளப்படவும் ஏதுவாகிறது. பின்னர் இவற்றை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.<br><br>பொதுவாகத் தைலம் காய்ச்ச நல்லெண்ணையே பயன்படுத்தப்பட்டாலும் தேங்காய் எண்ணெய், விளக் கெண்ணெய், கடுகெண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவைகளும் தேன், மெழுகு, முட்டையின் மஞ்சட்கரு, வாலுளுவையரிசி ஆகியனவற்றிலிருந்து சிதைத்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய்களும் தைலம் காய்ச்சப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><strong>செய்முறை :</strong><br>தைலங்கள் செய்யப் பலவிதமான செயல்முறைகள் உள்ளன.</p><p>கொதி நெய் தயாரிக்கும் முறை :<br>மருந்துச் சரக்குகளை திரவ பதார்த்தங்களுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து கொதி நெய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தைலங்கள் செய்யப்படுகின்றன. இம்முறைப்படிதான். இம்முறையில் எண்ணெய், கியாழம், பால், சாறு, வகைகள் சூரணித்த சரக்குகள், கற்கம் ஆகியன ஒரு பாத்திரத்திலிடப்பட்டு கொதிக்க வைக்கப்படுகின்றன. நீர்ப்பொருள் மற்றும் வற்றிய நிலையில் உரிய பதத்தில் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளப் படுகின்றன.<br>நன்கு பாகமடைந்த நிலைக்கு அறிகுறியாக அக்கலவைகளில் சிறு மாறுதல்கள் தோன்றுகின்றன. தைலத்தின் மேல் பாகத்தில் நுரை கிளம்பும் போது கற்கத்தில் சிறிது எடுத்து விரல்களால் உருட்ட அது திரி போன்று ஆவதுடன் விரல்களையும் பற்றாது. மேலும் அந்த கற்கத்தை சிறிதளவு நெருப்பிலிட்டால் சிடு சிடுப்பு போன்ற சப்தம் உண்டாகாமல் தீவிரமாகப் பற்றியெரியும். பொதுவான அறிகுறிகள் இவ்விதமிருப்பின் சில குறிப்பிட்ட மருந்து உபயோகங்களைக் கருத்தில் கொண்டும் கற்கத்தின் பாகத்திற்கு ஏற்பவும் மிருதுபாகம், மயனபாகம் என்கிற மத்திய பாகம், கரபாகம் என்கிறகரகரப்புப் பாகம் என்ற 3 விதமான பாகங்களில் தைலங்கள் தயாரிக்கப் படுகின்றன.<br><br>பொதுவாக மிருது பாகத்தில் தயாரித்த தைலங்களை வாத நோய்களில் உட்கொள்வதற்கும் மயனபாகம் எனும் மத்திய பாகத்தில் தயாரித்த தைலங்களை பித்த நோய்களுக்கான வெளியே உபயோகத்திற்காக கரபாகம் என்கிற கரகரப்புப் பாகத்தில் தயாரித்த தைலம், தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும், கப நோய்களுக்குப் பயன்படுத்து வதும் நடைமுறையில் உள்ளது. பாகத்தை நிர்ணயித்த கல்கத்தை விரல்களால் அழுத்திப் பார்ப்பது வழக்கம்.<br>புடநெய் அல்லது குழிப்புட நெய் தயாரிக்கும் முறை :</p><p>மருந்துச் சரக்குகளை குழிப்புடப் பொறியில் இட்டு ட்டமிடும் செய்கைக்கு உட்படுத்தி பெறப்படுவது புட நெய் அல்லது குழிப்புட நெய். இம்முறையில் மருந்துச் சரக்குகள் சிதைத்து வடித்தல் என்ற செய்முறைக்கு உட்படுத்தப்படு கின்றன. சில தைல வகைகளை குழித்தைல முறைப்படி தயாரித்துக் கொள்வதே மிகவும் நல்லது என்ற அடிப்படையில் நீண்ட நாட்களாகவே இம்முறை நடைமுறையில் இருந்து வருகிறது. செய்முறையில் கூறப்பட்டுள்ள மருந்துச் சரக்குகளை முதலில் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய மண்பானையின் அடிப்பாகத்தில் சிறு சிறு துவாரங்கள் இட்டு அத்துவாரங்களின் வழியே கம்பிகளைப் பொருத்திக் கட்டி அவைகள் குடத்திற்கு வெளியே ஒன்று கூடும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். பொடித்து வைத்துள்ள மருந்துச் சரக்குகளை மேற்படி மண்குடத்திலிட்டு குடத்தின் அளவுக்கு ஏற்ப வெட்டப் பட்டிருக்கும் ஒரு குழியில் வைத்து குடத்தின் அடிப்புறத்தின் கீழ் மற்றொரு சிறு மண்பானையும் வைக்க வேண்டும். செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவு வரட்டிகளைக் கொண்டு குடத்தின் பக்கங்களையும் மேற்பாகத்தையும் பரப்பி மூடி, நான்கு பக்கங்களிலும் நெருப்பு வைக்கவும். வரட்டிகள் எரிந்து ஆறிய பின்னர் எடுத்துப் பார்க்க அடியிலுள்ள மண்பாண்டத்தில் குழித் தைலம் இறங்கி இருக்கும். தைலங்கள் பயன்படுத்தும் முறை : சில தைல வகைகள் உள்ளுபயோகத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகின்றன. சில தைலங்கள் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே கொடுக்கப்படும். சில தைலங்கள், உள்ளுபயோகம், வெளியுபயோகம் என்ற இரண்டுக்குமே பயனாகிறது. தைலங்களைப் பிடித் தைலமாகப் பயன்படுத்தும் போது உடலின் மயிர்க் கால்கள் எனப்படும் கேச பூமியில் பக்கமாகவே தடவிப் பிடிக்க வேண்டும். மயிர்க் கால்களுக்கு எதிர்த் திசையில் தடவக் கூடாது. தைலம் தடவிப் பிடித்தவுடன் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது.<br>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br>தூய்மையான ஈரப்பதமற்ற குறுகிய வாயை உடைய கண்ணாடி கொள்கலன்களிலோ அல்லது பாலிதீன் கொள்கலன்களிலோ இவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டும். கொள்கலன்களின் மீதே இவற்றைப் பயன்படுத்த வேண்டிய குறிப்புகள் குறிப்பிட வேண்டும். முறைப்படி பாதுகாத்து வந்தால் தைலங்கள் ஓராண்டு வரை தமது நோய் தீர்க்கும் திறனை இழக்காமல் இருக்கும்.</p><p><strong>குறிப்பு :</strong><br>இப்போது சில ஆராய்ச்சியாளர்கள் தைலம் எனப்படும் மருந்து எண்ணெய் உடலில் தேய்க்கும் போது அது தோலில் உள்ள துவாரங்கள் வழியே செல்ல வாய்ப்பில்லை எனவும் தைலம் என்பது நிவாரணம் தரக்கூடிய மருந்து அல்ல எனவும் கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து உண்மையல்ல. ஏனெனில் மருந்துப் பொருட்களை எண்ணெயில் போட்டு காய்ச்சும் போது மருந்துப் பொருட்களில் உள்ள மிக நுண்ணிய நோய் நீக்கும் மருத்துவ குணம் கொண்ட அணுக்கள் மருந்துப் பொருட்களில் இருந்து எண்ணெயில் கிரகிக்கப்படுகின்றன. ஏனெனில் எல்லாப் பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களின் கூட்டமாகும். ஒரு அணு தமது தோலில் உள்ள துவாரத்தை விட 100 மடங்கு சிறியது. எனவே மருந்தணுக்கள் கிரகிக்கப்பட்ட எண்ணெய் என்று சொல்லப் படுகின்ற தைலங்களை உடலில் தேய்க்கும் போது மருந்து அணுக்கள் தோலில் உள்ள துவாரங்கள் வழியே உட்சென்று நோயை நிவர்த்தி செய்கிறது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. செம்பருத்தி பூ சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>2. அவுரி இலைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>3. துளசிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 மி.லி.<br>4. அருகம்புல்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.லி.<br>5. மருதாணி இலைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.லி.<br>6. கருவேப்பிலைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>7. அகத்திப் பூ சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>8. வெள்ளை மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>9. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>10. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 100 மி.லி.<br>11. வல்லாரை சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 மி.லி.</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>மேற்கண்ட சாறுகளையும் வெள்ளை மிளகு மற்றும் அதிமதுரம் தூளையும் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோகம் :</strong><br>தினமும் தலைக்கு நன்றாக மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து வரவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>முடி உதிர்வதைத் தடுக்கிறது. இளநரையைப் போக்குகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. புங்க எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>2. வேப்ப எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 மி.லி.<br>3. இலுப்பை எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 மி.லி.<br>4. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 மி.லி.<br>5. வெள்ளைப்பூண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>6. வசம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<br>7. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>8. பெருங்காயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>9. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>10. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>11. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>12. சதகுப்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>13. கிராம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>14. சித்திரமூலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>15. தழுதாழைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.லி.<br>16. கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 மி.லி.<br>17. மெந்தால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 மி.கி.<br>18. தைமால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20 மி.கி.<br>19. நீலகிரித் தைலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 மி.லி.</p><p><strong>செய்முறை :</strong><br>எண்ணெய் மற்றும் சாறுகளைத் தவிர மற்ற சரக்குகளைப் பொடித்து சலித்து பின் எண்ணெய் மற்றும் சாறுகளுடன் கலந்து காய்ச்சித் தைலம் பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோகம் :</strong><br>வெளி உபயோகத்திற்கு மட்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மூட்டு வலி, வீக்கம், நரம்பு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு மற்றும் வாத வலிகள் போன்றவைகளை நீக்க ஏற்றது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. அருகன் வேர்ச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 மி.லி.<br>2. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1000 மி.லி.<br>3. கோரைக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>4. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -400 மி.லி.<br>5. அமுக்கரா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>6. பூமி சர்க்கரைக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp;-35 கி</p><p><strong>செய்முறை :</strong><br>அருகன் வேர்ச்சாறு, கோரைக்கிழங்கு, பால், அமுக்கரா இவற்றை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோகம் :</strong><br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எல்லாவிதமான சர்ம வியாதிகள், காயங்கள் மற்றும் விஷக் கடிகள்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கொம்பரக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.12 கி. கி<br>2. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. கஸ்தூரி மஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>4. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>5. இலவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>6. இலவங்கப்பத்திரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>7. பச்சிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>8. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>9. சடாமஞ்சில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>10. பூலாங் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>11. கடுகு ரோகிணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>12. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>13. சதகுப்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>14. கிளியூரல்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>15. பூச்சாந்திரப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>16. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>17. கருஞ்சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>18. மெருகன் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>19. பசுவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6.4 லி.<br>20. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6.4 லி.<br>21. தயிர் தெளிவு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - தேவையான அளவு<br>22. செவ்வல்லிக் கொடி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி</p><p><strong>செய்முறை:</strong><br>கொம்பரக்கைத் துணியில் முடிந்து கட்டி தண்ணீரில் மூழ்க வைத்து எரித்து சுண்ட வைத்துக் கியாழத்தை வடித்து வைக்கவும். 2-17 வரையுள்ள சரக்குகளைப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் மற்றும் தயிர் தெளிவுடன் கலந்து காய்ச்சித் தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும். முப்பது நாட்கள் வரை உபயோகிக்கவும். நெற்புடத்தில் வைத்தெடுத்து</p><p><strong>உபயோகிக்கும் முறை :</strong><br>தலைக்கும், உடலுக்கும் தேய்க்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சுரம், உடல் கடுப்பு, சந்திராவர்த்தம், சூர்யா வர்த்தம், மண்டை சூலை, இரைப்பிருமல், கற்றாழை நாற்றம், பல்வேர் வீக்கம், குரல் கம்மல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வெட்பாலை இலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>2. வில்வ இலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -200 கி<br>3. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp;-1 லி.</p><p><strong>செய்முறை :</strong><br>வில்வ இலை மற்றும் வெட்பாலை இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு சூரிய புடத்தில் வைத்து எடுக்கவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எல்லா விதமான தோல் வியாதிகள், அரிப்பு, காளாஞ்சகப்படை முதலியன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. ஆலம்பால் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 மி.லி.<br>2. நத்தைச்சூரிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-40 மி.லி.<br>3. குறுந்தொட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10 மி.லி.<br>4. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 மி.லி.<br>5. சிவதை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10 மி.லி.&nbsp;<br>6. குங்கிலியம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20 மி.லி.&nbsp;<br>7. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1லி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகத்திற்கு மட்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>வர்மப் பிடிப்பு மற்றும் எல்லாவித எலும்பு முறிவுகளுக்கும் எலும்புகளின் பலத்திற்கும் சிறந்தது.<br>&nbsp;</p>

<p><strong>செய்முறை :</strong><br>கீழ்புறம் சிறு துவாரங்களிலிட்டு கம்பிகள் சொருகிய ஒரு பானையில் முக்கால் பாகம் அளவுக்கு முற்றிய தேங்காய் சிரட்டைகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு மூடி குழித் தைல விதிப்படி புடமிட்டுத் தைலம் தயாரிக்கவும்.</p><p><strong>உபயோகிக்கும் முறை :</strong><br>வெளி உபயோகம். சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உபயோகிக்கலாம். மற்ற இடத்தில் பட்டால் எரிச்சலைத் தரும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>சொரி, படை, சரும வியாதிகள் குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி<br>2. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி<br>3. ஆவாரம்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -350 கி<br>4. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 கி<br>5. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி</p><p><strong>செய்முறை:</strong><br>சந்தனம், விலாமிச்சம் வேர், ஆவாரம்பட்டை முதலிய வற்றை இடித்து 1 லி நீரில் போட்டு எட்டிலொன்றாய் வழிய வைத்து வடித்து அத்துடன் நல்லெண்ணெய் விட்டு அதில் நன்னாரி வேர்ப்பட்டையை அரைத்துப் போட்டு காய்ச்சி வடிக்கவும்.</p><p><strong>உபயோகிக்கும் அளவு :</strong><br>வெளி உபயோகத்திற்கு மட்டும். ஆண்மைக் குறைவிற்கு ஆண் குறியில் தடவவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை, துர்நாற்றம் அதிக வியர்வை, தலைவலி, கண்காந்தல் ஆகியவை நீங்கும்.</p>

<p><strong>தேவையானவை பொருட்கள்:</strong><br>1. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.800 கி.கி<br>2. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3லி<br>3. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3 கி.கி.<br>4. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>5. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>6. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>7. கோரைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>8. மஞ்சிட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>9. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>10. நெல்லி வற்றல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>11. தான்றிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>12. தண்ணீர்விட்டான் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>13. அகில் கட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>14. எருக்கன் வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>15. கடுகுரோகிணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>16. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>17. கொடிவேலி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>18. தேவதாரு கட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>19. சந்தனக்கட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>20. வெள்ளை குங்கிலியம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>21. செவ்வியம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>22. ஆமணக்கு வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>23. வெள்ளை லோத்திரப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>24. பேரீச்சங்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி<br>25. உலர் திராட்சை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி<br>26. இந்துப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2 கிராம்<br>27. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2 கிராம்<br>28. கஸ்தூரி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2 கிராம்<br>29. சுத்தமான நீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -24 லி.</p><p><strong>செய்முறை :</strong><br>தோல் நீக்கி சுக்கை தண்ணீரிலிட்டு காய்ச்சி 6 லிட்டராக சுண்ட வைத்து, வடித்து அத்துடன் பசுவின் பால் நல்லெண்ணெய் சேர்த்து இத்துடன் எஞ்சியுள்ள சரக்கினை பொடித்துக் கலந்து, காய்ச்சி பதத்தில் வடிக்கவும். வடிகலத்தில் கஸ்தூரி, குங்குமப்பூ, தூள் செய்து கலந்து வைக்கவும். இத்தைலத்தை ஒரு மாதம் வரை நெற்புடத்தில் வைக்கவும்.</p><p><strong>உபயோகிக்கும் முறை:</strong><br>வெளிப்பூச்சு மற்றும் தேய்த்தும் குளிக்கலாம்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>• உடம்பில் தேய்க்க ஆமவாதமும் ஆவர்த்த வாதமும் தீரும்.<br>• மூக்கில் விட தலை நோயும் பீனிசமும் தீரும்.<br>• கொப்பளிக்க பல்லரணை தீரும்.<br>• காதிலிட செவிக்குத்தல் தீரும்.<br>• தினமும் காலையில் தேய்க்க தலைவலி, தலை நோய்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1500 கி<br>2.நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 லி<br>&nbsp;</p><p><strong>செய்முறை :</strong><br>சீரகத்தை இடித்து நீரிற் போட்டு எட்டுக்கு ஒன்றாய் கியாழம் செய்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகத்திற்கு தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.<br>தைலங்கள் தயாரிக்கும் முறைகள்</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>பித்த மயக்கம், கண் நோய், வாந்தி, தலை வலி, மாந்தம் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. மஞ்சட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-74.1 கி<br>2. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -74.1 கி<br>3. சாம்பிராணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-74.1 கி<br>4. தேன் மெழுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-74.1 கி<br>5. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-925.90 மி.லி.<br>6. நீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3703.7 மி.லி.</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெய் மற்றும் நீருடன் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகத்திற்கு மட்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>அடிபட்ட இரத்தக்கட்டு, அடிபட்ட வீக்கம், நரம்பு வலி, எரிச்சல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தலாம்.</p>

<p><strong>தேவையானவை:</strong><br>1. கரிசாலைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2 லி.<br>2. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2 லி.</p><p><strong>செய்முறை :</strong><br>கரிசாலைச்சாறு, நல்லெண்ணெய் இரண்டையும் ஒன்று சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை:</strong><br>அரை முதல் 1 தேக்கரண்டி வீதம் உள்ளுக்கு இரு வேளைகள் உபயோகிக்கலாம். கொடுக்கலாம். ஸ்நானத்திற்கும்</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இரச கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>2. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>3. மயில் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>4. பால் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>5. கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>6. சுத்தி செய்த ரசம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>7. கார்போக அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>8. மிருதார் சிங்கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>9. கஸ்தூரி மஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>10. நீரடி முத்துப்பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>11. காட்டுசீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>12. சுத்தி செய்த கந்தகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>13. தேங்காய்ப் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-தேவையான அளவு</p><p><strong>செய்முறை:</strong><br>1 முதல் 12 வரையுள்ள சரக்குகளை நன்கு பொடித்து தேங்காய்ப் பாலில் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோகிக்கும் முறை:</strong><br>2-5 துளிகள் காலையில் மட்டும் பாலுடன் உள்ளுக்குள் கொடுக்கவும். மேலுக்கும் தடவலாம். கரப்பானுள்ள இடத்தில் மூன்று நாட்கள் வரை தைலத்தைத் தொடர்ந்து கோழியிறகால் தடவி வந்து நான்காம் நாள் உசிலையை அரைத்து தேய்த்து இள வெந்நீரில் குளிக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>கரப்பான், சிரங்கு, சொரி,படை,கொப்பளம் மற்றும் தோல் நோய்கள்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. குப்பைமேனிச்சாறு - 250 மி.லி<br>2. தைவேளைச் சாறு - 250 மி.லி<br>3. கரிசாலைச் சாறு - 250 மி.லி<br>4. மருள் சாறு - 250 மி.லி<br>5. சங்கன்குப்பிச் சாறு - 250 மி.லி<br>6. நத்தைச்சூரிச் சாறு - 250 மி.லி<br>7. கோவை இலைச் சாறு - 250 மி.லி<br>8. கருடக் கொடிச்சாறு - 250 மி.லி<br>9. நன்னாசி இலைச்சாறு - 250 மி.லி<br>10. குருந்தொட்டி இலைச்சாறு - 250 மி.லி<br>11. முடக்கற்றான் சாறு - 250 மி.லி<br>12. வெற்றிலைச்சாறு - 250 மி.லி<br>13. கருஞ்சீரகம் - 5 கி<br>14. கார்கோல் - 5 கி<br>15. துத்தம் - 5 கி<br>16. பவளப்புற்று - 5 கி<br>17. கோஷ்டம் - 5 கி<br>18. சந்தனம் - 5 கி<br>19. தேசாவரம் - 5 கி<br>20. துருசு - 5 கி<br>21. ஜாதிக்காய் - 5 கி<br>22. சீரகம் - 5 கி<br>23. வெள்ளை குங்கிலியம் - 5 கி<br>24. ஜாதிப்பத்திரி - 5 கி<br>25. நல்லெண்ணெய் - 1 லி.</p><p><strong>செய்முறை :</strong><br>எண் 13 முதல் 24 வரையுள்ள சரக்குகளைப் பொடித்தும் 1-12 வரையுள்ள சாறுகளையும் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சவும். துத்தத்தைப் பொடித்து கலந்து பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோகிக்கும் முறை:</strong><br>* வெளி மற்றும் உள் உபயோகம்.<br>* 1-2 மி.லி. வீதம் தினம் 2 வேளைகள் மூன்று நாட்கள் பாலில் அருந்தவும்.<br>* 3 நாட்களுக்கு பால் சாதம் தேங்காயுடன் மட்டும் உணவு சாப்பிடவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>அடிபட்ட காயங்கள், வர்மப் பிடிப்புகள், சுளுக்கு, மண்டையடி தலைவலி முதலியவற்றிற்கு சிறந்தது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. குறுந்தொட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -250 கி<br>2. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -35 கி<br>3. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>4. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி<br>5. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 மி.லி</p><p><strong>செய்முறை:</strong><br>குறுந்தொட்டி வேரை இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு கியாழம் செய்து அதில் சுக்கு, மிளகு, ஏலம் அரைத்துப் போட்டு நல்லெண்ணையுடன் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை:</strong><br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>வாத ரோகங்கள், கீழ் வாயு, தோள்பட்டை வலி முதலியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வெள்ளாட்டுப்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 மி.லி<br>2. எட்டிக் கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -87.5 லி.<br>3. வெள்ளைப் பூண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -87.5 லி.<br>4. ஆயில் பட்டை தோல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-52.5 கி<br>5. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3.2 லிட்டர்</p><p><strong>செய்முறை :</strong><br>வெள்ளாட்டுப் பாலில் எட்டிக் கொட்டையை 28 மணி நேரம் ஊற வைத்தெடுத்து, சீவலாக நறுக்கிக் கொள்ளவும். பின் அத்துடன் உரித்த வெள்ளைப்பூண்டு, ஆயில் பட்டை தோல் இட்டு காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை: &nbsp; &nbsp;</strong> &nbsp;<br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் நோய்கள்: &nbsp;&nbsp;</strong> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br>அனைத்து வாத நோய்கள்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. ஊமத்தன் இலைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -3.5 லிட்டர்<br>2. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; - 1.4 லிட்டர்<br>3. மயில் துத்தம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-350 கி</p><p><strong>செய்முறை :</strong><br>ஊமத்தன் இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி சாறு ஓரளவுக்கு சுண்டியபின் துத்தத்தைப் பொடித்து எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோகிக்கும் முறை:</strong><br>இதனை மேல் பூச்சாக உபயோகிக்கவும். சீழ்வடியும் காதில் போடலாம். துணியில் தடவி புண்ணுக்குப் போடவும்.</p><p><strong>தீரும் நோய்கள் : &nbsp;&nbsp;</strong><br>படை, சொறி, சிரங்கு, துஷ்விரணம், ஊன் வளருதல், கசியும் படை, பிளவை, காதில் சீழ் வடிதல், ஒழுகும் விரணங்கள் ஆகியன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. நொச்சியிலைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.8 லி.<br>2. கரிசலாங்கண்ணிச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.8 லி.<br>3. இந்துப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>4. சிற்றரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>5. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>6. ஆமணக்கு வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>7. குடசப்பாலை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>8. கிரந்திதகரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>9. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.8 கி<br>10. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>11. தேற்றான்கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>12. சதகுப்பைப் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>13. வாய்விடங்கம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>14. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை நன்கு இடித்து தேவையான அளவு வெள்ளாட்டுப் பாலில் அரைத்து மேற்படி சாற்றில் கரைத்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு:</strong><br>வெளி உபயோகம். 8 நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். 4 நாட்களுக்கு ஒருமுறை ஓரிரு துளிகள் மூக்கில் (நசியம் செய்தல்) விடலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தலைக்கனம், தலையில் நீரேற்றம், ஜலதோஷம் மற்றும் அனைத்துவித பீனிச நோய்கள்.</p>

<p><strong>தேவையானவை :</strong><br>1. பொன்னாங்கண்ணிச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.8 லி.<br>2. நல்லெண்ணெய &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-2.8 லி.<br>3. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>4. கரிசாலை சமூலச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.4 லி.<br>5. நெல்லிக்காய் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.4 லி.<br>6. ஆவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -2.8 லி.</p><p><strong>செய்முறை:</strong><br>அதிமதுரத்தைப் பாலிலரைத்துப் போட்டு அத்துடன் சாறுகள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகத்திற்கும் மற்றும் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எல்லாவிதமான கண் நோய்கள், காச நோய், பித்தம், உஷ்ணம் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையானவை :</strong><br>1. புங்கன் வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-700 கி<br>2. தேங்காய்ப் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -700 கி<br>3. தேங்காய் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -175 கி<br>4. இரச கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -7 கி</p><p><strong>செய்முறை :</strong><br>புங்கன் வேர்ப்பட்டை, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் போன்ற சரக்குகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி பதத்தில் பாத்திரத்தில் சுக்கி செய்த இரசக் கற்பூரத்தை போட்டு தைலத்தை ஊற்றி கலந்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை:</strong><br>வெளி உபயோகத்திற்கு மட்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>சொறி, சிரங்கு, புண், புரையேறும் ரணம் ஆகியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. அரசம் பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 கி.கி.<br>2. அத்திப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6 கி.கி.<br>3. வெட்டி வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6 கி.கி<br>4. வெட்பாலை அரிசி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.800 கி.கி.<br>5. வேம்பாளம் பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -600 கி<br>6. வேப்ப எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-30 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்குறிப்பிட்ட பட்டைகளை இடித்து, பொடித்து அவற்றை வேப்ப எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தைலப் பதத்தில் இறக்கி வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை : &nbsp; &nbsp;&nbsp;</strong>&nbsp;<br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>பு மயிர் உதிர்ந்து வழுக்கை விழுவதைப் போக்குகிறது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. விளக்கெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 லி.<br>2. சோற்றுக் கற்றாழைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.6 லி.<br>3. வல்லாரைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 மி.லி.<br>4. களிப்பாக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>5. கடுக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>6. கொடிவேலி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>7. கடுகு ரோகி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>8. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>9. வெங்காயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி</p><p><strong>செயல்முறை :</strong><br>மேற்கண்ட மருந்துச் சரக்குகளைப் பொடித்து விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை:</strong><br>குழந்தைகளுக்கு 1.5 மி.லி. வரை பெரியவர்களுக்கு 5-10 மி.லி. வெந்நீருடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நீர்க்கட்டு, வாயு வீக்கம், மூலச்சூடு, வாயுத் தொல்லை, பொருமல், பித்தம் முதலிய வியாதிகளைப் போக்கும்.</p>

<p>தேவையான பொருட்கள்:<br>1. உளுந்து &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.5 கி.கி.<br>2. தண்ணீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6 லி<br>3. பூனைக்காலி விதைப்பொடி &nbsp; -4 கி<br>4. சதகுப்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>5. பேரரத்தை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>6. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>7. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>8. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>9. வெட்பாலைப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>10. இந்துப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>11. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>12. வசம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>13. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.5 லிட்டர்<br>14. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1லிட்டர்</p><p>செய்முறை:&nbsp;<br>உளுந்தைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி கியாழமாக சுண்ட வைத்து, வடித்து 3 முதல் 12 வரையில் உள்ள சரக்குகளைப் பொடித்து வெள்ளாட்டுப் பாலில் அரைத்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை தானிய புடமாக பத்து நாட்கள் வைத்து எடுக்கவும். (அதாவது தைலத்தை மண்பாத்திரத்தில் ஊற்றி நெல்லில் வைக்கவும்)</p><p>உபயோக முறை : &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br>வெளி உபயோகத்திற்கு மட்டும்.</p><p>தீரும் வியாதிகள்:<br>பலவித வாத நோய்கள், நடுக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையானவை:</strong><br>1. ஆலிவ் எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.333 மி.லி.<br>2. சிரட்டைத் தைலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20.667 மி.லி.<br>3. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-5.617 கி<br>4. எலுமிச்சம் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-20.667 மி.லி.</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை சேர்த்துக் காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை:</strong><br>பாதித்த இடங்களில் தைலத்தைத் தேய்த்து விட்டு சூரிய ஒளியில் படும்படி சிறிது நேரம் வைக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>தோலில் ஏற்படும் வெண்புள்ளிகளுக்கும் மற்றும் தோல் நோய்களுக்கும் சிறந்தது.</p>

<p><strong>தேவையானவை:</strong><br>1. சதுரக் கள்ளிச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 லி<br>2. நொச்சியிலைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 லி<br>3. தழுதாழையிலைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 லி<br>4. எருக்கம் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 லி<br>5. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -6 லி<br>6. ஆமணக்கெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6 லி<br>7. வெள்ளைப்பூண்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>8. பெருங்காயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10 கி<br>9. கந்தகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>10. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>11. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>12. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10 கி<br>13. திப்பிலி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>14. கடுகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10 கி<br>15. வெள்ளாட்டுப் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-6 லி</p><p><strong>செய்முறை :</strong><br>1-6 வரையுள்ள சரக்குகளை கலந்து அத்துடன் 7 - 14 வரையுள்ள சரக்குகளை வெள்ளாட்டுப் பாலில் அரைத்துச் சேர்த்து காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி &nbsp;உபயோகத்திற்கு மட்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>தீராத வாத ரோகங்கள், ஏழு தாதுக்களில் கலந்த திமிர்வாதம், பாரிச வாயு, முடக்கு வாதம், மூட்டு வாதம், சூலைக் கட்டு, தசைப் பிடிப்பு மற்றும் ஊமைக் காயங்கள் ஆகியன தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையானவை:</strong><br>1. குப்பை மேனி இலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>2. ஆமணக்கு எண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;- 400 கி</p><p><strong>தயாரிக்கும் விதம்:</strong><br>குப்பைமேனி இலையை ஆமணக்கெண்ணையில் சேர்த்து சிறு தீயேற்றி கொதிக்க விட வேண்டும். இலையிலுள்ள நீர் வற்றி இலை முறுகலான நிறத்தில் எண்ணெய் மீது மிதக்கும் வேளையில் இலைகளை அகற்றி அவற்றைக் கல்வத்திலிட்டு நன்கு பசை போல் அரைத்து ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை: &nbsp;</strong><br>5-10 மி.லி. உள்ளுக்கு சாப்பிடவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் : &nbsp;</strong><br>குடல் பூச்சிகள் மற்றும் பௌத்திரம்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கையாந்தகரை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.2 கி. கி<br>2. நெல்லிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.2 கி.கி.<br>3. ஆலம் விழுது &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.2 கி. கி<br>4. தழுதாழை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.2 கி.கி.<br>5. தண்ணீர் விட்டான் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; -1.2 கி.கி.<br>6. வாழைக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.2 கி.கி.<br>7. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.2 கி.கி.<br>8. பசுவின் பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.2 கி. கி<br>9. நெய்தற் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி.கி.<br>10. அல்லிக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி. கி<br>11. சந்தனத்தூள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி. கி<br>12. வெட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>13. விலாமிச்சு வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி. கி<br>14. வசம்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>15. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி. கி<br>16. முசுமுசுக்கை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>17. தாமரைப் பூவிதழ் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>18. தூதுவளை வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>19. மஞ்சிட்டு வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>20. கோரைக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>21. சிறு செண்பகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>22. சடாமஞ்சில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>23. தேவதாரு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி. கி<br>24. நன்னாரி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.<br>25. வேங்கைவைரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி.கி.<br>26. அமுக்கராக்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி. கி<br>27. கோஷ்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி.கி.<br>28. கற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.75 கி.கி.<br>29. பெருங்குரும்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி. கி<br>30. சதகுப்பை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -8.75 கி.கி.</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை பால்விட்டரைத்து கரைத்து நல்லெண்ணெயில் விட்டுக் காய்ச்சி பக்குவத்தில் வைத்துக் கொண்டு பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :&nbsp;</strong><br>வெளி உபயோகம் மட்டும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>இதை ஸ்நானம் செய்தாலும் நசியம் பண்ணினாலும் தலை நோய், கண் நோய்கள், செவிடு முதலிய ரோகங்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. அருகம்புல் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-100 கி<br>2. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-200 கி<br>3. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; -100 மி.லி.</p><p><strong>தயாரிக்கும் விதம் : &nbsp; &nbsp; &nbsp;</strong> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br>அருகம்புல்லின் கிழங்கினது தோலையும் கணுக் களையும் நீக்கி உரலிலிட்டு இடித்து சாற்றினை வடித்து அச்சாற்றுடன் நல்லெண்ணெயும் பசும்பாலையும் விட்டு நன்கு கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். தைலப்பதம் வந்தவுடன் இறக்கி வைத்து வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகம் மட்டும்.</p><p><strong>தீரும் நோய்கள் :&nbsp;</strong><br>வாதம், மூலச்சூடு, பற்பல மருந்துகளை உண்டதால் உண்டான உஷ்ணம், ஆண்குறி மற்றும் வயிறு எரிவு, துர்வாசனை மிகுந்த புண்கள், பித்த வியாதிகள், சொறிகள், நீர்க்கோவை என்கிற பீனிசம் முதலிய நோய்கள் நீங்கி விடும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கழற்சி வேர்ப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-700 கி<br>2. தண்ணீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-8.4 லி<br>3. கழற்சி பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-175 கி<br>4. கழற்சி கொழுந்து &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -70 கி<br>5. விளக்கெண்ணை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 லி<br>6. ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>7. பரங்கிப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>8. வால்மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>9. சன்ன லவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>10. நேர்வாளம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>11. ரசகற்பூரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-17.5 கி<br>12. சுத்தமான நீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி</p><p><strong>செய்முறை :</strong><br>கழற்சிப் பட்டையை இடித்து தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி 1500 லி ஆக சுண்ட வைத்துக் கொண்டு கழற்சி இலை, கழற்சிப் பருப்பு இவ்விரண்டையும் நன்கரைத்து எல்லாவற்றையும் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சவும். ஏலம், இலவங்கப்பட்டை, பறங்கிப்பட்டை, வால்மிளகு போன்ற சரக்குகளைப் பொடித்து எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் சுத்தி செய்த நேர்வாளம், இரசக் கற்பூரம் இவ்விரண்டையும் அரைத்து நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை : &nbsp;&nbsp;</strong><br>உள் உபயோகம் மட்டும்.</p><p><strong>அளவு :</strong><br>3 - 5 மி.லி. வீதம் சற்று வெதுப்பி காலையில் ஒரு வேளை மட்டும் கொடுக்கலாம்.<br>நோயின் தன்மைக்கேற்ப 3 முதல் 5 நாட்கள் வரை கொடுக்கலாம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>விரைவாயு, விரைவீக்கம், உடம்பு வீக்கம், அடிக் குடலைப் பற்றி வாயு, மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -1.4 கி.கி<br>2. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.4 கி.கி<br>3. இளநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>4. தாமரை வளையம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>5. வெட்டிவேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>6. சந்தனவேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>7. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>8. கஸ்தூரி மஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>9. தேற்றான் கொட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>10. கோரைக் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>11. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>12. 12.ஏலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>13. பூலாங்கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>14. பச்சிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>15. செங்கழுநீர் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>16. தண்ணீர் விட்டான் கிழங்கு &nbsp; &nbsp; &nbsp;-4 கி<br>17. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>18. மஞ்சிட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>19. செண்பக மொக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>20. புனுகுச் சட்டம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி<br>21. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -4 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>நெ.4 முதல் 19 வரையிலான சரக்குகளை பொடித்து வைக்கவும். நெ. 1-3 வரையுள்ள சரக்குகளை சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சவும்.<br>பொடித்த சரக்குகளை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும். வடிகலத்தில் புனுகுச் சட்டம், குங்குமப்பூ இவ்விரண்டையும் பொடித்துச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகம் மற்றும் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சுவாசத்தைத் தடுக்கும் பீனிசம், இரத்த பீனிசம், திரவிழு தல் முதலிய 18 வகை பீசினங்கள் கண் திமிரம் ஆகியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இஞ்சிச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 மி.லி.<br>2. முசுமுசுக்கை சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 மி.லி.<br>3. கையாந்தகரைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 மி.லி.<br>4. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 மி.லி.<br>5. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-800 மி.லி.<br>6. சந்தனம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-87.5 கி<br>7. மிளகு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -87.5 கி<br>8. குங்குமப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -87.5 கி<br>9. வெட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -17.5 கி<br>10. சாம்பிராணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-3.5 கி</p><p><strong>தயாரிக்கும் விதம்:</strong><br>இஞ்சிச்சாறு, முசுமுசுக்கைச் சாறு கையாந்தகரைச் சாறு, நல்லெண்ணெய், பசுவின் பால் இவ்வனைத்தையும் தைலப் பாத்திரலிட்டு சந்தனக் கட்டையும் மிளகும் பசும்பால் விட்டரைத்து அந்த எண்ணெயில் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகலத்தினுள் குங்குமப்பூ வெட்டி வேர் சாம்பிராணி இம்மூன்றையும் பொடித்து தூவி இதில் வடித்தெடுத்து வைத்த தைலத்தை பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளிஉபயோக முறை.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இத்தைலத்தால் ஸ்நானஞ் செய்ய உச்சந்தலை நோய் வாதத்தாலுண்டாகிய தேகக் கடுப்பு, அதிகரித்த காது நோய்கள், முகநோய், கப நோய் போன்ற நோய்கள் குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கரிசாலைச் சாறு &nbsp; &nbsp; &nbsp; -100 கி<br>2. நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-900 கி</p><p><strong>செய்முறை :</strong><br>கரிசாலைச் சாறு, நல்லெண்ணெய் இவ்விரண்டையும் தலப் பாத்திரத்திலிட்டுத் தீபாக்கினியால் எரித்து க்குவமாக வடித்து வைக்கவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>காலை, மாலை 1 அவுன்ஸ் வீதம் உட்கொள்ள காச ராகம் குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. விளக்கெண்ணெய &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி<br>2. வாழைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி.<br>3. இளநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 மி.லி<br>4. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 மி.லி<br>5. பறங்கிப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-185 கி<br>6. கொத்தமல்லி விதைகள் &nbsp; &nbsp; &nbsp;-105 கி<br>7. பலப்பத்தூள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-105 கி<br>8. சீரகத்தூள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-35 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>விளக்கெண்ணெய், வாழைச்சாறு, இளநீர் மற்றும் பசும்பாலைப் பாத்திரத்தில் விட்டு மெதுவாக எரித்து, மெழுகு பதத்தில் வடித்து சூடு ஆறுவதற்கு முன்பு நன்கு சலித்து சுத்தம் செய்த பறங்கிப்பட்டைத் தூளை கொத்த மல்லி விதைத் தூள், சீரகத் தூள் மற்றும் பலப்பத்தூள் அதில் தூவி மத்தித்து வைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>5-8 மி.லி. அதிகாலையில் அல்லது இரவு உணவிற்குப் பின் அருந்தவும். ஒரு மண்டலம் (48 நாள்) வரை குடிக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>உட்சுரம், தேகச்சூடு, உஷ்ணம் முதலியன தணிந்து குளிர்ச்சி உண்டாக்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. துளசிச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி<br>2. திருநீற்றுப் பச்சிலை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி<br>3. 3.நல்லெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி<br>4. பசும்பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -800 கி<br>5. விளக்கெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-1.6 கி<br>6. மஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>7. மரமஞ்சள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>8. சுக்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>9. முத்தக்காசு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>10. வெட்டி வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>11. விலாமிச்சம் வேர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>12. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>13. அதிமதுரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>14. கற்கடக சிருங்கி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>15. லவங்கப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>16. வலம்புரிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>17. ஜாதிக்காய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>18. தக்கோலம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>19. சடாமஞ்சில் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>20. ஓமம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>21. பறங்கிப்பட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>22. செண்பகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>23. கசகசா &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>24. அதிவிடயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>25. கடுகு ரோகிணி &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>26. தேவதாரம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி<br>27. சந்தனக்கட்டை &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -10.5 கி<br>28. சிறுநாகப்பூ &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-10.5 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>மேற்கண்ட கடைச்சரக்குகளைப் பசும்பாலில் அரைத்து நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் துளசிச் சாறுடன் காய்ச்சி பதத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>உள் மற்றும் வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் வியாதி :</strong><br>கிரந்தி, சூலை, வயிற்றெரிவு, நெஞ்சு நோய், தே<br>வறட்சி, நீர்க்கடுப்பு குணமாகும். தேகம் குளிரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. விளக்கெண்ணெய் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி.<br>2. வாழைச்சாறு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-500 மி.லி.<br>3. இளநீர் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -500 மி.லி.<br>4. சீரகம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;-70 கி<br>5. பால் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; -தேவையான அளவு.</p><p><strong>செய்முறை:</strong><br>கீழா நெல்லி சமூலத்தை இடித்து சாறு எடுத்து வாழைத் தண்டுச்சாறும், நல்லெண்ணெய், ஆவின் பால் மற்றும் சீரகம் அரைத்துப் போட்டு காய்ச்சி மெழுகு பதமாய் வடித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பித்த வெட்டை, மஞ்சட்காமாலை, வாந்தி, மயக்கம், வாய் நீரூறல், உட்சுரம், நடுக்கம் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இலவங்கம்-10 கி<br>2. சிறுநாகப்பூ-20 கி<br>3. ஏலம்-40 கி<br>4. மிளகு-80 கி<br>5. திப்பிலி-160 கி<br>6. சுக்கு-320 கி<br>7. அமுக்கரா-640 கி<br>8. சர்க்கரை-1280 கி</p><p><strong>செய்முறை :</strong><br>இவற்றைத் தனித்தனியே பொடித்துச் சலிக்கவும். சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்."</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>தினம் இருவேளை 1-2 கிராம் வரை தேன், பால் அல்லது வெந்நீருடன் கொடுக்க ஈரல் நோய், குத்து வாய்வு, வெள்ளை, வறட்சி, கைகால், எரிவு, கபம், இரைப்பு, இளைப்பு, சயம், விக்கல், பாண்டு ஆகியன தீரும். உடல் பருக்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கொடிவேலி வேர்-35 கி<br>2. திரிகடுகு-35 கி<br>3. ஓமம்-35 கி<br>4. சிறுதேக்கு-35 கி<br>5. ஆனைத் திப்பிலி-35 கி<br>6. கோஷ்டம்-35 கி<br>7. இந்துப்பு- 35 கி<br>8. பெருங்காயம்-70 கி<br>9. வசம்பு சுட்ட கரி-70 கி<br>10. கடுகு-70 கி<br>11. சர்க்கரை-455 கி</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>1-11 வரையுள்ள சரக்குகளையும் சூரணித்து அனைத்து சூரணங்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நீரில் சாப்பிட மாந்தம், கழிச்சல் தீரும். தேனில் சாப்பிட சன்னி மற்றும் சீதளமும், பனை வெல்லத்தில் சாப்பிட வயிற்று நோய் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. பருத்தி விதை-3.5 கி<br>2. கிராம்-10.5 கி<br>3. கல்லுப்பு-10.5 கி<br>4. கருவேப்பிலை-10.5 கி<br>5. திரிகடுகு-35 கி<br>6. சீரகம்-35 கி<br>7. ஓமம்-35 கி<br>8. இலவங்கப்பத்திரி-35 கி</p><p><strong>செய்முறை :</strong><br>இவற்றைத் தனித்தனியே இடித்து சூரணித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி, மாந்த குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அஜீரணம் நீங்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. நிலாவரை-10 கி<br>2. சுக்கு-10 கி<br>3. மிளகு-10 கி<br>4. ஓமம்-10 கி<br>5. வாய்விடங்கம்-10கி<br>6. சர்க்கரை-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொடித்து சலிக்கவும். பின் அவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>ஒன்று முதல் இரண்டு கிராம் வரை வெந்நீருடன் இரு வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வாயு, பொருமல், விம்மல், விக்கல், வெப்பநோய், உடல், எரிச்சல், வாந்தி, மலக்கட்டு, பித்தம் முதலியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. பறங்கிப்பட்டை-100 கி<br>2. கருந்துளசிச் சாறு-50 மி .லி<br>3. சர்க்கரை- 100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த பரங்கிப் பட்டையைக் கருந்துளசிச் சாற்றில் ஊறவைத்து உலர்ந்த பின் பொடித்து சலித்து வைக்கவும். பின் சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்து கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1-2 கிராம் வரை சர்க்கரையும் பாலும் சேர்த்து தினம் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>மேகம், வெண்குஷ்டம், கருங்குஷ்டம், தோல் நோய்கள் ஆகியன குணமாகும். ஒளி துலங்கும். பசியெடுக்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. வஸ்திர காயம் செய்யப்பட்ட சீந்தில் பொடி-350கி<br>2. மஞ்சட் கரிசாலை சூரணம்-350கி<br>3. நாகப் பூச்சி சூரணம்-105கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சூரணங்களை நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 கிராம் தேனுடன் உண்ணவும்.</p><p><strong>குணமாகும் நோய்கள் :</strong><br>சர்க்கரையுடன் கலந்து உண்ண மயிர்வெட்டு, புழுவெட்டு, பொடுகு, சுரம் மற்றும் கண்ணில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்தும். நீரிழிவு நோய்க்குச் சிறந்தது.</p>

<p><strong>தேவையானவை :</strong><br>1. தாளிச பத்திரி-10கி<br>2. &nbsp;இலவங்கப்பட்டை-10கி<br>3. ஏலம்-10கி<br>4. சுக்கு-10கி<br>5. அதிமதுரம்-10கி<br>6. பெருங்காயம்-10கி<br>7. நெல்லி முள்ளி-10கி<br>8. கோஷ்டம்-10கி<br>9. &nbsp;திப்பிலி-10கி<br>10. சீரகம்-10கி<br>11. சதகுப்பை-10கி<br>12. கருஞ்சீரகம்-10கி<br>13. திப்பிலிக்கட்டை-10கி<br>14. கிராம்பு-10கி<br>15. ஜாதிபத்திரி-10கி<br>16. கற்கடக சிருங்கி-10 கி<br>17. ஜாதிக்காய்-10 கி<br>18. தான்றிக்காய்-10 கி<br>19. கடுக்காய்- 10 கி<br>20. சடாமஞ்சில்-10 கி<br>21. மிளகு- 10 கி<br>22. சிறுநாகப்பூ-10 கி<br>23. செண்பக மொட்டு-10 கி<br>24. வாய்விடங்கம்- 10 கி<br>25. இலவங்கப்பத்திரி-10 கி<br>26. ஓமம்-10 கி<br>27. &nbsp;தனியா-60 கி<br>28. சர்க்கரை-120 கி</p><p><strong>செய்முறை :</strong><br>எல்லா சரக்குகளையும் இளவறுப்பாக வறுத்து பொடித்து சலித்து வைக்கவும், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து முன்பு சூரணித்த சரக்குகளுடன் நன்கு கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 - 2 கிராம் தேனுடன் தினமும் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>வாத, பித்த, கப நோய்கள், சொறி சிரங்கு, வயிற்றெரிவு, குன்மம், வயிற்று வலி, நீர்ச்சுருக்கு, காமாலை, சுரம், வாயில் நீர் சுரத்தல், வெள்ளை, தாகம், பொருமல், காதிரைச்சல், இருமல், கைகால் குடைச்சல், வெப்பம், தொண்டைக்கட்டு, நீர்க்கட்டு, மயக்கம், நீர்க்கடுப்பு, நெஞ்செரிப்பு, கைகால் கடுப்பு, நீர் எரிச்சல், அஜீரணம் முதலியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. தோல் நீக்கிய சுக்கு-200 கி<br>2. மிளகு-200 கி<br>3. திப்பிலி-200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட மூன்றையும் எடுத்து சுத்தம் செய்து தனித் தனியே இடித்து சலித்து பிறகு ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>தினமும் 2-3 வேளைகள் 1 - 2 கிராம் வரை தேன், நெய் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.</p><p><strong>குணமாகும் நோய்கள்:</strong><br>பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கடுக்காய்த் தோல்-200 கி<br>2. விதை நீக்கிய நெல்லி வற்றல்- 200 கி<br>3. தான்றிக்காய்த் தோல்-200 கி</p><p><strong>செய்முறை:</strong><br>மூன்றையும் தனித்தனியே இடித்து, சலித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 முதல் 3 கிராம் வரை 2 - 3 வேளைகள் தேன் மற்றும் நெய்யுடன் கலந்து கொடுக்க கண் ஒளி பெறும். சுடு தண்ணீருடன் கொடுக்க மலச்சிக்கல் குணமாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சூரணத்தைக் கஷாயமாக்கி, புண்களையும், இரணங் களையும் கழுவலாம். நீரும் பீளையும் வடியும் கண்ணைக் கழுவலாம். வாய்ப்புண்ணிற்குக் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. இலவங்கம்-10 கி<br>2. மிளகு-10 கி<br>3. சிறுநாகப்பூ-40 கி<br>4. தாளிசபத்திரி-80 கி.<br>5. கூகைநீர்-160 கி<br>6. சுக்கு-320 கி<br>7. ஏலம்-640 கி<br>8. சர்க்கரை-1270 கி</p><p><strong>செய்முறை :</strong><br>இவற்றைத் தூய்மை செய்து பொடித்து சலித்து பின்னர் சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்துக் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு / தீரும் வியாதிகள்:</strong><br>1 முதல் 2 கிராம் வரை தேனுடன் தினமும் இரு வேளைகள் கொடுக்க வாத, பித்த ரோகம், பித்தவாயு, ஊறல், நச்சுக்கடி, எலும்புருக்கி, சொறி, சிரங்கு ஆகியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சிறுகுறிஞ்சான்-10 மி.கி.<br>2. வேப்பிலை-10 மி.கி.<br>3. சீந்தில்-10 மி.கி<br>4. நாவல் கொட்டை-10 மி.கி.<br>5. துளசி-5 மி.கி.<br>6. அத்தி-5 மி.கி.<br>7. பாகற்காய்- 10 மி.கி.<br>8. &nbsp;திரிபலாதி-10 மி.கி.<br>9. கோவைக்காய்- 10 மி.கி.<br>10. கரிசாலை-10 மி.கி.<br>11. 11.அமுக்கரா-10 மி.கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை நன்கு சூரணித்து கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>2 - 5 கிராம் வீதம் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>நீரிழிவு, உடற்சோர்வு, தாகவறட்சி மற்றும் அனைத்து வித சர்க்கரை நோய்கள்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கழற்சி பருப்புத் தூள்-100 கி<br>2. மிளகுத் தூள்-125 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட இரு தூள்களையும் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>300 - 400 மி.கி. வெந்நீரில் &nbsp;உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>விரைவாதம், யானைக்கால் நோய் முதலியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. வல்லாரை-70 கி.<br>2. கிராம்பு-35 கி.<br>3. ஏலம் -35 கி.<br>4. ஜாதிக்காய்-35 கி.<br>5. ஜாதி பத்திரி-35 கி.<br>6. தாளிச பத்திரி-35 கி.<br>7. திரிபலாதி-35 கி.<br>8. மாசிக்காய்-35 கி.<br>9. சர்க்கரை-35 கி.</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>வல்லாரையை பாலிலுலர்த்தி இடித்து பொடித்த சூரணம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய், தாளிசபத்திரி, திரிபலாதி போன்றவற்றைப் பொடித்து ஒன்றாய்க் கலந்து சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவும் தீரும் நோயும் :</strong><br>2 கிராம் முதல் 5 கிராம் வரை திரிகடி பிரமாணம். நெய்யில் உண்ண மேககாங்கை, மூலச்சூடு, உடம்பெரிவு தீர்ந்து தேகம் குளிரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சிவதை வேர்-400 கி<br>2. திரிபலா-100 கி<br>3. திரிகடுகு-100 கி<br>4. ஏலம்-100 கி<br>5. சிறுநாகப்பூ-100 கி<br>6. கோரைக்கிழங்கு-100 கி<br>7. லவங்கம்-100 கி<br>8. பால்-1 லி</p><p><strong>செய்முறை :</strong><br>சிவதை வேரைப் பாலில் வேக வைத்து சுத்திகரிக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியே பொடித்து கலந்து கொள்ளவும்.</p><p><strong>அளவு:</strong><br>2-4 கிராம் தேன் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுக்கலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>மலக்கட்டு, வெப்பு, வாயுத் தொல்லை தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கற்பூரம்-100 கி<br>2. கோஷ்டம்-100 கி<br>3. கல்நார்-100 கி<br>4. ஜாதிக்காய்-100 கி<br>5. குங்குமப்பூ-100 கி<br>6. சந்தனம்-100 கி<br>7. சீரகம்-100 கி<br>8. மல்லி-100 கி<br>9.அமுக்கரா-100 கி<br>10. 10.சீந்தில் சர்க்கரை- 100 கி<br>11. முந்திரி-100 கி<br>12. பேரீச்சை- 100 கி<br>13. சிலாசத்து பற்பம்-100 கி<br>14. நெருஞ்சில் வேர்-100 கி<br>15. வில்வ வேர்-100 கி<br>16. நீர்முள்ளி விதை-100 கி<br>17. இலவம் பிசின்-50 கி<br>18. முத்தக்காசு-100 கி<br>19. விலாமிச்சம் வேர்-100 கி<br>20. இந்துப்பு-100 கி<br>21. வெண்காரம்-100 கி&nbsp;<br>22. ஆவாரை அரிசி-100 கி<br>23. கஸ்தூரி மஞ்சள்-100 கி<br>24. சிறுநாகப்பூ-100 கி<br>25. 25.நிலப்பனக்கிழங்கு-100 கி<br>26. காஞ்சோன் கீரை- 100 கி<br>27. சிவப்பு சந்தனம்-100 கி<br>28. தக்கோலம்-100 கி<br>29. அதிமதுரம்- 100 கி<br>30. வால்மிளகு-100 கி</p><p><strong>தயாரிக்கும் முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை தனித்தனியே பொடித்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்து பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1-2 கிராம் வீதம், 3-4 வேளைகள் தினமும் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களான மூத்திர எரிவு, சீறுநீரகக் கல், நீரிழிவு போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சீரகம்-400 கி<br>2. சர்க்கரை-100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தம் செய்த சீரகத்தை நன்றாக இடித்துத் தூளாக்கி வந்த எடைக்கு, கால் பங்கு, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 கி காலை மாலை 40 நாட்கள் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>கிறுகிறுப்பு, வாந்தி, மந்தம், உஷ்ணம், காங்கை முதலியவை தீரும்.</p><p>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. உலர் திராட்சை-100 கி<br>2. பேரீச்சை-100 கி<br>3. கோரைக் கிழங்கு-100 கி<br>4. காட்டு மிளகு-100 கி<br>5. சந்தனம்-100 கி<br>6. நெற்பொரி-100 கி<br>7. கூகைநீர்-100 கி<br>8. ஏலம்-100 கி<br>9. நற்சீரகம்-100 கி<br>10. வெட்டிவேர்-100 கி<br>11. திரிகடுகு-100 கி<br>12. பேராமுட்டி வேர்-100 கி<br>13. திரிபலாதி-100 கி<br>14. அதிமதுரம்-100 கி<br>15. சிற்றாமுட்டி வேர்-100 கி<br>16. சீந்தில் சர்க்கரை-100 கி<br>17. நிலக்குமிழ் வேர்-100 கி<br>18. நெருஞ்சில் வேர்-100 கி<br>19. விலாமிச்சம் வேர்-100 கி<br>20. மரமஞ்சள்-100 கி<br>21. கிராம்பு-100 கி<br>22. நெய்தல் கிழங்கு-100 கி<br>23. கஸ்தூரி மஞ்சள்-100 கி<br>24. பூலாங்கிழங்கு-100 கி<br>25. தாமரை வளையம்-100 கி<br>26. சர்க்கரை-3.2 கி<br>27. குங்குமப்பூ- 100 கி<br>28. கோஷ்டம்-100 கி<br>29. சிற்றாமல்லி வேர்-100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை தனித்தனியே இடித்து பொடித்து சலித்து அனைத்தையும் ஒன்றுபட கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு:</strong><br>1-2 கிராம் தேனில் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>இளைப்பு, இருமல், பொருமல், சுவாசம், காசம், குன்மம், கொடிய வயிற்று நோய், அரோகம், வாந்தி, பயித்தியம், பாண்டு, சுரத்துடன் கூடிய சயம், ஜன்னி, மயக்கம், நாற்பது வகைப் பித்தம் இவை தீரும்.</p>

<p>பற்பம் என்பதற்கு நீறு அல்லது சாம்பல் என்று பொருள். இச்செய்முறையால் பக்குவத்தப்பட்டவைகள் பெரும்பாலும் வெண்ணிறமாகவே அமைவதால் இவைகள் இப்பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகின்றன. பற்பங்கள் புடமிட்டு தயாரிக்கப்படுகின்றன.<br>மிகக் கடினமானவையும் எளிதில் உட்கொள்ள முடியாததுமான உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றைச் சில மூலிகைச் சாறுகளாலாவது, உப்புப் புகை நீரினாலாவது (திராவகத்தில் அரைத்து புடமிட்டாவது) எரித்தாவது, ஊதியாவது, வெளுக்கும்படி செய்து எடுத்துக் கொள்வதே இதன் செயல்முறையாகும்.</p><p><strong>செய்முறை :</strong><br>பற்பம் செய்யும் செயல்முறை சோதனம் (சுத்தி செய்தல்) மாரணம் (மடியச் செய்தல்) என இரு பிரிவுகளாகக் கொண்டது.</p><p>புடமிட வேண்டிய பொருட்களில் இயற்கையாகவும், பலவிதமான செயற்கைக் காரணங்களினாலும் அமைந் துள்ள கசடுகளை சில குறிப்பிட்ட செயல்முறைகளுக்கு உட்படுத்தி அகற்ற சோதனம் (சுத்தி செய்தல் (அல்லது) தூய்மையாக்கல்) என்றும் மேற்படி தூயதாக்கியவற்றை பற்பல மூலிகைச் சாறுகள் (அல்லது) உப்பப் புகை நீர்கள் (திராவகங்கள்) ஜெயநீர்களால் அரைத்து முறைப்படி பன்முறை புடமிட்டு நீராக்குவதை மாரணம் (மடியச் செய்தல்) என்றும் கூறுவர். பழுக்கக் காய்ச்சி குறிப்பிட்ட திரவத்தில் தோய்த்தல், ஊற வைத்தல் என பொருள்களுக்கேற்ப சோதனம் பல வகைப்படும். ஆனால் பற்பமாக மாற்றும் மாரண முறை சற்றேறக்குறைய எல்லாப் பொருட்களுக்கும் பொதுவானதே. ஏனெனில் அவைகள் எல்லாமே புடமிடும் செயல்முறைகளால் பற்பமாக்கப்படுகின்றன. முதலில் சுத்தி செய்த பொருட்களைக் கல்வத்திலிட்டு நன்கு அரைப்பதற்கு ஏற்ற வண்ணம் நன்கு பொடித்துச் சலித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றைக் கல்வத்திலிட்டு செய்முறையில் குறிப்பிட்ட கால அளவு வரை அரைத்துச் சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். வில்லைகள் ஈரம் இருந்தால் பற்பத்தின் நிறம் சரியாக அமையாது. நன்கு உலர்ந்த வில்லைகளை மண்அகலில் பரப்பி அதே அளவுள்ள மற்றோர் அகலால் மேலே கவிழ்த்து மூடி அவைகளை சேரும் இடத்தை சீலை மண் கொண்டு பூசி உலர்ந்த பின் உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றின் உருகு நிலைக்கேற்ப நிர்ணயித்துள்ள புடங்களில் அமைத்துப் பக்குவப்படுத்த வேண்டும். (புடமிடல் வேண்டும்) புடம் நன்கு ஆறிய பின்னரே அகல்களையும் அவற்றினுள் இருக்கும் மருந்துப் பொருள்களையும் பிரித்தெடுத்தல் வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். புடமிட்ட வில்லைகளை அகலில் அடுக்கும் போது அவற்றைக் குவியலாகவோ அல்லது இரண்டு அடுக்குகளுக்கு அதிகமாகவோ அமைத்தல் கூடாது. அப்போதுதான் வெப்பம் நன்கு செயல்படும். பற்பமும் நன்கு அமையும். பயன்படுத்தும் அகல்கள் மருந்தின் அளவுக்குத் தேவையான அளவைவிட மிகப் பெரியதாகவும் அதிக ஆழம் உள்ளதாகவும் இருத்தல் கூடாது. அரைப்பின் தரத்திற்கேற்பவே பற்பங்களின் நிறம், குணம், நுண்மை முதலியன சிறந்து அமையும். ஆதலால் அவற்றை நன்கு அரைக்க வேண்டியது அவசியமாகிறது." மிதமான காற்றோட்டமுள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கு பூமியில் வட்ட வடிவமான குழிகளை வெட்டி குழிகளை மண் சரியாத வண்ணம் அவற்றைச் சுற்றிலும் செங்கற்களைக் கொண்டு கட்டி எரிபொருளை அமைத்துப் புடமிட வேண்டும். புடங்களில் வரட்டிகளே எரிபொருளாக உபயோகிக்கப் படுகின்றன. எனினும் சில பற்பங்களுக்கு சில வகை மரப்பட்டைகள் ஆட்டுச் சாணம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டுமென நூல்களில் கூறப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் வரட்டிகளில் மண் போன்ற கலப்படங்கள் அதிகமாயுள்ளன. ஆகையால் இம்முறை களில் பொருட்களுக்கு ஏற்ப வெப்ப நிலையை ஆராய்ந்து நிர்ணயித்து அதற்கேற்ப எண்ணிக்கையைக் கூட்டியோ குறைவாகவோ வரட்டிகளை அவ்வப்போது உபயோகிக்க வேண்டும். இதில் அனுபவம் இன்றியமையாததாகும். பழக்கத்தின் வாயிலாகவே நிதானம் ஏற்படும். இவ்விதம் நிர்ணயித்த அளவு வரட்டிகளின் அளவில் பாதிப் பகுதியைக் குழியில் பரப்பி அடுக்கி அவற்றிற்கு நடுவே சீலை செய்து உலர்த்திய அகல்களை வைத்து அதன் மேல் எஞ்சியுள்ள வரட்டிகளைப் பரப்பி மேல்பாகத்தில் தீயிடவும். மூடி கடும் வெப்பத்தைப் பொறுக்காத கந்தகம், தாளகம் போன்றவைகளைக் குறிப்பிட்ட சில தாவரச் சாம்பல்களில் மணல் மறைத்துப் புடமிடுவது வழக்கம். அவ்விடங்களில் செய்முறையில் குறிப்பிட்டுள்: சாம்பலை அகல்களில் பரப்பி அதன் மேல் உலர்ந்த வில்லைகளை வைத்து அதன் மேல் அதே சாம்பல் கொண்டு மூடி மறைத்து மேலே அகல் இட்டு மூடி, சீலை செய்து, உலர்ந்த பின் புடமிட வேண்டும். ரசம், லிங்கம், வெள்ளைப் பாஷாணம், கந்தகம், தாளகம், மனோசீலை போன்ற வெப்பம் தாங்காத பொருட்களைச் சேர்த்து வேறு பொருட்களை பற்பமாக்கும் போது அகல்கள் சேருமிடத்தை நன்கு சீலைமண்ட பூசி புடமிடும் போது அவற்றை வீணாக்காமல் வெளியேற விடாது செய்திடல் வேண்டும். பொருட்களின் உருகுநிலை மற்றும் ஆவியாகும் நிலைகளுக்கு ஏற்பவே புடங்கள் வேறுபடுகின்றன. தங்கம், வெள்ளி, காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் இவைகள் பற்பமாக குறைந்த அளவு வெப்பம்தான் தேவைப்படு கிறது . தீ அதிகமானால் அவைகள் கற்கள் போல் கடினமாகிவிடுகின்றன. எனவே சிறு தீயில் ஆரம்பித்து அதிகத் தீயைத் தாங்கும் அளவிற்கு அவற்றை முறைப்படி பக்குவப்படுத்த வேண்டும். அப்பிரகம், அயம், மண்டூரம், பொன்னிமிளை, காந்தம், தாமிரம் போன்றவைகளுக்குத் தீவிரமாக அதிக வெப்பம் தேவைப்படுகிறது. ரசம், தாளகம் போன்றவைகளுக்கோ மிகமிகக் குறைந்த உஷ்ணமே தேவைப்படுகிறது. அப்பிரகம், தாமிரம், நாகம், அயம், தங்கம், வெள்ளி போன்றவை புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக குணத்தில் சிறந்து விளங்குகின்றன. பவளம், முத்து, முத்துச் சிப்பி, பலகரை, சங்கு, ரத்தினங்கள், உபரத்தினங்கள் ஆகியன புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நற்குணங்கள். இழக்கின்றன. முத்துச் சிற்பி, சங்கு, பலகரை போன்ற பற்பங்களின் காரம் சிறிது அடங்க அவற்றை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி பொடித்து உபயோகித்தல் வேண்டும். இது அவற்றிலுள்ள நாக்கைப் புண்ணாக்கும் சுண்ணாம்புக்குச் சமமான கூரிய சக்தியைக் குறைக்கும்.</p>

<p>1. பொதுவாகப் பற்பங்கள் வெண்ணிறமுடையவை. விதி விலக்குகளும் உண்டு. உதாரணமாக தங்க பற்பம் இள மஞ்சள் நிறமுடையது.</p><p>2. பற்பங்கள் பெரும்பாலும் மணம், சுவை அற்றன.</p><p>3. உலோகப் பளபளப்பு சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.</p><p>4. பற்பங்கள் நாட்கள் ஆக ஆக சக்தி வாய்ந்தவைகள் ஆகிவிடுகின்றன. பண்பியல் சோதனைகளை பற்பங்கள் நன்கு முடித்துள்ளனவோ என்று அறிய கீழ்க்காணும் சோதனை முறைகள் சித்த மருத்துவ நூலில் வரையறுக்கப் பட்டுள்ளன.</p><p>******************************************************************************</p><p>1. பற்பத்தில் உலோகத் தலுக்கு மினுமினுப்பு சிறிது கூட இருத்தல் கூடாது. அதாவது</p><p>2. பற்பத்தை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் இட்டு தேய்த்தால் பற்பம் விரல்களின் ரேகை இடுக்குகளில் பதிய வேண்டும். அதாவது அவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும்.</p><p>3. சிறிதளவு பற்பத்தை நீரின் மேலிட்டால் உடனே அது நீரில் மூழ்கக் கூடாது. தண்ணீரில் மிதக்கும். மேற்படி பற்பத்தின் மீது நெல் போன்ற தானிய மணியை மெதுவாக வைக்க அதையும் சுமந்து கொண்டு பற்பம் நீரில் மூழ்காமல் மிதந்து வர வேண்டும்.</p><p>4. பற்பத்தைத் தீயிலிட்டு ஊதினால் அதனின்றும் பற்பம் தன்னுடைய பழைய மூலப்பொருள் நிலைக்குத் திரும்பக் கூடாது.</p><p>5. பற்பத்திற்கு பேதமான (வித்தியாசமான) சுவை இருக்கலாகாது. பாதுகாப்பு முறையும் காலக் கெடுவும்: சுத்தமான ஈரப்பதமற்ற கண்ணாடிக் குடுவையில் காற்றுப்புகா வண்ணம் இவற்றை மூடி வைத்தல் வேண்டும். பற்பங்கள் நூறு ஆண்டுகள் வரை எண்ணம் உடையவை.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தித்த ஆமை ஓடு-300 கி<br>2. உத்தாமணிச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த ஆமை ஓட்டை ஒன்றிரண்டாய் உடைத்து ஒரு சட்டியிலிட்டு உத்தாமணிச் சாற்றை நிரப்பி அகலால் மூடி சீலை செய்து 100 விரட்டிகளைக் கொண்டு புடமிடவும். ஆறிய பிறகு ஆமை ஓட்டைப் பொடித்து கல்வத்திலிட்டு உத்தாமணிச் சாற்றால் நன்கு அரைத்துவில்லைகள் தட்டி உலர்ந்த பின் 100 வரட்டிகளைக் கொண்டு புடமிட்டெடுக்க வெண்ணிற பற்பமாகும். தேவையானால் மேலும் ஒன்றிரண்டு புடங்களிடலாம்.'</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>100 - 200 மி.கி. தேன் (அல்லது) பசும்பால் மற்றும் பொடுதலைக் குடீநீர், பேய்மிரட்டி இலைக் குடிநீர் மற்றும் ஓமக் குடிநீருடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இதனால் மாந்தம், குழந்தைகளின் மாந்த பேதி குணமாகும்.</p>

<p><strong>தேவையானவை:</strong><br>1. கந்தகம் -பற்பம் செய்யத் தேவையான அளவு<br>2. பால் - சுத்தி செய்யத் தேவையான அளவு<br>3. குப்பைமேனிச்சாறு -தேவையான அளவு<br>4. மருதம்பட்டை செயநீர் - தேவையான அளவு<br>5. மருதம்பட்டை சாம்பல் - தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த கந்தகத்தை ஓர் அகலில் வைத்து மருதம்பட்டை செய்ய நீரால் சுருக்கிடவும். இது ஓரளவுக்கு கட்டாகும். பின் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு குப்பைமேனிச் சாற்றால் அரைத்து வில்லைகள் தட்டிஉலர்ந்த பின் வில்லைகளை ஒரு அகலில் மருதம்பட்டை சாம்பலுக்குள் மறைத்து சிறு தீயால் எரிக்கவும். கந்தக வாசனை வரும்போது எரிப்பை நிறுத்திக் குளிர வைக்கவும். ஆறிய பின் வில்லைகளை எடுத்துத் திருப்பி வைத்து மறுபடியும் சிறு தீயால் எரிக்கவும். பின் குளிர்ந்த வில்லைகளை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>25 -50 மி.கி. வரை நெய் அல்லது எண்ணெயுடன் தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>சொறி, சிரங்கு, தோல் மரப்பு, தேமல், தேகப்பட்டை, குஷ்டம், பௌத்திரம் ஆகியவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வெள்ளை குங்கிலியம்-700 கி<br>2. இளநீர்-7 எண்ணிக்கை</p><p><strong>செய்முறை:</strong><br>இளநீரை ஒரு பாத்திரத்திலிட்டு அதில் 700 கிராம் வெள்ளை குங்கிலியத்தை சேர்த்து அடுப்பிலேற்றி எரித்துக் கொண்டே கிளறி வர குங்கிலியம் உருகும். உருகிய குங்கிலியத்தை ஆற வைத்து உடைத்துப் போட்டு அதில் இளநீர் சேர்த்து முன்போல் ஏழுமுறைகள் செய்து எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து வைக்கவும்.</p><p><strong>அளவு:</strong><br>200-500 மி.கி. வரை நெய் அல்லது வெண்ணெய் அல்லது இளநீருடன் மற்றும் சீத வீரிய மூலிகைகளின் சாறுகள் (அல்லது) குடிநீருடன் தினம் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வெள்ளை, நீர் எரிவு, நீர்க்கட்டு, வெட்டை, சீதபேதி இவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. முத்துச்சிப்பி-150 கி<br>2. ஆடாதோடா இலைச்சாறு-தேவையான அளவு<br>3. நொச்சியிலைச் சாறு-தேவையான அளவு<br>4. நிலப்பனைச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த முத்துச் சிப்பியைக் கல்வத்திலிட்டு ஆடாதோடா இலைச்சாறு கொண்டரைத்து ஒரு புடம், நொச்சி இலைச்சாறு கொண்டரைத்து ஒரு புடம், நிலப்பனைச் சாறு கொண்டு அரைத்து ஒரு புடம் இடவும். 150 கிராம் எடையுள்ள முத்துச் சிப்பியைப் புடமிட 30 வரட்டிகள் போதுமானது.</p><p><strong>அளவு :</strong><br>200-400 மி.கி. வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் தினம் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மூலம், பவுத்திரம் முதலியவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. நண்டுக்கல் (அ) கல்கண்டு- தேவையான அளவு<br>2. கல் சுண்ணாம்பு-தேவையான அளவு<br>3. முள்ளங்கிச் சாறு-தேவையான அளவு<br>4. பூநீறு-தேவையான அளவு<br>5. சிறு பீளைச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>கல்நண்டை, கல் சுண்ணாம்பு தெளிவு நீர் மற்றும் பூநீறு கரைத்த நீர் இவற்றில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து தண்ணீரில் அலசி, சுத்தப்படுத்திக் கொள்ளவும்.<br>பின் சுத்தி செய்த கல்நண்டை முள்ளங்கிச் சாற்றில் 3 நாட்கள் அரைத்து புடமிடவும்.<br>பின் சிறுபீளை சாற்றில் 3 நாட்கள் புடமிடவும். பின் எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>200 - 400 மி.கி. வீதம் முள்ளங்கி சாறு அல்லது சிறு பீளைச் சாற்றில் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நீர்க்கடுப்பு நீங்கும். சிறுநீரகக் கல்லைக் கரைத்து, சிறுநீர் நன்கு பிரியும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. நத்தை-புடமிடத் தேவையான அளவு<br>2. துத்தியிலைச்சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>நத்தைகளை அழுக்கு போக சுத்தம் செய்து ஒரு பானையில் பாதி அளவுக்கு அவற்றை நிரப்பி பானையை வாய்க்குப் பொருத்தமான ஒரு அகலைக் கொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் புடமிடவும்.<br>ஆறிய பின் பானையில் இருக்கும் நத்தையின் சாம்பலை எடுத்துக் கல்வத்திலிட்டுத் துத்தியிலைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகளைத் தட்டி உலர்ந்த பின் புடமிடவும். இதே போல் பற்பம் வெண்மையாகும் வரை இரண்டு அல்லது மூன்று முறை புடமிடவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>200 -400 மி.கி. வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இரத்த மூலம், சீதபேதி, ஆசனக் கடுப்பு முதலியவை நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. நற்பவளம்- 35 கி<br>2. கரும்பு ரசம் -420 கி</p><p><strong>செய்முறை:</strong><br>சுத்தி செய்த நற்பவளத்தினைக் கரும்பு ரசம் விட்டு நன்றாக 7 நாள் அரைத்து வில்லை செய்து, உலர்த்தி ஓட்டிலிட்டு சீலை செய்து 34 வரட்டியில் புடமிட்டு, ஆறவிட்டு எடுக்க பற்பமாகும். 4</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>50 மி.கி. தேனில் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>ஈளை,கபம்,விக்கல், சுரம், சுவாசம் இவை தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. பலகரை-1.1 கி.கி.<br>2. எலுமிச்சம் பழம்-50</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த பலகரையைக் கல்வத்திலிட்டு 50 எலுமிச்சம் பழங்களின் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 150 வரட்டிகளைக் கொண்டு புடமிடவும். இவ்வாறு 2 அல்லது 3 புடங்களிட பலகரை வெண்ணிற பற்பமாகும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>50 -100 மி.கி. வரை நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>வெட்டை, மேகச்சூடு, நீர்க்கட்டு, சூலை, சதையடைப்பு, விஷம், வயிறு விஷமித்தல் போன்ற நச்சு நிலைகள் நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. நத்தை -பற்பம் செய்யத் தேவையான அளவு<br>2. குமரிச் சாறு -பற்பம் செய்யத் தேவையான அளவு<br>3. கரிசாலைச்சாறு - பற்பம் செய்யத் தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>நத்தைகளை அடிகனத்த சட்டியிலிட்டு உலையில் வைத்து ஊதி நாகம் உருகும் போது கரிசாலைச் சாற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நாகம் பொடியாகும் வரை வறுத்து எடுக்கவும். இந்த நாகப்பொடியைக் கல்வத்தி லிட்டு குமரிச்சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் புடமிடவும். இதே போன்று மூன்று அல்லது நான்கு புடங்களிட பச்சை நிறம் மாறி பற்பமாகும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>200 - 400 மி.கி. வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இரு வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>பௌத்திரம், பேதி, மூலம், இளைப்பிருமல், இருமல் ஆகியன குணமாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த படிகாரம்-300 கி<br>2. கோழி முட்டையின் வெண்கரு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த படிகாரத்தை கோழி முட்டையின் வெண்கருவால் இருபத்து நான்கு மணி நேரம் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து புகையாதபடி புடமிடவும்.</p><p><strong>அளவு:</strong><br>200 - 300 மி.கி. வீதம் தினம் இரு வேளைகளுக்கு நெய் அல்லது வெண்ணெயுடன் கொடுக்க, வெட்டை, இரத்த மூலம், நீரெரிவு, நீரடைப்பு, சதையடைப்பு, பெரும்பாடு, வாய்ப்புண் ஆகியவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. மான் கொம்பு-300 கி<br>2. அகத்தி இலைச்சாறு -தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>மான் கொம்புகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியிலிட்டு அகத்தி இலைச்சாற்றை ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊ வைத்து தண்ணீர் விட்டு கழுவி எடுக்கவும், இவ்வாறு ஏழு நாட்கள் செய்ய மான் கொம்பு சுத்தியாகும். சுக்கி செய்த மான் கொம்புகளை அகலில் வைத்து மூடி சிலை செய்து 30 வரட்டிகளில் புடமிடவும். ஆறிய பின் &nbsp;அகலைப் பிரித்து மான் கொம்புகளைக் கல்வத்திட்டு அகத்தி இலைச்சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி பின்னர் 30 வரட்டிகளில் ஒன்று (அல்லது) இரண்டு படங்களிட மான் கொம்பு பற்பமாகும்.</p><p><strong>அளவு:</strong><br>200-400 மி.கி. வீதம் வெண்ணெய் (அல்லது) நெய்யுடன் தினமும் இருவேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>இருமல், மார்பு நோய், பித்தத்தால் வந்த நோய்கள். எலும்புருக்கி நோய் போன்ற நோய்கள் நீங்கும். மேலும் இது மார்பு வலிக்கு சிறந்த மருந்து.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கற்பூர சிலாசத்து-300 கி&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<br>2. சிறு செருப்படைச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த கற்பூர சிலாசத்தைக் கல்வத்திலிட்டு சிறு செறுப்படைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 50 வரட்டிகளில் புடமிடவும். இவ்வாறு மூன்று புடமிட சிலாசத்து பற்பமாகும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>0.5 கி-1 கி. வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மூத்திர எரிவு, வெள்ளை, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, பித்த வியாதிகள், உடலெரிச்சல் ஆகியவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சங்கு-1 கிலோ<br>2. எலுமிச்சம் பழச்சாறு-தேவையான அளவு<br>3. ஆகாயத் தாமரை கல்கம்-5 கிலோ<br>4. ஆகாயத் தாமரைச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சங்கினை எலுமிச்சம்பழச் சாறு கொண்டு சுத்தி செய்த ஆகாயத் தாமரைக் கல்வத்தின் நடுவில் வைத்து உலர்ந்த பின் 50 வரட்டிகளில் புடமிடவும். பின்னர் பொடித்து, ஆகாயத் தாமரை சாற்றில் அரைத்து புடமிட்டு எடுக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>100-200 மி.கி. பால் (அல்லது) நெய் (அல்லது) வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்க, வயிற்றுக் கோளாறுகள், தோல் நோய்கள் முதலியவை நீங்கும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நெய்யுடன் உண்ண உடல் பொன்னிற மடையும். துளசிச் சாற்றில் சாப்பிட நெருப்பு போல் காய்கின்ற வெப்பில் ஜன்னி ஏற்பட்டு கபம் அதிகமாவது தீரும். மற்றும் கண் புகைச்சலும் பைத்தியமும் நெய்யில் உட்கொள்ளத்தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வெங்காரம்-50 கி<br>2. கோழி முட்டை-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த வெங்காரத்தைக் கல்வத்திலிட்டு கோழி முட்டையின் வெண்கருவால் நன்கு அரைத்து வில்லை தட்டி உலர்ந்த பின் 25 வரட்டிகளில் புடமிட வெங்காரம் பற்பமாகும்.</p><p><strong>அளவும் தீரும் நோய்களும் :</strong><br>200 -300 மி.கி. வீதம் வெண்ணெய் நெய் அல்லது இளநீருடன் தினமும் இரண்டு வேளைகளுக்குக் கொடுக்க வெள்ளை, நீர்க்கட்டு சதையடைப்பு, நீரடைப்பு குணமாகும்.<br>&nbsp;</p>

<p>உலோகங்கள், பாஷாணாதிகள், இரச, உபரசங்கள், உப்புகள் ஆகியவற்றை சில வகை மூலிகைச் சாறுகளிலாவது புகை நீரிலாவது அரைத்து புடமிட்டோ அல்லது எரித்தோ அல்லது வறுத்தோ அல்லது நன்கு அரைத்து வெயிலில் வைத்துச் சிவக்கும்படியாக செய்தோ எடுத்துக் கொள்வதே சித்த மருத்துவப்படி செந்தூரம் செய்யும் முறையாகும்.<br>இதில் முறைப்படி நன்கு சுத்தி செய்த மூலப் பொருள்களே செந்தூரம் உபயோகப்படுத்தப்படுகின்றன. செய்ய செந்தூரங்கள் இரண்டு விதமான முறைகளில் செய்யப்படுகின்றன.</p><p><strong>1. குப்பி எரிப்பு அல்லது பதங்கிக்கும் முறை.</strong><br><strong>2. புடமிடும் முறை.</strong></p><p><strong>1. &nbsp;குப்பி எரிப்பு (அல்லது) பதங்க முறை :</strong><br>இம்முறையில் இரசமும், கந்தகமும், பங்கு கொள்வதாக இருந்தால் முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு பொடித்த பின்னர் அத்துடன் ரசத்தை சேர்த்து இரண்டும் கஜ்ஜணி என்று கூறப்படும் கருமை நிறத்தூளாகும் வரை நன்கு அரைத்த பின்னரே அதில் மற்ற சரக்குகளை ஒவ்வொன் றாகக் கலந்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.<br>அவற்றுடன் வெள்ளி அல்லது தங்கம் சேர்வதாக இருந்தால் அவைகளை ரேக்காகச் செய்து கொண்டு முதலில் இரசத்துடன் சேர்த்தரைத்து அதன் பின்னர் கந்தகத்தையும் அதில் அரைத்து கஜ்ஜளியாக்கவும்.<br>இம்முறையில் காசிக்குப்பி அல்லது எனாமல் கிண்ணங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இக்கலங் களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவைகளின் வாய் விளிம்பைத் தவிர மற்ற பாகங்கள் மறையும் அளவிற்கு ஏழு சீலை மண் செய்த துணிகளைக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக சீலை செய்து நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒன்றின் மேல் ஒன்று கவிழ்ந்த நிலையில் வைக்கவும். பின்னர் அந்த ஜதைக் கிண்ணங் களின் உதட்டு விளிம்புகள் பொருந்தும் இடங்களில் மேலும் கீழுமாக சிறு துவாரமிட்டு அதன்வழியே கம்பியைச் செலுத்தி இரண்டையும் நன்றாகப் பிணைத்து கட்டிவிடவும். மருந்தை உள்ளே செலுத்தவும். பாகம் அறியும் வகைசெய்யும் விதத்தில் மேல் கிண்ணத்தில் நடுமையத்தில் சிறு துவாரம் ஒன்றினையும் இட வேண்டும். சீலை செய்யும் போது இந்த துவாரத்தை மூடக்கூடாது.<br>ஓர் அகன்ற மண் பாத்திரத்தின் அடியில் 1/2 - 1 அங்குலம் உயரம் வரை மணலைப்பரப்பி அதன் மேல் பாதி அளவுக்கு பொடித்த மருந்துச் சரக்குகள் நிரம்பிய சீலை செய்த கலங்களை வைத்துச் சுற்றிலும் மணல் கொண்டு மூடவும்.<br>பின் மண்பாத்திரத்தை அடுப்பிலேற்றி எரிக்கவும். செந்தூர செய்முறையில் 3 வித எரிப்பு முறைகள் பின்பற்றப்படும். விளக்கு சுடர் போன்ற எரிபொருள்களின் தீநாக்குகள் ஒன்று சேர்ந்து சிறிதளவில் எரிவதை தீபாக்கினி எனவும், மலர்ந்த தாமரைப்பூ போலத் தோன்றுமாறு பல தீநாக்குகள் தனித்துத் தோன்றும் வளர்ந்து சிறிது தீவிரமாக எரிவதை கமலாக்கினி எனவும் தீ நாக்குகள் இடைவெளியற்று அடப்பின் உட்புறம் முழுவதும் பரப்பி அடர்த்தியாக சப்தத்துடன் தீவிரமாக எரிவதை காடாக்கினி எனவும் கொள்ளவும். பெரும்பாலும் செந்தூரங்கள் மூன்று நாட்கள் எரிக்கப்படுகின்றன. அப்படி எரிக்க வேண்டியிருந்தால் முதல் 24 மணி நேரம் தீபாக்கினியாலும் அடுத்த 24 மணி நேரம் கமலாக்கினியாலும் அதற்கு அடுத்த 24 மணி நேரம் காடாக்கினியாலும் எரித்தல் வேண்டும். எரிக்கப்படும் சரக்குகளில் கலந்துள்ள கந்தகத்தின் அளவிற்கேற்ப அவை சீக்கிரமாகவோ, தாமதித்தோ உருக ஆரம்பிக்கும். உருகிய பின் கந்தகம் மஞ்சள் புகையாக வெளியேறும். தீயை மேலே குறிப்பிட்டபடி அதிகரித்த கமலாக்கினியாலும், காடாக்கினியாலும் எரிக்க வேண்டும். இவ்வாறு எரிக்கும்போது நீல நிற சுவாலைகள் வெளிப்படுவது முழுவதும் நின்றவுடன் இரும்புக் கம்பியைக் கலங்களின் வாய்வழியே செலுத்தி எடுத்துப் பார்க்கவும்.<br>உட்சென்ற பாகம் வெண்ணிறமாகத் தோற்றம் அளிக்கும். கந்தகம் நன்கு எரிந்து விடுவதால் அது சம்பந்தப்பட்ட கம்பியில் தோன்றுவதில்லை. இந்நிலை தான் செந்தூரம் பதங்கிக்கும் நிலை. இச்சமயத்தில் சிறிதும் தாமதமின்றி கலங்களின் வாய்க்குப் பொருத்தமான மூடிகளை வைத்து மூடி சீலை செய்யவும். இவ்விதமாக சீலை செய்த பின்னர் ஒன்று முதல் 2 மணி நேரம் வரை தொடர்ந்து காடாக்கினியால் எரித்துப் பின்னர் நிறுத்தவும். தானாகவே குளிர்ந்த பின்னர் அக்குப்பிகளை அல்லது எனாமல் கிண்ணங்களை எடுத்துச் சீலைகளைப் பிரித்து கிண்ணங்களின் மேல் பதிந்துள்ள செந்தூரத்தை உலோகத் தகட்டால் மெல்லத் தட்டி பெயர்த்தெடுத்து செந்தூரத்தை சேகரித்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.</p><p><strong>2. புடமிடும் முறை:</strong><br>புடமிட்டுச் செய்யப்படும் செந்தூரங்களை பற்பங் களுக்குக் கூறப்பட்டுள்ள செய்முறையில் புடமிட வேண்டும். அதாவது சாறுகளையோ அல்லது கியாழங் களையோ குறிப்பிட்ட கால அளவு வரை நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின்னர் வில்லைகளை முறைப்படி அகல்களில் வைத்து மேல் அகல் மூடி சீலை செய்து வைக்கவும்.<br>புடமிட நிர்ணயித்துள்ள அளவு வரட்டிகளில் பாதி அளவைக் குழியில் பரப்பி, அதன் மேல் நடுவே சீலை செய்து உலர்ந்த அகல்களை வைத்து அதன் மேல் மிஞ்சியுள்ள வரட்டிகளைப் பரப்பி மூடி மேல்பாகத்தில் நான்கு பக்கங்களிலும் தீயிடவும். புடம் நன்கு ஆறிய பின்னர் அகல்களை எடுத்து சீலையைப் பிரித்து அதனுள் இருக்கும் வில்லைகளை எடுத்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.<br>பொதுவாக செந்தூரங்கள் எல்லாம் சிவப்பாக இருந்தாலும் கெளரி சிந்தாமணி செந்தூரம் மட்டும் பூலாம்பழ நிறமாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள இருவகைச் செந்தூரங்களைத் தவிர எரிப்புச் செந்தூரம், வறுப்புச் செந்தூரம், சூரிய புடச் செந்தூரம் என்ற வகைகளும் உண்டு.</p><p><strong>* பண்பும் பாதுகாப்பும் :</strong><br>இவற்றின் பண்புகள் பெரும்பாலும் பற்பங்களை ஒத்திருக்கும். செந்தூரங்களுக்கான சோதனை முறைகளும் பெரும்பாலும் பற்பங்களுக்கு உள்ளவற்றைப் போன்றவை யாகும். செந்தூரங்கள் பெரும்பாலும் சிவப்பாகவே இருக்கும். விதி விலக்குகளும் உண்டு.<br>இவற்றைச் சுத்தமான ஈரப்பதமற்ற கண்ணாடிக் குடுவைகளில் காற்றுப்புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். செந்தூரங்கள் 75 ஆண்டுகள் வரை வன்மையுடையன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. தூய்மை செய்த அன்னபேதி- தேவையான அளவு<br>2. காடி நீர்- தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தம் செய்த அன்னபேதியை கல்வத்திலிட்டு காடியைக் கொண்டு நன்கு அரைத்து மெல்லிய வில்லைகளாய்த் தட்டி அகலிலிட்டு சீலை செய்து இரண்டு அல்லது மூன்று புடமிட செந்தூரமாகும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>100-200 மி.லி. வரை தினம் இருவேளை தேனுடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சுரம், வெளுப்பு நோய், காமாலை, சோகை குணமாகும். நெய்யுடன் கொடுக்க சீதபேதி குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த அன்னபேதி-40 கி<br>2. சுத்தி செய்த வெடியுப்பு-40 கி<br>3. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை:</strong><br>முதல் இரண்டு சரக்குகளைக் கலந்து கல்வத்தி லிட்டு எலுமிச்சாம்பழச்சாற்றினால் நன்கு அரைத்து வில்லைகளாகத் தட்டி உலர்ந்தபின் கஜபுடமிடவும். இதே போல் இரண்டாவது முறையும் செய்து புடமிட்டெடுக்க செந்தூரமாகும்.</p><p><strong>அளவு :</strong><br>100 – 200 &nbsp;மி.கி. வரை தேனுடன் தினம் இருவேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>சோகை,பாண்டு, காமாலை முதலிய நோய்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த அயம்-80 கி<br>2. சுத்தி செய்த கந்தகம்-80 கி<br>3. சுத்தி செய்த காந்தம்-20 கி<br>4. சுத்தி செய்த லிங்கம்-10 கி<br>5. சுத்தி செய்த வெங்காரம்-10 கி<br>6. சுத்தி செய்த படிகாரம்-10 கி<br>7. சுத்தி செய்த பூநீறு-10 கி<br>8. சுத்தி செய்த சோற்றுப்பு-10 கி<br>9. சுத்தி செய்த இந்துப்பு-10 கி<br>10. சுத்தி செய்த நவச்சாரம்-10 கி<br>11. சுத்தி செய்த கற்பூரம்-10 கி<br>12. எலுமிச்சம்பழச் சாறு-தேவையான அளவு</p><p>செய்முறை:<br>மேற்கண்ட சரக்குகளை நன்கு பொடித்து அரைத்து ஒன்று சேர்ந்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு நாட்கள் அரைத்து வில்லைகளாகத் தட்டி உலர்ந்த பின் 100 வரட்டிகளில் புடமிடவும். செந்தூரம் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். செந்தூரத்தில் நிறம் சிவப்பாக அமையாவிடின் மற்றொரு முறை புடமிடச் செந்தூரமாகும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>100- 20 மி.கி. வரை தேனுடனோ, நெய்யுடனோ அல்லது பஞ்ச தீபாக்கினிச் சூரணத்துடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>எல்லா வகையான பாண்டு நோய்களும் குணமாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த இரும்புத்தூள் - 100 கி<br>2. சுத்தி செய்த கந்தகம்-100 கி<br>3. சுத்தி செய்த லிங்கம்-100 கி<br>4. மஞ்சள் கரிசாலைச் சாறு தேவையான அளவு<br>5. வெடியுப்பு திராவகம்-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>முதல் மூன்று சரக்குகளைக் கல்வத்திலிட்டு நன்கு பொடித்து பின்னர் தயார் செய்த வெடியுப்பு திராவகம் கொண்டும் மஞ்சள் கரிசாலை சாறு கொண்டும் தனித்தனியே நன்கு அரைத்துப் பொருத்தமான அகல் கொண்டு மேற்கூறிய எரிப்புச் சட்டியை மூடி சீலை செய்து உலர்ந்த பின் அடுப்பிலேற்றி 12 மணி நேரம் தீபாக்கினி, கமலாக்கினிகளால் அடுத்த 12 மணி நேரம் கமலாக்கினி, காடாக்னியினாலும் அடுத்த 12 மணி நேரம் தொடர்ந்து காடாக்கினியாலும் எரிக்கவும். பிறகு குளிர்ந்த கலன்களைப் பிடித்து அதனுள் அகலில் பதங்கியிருக்கும் பதங்கத்தையும் அடியில் தங்கியுள்ள செந்தூரத்தையும் தனித்தெடுத்து செந்தூரத்தை மட்டும் நன்கு பொடித்து உபயோகிக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>100 - 200 மி.கி. வரை தேன் அல்லது நெய்யுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சகலவித பாண்டு ரோகங்களும் மற்றும் நீராம்பல் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த கந்தகம்-90 கி<br>2. சுத்தி செய்த காந்தம்-70 கி<br>3. அயப்பொடி-120 கி<br>4. இந்துப்பு-40 கி<br>5. வெங்காரம்-80 கி<br>6. இரசம்-50 கி<br>7. கற்றாழைச் சாறு-தேவையான அளவு.</p><p><strong>செய்முறை:</strong><br>இரசத்துடன் கந்தகத்தைச் சேர்த்து அரைத்து அத்துடன் மற்ற சரக்குகளையும் சேர்த்து கற்றாழைச் சாற்றை விட்டு நன்றாக உறவாகும்படி 5 நாள் வரை அரைத்து வில்லை தட்டி நன்றாகக் காய வைக்கவும். பின்னர் அதனை வாய் அகன்ற சட்டியில் வைத்து வாய் பொருத்தமான மற்றொரு சட்டியில் மூடி ஏழு சீலை மண்வன்மையாய் செய்து 24 மணி நேரம் அடுப்பிலிட்டு எரித்து ஆறிய பின் எடுத்துப் பார்க்க செந்தூரம் மாதுளம் பூ நிறம் பெற்றிருக்கும். இதனைப் பொடித்துக் குப்பியில் அடைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>100 -200 மி.கி. வரை தேன், திரிகடுகு சூரணம் சேர்த்து தினம் இரு வேளைக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வெளுப்பு, கிரந்தி, குடல் வாதம், தொண்டை வலி, மூலம், கண்டமாலை, வறட்சி, சூலை ஆகியன குணமாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த லிங்கம்-10 கி<br>2. சுத்தி செய்த பூரம்-20 கி<br>3. சுத்தி செய்த வீரம்-10 கி<br>4. சுத்தி செய்த கந்தகம்-10 கி<br>5. சுத்தி செய்த இரச செந்தூரம்-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த பொருட்களைக் கல்வத்திலிட்டு பொடித்து முட்டையின் வெண்கரு விடடு 5 நாள் வரை நன்கு அரைத்து பின் பால் சேர்க்காமல் விழுது போன்று இருக்கும் மருந்து பொடியாகும் வரை அரைத்து எடுக்கவும். முதலில் கந்தகம் பின்னர் வீரம் மூன்றாவதாய் பூரம், நான்காவதாய் இரசச் செந்தூரம், இறுதியில் லிங்கம் என்ற வரிசைப்படி சேர்த்து அரைத்து பவள நிறம் வரும் வரை அரைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>50- 100 மி.கி. வரை தேன், இஞ்சிச்சாறு, பனை வெல்லம், திரிகடுகு, சூரணம் சேர்த்து தினம் இரு வேளைகள் வீதம் குறைந்தது 5 நாட்களுக்குக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>சகலவித பாண்டு ரோகங்களும் மற்றும் நீராம்பல் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த இரசம்-30 கி<br>2. சுத்தி செய்த கந்தகம்-30 கி<br>3. பொரித்த வெங்காரம்-20 கி</p><p><strong>செய்முறை :</strong><br>முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு இரசத்தைச் சிறிது சிறிதாக சேர்த்து எல்லா மருந்தும் கருப்பாகும் வரை அரைத்துப் பொரித்து வெங்காரத்தைச் சேர்க்கவும். அரைத்து கெட்டியான துணியில் பாக்களவு, உருண்டையான மூட்டைகள் கட்டி சீலை செய்து மண் சட்டியில் பரப்பியுள்ள மணலுக்குள் வரிசையாக வைத்து மூடி 10 வரட்டிகளை மேலே வைத்துப் புடமிட்டு எடுத்து ஆற வைக்கவும். பிறகு மேல் கவசம் நீக்கி மருந்தை எடுத்து நன்கு அரைத்து வைக்கவும். மருந்து பூலாம்பழம் போன்று கருப்பாயிருக்கும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>100- 200 மி.கி. வீதம் இரு வேளைகளுக்கு நாற்பது நாட்கள் வரை தேன், திரிகடுகு சூரணத்துடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>திரிகடுகு சூர்ணமும், தேனும் சேர்த்துக் குழைத்துக் கொடுக்க சூலை-18, வாயு 26,குன்மம் - 16, குடலிளைப்பு நோய் (உளை மாந்தம்) தீராச் சுரங்கள், எலிக்கடி, மாந்தாரகாசம், ஈளை இருமல், எலும்புருக்கி, காசசுவாசம், சுரமாந்தை, எருவாய் மூலம், அரையாப்பு, காமாலை, ஆண்குறிச்சூலை, பெண்குறிச்சூலை, விரைவாதம், தொடை வாழை, பத்து வகை, விப்புருதி முதலியவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த லிங்கம்-40 கி<br>2. ஆற்றுத் தும்மட்டிச் சாறு -2லி</p><p><strong>செய்முறை:</strong><br>சுத்தி செய்த லிங்கத்தை சட்டியிலிட்டு ஆற்றுத் தும்மட்டிச் சாறு சிறிது சிறிதாகக் கலந்து சாறு தீரும் வரை சுருக்கிட்டுக் கழுவி எடுத்துத் தூள் செய்து வைக்கவும்.</p><p><strong>அளவு தீரும் நோய்களும் :</strong><br>50 - 100 மி.கி. வரை தேன் சேர்த்து தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்க குளிர்சுரம், வாத, கப நோய்கள் தோல் நோய்கள், மேக நோய்கள் இவை குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த லிங்கம்-30 கி<br>2. சாம்பிராணி-210 கி<br>3. கற்பூரம்-210 கி<br>4. மஞ்சணத்திப்பட்டை சூரணம்- தேவையான அளவு.</p><p><strong>செய்முறை :</strong><br>சாம்பிராணி மற்றும் கற்பூரம் இரண்டையும் நன்கு அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து அதனை ஒரு நீல நிறத் துணியில் தடவி லிங்கக் கட்டிக்குச் சுற்றி எரிக்கவும். எரிந்து கருகி சீலையை நீக்கி விட்டு ஆறிய பிறகு மறுபடியும் இவ்விதமாக 5- 7 முறை மேற்படி மெழுகை துணியில் தடவி லிங்கக் கட்டிக்குச் சுற்றி எரித்து ஆறிய பின் கழுவி உலர்த்தவும். பின்னர் ஒரு அகலில் லிங்கத்தை வைத்து நுணாப்பட்டைச் சூரணம் கொண்டு கீழும் மேலுமாக வைத்து மூடி சீலை செய்து 5 வரட்டிகளைக் கொண்டு புடமிட்டெடுக்கவும். வில்லைகளைக் கல்வத்திலிட்டு அரைத்து வைக்கவும்.</p><p><strong>அளவு :</strong><br>50-100 மி.கி. வரை தேன் அல்லது அனுபானங்களுடன் தினம் இருவேளைகள் கொடுக்க தோல் நோய்கள் வாத, கப நோய்கள், குளிர்சுரம் எல்லாத விதமான சுரம் ஆகியவை தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த மண்டூரம்-100 கி<br>2. சுத்தி செய்த ரசம்-10 கி<br>3. சுத்தி செய்த கந்தகம்-10 கி<br>4. சுத்தி செய்த இலிங்கம்-10 கி<br>5. உப்பு-10 கி<br>6. வெங்காரம்-106 கி<br>7. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு<br>8. கரிசாலைச்சாறு-தேவையான அளவு<br>9. சிறு செருப்படைச்சாறு-தேவையான அளவு<br>10. கருஞ்செம்படைச்சாறு-தேவையான அளவு<br>11. அரசம்பட்டைச் சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>1 - 6 வரையுள்ள சரக்குகளை 7 - 11 வரையிலான சாறுகளாக தனித்தனியாக நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்த்தி ஒவ்வொரு சாற்றிலும் 100 வரட்டியில் 10 புடமிட்டெடுக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>50 - 100 மி.கி. வரை தினமும் இரு வேளை களுக்கு தேன், திரிகடுகு சூரணம் சேர்த்துக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>விஷபாண்டு,காமாலை,பாண்டு நோய்கள்,அஜீரணம்,n அன்னதுவேசம், தீராவாந்தி,விக்கல், வாய்வு, நீர்தோஷம் ஆகியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. படிகாரம்-80 கி<br>2. சுத்தி செய்த லிங்கம்-10 கி<br>3. கடுக்காய்ப் பூ-10 கி<br>4. காட்டத்திப் பூ-30 கி</p><p><strong>செய்முறை :</strong><br>படிகாரம், லிங்கம் இரண்டையும் தனித்தனியே பொடித்து ஒன்று சேர்த்து கல்வத்திலிட்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கடுக்காய்ப் பூ மற்றும் காட்டத்திப்பூ போட்டு 125 மி.லி. ஆக சுண்ட வைத்து வடிகட்டிய கியாழத்தால் இரண்டு நாட்கள் வரை நன்கு அரைத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1/2 முதல் 1 கிராம் வரை தினமும் இரு வேளைக்கு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>அதிசாரம், சீதபேதி, பெரும்பாடு நோய்கள் விலகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. தங்கரேக்-10 கி<br>2. கந்தகம்-160 கி<br>3. செம்பருத்திச்சாறு-தேவையான அளவு<br>4. வாழைக்கிழங்கு சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>தங்க ரேக்கை இரசத்தில் தொந்திக்கச் செய்து நன்கு கலந்த பிறகு அத்துடன் கந்தகத்தைச் சேர்த்து நன்கு அரைத்து கஜ்ஜிளி செய்து வைக்கவும். பிறகு இதைக் கல்வத்திலிட்டு செம்பருத்திப் பூச்சாற்றால் இரண்டு நாட்களும், வாழைக்கிழங்கு சாற்றால் இரண்டு நாட்களும் அரைத்து உலர்ந்த பின் தூள் செய்து முறைப்படி சீலை செய்த காசிக் குப்பியில் அடைத்து, மணல் சட்டியில் வைத்து முத்தீயால் மூன்று நாட்கள் விடாமல் எரித்து ஆறிய பின்னர் செந்தூரத்தை எடுத்து அரைத்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>100-200 மி.கி. வரை தேன் அல்லது கற்பூராதிச் சூரணம் அல்லது வெற்றிலைச்சாறு சேர்த்து தினமும் இருவேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மலச்சிக்கல், எலிக்கடி, பித்தம், கபம், காமாலை, குடைச்சல்,கெட்ட சதை வளர்தல் ஆகிய நோய்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. பொரித்த படிகாரம்-100 கி<br>2. பூங்காவி- 100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>இரண்டையும் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>200 - 400 மி.கி. வீதம் தினம் இருவேளை வெண்ணெய் (அல்லது) நெய் சேர்த்துக் கொள்ளவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>சீதபேதி, பெரும்பாடு நோய்கள் விலகும்.</p>

<p>மாத்திரையை உருண்டை எனவும் குளிகை எனவும் கூறுவர். சிலவகை மருந்துச் சரக்குகளை சுத்தி செய்து சிலவகை மூலிகைச் சாற்றினால் குறிப்பிட்ட அளவுள்ள எடையில் வடிவத்தில் உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மாத்திரையாகும். முதலில் தூய்மை செய்ய வேண்டிய சரக்குகளைத் தூய்மை செய்தும் சுத்தி முறைப்படி சுத்தி செய்ய வேண்டியவற்றை சுத்தி செய்ய வேண்டும். மருந்து சரக்குகளைத் தனித்தோ அல்லது ஒன்றாக சேர்த்து இடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு தண்ணீர் அல்லது வேறுவகை சாறுகளை சேர்த்துக் குறிப்பிட்ட காலம் வரை நன்றாக அரைத்து விழுதாகி உருட்டும் பக்குவம் வந்தபின் அளவான மாத்திரைகளாக உருட்டும் போது விரல்களில் சிறிது நெய் தடவிக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை முறைப்படி நிழலிலோ அல்லது சூரிய வெளிச்சத்திலோ உலர்த்தி வைக்க வேண்டும். அரைத்த மருந்து மாத்திரையாக உருட்டப்படும் போது விரல்களுக்கு இடையில் ஒட்டாமலிருப்பதே மாத்திரை உருட்டும் பக்குவம் ஆகும். மாத்திரைகள் தங்களுடைய நிறத்தையோ மணத்தையோ சுவையையோ, உருவத்தையோ இழக்காமல் இருத்தல் வேண்டும். மாறுபாடு அடைந்தால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுக்கு-10 கி<br>2. மிளகு-10 கி<br>3. திப்பிலி-10 கி<br>4. பொரித்த வெங்காரம்-10 கி<br>5. சுத்தி செய்த லிங்கம்-10 கி<br>6. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>அனைத்து சரக்குகளையும் எலுமிச்சம்பழச்சாறில் மூன்று மணி நேரம் நன்கு அரைத்துப் பதத்தில் 700 மி.கி. மாத்திரையாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>மாசி பத்திரி பட்டவியல் சாற்றுடன் திரிகடுகு சூரணம் 1 முதல் 2 கிராம் அத்துடன் ஒரு மாத்திரையும் கலந்து கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>மந்தம், கணம், வயிற்றோட்டம், பித்தம்,வாந்தி, இருமல் இவை தீரும்.<br>கோரோசனையுடன் சேர்த்துக் கொடுக்க சுரம், இருமல் தீரும். சாதிக்காய், புளியங்கொட்டைத் தோல் பொடியுடன் சேர்த்துக் கொடுக்க மூலம் தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :&nbsp;</strong><br>1. குங்குமப் பூ-100 கி (கியாழத்திற்கு)<br>2. சுக்கு-100 கி<br>3. வெண் மிளகு-100 கி<br>4. வால் மிளகு-100 கி<br>5. கோஷ்டம்-100 கி<br>6. ஓமம்-100 கி<br>7. சுத்தி செய்த லிங்கம்-100 கி<br>8. கோரோசனை-100 கி<br>9. திப்பிலி-100 கி<br>10. இலவங்கம்-100 கி<br>11. ஏலம்-100 கி<br>12. வெங்காரம்-100 கி<br>13. குங்குமப்பூ-100 கி<br>14. சாம்பிராணி பூ-100</p><p><strong>செய்முறை :</strong><br>அனைத்தையும் கல்வத்திலிட்டு பொடித்து குங்குமப்பூ கியாழத்தில் மூன்று மணி நேரம் நன்கு அரைத்து 50 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பயன்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 - 2 மாத்திரைகள் தேனுடன் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>நீர்க்கோவை, ஜலதோஷம், நாட்பட்ட மலக்கட்டு, அதிக வியர்வை ஆகியவை தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த லிங்கம்-30 கி<br>2. கருஞ்சிவதை வேர்-30 கி<br>3. வசம்பு-30 கி<br>4. சுக்கு-30 கி<br>5. இந்துப்பு-30 கி<br>6. வாய்விடங்கம்-30 கி<br>7. ஓமம்-30 கி<br>8. பொரித்த பெருங்காயம்-30 கி<br>9. வெள்ளை காட்டாமணக்கு வேர்ப்பட்டை-30 கி<br>10. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு<br>11. நேர்வாளம்-30 கி<br>12. வெங்காரம்-30 கி</p><p><strong>செய்முறை :</strong><br>1 -9 வரையுள்ள சரக்குகளை எடுத்துத் தனித்தனியே பொடித்துச் சேர்த்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் நன்கு அரைக்கவும். பின்பு அதனுடன் சுத்தி செய்த நேர்வாளத்தை சேர்த்து அரைத்து மாத்திரை செய்யக் கூடிய பதத்தில் 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>2 - 4 மாத்திரைகள் வீதம் சுக்கு கியாழத்துடன் இரு வேளைகள் கொடுக்க குளிர் சுரம், வாயு, பித்த நீர், பாண்டு சோகை, வயிற்று வலி, செரியாமை, மலபந்தத்துடன் கூடிய சுரத்தில் உண்டாகும் மலக்கட்டு நீங்கி நோய் தணியும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. ஏலம்-10 கி<br>2. இலவங்கம்-10 கி<br>3. வால்மிளகு-10 கி<br>4. சந்தனம்-10 கி<br>5. வெட்டிவேர்-10 கி<br>6. விலாமிச்சம்வேர்-10 கி<br>7. அகில்கட்டை-10 கி<br>8. தாமரை மகரந்தம்-10 கி<br>9. தாமரைவளையம்-10 கி<br>10. அதிமதுரம்-10 கி<br>11. அக்கரகாரம்-10 கி<br>12. நாட்டு அமுக்கரா-10 கி<br>13. குங்குமப்பூ-10 கி<br>14. பச்சை கற்பூரம்-10 கி<br>15. கஸ்தூரி-10 கி<br>16. மான் கொம்பு-10 கி<br>17. சடாமாஞ்சில்-10 கி<br>18. உருத்திராட்சம்-10 கி<br>19. கோரோசனை-10 கி<br>20. அம்பர்-10 கி<br>21. சாம்பிராணிப் பூ-10 கி<br>22. அப்பிரகப் பற்பம்-10 கி<br>23. வெள்ளி பற்பம்-10 கி<br>24. முத்து பற்பம்-5 கி<br>25. பவள பற்பம்-5 கி<br>26. மாதுளம் பழச்சாறு-தேவையான அளவு<br>27. இளநீர்-தேவையான அளவு<br>28. ஆவின் பால்-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>தூய்மை செய்ய வேண்டிய சரக்குகளைத் தூய்மை செய்து கொண்டு கடினமான சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சேர்த்து கல்வத்திலிட வேண்டும்.<br>மாதுளம் பழச்சாறு, இளநீர் மற்றும் ஆவின்பால் ஒவ்வொன்றிலும் 24 மணி நேரமும் அரைத்து 50 மி.கி. மாத்திரைகளாக உருட்டி பத்திரப்படுத்தவும். நிழலில் உலர்த்தி</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1-2 மாத்திரைகள் வீதம் இரு வேளைக்கு 45 நாட்கள் இளநீர் அல்லது பாலும் சர்க்கரையும் அல்லது தேன் அல்லது பழ ரசத்துடன் சேர்த்துக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>கண் நோய், கண் காசம், காமாலை, பாண்டு,சோகை, கல்லடைப்பு, கடுங்காய்ச்சல், தொண்டைக்கட்டு, நீரிழிவு, கசப்புடன் கூடிய வாந்தி ஆகியன குணமாகும். ஆறுவாரங்கள் தொடர்ந்து உட்கொண்டால் முக அழகு, நல்லதொனி, நீண்ட ஆயுள் ஆகியன உண்டாகும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுக்கு-10 கி<br>2. மிளகு-10 கி<br>3. திப்பிலி-10 கி<br>4. கடுகு ரோஹினி-10 கி<br>5. முருக்கன் விதை-10 கி<br>6. சீரகம்-10 கி<br>7. சுத்தி செய்த நேர்வாளம்-60 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்படி சரக்குகளைப் பொடித்து கல்வத்திலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1 முதல் 2 மாத்திரைகள் வீதம் படுக்கும் முன் தண்ணீரும், சர்க்கரையும் அல்லது பனை வெல்லமும் சேர்த்துக் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>குடற்புண்கள், மாந்தம், வயிறு உப்புசம், கபக்கட்டு, சீதக்கட்டு முதலியன குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கம்பு மஞ்சள்-40 கி<br>2. கஸ்தூரி மஞ்சள்-40 கி<br>3. பொரித்த வெங்காரம்-40 கி<br>4. சாம்பிராணி-20 கி<br>5. மிளகு-20 கி<br>6. சுக்கு-20 கி<br>7. ஜாதிக்காய்-20 கி<br>8. ஓமம்-20 கி<br>9. இலவங்கம்-20 கி<br>10. கற்பூரம்-20 கி<br>11. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு</p><p><strong>செய்முறை :</strong><br>எல்லா சரக்குகளையும் சூரணித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் 6 மணி நேரமோ அல்லது பழச்சாறு வற்றும் வரையோ அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைக்கவும்.</p><p><strong>அளவு / தீரும் நோய்கள் :</strong><br>வெளி உபயோகமாக இதனைத் தண்ணீரில் இழைத்து நெற்றியில் பற்று போடத் தலைவலி, தலையில் நீரேற்றம், ஜலதோஷம் ஆகியவை நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. வெள்ளெருக்கன் பூ-60 கி<br>2. மிளகு-60 கி</p><p><strong>செய்முறை :</strong><br>வெள்ளெருக்கன் பூ மற்றும் மிளகைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து 200 மி.கி. மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்த வேண்டும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 மாத்திரைகள் வீதம் தாளீசபத்திரிக் குடிநீருடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>இளைப்பு இருமல் போன்ற நோய்கள் குணமாகும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. பொரித்த வெங்காரம்-100 கி<br>2. சுக்கு-100 கி<br>3. மிளகு-100 கி<br>4. திப்பிலி-100 கி<br>5. இந்துப்பு-100 கி<br>6. சுத்தி செய்த நேர்வாளம்-100 கி<br>7. சுத்தி செய்த காந்தம்-100 கி<br>8. பெருங்காயம்-100 கி<br>9. கழற்சிப்பருப்பு-100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>அனைத்தையும் எடுத்துப் பொடித்து கல்வத்திலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து உருண்டை செய்து மேல்மூடி இட்டு சீலை செய்து குக்குட புடமிட்டெடுத்து ஆறிய பிறகு மருந்தைக் கல்வத்திலிட்டு கடுக்காய் கியாழத்தால் நன்கு அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 மாத்திரைகள் இரு வேளைகள் சாப்பிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :&nbsp;</strong><br>விளக்கெண்ணெயில் சேர்த்துக்கொடுக்க பேதியாகும். தண்ணீரில் கலந்து கொடுக்க குன்மம், சூலை, அண்டவாதம், பாண்டு, மகோதரம் இவை தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த லிங்கம்-25 கி<br>2. பொரித்த வெங்காரம்-25 கி<br>3. சுத்தி செய்த கந்தகம்-25 கி<br>4. திப்பிலி-25 கி<br>5. கோஷ்டம்-25 கி<br>6. அக்கரகாரம்-25 கி<br>7. அதிமதுரம்-25 கி<br>8. கோரோசனை-10 கி<br>9. குங்குமப்பூ-10 கி<br>10. பச்சை கற்பூரம்-10 கி<br>11. லவங்கம்-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>சுத்தி செய்த லிங்கம், பொரித்த வெங்காரம், சுத்தி செய்த கந்தகம், திப்பிலி, கோஷ்டம் போன்ற அனைத்து சரக்கினையும் முறைப்படி கல்வத்திலிட்டு பொடித்து இஞ்சிச் சாற்றினால் இரண்டு நாட்களும் பசும்பாலால் இரண்டு நாட்களும் நன்கு அரைத்து 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>2-5 மாத்திரைகள் வீதம் தினம் இரு வேளைக்கு தேன், இஞ்சிச் சாறு அல்லது பசும்பாலுடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>நாட்பட்ட சுரங்கள், கபகாசம், தாகம், தும்மல், ஏப்பம், சிறுநீர் நோய்கள் முதலியவை நீங்கும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. ஏலம்-500 மி.கி.<br>2. கந்தகம்-500 மி.கி.<br>3. அப்பிரக பற்பம்-500 மி.கி.<br>4. தாமிர பற்பம்-500 மி.கி.<br>5. சீந்தில்சாறு-500 மி.கி.<br>6. துளசிச்சாறு-100 மி.கி.<br>7. நெல்லிக்காய் சாறு-100 மி.கி.<br>8. கடுக்காய்-100 மி.கி.<br>9. தான்றிக்காய்-100 மி.கி.<br>10. சாரணைச்சாறு-100 மி.கி.<br>11. சுத்தி செய்த காந்தம்-500 மி.கி.<br>12. சுத்தி ரசம்-500 மி.கி.<br>13. சித்திர மூல வேர்ப்பட்டை குடிநீர் - தேவையான அளவு</p><p><strong>தயாரிக்கும் விதம் :</strong><br>1-4 வரையுள்ள சரக்கினை சுத்திகரித்து கல்வத்திலிட்டு பொடித்து தனித்தனியே வெள்ளைச் சாரணை சாற்றாலும், சீந்தில் குடிநீரினாலும் முறையே 6 மணி நேரம் அரைத்து ஒரே உருண்டையாக உருட்டி சாரணை இலை கற்கத்தின் நடுவில் வைத்து இலை கருகும்படி ஒரு இலகுபுடம் போட்டு ஆறவிட்டு எடுத்து சித்தி மூல வேர்ப்பட்டை குடிநீரினால் 12 மணி நேரம் அரைத்து 100 மி.கி. அளவாக மாத்திரைகள் உருட்டி நிழலில் உலர்த்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 மாத்திரைகள் தண்ணீருடன் அருந்தவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>ஜன்னி, வாதம் முதலியன தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. ஜாதிக்காய்-200 கி<br>2. ஜாதி பத்திரி-200 கி<br>3. 3.பெருங்காயம்-200 கி<br>4. சீரகம்- 200 கி<br>5. அதிவிடயம்-200 கி<br>6. இலவங்கம்-200 கி<br>7. வெந்தயம்-200 கி<br>8. கழற்சி பருப்பு-200 கி<br>9. குரோசினி ஓமம்-200 கி<br>10. லிங்கம்-200 கி<br>11. சுத்தமான நீர்-200 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளைப் பொடித்து கலந்து நீரைத் தெளித்து பிசைந்து 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி காய வைத்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>1-2 மாத்திரைகள் 2-3 வேளைகள் வீதம் தினமும் உட்கொள்ளவும்.</p><p><strong>செய்முறை :</strong><br>வயிற்றுக் கோளாறினையும், மூலத்தையும் நீக்க வல்லது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சந்தனப்பொடி-20 கி<br>2. மிளகுப் பொடி-15 கி<br>3. வெள்ளை மிளகுப் பொடி-15 கி<br>4. கருவேலம் பிசின்-10 கி<br>5. பூனைக் குங்குலியம்-10 கி<br>6. பன்னீர்-10 மி. லி.<br>7. சந்தனத் தைலம்-10 மி. லி.</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து இடித்து, பொடித்து சலித்து பன்னீரில் கலந்து இறுதியில் சந்தனத் தைலத்துடன் கலந்து 500 மி.லி. மாத்திரைகளாக உருட்டவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>2-4 மாத்திரைகள் வீதம் தினமும் 2 வேளைகள் தேன் அல்லது நீருடன் உட்கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், பயணச்சூடு, சிறுநீரகக் கற்கள், தாக வறட்சி நீங்கி உடல் குளிர்ச்சி உண்டாகும்.</p>

<p><strong>சுவையும் மணமும் கொண்ட மருந்து பானகத்திற்கு மணப்பாகு என்று பெயர்.</strong></p><p>இது மூலிகைச் சாறுகள், பழச்சாறுகளுடன் கற்கண்டு அல்லது சர்க்கரையைக் கரைத்து சூடாக்கி மணப்பாகு பதம் வந்ததும் நிறுத்தி எடுத்துக் கொள்வதாகும்.<br>சில மணப்பாகுகளில் சர்க்கரையுடன் தேனும் சேர்க்கப்படும். மணப்பாகு செய்யும் போது சேர்க்கப்படும் சர்க்கரை கற்கண்டு தேன் இவைகள் மருந்துக்கு சுவை தருவது மட்டுமின்றி மருந்து கெட்டு விடாமல் நீண்ட நாள் இருக்கவும் துணை செய்கின்றன.</p><p>1. சர்க்கரை கருகி பாத்திரத்தின் அடியில் கெட்டியாக பிடித்துக் கொள்ளாமலும் அதன் விளைவாக கசப்புச் சுவையை அடையாமல் இருக்க வேண்டுமானால் சர்க்கரையை முதலில் பாத்திரத்திலிட்டுக் கொதிக்க வைக்கக் கூடாது.<br>சாறு வகைகள் போன்ற நீர்ம ஊடகங்கள் தான் முதலில் கொதிக்க வைக்கப்பட வேண்டும்.<br>பின்னரே அதில் சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும்.</p><p>2. கலவைக்கு அதிகமான தீயையிடாமல் மிதமான தீயையே இட வேண்டும். கலவையை அதிகமாகக் கொதிக்க விடாமல் ஏறக்குறைய ஒரே கொதிநிலையில் வைத்திருத்தல் வேண்டும்.</p><p>3. பாகை, பதம் வந்தவுடன் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். அப்போது தீயை முற்றிலுமான நீக்கி விட வேண்டும்.</p><p>4. தேவையேற்பட்டால் சூடாக இருக்கும் போதே மணப்பாகை வடிகட்டிவிட வேண்டும்.</p><p>5. பாகுபதத்தை நிர்ணயிப்பது சற்று கடினம். ஆகையால் அதற்கு இடைஞ்சல் ஏற்படாவண்ணம் சாறுகள், குடிநீர்கள், கியாழங்கள், பழரசங்களைக் கொதிக்க வைப்பதற்கு முன்பே நன்றாக வடிகட்டிவிட வேண்டும்.</p><p>6. கொதிக்க வைக்கும் போது பானகத்தின் மேல் நுரை கட்டினால் அவற்றை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை ஈரப்பதமற்ற, தூய கண்ணாடிப் பாத்திரங்களிலோ பாலீதின் கொள்கலன்களிலோ பத்திரப்படுத்தலாம். ஆறிய பின்னர் கொள்கலன்களில் நிரப்ப வேண்டும். கொள்கலன்களின் மூடி விளிம்பு வரை நிரப்பாமல் மூடிக்கும் கழுத்துப் பகுதிக்கும் நடுவே சற்று இடைவெளி இருக்கும்படி நிரப்பப்பட வேண்டும்.<br>இவற்றை ஆறு மாதங்களுக்குள் பயன்படுத்துவதே நல்லது.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. கற்கண்டு-2 கி.கி.<br>2. பன்னீர்-2லி<br>3. மாதுளம் பழச்சாறு-2லி<br>4. தேன்-2லி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கூறிய எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் இறக்கி வைக்கவும்.</p><p><strong>அளவு :</strong><br>8-15 கிராம் வீதம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் இரண்டு மடங்கு நீருடன் கலந்து கொள்ளவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>எல்லா விதமான பாண்டு நோய்கள், வாந்தி, கை, கால் எரிதல் ஆகியன தீரும். கர்ப்பஸ்திரீகளுக்குத் தேவையான டானிக்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. துருஞ்சி பழச்சாறு-1 கி.கி.<br>2. சர்க்கரை-2 கி.கி.</p><p><strong>செய்முறை :</strong><br>இரண்டையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து வைக்கவும்.</p><p><strong>அளவு :</strong><br>1-2 தேக்கரண்டி வீதம் இரு மடங்கு தண்ணீருடன் தினம் 2-3 வேளைகள்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>பித்தம், பித்த நோய்கள், வாந்தி, பித்த அஜீரணம் ஆகியன தீரும்.</p><p>வெண்ணெய்கள் தயாரிப்பு முறைகள்<br>வெண்ணெய் போன்ற தோற்றமும் குழகுழப்புத் தன்மையும் கொண்ட மருந்து வகைகளுக்கு வெண்ணெய் என்று பெயர்.<br>1. வெண்ணெயுடன் மற்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்து வகைகளும்.<br><br>2. பிசின் போன்ற மருந்துச் சரக்குகளை எண்ணெய் வகைகளுடனோ பசு நெய்யுடனோ சேர்த்து உறவுபடக் காய்ச்சி தண்ணீருள்ள மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி மத்திட்டு கடைந்து எடுத்துக் கொள்ளப்படும் மருந்து வகைகளும்.&nbsp;<br><br>3. செயல்முறையில் குறிப்பிட்டுள்ள தனி மருந்து சரக்கையோ அல்லது பல மருந்துச் சரக்குகளையேர் வொண்ணெய்யுடன் சேர்த்து பக்குவப்படுத்தி எடுத்துக் கொண்ட மருந்து வகைகளும் ஆகியன அனைத்தும் வெண்ணெய் என்றே கூறப்படும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. வீரம்-3.5 கி<br>2. பசு வெண்ணெய்-454 கி</p><p><strong>செயல்முறை :</strong><br>வீரத்தைக் கல்வத்திலிட்டு நன்றாகப் பட்டுபோல் அரைத்து அத்துடன் வெண்ணெயை சேர்த்து ஆறு மணி நேரம் வரை நன்கு அரைத்துப் பின்னர் தண்ணீரில் ஏழு முறை பிசைந்து கழுவி எடுத்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>வெளி உபயோகம்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>விரணம், பிளவை, மார்பாணி, மூலவேக்காடு, புண் ஆகியன தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. குங்கிலியம்-175 கி<br>2. நல்லெண்ணெய்-350 கி</p><p><strong>செய்முறை :</strong><br>குங்கிலியத்தை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சும் போது குங்கிலியம் உருகி எண்ணெயில் கலந்து விடும். உடனே அக்கலவையைத் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் கொட்டி மத்தினால் கடைய, வெண்ணெய் போல் குங்கிலியம் தண்ணீரில் மிதக்கும். இந்த வெண்ணெயை எடுத்து வாயகன்ற ஜாடியில் உள்ள தண்ணீரில் இட்டு பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :</strong><br>3-6 கிராம் வீதம் எலரசிப் பொடியுடன்தினம் இரு வேளை கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மேக வெள்ளை, நீர்க்கடுப்பு, உட்காங்கை, வயிற்றெரிச்சல், மேக விரணம், கீழ்ப்பிடிப்பு, காசம், முக எரிவு, கை கால் காந்தல் போன்ற நோய்கள் குணமாகும்.<br>&nbsp;</p>

<p>கருப்பு நிறத்தை அடையும் படி செய்யப்படுகின்ற மருந்து வகைகளுக்கு கருப்பு என்று பெயர். இவற்றில் இரசமும் கந்தமும் தனித்தோ அல்லது அவைகள் ஏதாவது ஒரு உப்பு வடிவிலோ மருந்தில் தவறாது இடம் பெறுகின்றன. இவைகளே மருந்து கருமை நிறம் அடைவதற்குக் காரணம் ஆகின்றன. கருப்பு வகைகள் நுண்ணிய துகள்கள் வடிவிலிருக்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. கஸ்தூரி-5 கி<br>2. பச்சைக் கற்பூரம்-25 கி<br>3. கோரோசனை-25 கி<br>4. குங்குமப்பூ-25 கி<br>5. திப்பிலி-25 கி<br>6. 6.ஓமம்-25 கி<br>7. இரசம்-25 கி<br>8. கந்தகம்-25 கி<br>9. லிங்கம்.-25 கி<br>10. பூரம்-25 கி<br>11. இரசச் செந்தூரம்-25 கி<br>12. தாளகம்-25 கி<br>13. மனோசிலை-25 கி</p><p><strong>செய்முறை :</strong><br>1 முதல் 4 வரையிலான சரக்கினைப் பொடித்து பத்திரப் படுத்தவும். 5-6 வரை உள்ளவற்றைப் பொன்வறுவலாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ரசம், கந்தகம் இரண்டையும் கல்வத்திலிட்டு, கஜ்ஜளி செய்து கொண்டு, அத்துடன் லிங்கம், பூரம், இசரச்செந்தூரம், தாளகம், மனோசிலை இவற்றைத் தனித்தனியே பொடித்து அரைக்கவும். பின்பு முதலில் பொடித்த கலவையைக் கலந்து அரைத்து, காற்றுப்புகாத குப்பியில் அடைத்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>50-100 மி.கி வீதம் 2-3 வேளைகள் தேன் அல்லது பால் இஞ்சி சாறுடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>வாதம், கபம், சுரம், இருமல், இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகிய நோய்கள் தீரும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. சுத்தி செய்த இரசம்-10 கி<br>2. சுத்தி செய்த கந்தகம்-10 கி<br>3. சுத்தி செய்த இருவி-10 கி<br>4. சுத்தி செய்த கருநாபி-10 கி<br>5. சுத்தி செய்த மனோசிலை-10 கி<br>6. பொரித்த வெங்காரம்-10 கி<br>7. சுக்கு-10 கி<br>8. மிளகு-10 கி<br>9. திப்பிலி-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>முதலில் இரசம், கந்தகம் இவ்விரண்டையும் கல்வத்தி லிட்டு கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன் தனித்தனியே பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்து மற்ற சரக்குகளின் சூரணத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஏழு நாட்கள் வரை கருப்பு நிறம் அடையும் வரை நன்கு அரைத்து வைக்கவும்.</p><p><strong>அளவும் அனுபவமும் :</strong><br>200-400 மி.கி. வீதம் தக்க அனுபானத்துடன் தேன், இஞ்சிச் சாறு, தாய்ப்பால் ஆகியவற்றுடன் 2-3 வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள்:</strong><br>80 வகை வாதம், 40 வகை பித்தம், 20 வகை கபம், 5 வகை சுவாசம் (இரைப்பிருமல்) குஷ்டம்,குன்மம்,சன்னி மூலம், சயம், மகோதரம் முதலியன.<br>அரணைக்கடி, குமரகண்ட வலி, தேள்கடி இவற்றிற்கு நஸ்யமாக உபயோகிக்கவும்.</p><p><strong>குறிப்பு :</strong> இந்த மருந்தை இருவியைச் சேர்க்காமலும் செய்வதுண்டு. இருவி சேர்ந்த மருந்தை சாப்பிடும் போது உப்பு புளி நீக்கவும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த சேராங்கொட்டை-300 கி&nbsp;<br>2. எள்ளு-150 கி<br>3. தேங்காய்-150 கி<br>4. பறங்கிப்பட்டை-30 கி<br>5. அமுக்கரா-30 கி<br>6. சித்திர மூல வேர்ப்பட்டை-30 கி<br>7. கஸ்தூரி மஞ்சள்-30 கி<br>8. கருஞ்சீரகம்-30 கி<br>9. வாலுளுவை அரிசி-30 கி<br>10. குரோசானி ஓமம்-30 கி<br>11. வெற்றிலைக் காம்பு-30 கி<br>12. கடுக்காய்த் தோல்-30 கி<br>13. திப்பிலி-30 கி<br>14. கோஷ்டம்-30 கி<br>15. சுத்தி செய்த ரசக் கற்பூரம்-15 கி<br>16. பனைவெல்லம்-150 கி</p><p><strong>செய்முறை :</strong><br>முதல் மூன்று சரக்குகளை உரலிலிட்டு இடித்து பின் அதனுடன் மற்ற சரக்குகளை இடித்து, சலித்து கற்பூரத்தைத் தூள் செய்து சேர்த்து கடைசியில் பனைவெல்லத்தையும் கலந்து எல்லாவற்றையும் மெழுகு போல அரைத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>200-500 மி.கி. வீதம் தினமும் 2 வேளைகள் பனை வெல்லத்துடன் 40 நாட்கள் உட்கொள்ள வேண்டும். உணவில் மீன், உப்பு தவிர்க்க வேண்டும். விளக்கெண் ணெய்யைத் தேய்த்து தலை முழுக வேண்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>வாயுத் தொல்லை, தொழு நோய், படை, கருமேகம், அக்னி, 8 வகை குன்மம், விரணம், அனைத்து வாத நோய்கள், சூதக சூலை, அரையாப்பு, வெள்ளை கிரந்தி, சூலை முதலியன.<br>குறிப்பு: மேற்கண்ட மருந்தைத் தயாரித்த 3 மாதங்களுக்குப் பிறகுதான் உபயோகிக்க வேண்டும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1. இந்துப்பு-30 கி<br>2. கல்லுப்பு-30 கி<br>3. சோற்றுப்பு-30 கி<br>4. பூநீறு-30 கி<br>5. வளையலுப்பு-30 கி<br>6. பொரித்த வெங்காரம்-30 கி<br>7. நவச்சாரம்-30 கி<br>8. வெடியுப்பு-30 கி<br>9. சுக்கு-30 கி<br>10. திப்பிலி-30 கி<br>11. மிளகு -30 கி<br>12. ஓமம்-30 கி<br>13. கிராம்பு-30 கி<br>14. திப்பிலி வேர்-30 கி<br>15. கோஷ்டம்-30 கி<br>16. பெருங்காயம்-30 கி<br>17. உரித்த வெள்ளைப் பூண்டு-30 கி<br>18. பனை வெல்லம்-150 கி<br>19. தேன்-150 கி</p><p><strong>செய்முறை :</strong><br>முதல் பதினாறு சரக்குகளையும் நன்கு சூரணித்து சலித்து வைக்கவும். வெள்ளைப் பூண்டைப் பசுவின் பாலில் புட்டவியல் செய்து பனை வெல்லத்தைப் பாகு வைத்து எல்லாவற்றையும் ஒன்று கூட்டி தேன் சேர்த்து மெழுகுபதமாக அரைத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :</strong><br>1-2 கிராம் வீதம் தண்ணீருடன் தினமும் இரு வேளைகள் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>குன்மம், பித்த வாயு, அஜீரணம், மந்தம் மற்றும் பூப்பு காலத்திலுண்டாகும் சூதக வாயுவினால் ஏற்படும் வலி ஆகியன.</p>

<p><strong>தேவையான மருந்துகள்:</strong><br>1. சூரத்து நிலாவரை-60கி<br>2. குல்கந்து-80கி<br>3. கொட்டை திராட்சை-50கி<br>4. பாதாம் பருப்பு-25கி<br>5. அதிமதுரம்- 10கி<br>6. கடுக்காய்ப் பிஞ்சு-25கி</p><p><strong>செய்முறை:</strong><br>நெ. 1, 5, 6 எண்ணுள்ள இம்மூன்று சரக்குகளையும், சூரணித்து சலித்து வைக்கவும். நெ. 2, 3, 4 இம்மூன்றையும் கல்வத்திலிட்டு மை போல் அரைத்து, அத்துடன் சூரணத்தை சேர்த்து நன்கு மெழுகு போல் அரைத்து எடுத்து வைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>6-12 கிராம் வரை படுக்கும் முன் வெந்நீர் அல்லது பாலுடன் கொடுக்கவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>மலக்கட்டு, பசியின்மை மற்றும் வயிற்று உப்பிசம்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த இரசம்-10 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த கந்தகம்-10 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த இரசக் கற்பூரம்-10 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த தாளகம்-10 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த காந்தம்-10 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த துருசு-10 கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த மிருதார் சிங்கி-10 கி<br>8.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுக்கு-10 கி<br>9.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஓமம்-10 கி<br>10.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;மஞ்சள்-10 கி<br>11.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வாய்விடங்கம்-10 கி<br>12.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வசம்பு-10 கி<br>13.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;இலவங்கம்-10 கி<br>14.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பறங்கிப்பட்டை-10 கி<br>15.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த சேராங்கொட்டை --10 கி<br>16.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கடுக்காய்த் தோல்-10 கி<br>17.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கருஞ்சீரகம்-10 கி<br>18.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;காட்டுச் சீரகம்-10 கி<br>19.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சிறுதேக்கு-10 கி<br>20.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தாளீச பத்திரி-10 கி<br>21.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;உலர் திராட்சை-10 கி<br>22.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;திப்பிலி-10 கி<br>23.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;அரத்தை-10 கி<br>24.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கோஷ்டம்-10 கி<br>25.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வாலுளுவை அரிசி-10 கி<br>26.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சோம்பு-10 கி<br>27.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஏலம்-10 கி<br>28.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஜாதிக்காய்-10 கி<br>29.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;மிளகு-10 கி<br>30.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சீரகம்-10 கி<br>31.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கார்போக அரிசி-10 கி<br>32.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;மாசிக்காய்-10 கி<br>33.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;திப்பிலிக் கட்டை-10 கி<br>34.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பிரப்பன் கிழங்கு-10 கி<br>35.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;எட்டிக் கொட்டை-10 கி<br>36.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தேற்றான் விதை-10 கி<br>37.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;நீர்முள்ளி வித்து-10 கி<br>38.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;எள்ளு-10 கி<br>39.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கொள்ளு-10 கி<br>40.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கொப்பரைத் தேங்காய்-10 கி<br>41.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சிறுசின்னி வேர்-10 கி<br>42.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;முட்சங்கன் வேர்-10 கி<br>43.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;அமுக்கராக் கிழங்கு-10 கி<br>44.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஆகாயகருடன் கிழங்கு-10 கி<br>45.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சித்திமூல வேர்ப்பட்டை-10 கி<br>46.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கோழி முட்டை-7 எண்ணம்<br>47.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பனை வெல்லம்-400கி<br>48.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுத்தி செய்த துத்தம்-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>நெ. 1 முதல் 8 வரையுள்ள சரக்குகளைக் கல்வத்திலிட்டு அரைத்து வைக்கவும். நெ. 9 முதல் 46 வரையுள்ள சரக்குகளையும் இடித்துச் சலித்து சூரணத்தையும் பொடித்த சரக்குகளையும் ஒன்று சேர்த்து ஒரு பாத்திரத்திலிட்டு கோழி முட்டைகளை உடைத்து ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து உலர்த்தியபின், பனை வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாகு செய்து சூரணத்தில் விட்டுக் கிளறி பிறகு உரலிலிட்டு பன்னிரெண்டு மணி நேரம் நன்கு இடித்து மெழுகு பதத்தில் எடுத்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>1/2 - 1 கிராம் பனை வெல்லத்துடன் தினம் இரு வேளைகள் தயிர்சாதம் சாப்பிட்ட பிறகு கொடுக்கவும். 40 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>வெடி சூலை, மேக சூலை, இடிசூலை,புடை சூலை, துடி சூலை, வாத சூலை, கால் குடைச்சல், கரணை, விப்புருதி, கண்ட மாலை, தொழுநோய், விஷநீர்,குறை நோய்.<br>சிரங்கு, புழுவெட்டு, தடிப்பு, பெண்குறிச்சிலந்தி, ஆண்குறிச் சிலந்தி, மேகம், செங்கிரந்தி,கருங்கிரந்தி, அரிகிரந்தி, படுகிரந்தி, இடி கிரந்தி, புரையோடும் புண், அரைக்கடி, ஆண்குறித்தண்டில் புண், தொடை வாழை, மூட்டு வாழை, முதுகு வாழை, புழு வாழை, விலாவில் வாழை . தமர்க்காயாச் சிலந்தி, மார்புச் சிலந்தி, ஆண்குறிப்புற்று, பெண்குறிப்புற்று, இடிப்புற்று, சுன்னப்புற்று, சிலந்தி, ராஜபிளவை, கண்பிளவை, தடிச்சிலந்தி, புடை சிலந்தி, சதை வளரும் பௌத்திரம், மூலம், பாதச் சக்கரம், நாசிப் பிளவை, மேகம், ஆமை அடி முதலியன.<br><br><strong>குறிப்பு : </strong>தலை முழுகும் நாளின் போது மருந்து உட்கொள்ளக் கூடாது. பத்தியம் இல்லை. மருந்து செய்த 40 நாட்களுக்குப் பிறகே இதனைப் பயன்படுத்தவும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1. சுத்தி செய்த வெடியுப்பு-70கி<br>2. சுத்தி செய்த ஆமை ஓட்டுத் தூள்-350 கி</p><p><strong>செய்முறை:</strong><br>ஆமை ஓடுத்தூளை ஒரு சட்டியிலிட்டு பரப்பி அதன் நடுவில் வெடியுப்பை வைத்து மீதியுள்ள ஆமை ஓட்டுத் தூளை அதன் மேல் இட்டுப் பரப்பி சட்டியின் மேல் பாகத்தை நன்கு தகுந்த மூடிகொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் 40 வரட்டிகளைக் கொண்டு புடமிடவும்.</p><p><strong>தீரும் நோய்கள் :</strong><br>நீரடைப்பு, நீர் எரிவு, நீர்க்கட்டு, சதையடைப்பு, வீக்கம் முதலியன.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;இயற்கை கால்ஷியப் பொடி-1 கி.கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கிராம்புத் தைலம்-25கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;புதினா உப்பு-25கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கண்டங்கத்திரி பழம்-250கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கடுக்காய்-250கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;துளசி-100கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கற்பூரம்-25கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி இடித்து, பொடித்து, சலித்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>வெளி உபயோகம், தேவையான அளவு பற்பொடியை எடுத்து கைவிரல்களால் பல்லைத் துலக்கவும். சிறிது நேரம் ஊற வைத்து வாய் கொப் பளிக்கவும். தேவைப்பட்டால் பிரஷ் கொண்டு தேய்த்து விடலாம். தினமும் 2 வேளைகள் உபயோகிக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :&nbsp;</strong><br>பல் வலி,&nbsp;<br>பல் பலஹீனம்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;காவிக்கால் பொடி-1 கி.கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;மிளகு-50 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;திப்பிலி-50 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கற்பூரம்-25 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வேப்பிலை-50 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கடுக்காய்-100 கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கிராம்புத் தைலம்-25 கி</p><p><strong>செய்முறை :</strong><br>கிராம்புத் தைலத்தைத் தவிர மற்ற சரக்குகளை உலர்த்தி இடித்து, பொடித்து, சலித்து, இறுதியில் கிராம்புத் தைலத்தில் நன்றாகக் கலந்து டப்பாவில் பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>வெளி உபயோகம். பல் வலிக்கு இப் பற்பொடியை உபயோகிக்கலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>பல் கரை, பல் வலி, பற் சிதைவு தீரும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுக்கு-50 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;மிளகு-50 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;திப்பிலி-50 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தூதுவளை-250 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சர்க்கரை-750 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;குளுக்கோஸ்-250 கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தேன்-100 கி</p><p><strong>செய்முறை :</strong><br>சர்க்கரை முற்றிய பாகுபதத்தில் எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை சேர்த்து அச்சுக்களில் வார்த்து மிட்டாய்களாக எடுத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :</strong><br>தினமும் 4-5 சாக்லேட்டுகள் சுவைத்து சாப்பிடலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>இருமல், ஜலதோஷம், புகையிலையினால் ஏற்படும் விஷம் நீங்கும்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வல்லாரை-300 மி.கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தேங்காய்-100 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;குளுக்கோஸ்-4.5 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சர்க்கரை-4.5 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தேன்-600 மி.கி</p><p><strong>செய்முறை :</strong><br>சர்க்கரை முற்றிய பாகுபதத்தில் எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை சேர்த்து அச்சுக்களில் வார்த்து மிட்டாய்களாக எடுத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>தினமும் 4 - 5 சாக்லேட்டுகள் சுவைத்து சாப்பிடவும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>ஞாபக மறதி, உடல் பலஹீனம் முதலியன நீங்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;காக்கை கொல்லி விதை-100 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வசம்பு- 100 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;துளசி-100 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வேப்பிலை-100 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பூந்திக் கொட்டை-100 கி</p><p><strong>செய்முறை:</strong><br>மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி இடித்து பொடித்து சலித்து நன்கு கலந்து கொள்ளவும்.</p><p><strong>அளவு:</strong><br>தேவையான அளவு பேன் கொல்லிப் பொடியை மோர், தயிர், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>பேன், பொடுகு, ஈறுகள் நீங்கும்.<br>&nbsp;</p>

<p>தேவையான பொருட்கள்:<br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சந்தனக்கட்டை-20 மி.கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;அருகன் புல்-20 மி.கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;குங்குமப்பூ-1 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;திருநீற்றுப் பச்சிலை- 10 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;முல்தாணிமட்டி-30 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ரோஜாப்பூ-15 கி</p><p>செய்முறை :<br>மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி, சுத்தம் செய்து இடித்து, பொடி செய்து சலித்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.</p><p>அளவு :<br>தேவையான அளவு பொடியை எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரினால் கழுவவும்.</p><p>தீரும் வியாதிகள்:<br>பரு, கரும்புள்ளி, முகப் பொலிவின்மை முதலியவற்றை நீக்கி முகம் பளபளப்புடன் இருக்கச் செய்யும்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;அஸ்வகந்தா-5 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;நீர்முள்ளி-5 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கட்டுக்கொடி-5 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஓரிதழ் தாமரை-5 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஜாதிக்காய்-5 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பாதாம் பருப்பு-5 கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பிஸ்தா பருப்பு-5 கி<br>8.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஏலம்-5 கி<br>9.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கிராம்பு-5 கி<br>10.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;லவங்கப்பட்டை-5 கி<br>11.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;தேன்-50 கி<br>12.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஸ்வர்ணவங்கம்-1கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை இடித்து, பொடித்து, சலித்து தேனுடன் கலந்து உருண்டைகளாக்கவும். இறுதியில் ஸ்வர்ண வங்கத்தை உருண்டையில் சேர்த்து உருட்டி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>தினமும் காலையிலும் இரவிலும் உணவிற்குப் பின் 1 வீதம் சுவைத்து சாப்பிட்டு பால் அருந்த வேண்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>\உடல் பலஹீனம், அடிக்கடி விந்து வெளியேறுதல், விந்தணு குறைபாடு, உடலுறவில் விருப்பமின்மை முதலியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;துளசி எண்ணெய்-10 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கிராம்பு-10 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வேப்பெண்ணெய்-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மூன்றையும் கலந்து காற்றுப் புகாத குப்பியில் அடைக்கவும்.</p><p><strong>அளவு:&nbsp;</strong><br>மருந்தை பஞ்சில் நனைத்து, வலியுள்ள பல்லில் சிறிது நேரம் வைத்திருந்து, கொப்பளிக்கவும். வெந்நீரால் வாய்</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>பல்வலி, எளிர்வீக்கம், பல் சொத்தை, பல் கூச்சம்.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஆமணக்கு எண்ணெய்-100 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுக்கு-100 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;நொச்சி-100 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வெள்ளைப்பூண்டு-10 கி</p><p><strong>செய்முறை :</strong><br>ஆமணக்கு எண்ணெயில் மற்ற சரக்குகளை இடித்து, காய்ச்சி, தைல பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>வெளி உபயோகம். வலியுற்ற காதில் 2-3 சொட்டுகள் வீதம் தினமும் 2 வேளைகள் விடவும்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>காது வலி, காதில் நீர் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல் முதலியன.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ரோஜா தீநீர் -90 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;படிகாரம் -5 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;நேத்திரப்பூண்டு இலை -5 கி</p><p><strong>செய்முறை :</strong><br>நேத்திரப் பூண்டு இலையை சுத்தம் செய்து ரோஜா தீநிரில் போட்டு அதில் படிகாரத்தைக் கரைத்து 10 நாட்களுக்கு சூரிய புடத்தில் வைத்து பின்னர் சுத்தமான மெல்லிய சிறு துளைகளுள்ள துணியினால் வடிகட்டி பத்திரப்படுத்தவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>பாதிக்கப்பட்ட கண்ணில் 2 சொட்டுகள் விடவும். கண் குவளையில் நீர் ஊற்றி அதில் 5 சொட்டுகள் கண் சொட்டு மருந்தை விட்டு கண்களைக் கழுவலாம்.</p><p><strong>தீரும் வியாதிகள்:</strong><br>கண் எரிச்சல், கண் புரை, சதையடைப்பு போன்ற கண் நோய்கள்.</p>

<p><strong>தேவையான பொருட்கள் :</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சதகுப்பை தீநீர்-500 மி.லி.<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சோம்பு தீநீர்-300 மி.லி.<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வளையல் உப்பு-1 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கிளிசரின்-50 மி.லி.</p><p><strong>செய்முறை:</strong><br>வளையல் உப்பை இடித்து பொடி செய்து சதகுப்பை தீநீர், சோம்பு தீநீரினுடன் கலந்து வடிகட்டி கிளிசரினுடன் சேர்த்துக் கொள்ளவும்.</p><p><strong>அளவு :&nbsp;</strong><br>25 மி.லி. வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் உட்கொள்ள வேண்டும்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>குழந்தைகளின் அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகள்.</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;முளை கட்டிய கேப்பை-150 கி<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கம்பு-250 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பாசிப்பயிறு-200 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கொண்டைக்கடலை-200 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கோதுமை-150 கி<br>6.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;முந்திரி-15 கி<br>7.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சாரப்பருப்பு-15 கி<br>8.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பாதாம் பருப்பு- 10 கி<br>9.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;பிஸ்தா பருப்பு-20 கி</p><p><strong>செய்முறை :</strong><br>மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி பொடி செய்து சலித்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறைகள் :</strong><br>வெந்நீருடன் கலந்து ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம். நெய், நீருடன் கலந்து உருண்டைகளாக்கி சத்தான சிற்றுண்டியாக உண்ணலாம். தோசை மாவுடன் கலந்து சுவையான தோசையாக வார்த்தும் உண்ணலாம்.</p><p><strong>பயன்கள் :</strong><br>உடல் பலஹீனத்தைப் போக்கி உடலிற்குத் தேவையான சத்தை அளிக்கிறது.<br>&nbsp;</p>

<p><strong>தேவையான பொருட்கள்:</strong><br>1.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;கற்றாழைச் சாறு-1 கி.கி.<br>2.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சர்க்கரை-500 கி<br>3.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;சுக்குப் பொடி-10 கி<br>4.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஏலப்பொடி-10 கி<br>5.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;விதை நீக்கிய பேரிச்சம்பழம்- 250 கி</p><p><strong>செய்முறை:</strong><br>கற்றாழைச் சோற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 7 முறை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சர்க்கரையுடன் சேர்த்து காய்ச்சி பதத்தில் எடுத்து, சுக்குப் பொடி, ஏலப்பொடி, பேரிச்சம்பழம் கலந்து பத்திரப்படுத்தவும்.</p><p><strong>உபயோக முறை :</strong><br>இனிப்பிற்கு பதிலாகவும், உணவாகவும் உட்கொள்ள லாம்.</p><p><strong>தீரும் வியாதிகள் :</strong><br>உடல் உஷ்ணம், உடல் பலஹீனம்.</p>

Upcoming Events

Gallery

People are saying 1

139,748+ people have already completed the Nistai 21 Days Challenge
...
Samantha

I cured my 3 yrs sinuses probelm according to your guidance was suffered a lot before understanding the root cause. Thanks a lot sir you are the true Healer ✨❤️

Write a Review

Rate This Hoster :

Morning Slots

Afternoon Slots

Evening Slots

Select a time

Choose Time Slot

Select a time

Choose Time Slot