சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில் முதன்மையான கலையே சரகலை ஆகும்.சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய தோற்றுவிக்கப்பட்டு பின் அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப் பட்டவைகள் ஆகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே - சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் - இவை முன்னோர் வாக்காகும். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம் என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்து விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம் ,வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும். ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை முறைப்படி குருகுல முறையாக தீட்சை பெற்று இதன் இரகசியங் களை பயிற்சி செய்து சித்தி பெற்ற வருக்கு மட்டுமே இது சாத்தியம். சித்தர் நூல்களை படித்து தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது என்பது சாத்தியமாகாது