பதில் : இந்த செய்தியில் பாதி உண்மை பாதி பொய் இருக்கிறது . இந்த செய்தி சம்பந்தமாக நாம் கலந்தாய்வு செய்தால் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். ஆம் டெக்ஸாஸ் மாநிலத்தில் ,அமெரிக்காவில், 10 வயது சிறுமி ,இறந்து விட்டாள் ,என்பது உண்மை. ஆனால் அதற்கு காரணம் மூளையைத் இன்னும் அமீபா என்பது பொய். எப்பொழுது ஊடகங்கள் ஒரு விஷயத்தை பெரிதாக காட்டுகிறார்களோ அதில் பாதி உண்மை இருக்கும் பாதி பொய் இருக்கும் மேலும் இதன் நோக்கம் உலக மக்கள் மனதில் நல்ல விஷயத்தை கெட்டதாகவும் கெட்ட விஷயத்தை நல்லதாகவும் பதிவு செய்வதற்காக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆற்றில், குளத்தில் ,கடலில் ,வாய்க்காலில் கால்வாயில் ,குட்டையில் குளிப்பது மிக மிக நல்லது. இதனால் உடலுக்கு ஆரோக்கியம். பிராணசக்தி கிடைக்கும். எனவே நமது முன்னோர்கள் இதில் பல வருடமாக குளித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். நாம் இப்பொழுது யாருமே அதை செய்வதில்லை. நூற்றில் ஐந்து சதவீத மக்கள் மட்டுமே செய்கிறார்கள். அந்த 5 சதவீத மக்களையும் அந்த காரியத்தை செய்ய கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு போலியான அறிவியலே இந்த மூளையை திண்ணும் அமீபா என்ற புது கதை. அப்படி ஒரு அபிபா உலகத்தில் கிடையவே கிடையாது.
உண்மையில் அந்த சிறுமி இறந்ததற்கு வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவச் செய்வதன் மூலமாக, நமது ஆழ் மனதில் ஆற்றில், குளத்தில் குளிப்பது ஆபத்து என்று பதிவு செய்யப்படும். நமது குழந்தைகள் மேல் உள்ள பாசத்தின் காரணமாக நாம் நமது குழந்தைகளை ஆற்றில், கிணற்றில் குளத்தில் குளிக்க கூடாது என்று தடை செய்வோம் . அல்லது வலியுறுத்துவோம். இதனால் நல்ல விஷயம் கெட்ட விஷயமாக மாறுகிறது. இந்த செய்தியை மையமாக வைத்து , இனிமேல் உலகில் உள்ள அனைத்து ஆங்கில மருத்துவ சிலபஸிலும் மூளையைத் இன்னும் அமீபா என்று புதிதாக ஒரு கதை கட்டி , இனி ஒவ்வொரு மருத்துவரும் யாராவது காய்ச்சலில் மருத்துவமனைக்கு வந்தால், கடைசியாக ஆற்றில், குளத்தில் குளித்தீர்களா என்று கேள்வி கேட்பார்கள், நாம் ஆமாம் என்று சொன்னால், அதனால் தான் உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது, மூளையைத் இன்னும் அமீபா மூளைக்குள் சென்று விட்டது என்று பொய் சொல்லி நம்மை வைத்து கொடுமை செய்வார்கள். இதே போலத்தான் மலேசியாவில் கெடா மாநிலத்தில் ஒரு அருவியில் பலரும் பல வருடமாக குறித்து வந்தார்கள். திடீரென ஒரு நாள் ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் இந்த அருவியில் மலைக்கு மேலே எலிகள் மூத்திரம் கழிப்பதால் அங்கு குளிக்கும் மக்களுக்கு தோல் வியாதிகள் வருகிறது என்று செய்தியை பரப்பினார்கள். அதன் பிறகு இப்பொழுது அந்த அருவிக்கு யாருமே செல்வதில்லை .எலி மூத்திரத்தால் ஆபத்து என்ற செய்தி அருவியில் குளிக்கும் நல்ல பழக்கத்தை கெட்ட பழக்கமாக மாற்றிவிட்டது. திருப்பூரில் வீட்டில் பிரசவம் பார்த்த ஒரு பெண் இறந்ததை , உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களும் காண்பித்து வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஆபத்து என்பதை அனைவரின் மனதிலும் பதிவு செய்து ,நல்ல மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என்றும், போலி மருத்துவர்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் என்றும் பறைசாற்றிக் கொண்டார்கள். மேலும் வியாபாரிகளுக்கு சாதகமாக பல சட்டங்களை இயற்றுவதற்கு இந்த செய்தியைஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டார்கள். சமீபமாக சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் பல செய்திகளை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் காட்டிக்கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் என்றால், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் ஒவ்வொரு ஊரிலும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். திடீரென அரசு அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் உருவானால், பொதுமக்கள் கோபப்படுவார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எப்பொழுதுமே ஒரு கெட்ட விஷயத்தை அரங்கேற்ற வேண்டும் என்றால் 5 வருடம் முன்பே இதற்கு பிளான் செய்து ரிவர்ஸ் வேலை செய்வார்கள். இப்படி சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் செய்தியை அடிக்கடி காண்பித்து விட்டு, விபச்சார விடுதி இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்களை குறைக்கலாம் என்று பிரபல நடிகர்களும் ,சாமியார்களும் ,நீங்கள் நம்பும் உங்களது குருநாதரும் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு விபச்சார விடுதிகளை ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் வியாபாரிகள் உலகத்தில் அரங்கேற்றி வருகிறார்கள். ஆழ் குழாய் கிணறுகளை தமிழ்நாட்டில் இனிமேல் யாருமே புதிதாக போடக்கூடாது என்றும், ஏற்கனவே இருப்பதை மூடவேண்டும் என்றும் சட்டம் இயற்றுவதற்கு தயாராகி விட்டார்கள். இதற்காக சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்பொழுது இரண்டு வயது சிறுவன் மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இறந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் பேசி இதன் மூலமாக இனிமேல் யாருமே ஆழ்குழாய் கிணறு போடக்கூடாது என்று விரைவில் சட்டம் வரப்போகிறது. ஏற்கனவே கோயமுத்தூரில் அனைத்து தண்ணீரையும் தண்ணீர் சப்ளையும் , குளம் ,குட்டைகளையும் பிரான்ஸ் கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இனி கோயமுத்தூர் மக்கள் தண்ணீரை பிரான்ஸ் கம்பெனியிடம் மட்டுமே விலைக்கு வாங்க வேண்டும். இதேபோல் ஈரோடு டையும் முழுவதுமாக தனியாருக்கு தண்ணீர் சப்ளை விற்றுவிட்டார்கள். இப்பொழுது சென்னை மெட்ரோ வாட்டர் முழுவதும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் தண்ணீர் தனியாருக்கு சொந்தமாக போகிறது, அப்போது ஆழ்குழாய் கிணறுகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வியாபாரம் நடக்கும். ஒருவேளை ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தது கலாநிதி மாறனின் பேரனாகவோ , தயாநிதி மாறனின் பேரனாகவோ , அல்லது மு க ஸ்டாலின் பேரனாகவோ , எடப்பாடியின் சொந்தகார பையனாகவோ , சசிகலாவின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் பேரனாகவோ இருந்திருந்தால் ???? ஒருவேளை ஜெர்மன், பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொடர்புகொண்டு , அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி அங்கிருந்து ஸ்பெஷல் டிமை வரவழைத்து, 24 மணி நேரத்தில் அவர்கள் குழந்தையை ஒருவேளை காப்பாற்றி இருப்பார்கள். ஆனால் மாட்டிக்கொண்டது சாதாரண ஒரு பொதுமக்களின் குழந்தை. தூத்துக்குடியில் பதிமூன்று பேரை , அரசாங்கம் காவல் துறை என்ற மாஃபியா கேங்கால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சுட்டது காவல்துறை தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்த முகிலனை, கடத்தி , விஷ ஊசி போட்டு , நாயை வைத்து கடிக்க வைத்து , பைத்தியக்காரனாக்கி , பாலியல் வழக்கு போட்டு , இப்பொழுது அவர் இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா இருந்தால் , எந்த நிலையில் இருக்கிறார் என்பதே தெரியாத இந்த தமிழகத்தில் வாழ்வது வேதனையாக இருக்கிறது. இதைவிட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் இனிமேல் பிறக்கப் போகும் அனைத்து குழந்தைகளுக்கும் உடலில் ஆர் எப் ( RF chip ) என்று ஒரு பொருளை வைத்து தைக்க போகிறார்கள் .இதை ஏற்கனவே தமிழகத்தில் பல மருத்துவமனைகளில்ஆரம்பித்துவிட்டார்கள். இதற்காக பேக் வொர்க் என்ன செய்ய போகிறார்கள் என்றால் , இனிமேல் குழந்தை காணாமல் போனால் அதை ஊடகங்கள் பேச ஆரம்பிப்பார்கள் , இப்படி பல குழந்தைகள் காணாமல் போன பிறகு கண்டுபிடிக்க முடியாமல் பல குழந்தைகளை பொதுமக்கள் இழப்பார்கள் .அதன் பிறகு ஒருவேளை ஆர் எம் சிப் வைத்திருந்தாள் உடனே கண்டுபிடித்து விடுவோம் என்று நமக்கு கூறுவார்கள். நண்பர்களே ஊடகங்களில் வரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னிடம் தனித்தனியாக கேள்விகள் கேட்காதீர்கள். ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு கான்சப்ட் புரிந்து கொண்டால் ஆயிரம் கேள்விக்கு பதில் கிடைக்கும். சரி புரிந்து கொண்டோம் ,இதற்கு தீர்வு என்ன? " இலுமினாட்டி களுக்கு தீர்வு" என்ற பெயரில் எனது அமைதியும் ஆரோக்கியமும் என்ற மாத இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் .அதை முழுவதுமாக படித்து விட்டு , அதில் நான் கூறிய விசயத்தை உலக மக்களுக்கு பல மொழிகளில் சேர்த்துவிட்டு , அதை நிறைவேற்றினால் கண்டிப்பாக நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். " இலுமினாட்டி களுக்கு தீர்வு "என்ற கட்டுரை உங்களுக்கு வேண்டுமென்றால் healerbaskar@ gmail.com என்ற ஈமெயில் தொடர்பு கொள்ளுங்கள் , நாங்கள் உங்களுக்கு அனுப்புகிறோம். இப்படிக்கு ஹீலர் பாஸ்கர்